இதுதான் இந்தியா?



 கோவாவில்  ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களின் பட்டியலில் கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த பட்டியலில் அமிர்கான், கபில்தேவ், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங், கோவா முதல்வர் மனோகர் பரிக்கர், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இவர்களுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.100 வீதம் 150 நாட்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
அவுங்களும் பொய்யாக எத்தனை பெயர்களைத்தான் யோசிக்க முடியும் ?.
====================================================================
@நாட்டின் அன்­னியச் செலா­வணி கையி­ருப்பு, சென்ற 18ம் தேதி­யுடன் முடி­வ­டைந்த வாரத்தில், 3.16 கோடி  டாலர் சரி­வ­டைந்து, 30,941 கோடி டால­ராக குறைந்­துள்­ளது என, ரிசர்வ் வங்கி, வெளி­யிட்­டுள்ள புள்­ளி­வி­வ­ரத்தில் கூறப்பட்டுள்ளது.
suran
 ஏப்ரல் மாதத்தின் முதல், 15 தினங்­களில், முன்­பேர சந்­தை­களில் வர்த்­தகம், 70 சத­வீதம் வீழ்ச்சி கண்டு, 2.36 லட்சம் கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­துள்­ளது

ஆனால் நமது பொருளாதாரப் புளி[?]
நாட்டின் பொரு­ளா­தாரம் சிறப்­பாக உள்­ளது. இது, மேலும் வலு­வ­டையும் என, மத்­திய நிதி அமைச்சர் ப.சிதம்­பரம் தெரி­வித்தார்.
====================================================================
தேர்தல் நேரங்களில் மட்டும் தலித்களின் வீடுகளுக்கு தேனிலவுக்கு செல்வது போல் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் பயணம் செய்கிறார்.கஞ்சி குடிக்கிறார். எனக்கூறிய யோகா குரு பாபா ராம்தேவ் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
=====================================================================
விளங்கிடும் .......!
தமிழ் நாட்டில் தேர்தல் நாள் வரை , தடையில்லா மின்சாரம் வழங்கிய நிலையில், தேர்தல் முடிந்த கையோடு, மீண்டும் மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மூன்று  ஆண்டுகளாக, கடுமையான மின் பற்றாக்குறை நிலவுகிறது;
இதை சமாளிக்க, மின் தடை செய்யப்படுகிறது. தற்போது, கோடை காலத்திற்கு முன்
னதாக, மின் தேவை அதிகரித்துள்ளது. அணைகள் வறண்டு கிடப்பதால், நீர் மின் நிலையங்களில், மின் உற்பத்தி செய்ய முடியவில்லை.
 மேட்டூர் மற்றும் வட சென்னை விரிவாக்க புதிய அனல் மின் நிலையங்களில், அடிக்கடி பழுது ஏற்படுவதாலும், மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. காற்றாலை மூலமாகவும், எதிர்பார்த்த அளவிற்கு மின்சாரம் உற்பத்தி ஆகவில்லை. எனவே, சென்னை உட்பட பல இடங்களில், மின் தடை செய்யப்பட்டு வந்தது. இதனால், லோக்சபா தேர்தல் நாளின் போதும், மின் தடை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அன்று, அலுவலகம், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், மின் தேவை, 10,810 மெகா வாட்டாக இருந்தது. மின் உற்பத்தி, இதே அளவிற்கு இருந்ததால், மின் தடை செய்யப்படவில்லை.
 இந்நிலையில், நேற்று வழக்கம் போல், அரசு, தனியார் நிறுவனங்கள் இயங்கின. இதனால், மின் தேவை, 12,340 மெகாவாட்டாக அதிகரித்தது; மின் உற்பத்தி, 11,860 மெகாவாட் ஆனது; 480 மெகாவாட், பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், தேர்தல் முடிந்த கையோடு, சென்னை தவிர்த்து, மற்ற இடங்களில், மீண்டும் மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது எற்பட்டுள்ள மின்தட்டுப்பாடு-தடை பற்றி தமிழக மின்  துறைசார்ந்த ஒரு  அதிகாரி  கூறுகையில்,
 'மின் தேவை குறைவாக இருக்கும் என, கருதி, சில மின் நிலையங்களில், மின் உற்பத்தி குறைக்கப்பட்டது. ஆனால், விடுமுறைக்கு பின், ஒரே நேரத்தில், தொழிற்சாலைகள் உட்பட, பல நிறுவனங்கள் இயங்கியதால், மின் தேவை அதிகரித்தது.எதிர்பாராதது.விரைவில் இது சரி செய்யப்படும் '
என்றார்.
\
கடுமையா மின்தட்டுப்பாடு நிலவும் இந்த நேரம் வெயிலின் தாக்கமும் அதிகமாயுள்ள இந்நேரம் மின்தேவை குறைவாயிருக்கும் என்று மின் உற்பத்தியை குறைத்தார்களாம்.
இப்படி பட்ட இம்சை அரசர்களை வைத்துக் கொண்டு நிர்வாகம் நடத்தினால் உண்மையிலேயே தமிழ்நாட்டு பெயர் விளங்கிடும்.
====================================================================
ஸ்மார்ட்போன் வாங்க..


சில ஆலோசனைகள்!

5,000 ரூபாயில் தொடங்கி ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதால் பலரும் அதை எளிதில் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், ஸ்மார்ட்போனை நமக்கு உதவுகிற மாதிரி பல வழிகளில் நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். தினப்படி வேலைகள் முதல் அலுவலகம் தொடர்பான சில வேலைகளைக்கூட இருந்த இடத்தில் இருந்தபடியே ஸ்மார்ட்போன் மூலம் செய்துவிட முடியும்.
நவீன வாழ்க்கையின் இன்றியமையாத கருவியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்குமுன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் குறித்து  இனி...
 
விலை!
ஸ்மார்ட்போன் வாங்கச் செல்லும்முன், முதலில் போனுக்காகச் செலவிடும் தொகையை பட்ஜெட் போட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் பட்ஜெட் குறைவுதான் எனில், அதற்குத் தகுந்தமாதிரியான ஸ்மார்ட்போனைத் தேர்வுசெய்யலாம். பட்ஜெட் போடாமல் மொபைல் ஸ்டோர்களுக்குச் செல்லும்போது நம் செலவு அதிகமாகவே நிறைய வாய்ப்பிருக்கிறது. வெறும் விலையோடு நின்றுவிடாமல் அதுகுறித்த டெக்னிக்கல் விஷயங்கள் பற்றியும் ஆராய்வது முக்கியம். இதற்கு மொபைல் ரெவியூகளைப் படிப்பது அவசியம்.

நினைவகம் (Memory)!
தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள மனிதனுக்கு மூளை எந்தளவு முக்கியமோ, அதுபோல ஸ்மார்ட்போன்களுக்கு நினைவகங்கள் முக்கியம். ஸ்மார்ட்போன்கள் என்பவை கணினிபோலவே, ரேம் மற்றும் உள்நினைவகங்களுடனேயே (RAM, Internal Memory) வருகின்றன. எனவே, உங்கள் விலைக்கு எது சிறந்தது என்று பார்த்து வாங்கவேண்டும்.
ஸ்மார்ட்போனில் இருக்கும் ரேம் குறைந்தபட்சம் 512 எம்.பி. இருந்தால் நல்லது. உள்நினைவகம் குறைந்தபட்சம் 150-200 எம்.பி. இருப்பது அவசியம். எக்ஸ்டர்னல் நினைவகத்துக்கான வேலையை மெமரி கார்டே செய்துவிடும். அது 32 ஜிபியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
 
பிராசஸர் (Processor)!
உங்கள் போனுக்கு இதயம் போன்ற பகுதி இதுதான். குறைந்தபட்சம் பிராசஸர் ஸ்பீடு 800 விலீக்ஷ் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
 
suran
 
பேட்டரி (Battery)!
பேட்டரி எவ்வளவு நேரம் தாங்கும் என்பதுதான் ஒரு போனுக்கு மிகவும் முக்கியமான விஷயம். ஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியா 1100 போல பத்து நாள் சார்ஜ் தாங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் வாங்கும் பேட்டரி லித்தியம் அயனாக (Li-Ion) இருக்க வேண்டும். அதுவும் குறைந்தபட்சம் 1500 mAh கொண்ட போனை தேர்வு செய்தால்தான் ஒருநாள் முழுமைக்கும் சார்ஜ் இருக்கும். எனவே, உங்கள் பயன்பாடுகளைப் பொறுத்து பேட்டரியைத் தேர்வு செய்யுங்கள்.
 
இணையம் - இணைப்புத்தன்மை!
நீங்கள் வாங்கும் ஸ்மார்ட்போன் 3ஜி ஏற்றுக்கொள்ளும் தன்மை உள்ளதுதானா என்பதை உறுதிசெய்துகொள்வது அவசியம். அதேபோல, Bluetooth, Wi-Fi, GPS, USB  வசதி போன்றவை இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். புளூடூத் வெர்ஷன் குறைந்தபட்சம் 2.1 இடிஆர்-ஆக இருப்பது நல்லது. இணைய பிரவுஸரானது ஹெச்டிஎம்எல் (HTML) வசதியுடன் வரும்.
 
அளவு!
ஸ்மார்ட்போனின் அளவு என்பது அவரவர்களின் விருப்பம்தான். இருப்பினும் பெரிதாக வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. ஏன் என்றால் அதைக் கையில் பிடிப்பது, பாக்கெட்களில் வைப்பதில் சிரமம் வரும்.
 
suran
 
கேமரா!
எந்தவகையான ஸ்மார்ட்போனை வாங்குவதாக இருந்தாலும், அது எத்தனை மெகா ஃபிக்ஸல் கேமரா என்று முடிவு செய்துகொண்டு வாங்கவேண்டும். அதோடு உங்களுக்கு ஃப்ளாஷ் முக்கியமானதாக இருந்தால் அதையும் கவனிக்க வேண்டும். இல்லையென்றால், இரவில் படம் எடுக்கும்போது உங்களுக்கு சிரமம் ஏற்படும். இதில் வீடியோ ரெக்கார்டு செய்வதையும் கவனித்து வாங்கவும். 5 எம்பி கொண்ட கேமரா என்றால் அதன் மூலம் 700 ஃபிக்ஸல் அளவுக்கு வீடியோ ரெக்கார்டிங் செய்துகொள்ளலாம். வீடியோ கால் செய்யவேண்டும் என்கிறவர்கள் ஃப்ரென்ட் கேமரா வசதியுடன் உள்ள ஸ்மார்ட்போன்களை வாங்குவது நல்லது.
 
எடை மற்றும் அளவு!
ஒரு போன் வாங்கும்போது பார்க்க எப்படி உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் எடை, அளவு போன்றவை முக்கியம். இதில் குறிப்பாகக் கவனிக்க வேண்டியது, எடைதான். எடை குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
 
டிஸ்ப்ளே (Display)!
டிஸ்பிளேவை பொறுத்தமட்டில், Capacitive டச் ஸ்க்ரீன் உள்ள போன் வாங்கவேண்டும். உங்கள் தேவையைப் பொறுத்து ஸ்க்ரீன் சைஸை தேர்வுசெய்துகொள்ளலாம். அதோடு நீங்கள் வாங்கும் போன் மல்டி டச் சப்போர்ட் செய்கிறதா என்று கேட்டுக்கொள்ளுங்கள்.
 
இயங்குதளம் (Operating System)!
எந்த ஒரு ஸ்மார்ட்போனும் ஏதேனும் ஓர் இயங்குதளத்தில்தான் (OS) இயங்கும். ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் போன் என மூன்று பிரபலமான இயங்குதளங்கள் உள்ளன. உங்கள் தேவை மற்றும் பட்ஜெட்டை பொறுத்து இதில் ஏதேனும் ஒன்று உள்ள போனை வாங்கலாம்.
 
நன்றி:விகடன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?