வரும் !.......ஆனா வராது?

கோச்சடையான் படம் .அன்னாகசாரே யின் லோக் பால் மசோதா வுக்கும்,தமிழ் நாட்டில் மின்தடை நீங்கும் காலம் வருவது எப்போது என்ற அள்வில் எதிர்பார்ப்புகளை தந்துள்ள படம் அவரது ரசிகர்களுக்கும்-ஊடகங்களுக்கும்.மக்களுக்கு அவர்களின் கவலை எல்லாம் மின் வெட்டு பற்றிதான்.
கொச்சடையான்  படம் திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் ஆகுமா?
என்கிற பயமும் - குழப்பமும்  ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ரஜினிக்கே இருக்கிறது .இதுதான் இன்றைய நிலவரம்..
suran
கொச்சடையான் மே 9ல் வெளியாகிறது விளம்பரம் கண்டு  சில தினங்களுக்கு முன் இந்த படத்தை தயாரித்து வரும் முரளி மனோகரை சந்திக்க கடன்காரர்கள் கூட்டமாக வந்துவிட்டார்கள்.
 மாற்றான் படத்தை வெளியிட்ட வகையிலேயே இவர் பனிரெண்டு கோடி ரூபாய் நஷ்டத்தைஇவர் இன்னமும்  ஈடு கட்ட வேண்டியிக்கிற தா ம். இதுபோல் இவரின் சில படங்களையும் சேர்த்து சுமார் நாற்பது கோடி கடன்.
இந்த படம் வெளியாகிவிட்டால் முரளி மனோகர் லண்டனுக்கு சென்று  காணாமல் போய் விடுவார். அதற்கப்புறம் அவர் சென்னை வருவது எப்போது என்று யாருக்கும் தெரியாது.மேலும் கொச்சடையான் ரஜினி நடித்தப்படம் என்று விளம்பரம் செய்யப்பட்டாலும் அது அசைவூட்டப்படம்.அதான் அனிமேசன் படம்.கதாநாயக கார்ட்டூனின் முகம் மட்டும் ரஜினி முகம் வரையப்பட்டுள்ளது என்பதும்.படம் வெளியானால் சின்னக்குழந்தைகள்தான் பார்க்க வேண்டும் ரஜினி வெறியர்கள் மீண்டும் ,மீண்டும் பார்க்க மாட்டார்கள் பணத்தை எடுப்பது மிக கஷ்டமான வேலை என்றும் அவர்களுக்கு தெரிந்துள்ளது.
அதனால் கடனை வசூலிக்காமல் படத்தை ரிலீஸ் செய்ய விட்டால், மொத்த பணமும் அம்போதான் என்ற முடிவுக்கு  கடன்காரர்களுக்கு வந்து முரளி மனோகரை ,சுற்றி வளைத்து ஒரு முடிவு  கட்டிவிட்டார்கள்..
பணத்தை எண்ணி வச்சுட்டு படத்தை ரிலீஸ் பண்ணுங்க. இல்லேன்னா விட மாட்டோம் என்பதுதான் அவர்களின் காச் மூச் கத்தல்கள். இல்லேன்னா ரஜினியை பணத்துக்கு   பொறுப்பேத்துக்க சொல்லுங்க என்று சொல்ல  ரஜினியோ, படம் வெளிவந்தாலும்,வரா விட்டாலும் நான் பொறுப்பேற்க முடியாது என்றும் அது பற்றி   எனக்கு கவலையில்ல என்றும்  கூறிவிட்டார் . கொச்சடையானைப்பற்றியும் -தனது மகள்களின் இயக்கம் திறமையைப்பற்றியும் ரஜினிக்கு தெரியாதா என்ன?
அப்புறம் என்ன செய்வார் முரளி மனோகர்?  கடன்காரர்களின் காலில் விழுந்து ஐந்து கோடி கடனை தள்ளுபடி செய்ய சொன்னார்.
வேறு வழியின்றி அதற்கும் கடன்காரர்கள் அதற்கு ஒப்புக்கொள்ள . இறுதியாக பத்து கோடி ரூபாயை பணமாக செட்டில் செய்தார்.
 மீதி இருபத்தைந்து கோடிக்கு செக் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.வரும்  திங்கட் கிழமை செக் செல்லுபடியானால் படம் வெளியாகும்.
இல்லையேல்?
கோச்சடையானுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு மொத்த பேரும் ஒதுங்கிக் கொள்வார்கள்.இதுதான் இன்றைய கொச்சடையான் நிலை.
இப்படம் வெளியாகாவிட்டால் ரஜினிக்குத்தான் அசிங்கம்.தனது மகள்கள் திரையுலகத் திறமை பற்றி முன்பே தெரிந்தும்,பணத்தை இழந்தும் ரஜினி அ வர்களை அடுத்தவர் பணத்தில் மஞ்சள் குளிக்க வைத்தது தவறு.அதேபோல் ரஜினி மகள்களை வைத்து படம் எடுத்தால் அது போண்டியானாலும் ரஜினியை வைத்து சமாளித்து விடலாம் என்று முரளி மனோகர் போல் தயாரிப்பாளர்கள் எண்ணுவதும் தவறு.
கொச்சடையான் எல்லோருக்கும் நல்ல பாடம்.


suran

suran

suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?