இடுகைகள்

செப்டம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதய நோயிலிருந்து

படம்
இருதயநோயிலிருந்து பாதுகாக்க வழிகள்: இருதய நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப்., 29ம் தேதி, உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.  உடற்பயிற்சி இல்லாதது, நைட் ஷிப்ட்கள், முறையற்ற உணவு பழக்க வழக்கம், அதிக நேர பணி, இதனால் குடும்பத்தில் ஏற்படும் நிம்மதியின்மை போன்றவை இருதய நோய் சாத்தியக் கூறுகளை அதிகரிக்கிறது. இன்றைய சூழலில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகில் அதிகளவிலான மரணத்துக்கு இதயநோய் காரணமாக விளங்குகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 40 லட்சம் பேர் இருதய நோய்களால் மரணமடைகின்றனர். இருதய நோய்களால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை 3 சதவீதத்தில்இருந்து 12 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது எதிர்காலத்தில் 20 சதவீதமாக கூட உயரலாம் என டாக்டர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அதே போல் உலகில் மாரடைப்பால் மரணமடைபவர்களில் 20 சதவீதம் பேர் புகைபிடிப்பவர்கள்.  புகை பிடிக்காதவர்களை விட புகைபிடிப்பவர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். புகை பிடிப்பதனால் இருதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. புகை பிடிப்பவர்களுக்கு மட்டும் இ

நாய்க் கடி { ரேபிஸ்} நோய்

படம்
இன்று (செப்., 28) உலக ரேபிஸ் நோய் தினம்! ரேபிஸ் ஒரு கொடிய வைரஸ் நோய். மரணத்தை தேடி தரும் இந்நோயை அதிகம் பரப்புவது நாய்களே.  இந்நோயால் பாதிக்கப்பட்ட நாய், மனிதனை கடிப்பதால் மனிதன் பாதிப்புக்கு  உள்ளாகிறான். விளைவு... தனி அறையில், தனிக்கூண்டில் மரணத்தை தழுவும் நிலை வரை செல்கிறது.  நாய் கடித்தால் தான் ரேபிஸ் தொற்றும் என்பது இல்லை. பாதிக்கப்பட்ட நாயின் உமிழ்நீர் பட்டாலும், நகத்தால் பிராண்டினாலும் வரலாம். நம் உடலில் சிறுகீறல் இருந்து அதில் உமிழ்நீர் பட்டாலும் ரேபிஸ் வைரஸ் தாக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், பசியின்மை, வாந்தி, தண்ணீர் விழுங்க சிரமம் மற்றும் இரண்டாம் நிலையில் நரம்பு சம்பந்தப்பட்ட அறி குறிகள், பக்கவாதம், உடல் உறுப்புகள் செய லிழப்பு போன்றவை ஏற்படும். 'கோமா' நிலைக்கு வந்து இறப்பு ஏற்படும். ரேபிஸ் இறப்புகளில், 85 சதவீதம், தெற்காசிய நாடுகளில் நிகழ்கிறது. இதில், முதலிடம் இந்தியாவிற்கு; ஆண்டுக்கு 35 ஆயிரம் பேர் வெறி நாய்க்கு பரிதாபமாக இறக்கின்றனர். இதில், 85 சதவீதம், 15 வயதிற்கு உட்பட்ட மற்றும் கிராமப்புற ஏழைகள் தான். தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டு

”பகத்சிங்--நாகேஷ் “ பிறந்தநாள்

படம்
சே குவேராவின்  இந்திய வடிவம்தான்  பகத் சிங்  பகத்சிங் பிறந்தநாள்: 27.09.1907 1919-ல் நூற்றுக் கணக்கான இந்தியர்களின் உயிரைப் பறித்த ஜாலியன் வாலாபாக் படுகொலைதான் பகத் சிங் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.  அந்தப் படுகொலை நடந்த சமயத்தில் பகத் சிங்குக்கு வயது 12. படுகொலை நடந்த இடத்தில் இருந்த மண்ணை எடுத்துவந்து பாதுகாத்து வைத்திருந்தார் பகத் சிங். பகத் சிங்கின் பாட்டியின் ஆசையை நிறைவேற்றும் வகையில், பகத் சிங்குக்குத் திருமண ஏற்பாட்டை அவருடைய தந்தை மேற்கொண்டபோது, ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி கான்பூர் சென்றுவிடுகிறார், விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக. அந்தக் கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்: ‘என் வாழ்க்கை ஓர் உன்னத லட்சியத்துக்காக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது: இந்திய விடுதலைதான் அந்த லட்சியம். அதன் காரணமாக, வசதிவாய்ப்புகளுக்கும் உலகியல் ஆசைகளுக்கும் என் வாழ்வில் இடமில்லை. நான் சிறுவனாக இருந்தபோதே நாட்டின் சேவைக்காக அர்ப் பணிக்கப்பட்டவன் என்று தாத்தா சபதம் செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். ஆகவே, அப்போதைய சபதத்தை மதிக்கிற

நீதி தேவதை....?

படம்
வாய்தா சாதனைக்க்கு முடிவு... 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 சொத்து குவித்ததாக அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 14-6-1996 அன்று சென்னை மாநகர‌ அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். 27-6-1996 அன்று அவரது புகாரை விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை மாநாகர அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கை விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம்ம நாயுடு தலைமையில் 15 காவல் ஆய்வாளர்கள் விசாரணை அதிகாரிகளாக‌ நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் முதல்கட்ட விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல், சாட்சிகள் விசாரணை ஆகியவை 2003-ம் ஆண்டு வரை நடைபெற்றது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் மனுவைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி இவ்வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில் இர

இடைத்தேர்தல் தரும் பாடங்கள்

படம்
க டந்த மாதத்திலும், இந்த மாதத்திலும் சில மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக பெருத்த தோல்வியினைச் சந்தித்திருக்கிறது. கையிலிருந்த இடங்களையும் கூட இழந்திருக்கிறது.  அறுதிப் பெரும்பான்மை பெற்று மத்தியில் அமைந்தஆட்சி குறித்தும், மோடியின் நூறு நாள் சாதனை குறித்தும் ஊடகங்கள் சிலாகித்து பெரிதாகப் பேசிவந்திருக்கும் பின்னணியில், வெளி வந்திருக்கும் தேர்தல் முடிவுகள் இவை தேர்தல் முடிவுகளாக மட்டு மல்லாது, அதன் அரசியல் முக்கியத்துவம் குறித்தும் பி.சாய்நாத் தனது வலைத்தளத்தில் (18.09.2014) வெளியிட்டிருக்கும் கட்டுரையின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஊழல், நிர்வாகக் குளறுபடிகள் போன்றவற்றின் காரணமாக, இரண்டாவது ஐ.மு.கூஅரசு மக்களிடமிருந்து தனிமைப்பட்டது.  இவ் வாறு தனிமைப்பட அதற்கு ஐந்து ஆண்டுகள் பிடித்தன.  ஆனால் ஒவ்வொருவரையும் சீண்டிஅவர்களைப் பகைத்துக் கொள்வதற்கு, பாஜக விற்கு ஐந்து மாதங்கள் கூட தேவைப் படவில்லை. பாஜகவின் 100 நாள் ஆட்சி குறித்த ஊடகக் கொண்டாட்டங்கள் இன்னும் கூட முடியாத நிலையில், இந்த இடைத் தேர் தல் தோல்வியில் வந்திருக்கிறது. இடைத் தேர்தல்கள் நடைபெற்ற 32 இடங்களில

பச்சையா வெங்காயம் சாப்பிடுங்கள்...

படம்
பி. யு. சின்னப்பா ------------------------------- 1916-ம் ஆண்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உலகநாத பிள்ளைக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் [05-05-1916 அன்று மகனாகப் பிறந்தார்.  இவரது இயற்பெயர் சின்னசாமி.  புதுக்கோட்டை என்ற தனது பிறந்த ஊரையும் சேர்த்து பி. யு. சின்னப்பாவானார்.  சின்னப்பாவின் தகப்பனார் அப்போது பிரபலமான நாடக நடிகர். அவருடன் சேர்ந்து சிறுவயதிலேயே பாடவும் கற்றுக்கொண்டார். சிலம்பம், மல்லு, குஸ்தி ஆகியவையும் பழகினார். தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா என்ற நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தார்.  இக்கம்பெனியில் தான் டி. கே. எஸ். சகோதரர்கள் பிரதான வேடங்களில் நடித்து வந்தனர். பின்னர் அவர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் 15 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்து அவர்களின் நாடகங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கினார். மிக விரைவிலேயே ராஜபார்ட் போன்ற வேடங்களில் நடித்து புகழ் பெற்றார்.  அவருடன் அப்போது நாடகங்களில் நடித்தவர்களில் குற்ப்பிடத்தக்கவர்கள் பி. ஜி. வெங்கடேசன், எம். ஜி. ஆர், எம். கே. ராதா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். தனது 19-வது வயதில் நாடகக் கம்பனியில் இருந்து விலக