பிப்ரவரி மாதம்

 முக்கிய தினங்கள்

 1 இந்தியக் கடலோர காவல் படை தினம்.
 2 உலக ஈர நில நாள்.
 4 உலக புற்றுநோய் தீமை தினம்.
 9 மக்கள்தொகை கணக்கெடுப்பு நாள்.
 10 விஞ்ஞானிகள் தினம் (SCIENCE DAY)
 12 டார்வின் தினம்.
 13 உலக வானொலி தினம்.
 16 தேசிய ஆற்றல் சேமிப்பு தினம்.
 18 தேசிய கடற்படை தினம்.
 20 சமூக நீதி நாள்.
 21 அகில உலக தாய்மொழி தினம்.
 24 மத்திய கலால் வரி தினம்.
 25 உலக காசநோய் தடுப்பு தினம்.
 28 தேசிய இளைஞர் தினம்.
 28 தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி. ராமன் விளைவு வெளியிட்ட நாள்)

பிரபல பிறந்த தினங்கள்
 4, 1922 பண்டிட் பீம்சென் ஜோஷி -
 ஹிந்துஸ்தானி பாடகர்.
 6, 1890 அப்துல் கபார் கான். எல்லை காந்தி - சுதந்திரப் போராட்ட வீரர்.
 6, 1911 ரோனால்டு ரீகன் - அமெரிக்காவின்
 40-ஆவது ஜனாதிபதி.
 7, 1812 சார்லஸ் டிக்கன்ஸ் - ஆங்கில
 நாவலாசிரியர்.
 8, 1897 ஜாஹீர் உசைன் - இந்தியாவின் 3-ஆவது ஜனாதிபதி.
 10, 1950 மார்க் ஸ்பிட்ஸ் - ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் 7 தங்கப் பதக்கங்களை வென்ற அமெரிக்க வீரர்.
 11, 1847 தாமஸ் ஆல்வா எடிசன் - மின்சார பல்பு போன்ற ஆயிரத்துக்கு மேற்பட்டவற்றைக் கண்டுபிடித்த விஞ்ஞானி.
 12, 1809 சார்லஸ் டார்வின் - பரிணாம தத்துவம் கண்ட விஞ்ஞானி.
 12, 1809 ஆப்ரஹாம் லிங்கன் - அமெரிக்காவின் 16-ஆவது ஜனாதிபதி.
 12, 1824 தயானந்த சுவாமிகள் - ஆர்யா சமாஜ்
 நிறுவனர்.
 13, 1879 சரோஜினி நாயுடு - கவிக்குயில் என்ற புகழ் பெற்றவர். சுதந்திரப் போராட்ட வீராங்கனை.
 22, 1857 பேடன் பவுல் - சாரண இயக்கம் கண்ட "சாரண இயக்கத் தந்தை'.
 15, 1564 கலீலியோ - தூரதிருஷ்டிக் கண்ணாடி கண்டுபிடித்த விஞ்ஞானி.
 18, 1745 வோல்டா - மின்கலம் கண்டுபிடித்த
 விஞ்ஞானி.
  18, 1860 ம. சிங்காரவேலர் - சிந்தனைச் சிற்பி.
 19, 1627 சத்ரபதி சிவாஜி - மராட்டிய வீரமன்னன்.
 19, 1855 உ.வே. சாமிநாத அய்யர் (உ.வே.சா)
 ஏடுகள் மூலம் உள்ள தமிழ் இலக்கண இலக்கியங்களை பதிப்புச் செய்தவர்.
 22, 1898 தில்லையாடி வள்ளியம்மை - சுதந்திரப் போராட்ட வீரர்.
 22, 1732 ஜார்ஜ் வாஷிங்டன் - அமெரிக்க முதல் ஜனாதிபதி.
 26, 1802 விக்டர் ஹுயூகோ - பிரெஞ்சு
 எழுத்தாளர்.
 29, 1896 மொரார்ஜி தேசாய் -முன்னாள் பிரதமர்.
 29, 1904 ருக்மணி தேவி (அருண்டேல்) -
 கலாஷேத்ரா நிறுவனர்.

நினைவு தினங்கள்
 1, 1876 மகா வித்வான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
 1, 2003 கல்பனா சாவ்லா - இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை.
 3, 1969 சி.என். அண்ணாதுரை - முன்னாள்
 தமிழக முதல்வர்.
 4, 1974 சத்யேந்திரநாத் போஸ் - இந்திய
 விஞ்ஞானி.
 6, 1931 மோதிலால் நேரு - சுதந்திரப் போராட்ட வீரர். நேருவின் தந்தை.
 19, 1915 கோபால கிருஷ்ண கோகலே - சுதந்திரப் போராட்ட வீரர்.
 22 1958 அபுல் கலாம் ஆசாத் - சுதந்திரப் போராட்ட வீரர்.
 
 25 2001 டொனால்டு ஜார்ஜ் பிராட்மேன் - கிரிக்கெட் சாதனையாளர்.
  
 28 1963 டாக்டர். ராஜேந்திர பிரசாத் - இந்தியாவின் முதல் ஜனாதிபதி.

சுதந்திரம்
4 இலங்கை, 6 கெயிட்டி, 28 எகிப்து

முக்கிய நிகழ்வுகள்
5, 1852- ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் உலகப் புகழ்பெற்ற "ஹெரீம் டேஜ்' என்ற மியூசியம் திறக்கப்பட்டது.
 5, 2007- காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு - இறுதித் தீர்ப்பு வெளியானது.
 5, 2012- இங்கிலாந்தில் பிறந்த 17 மணி நேரமே ஆன குழந்தைக்கு, இதய ஆப்ரேசன் செய்து வெற்றி பெற்றனர்.
 6, 1952- இங்கிலாந்தில் இளவரசியாக இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விழா நடந்தது - அப்போது வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராக இருந்தார்.
 6, 2012- பிலிப்பைன்ஸ் பூகம்பத்தில் 44 பேர் இறந்தனர்.
 8, 1963- அமெரிக்கா கியூபாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திக்கொண்டது. ஜனாதிபதி கென்னடி உத்தரவிட்டார்.
  9, 1951- முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு
 ஆரம்பம்.
  10, 1931- இந்தியாவின் தலைநகராக டெல்லி உருவானது.
 10, 1942- அமெரிக்கா பகலொளி நேரம் 1 மணி நேரம் கூடுதல் எனக் கணக்கெடுக்கப்பட்டது.
 11, 1965} பிரதம மந்திரி லால்பகதூர் சாஸ்திரி, ""நேருவின் உறுதிமொழி தொடரும். இந்தி பேசாத மக்கள் ஒத்துழைக்கும் வரை ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்கும்'' என்றார்.
 12, 1996} பாலஸ்தீன குடியரசுத் தலைவராக "யாசர் அராபத்' நியமிக்கப்பட்டார்.
 14, 1998} கோவையில் பல்வேறு 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
  17, 1863} உலகின் முதல் முதலாக "செஞ்சிலுவைச் சங்கம்' தோன்றியது.
 17, 1924} விக்னோன் கலர் பிலிமைக் கண்டுபிடித்தார்.
 17, 2001} சென்னையில் தமிழ் இணைய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
 17, 2002} பிரான்சில் "பிராங்' நாணயம் விடைபெற்று "யூரோ' அமலானது.
 18, 1911} உலகிலேயே முதன்முதலாக ஆகாய விமானம் மூலம் இந்தியத் தபால்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
 18, 1930} சூரிய குடும்பத்தின் ஒன்பதாவது கோளாக "புளூட்டோ' அமெரிக்கா வானவியல் விஞ்ஞானி "கிளைட்' என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
 19, 1986} ரஷ்ய விண்வெளி கலம் மிர்-1 விண்ணில் செலுத்தப்பட்டது.
 20, 1745} இந்திய தபால் இலாகா பதிவுத் தபால் முறையை அறிமுகப்படுத்தியது.
 20, 1947} இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கலாம் என பிரிட்டிஷ் பிரதமர் அட்லி பிரபு அறிவித்தார்.
 20, 1986} ரஷ்யாவின் மிகப் பெரிய வானில் மிதக்கும் "மிர் விண்வெளி நிலையம்' நிறுவப்பட்டது.
 20, 1987} இந்தியாவில் 24-ஆவது மாநிலமாக அருணாசலப் பிரதேசம் உருவானது.
 23, 1861} அமெரிக்காவில் ஆப்ரஹாம் லிங்கன் மிகுந்த பாதுகாப்புடன் வந்து ஜனாதிபதியின் முதல் உரையை நிகழ்த்தினார்.
 23, 1947} முகமது அலி ஜின்னா பாகிஸ்தானைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என கேட்டார்.
  24, 2011} அமெரிக்கா, நாசாவால் அனுப்பிய டிஸ்கவரி விண்கலம் ஓய்வு பெற்றது.
 26, 1887} பிரான்சு - பாரிசில் ஈகில் டவர் கட்டும் பணி துவங்கியது.
 26, 2008} ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்துக்கு முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
 26, 2012} தமிழகத்தில் தஞ்சை அரண்மனையில் 400 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய மன்னர் காலத்திய குளம் கண்டுபிடிக்கப்பட்டது.
 27, 2010} காமன்வெல்த் சாம்பியன் ஹிப் போட்டிகளில் இந்தியா 23 தங்கம் உள்பட 49 பதக்கங்களைப் பெற்று முதலிடம் பெற்றது.
 28, 1919} இந்திய கணிதமேதை ராமானுஜன் லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராகத் தேர்வு.
 28, 1928} சர்.சி.வி.ராமன், ராமன் விளைவுகளை வெளியிட்டார்.
 28, 2003} மனித குளோனிங் முயற்சிக்கு அமெரிக்கா பாராளுமன்றம் தடை
 விதித்தது.
 28, 2012} புதுடெல்லியில் நடைபெற்ற ஹாக்கியில் இந்தியா - பிரான்ûஸ 8-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.


-----------------------------------------------------------------------------------------------------------------------------
திருச்சி திருப்பு முனை மாநாட்டில் சில தீர்மானங்கள் கொண்டுவரப் பட்டுள்ளன.
அத் தீர்மானங்கள்
1) சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுக!
2) கச்சத் தீவு பிரச்சினை
3) ஈழத் தமிழர் பிரச்சினை
4) நதி நீர் தேசிய மயமும் - இணைப்பும்
5) சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு.
6) துhக்குத் தண்டனையை ரத்து செய்க!
7) காவேரி நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை
8) விலை வாசி உயர்வைக் கட்டுப்படுத்துக!
9) கல்விக் கடன்களை தள்ளுபடி செய்க!
10) தமிழக மீனவர்களைப் பாதுகாத்திடுக!
11) நெசவாளர் துயர் துடைத்திடுக!
12) நெல், கரும்பு, தேயிலை ஆகியவற்றுக்கு உரிய விலை.
13) மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி
14) கோதுமைக்கு உள்ள சலுகை; அரிசிக்கு ஏன் இல்லை?
15) சட்டம் ஒழுங்கு சீர்குலைவு
Photo: திருச்சி மாநாட்டில் தி.மு.க பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தும்போது.
--------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று திமுக வின் 10 வது மாநில மாநாடு .அம்மாவின் ஊடகங்களுக்கு குறை   சொல்ல ஒன்றும் இதுவரை மாட்டவில்லை.
கூட்டம் இல்லை என்றால் ஊடகக்காரன் வீட்டில் உள்ள சின்ன குழந்தை கூட துப்பி விடும்.குழப்படி என்றாலும் எடுபடாது.அவர்களுக்கு தோதாக அக்கா குஷ்பு "பெரியாரை திருச்சியில் பிறந்தார் "என்று தவறாக சொல்லி விட்டார் .இப்போது அதுதான் அவர்களுக்கு சூடு பறக்கும் செய்தி.வேறு வழி.அதையே திரும்பத் திரும்ப போட்டு மாய்ந்து போகிறார்கள்.
கோடநாட்டுக்கு முதல்வர் சும்மா ஓய்வெடுக்கப் போவதற்கே 3000 போலீசார் சாலையை அடைத்து காவல் காத்தனர்.
Photo: இன்று காலை திருச்சி மாநாட்டு திடலில்...! #10thdmkstateconference
லட்சக்கணக்கில் வருவார்கள் .வாகனங்கள் நெருக்கடி உண்டாகும் என்று தெரிந்தும் ஒரு காக்கி சட்டை கூட திருச்சியில் காணவில்லையே.போக்குவரத்தை சரி செய்யவும் இல்லையே.
போக்குவரத்து சிக்கலில் மக்கள் சிக்கி திமுகவை திட்டவேண்டும் என்ற எண்ணமா ?
ஆனால் நிலைமை திருச்சியில் வேறு மாதிரி இருக்கிறதாக தெரிகிறதே.போலிசாரின் செயல்தானே மக்களிடம் காரசாரமாக உள்ளது.போலீசாரை திட்டாத திருச்சிக் காரர்களே இல்லையாமே?

---------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய முக்கியம் அரிசிக்கு சேவை வரிதான்.இதனால் அரிசி விலை மேலும் உயரும்.
மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மைதான் இந்த அரிசி -பருத்திக்கான சேவை வரி.

ஆனால் வடக்கே உள்ளோர் உணவு தானியமான கோதுமைக்கு இந்த வரி கிடையாது.

அரிசியை உணவாகக் கொண்டோர் தமிழகம் மற்றும் தென் மாநிலங்கள்தான்.
ஆனால் இந்த அரிசி சேவை வரி கொண்டு வந்ததில் பெரும் பங்கு பெற்ற  மனிதன் தமிழ் நாட்டை சார்ந்த வேட்டி கட்டிய மானமிலா தமிழன் ப.சிதம்பரம்தான்.
நாடாளுமன்றத்தில் நாளை பொது பட்ஜெட்: புதிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு இல்லை http://bit.ly/1g929zB
கொட்டை நீக்கப் பட்டதால் பருத்திக்கும்,உமி நீக்கப்பட்டதால் அரிசிக்கும் இவ்வரி கொண்டு வரப் பட்டது நியாயம்தானாம்.அந்த பொருளாதாரப் புளி [?]
வக்காலத்து வாங்குகிறது.
அப்படியே வைத்துக் கொண்டாலும் வடக்கே கோதுமையை அப்படியே வயலில் இருந்து பறித்து வாயில் போட்டுக் கொள்கிறார்களா?அவர்களும் கதிர்,தோலி நீக்கித்தானே தின்னுகிறார்கள்.
நாமாவது அரிசியை உமி நீக்கி அப்படியே சோறாக்கி விடுகிறோம் .அங்கே கோதுமையை மாவாக்கி சப்பாத்தி -ரொட்டி என்றுதானே உபயோகிக்கிறார்கள்.
சரி .அறுவடையை செய்து நெல்லை அரிசியாக்கி விற்பனைக்கு வரும் வரை அரசின் சேவை எந்த இடத்தில் வருகிறது.எதற்காக சேவை வரி?
தமிழகத்தில் கட்டெறும்பாக காங்கிரசு காணாமல் போனாலும்,அதனுடன் கூட்டனி வைக்க எல்லோரும் தயங்கினாலும் காங்கிரசு பொருளாதாரப் புலிகள் காங்கிரசை தமிழகத்தில் இருந்து துடைத் தேடுக்காமல் ஓயமாட்டார்கள் போல் இருக்கிறது.

மக்களுக்கு சேவை செய்யத்தானே அரசுகள்.
ஆனால் எல்லா  பொரு ட்களுக்கு ம் சேவை வரி என்றால் எதற்கு இந்த மண்[?]மோகன் சிங் போன்ற பிரதமர்கள்.?பேசாமல் அம்பானியிடம் அவுட் சோர்சிங்கில் விட்டு விட்டு இத்தாலிக்கும்,சுவிசுக்கும்,அமெரிக்காவிற்கும் தங்கள் வேலைகளை பார்க்க போய்விடலாமே ?
----------------------------------------------------------------------------------------------------------------------

ஒசூர் அருகே யானை மிதித்து இளைஞர் பலி- பட்டாசு வெடித்து விரட்ட முயன்றதால் விபரீதம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?