இடுகைகள்

அக்டோபர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரே மாதத்தில் உடல் எடையைக் குறைக்க....?

படம்
‘ஒரே வாரத்தில், ஒரே மாதத்தில் உடல் எடையைக் குறைக்கலாம். கட்டான உடலைப் பெறலாம்’  என உணவுகளையும், உபகரணங்களையும் விளம்பரப்படுத்தி மக்களை நம்ப வைக்க களம் இறங்கியிருக்கின்றன சில நிறுவனங்கள். இவையெல்லாம் உடல் எடையைக் குறைத்து விடுமா?  இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால் உண்மையிலே உடலை இளைக்க வைக்க முடியுமா?  எடையை குறைக்கும் பெல்ட்.? டெலி ஷாப்பிங் நிறுவனங்கள் சில மாடல்களைக் காண்பித்து இந்தப் பெல்ட்டை நீங்கள் நிற்கும் போதோ, உட்காரும் போதோ அரை மணி நேரம் வயிற்றில் கட்டி கொண்டாலே போதும்.  தொப்பை குறைந்து 3 வாரங்களிலே அழகான இடையைப் பெறலாம் என்கிறது. நம் உடலில் பல்வேறு இடங்களில் கொழுப்புத் தேங்கியிருக்கும். அதை மொத்தமாகக் குறைக்க முடியுமே தவிர, குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பெல்ட் அணிந்து கொழுப்பை குறைக்க முடியும் என்பதில் உண்மை இல்லை. வயிற்றைச் சுற்றி கட்டியிருப்பதால் உடல் சூடாவதன் மூலம் வியர்க்குமே தவிரக் கலோரிகளை எரிக்காது. இதனால் உடல் சூடு, சூடு கட்டிகள், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள்தான் வரும். கொழுப்பு நீங்காது. பிரசவித்த பெண்களுக்கு இடுப்புக்குக் கீழ் காற்றுப் போகக் கூடாத

ஜெயலலிதா பெரியாரின் வாரிசு......?

படம்
'தி இந்து'-முடிந்தது மூடத்தனம்; தொடங்கியது விஷமத்தனம்...!                                                'உண்மை நின்றிட வேண்டும்' இது 'தி இந்து' தமிழ் இதழில் நடுப்பக்கம் வெளிவரும் தலையங்க முகப்பு வாசகம். இனிமேல் இதனை  'பொய்மை வென்றிட வேண்டும்'  என மாற்றி அமைக்கலாம்.ஏனென்றால் அதன் நடுப்பக்கத்தில் வெளியாகும் கட்டுரைகள் அந்த லட்சணத்தில் தான் இருக்கிறது. அரசியல் சமூக விமர்சகர் க.திருநாவுக்கரசு என்பவர் எழுதிய  ' பெரியாரின் வாரிசுதான் ஜெயலலிதா'  என்பதை கருத்துப்பேழை என்னும் தலைப்பில் நடுப்பக்க கட்டுரையாக வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுரையின் நோக்கமாக கீழ்க்கண்டவற்றை வகைப்படுத்த‌லாம். பெரியாரை சர்வாதிகாரி என நிறுவுவதும்,அதன் தொடர்ச்சியாக அவரது வாரிசு என்று ஜெயலலிதாவை பிரகடனப்படுத்தி இப்பொழுது ஜெயலலிதாவின் கைதுக்குப் பிந்தைய மரணங்கள்,ஆர்ப்பாட்டங்கள்,எதிர்ப்புக்குரல்கள் என்ற பெயரிலான காணச் சகிக்காத கூத்துக்கள் என அனைத்தையும் கண்டிப்பதும்,இவை அனைத்துக்கும் அன்று பெரியார் தொடக்கி வைத்த சர்வாதிகாரம் தான் விதை எனத் தொடர்பு படுத்துவதும் தான். பெ

கண்டு கொண்டேன்,,,,,,.! கருப்பு பணம்தனை..!!

படம்
 காங்கிரசு அரசு கொண்டுவர முடியாத கருப்புப் பணத்தை அன்னிய வங்கிகளில் இருந்து தான்  கொண்டு வந்து விடப்போவதாகவும். அதில் இருந்து இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் பங்கு வைத்தால் தலா 19 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று திருவாளர் மோடி திருவாய் மலர்ந்து முழங்கினார். ஆனால் இன்று ஏற்கனவே அனுமதி பெற்று அன்னிய வங்கியில் கணக்கு வைத்திருப்போர் பட்டியலை வைத்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் வெளியிட்ட மூன்று  பெயர்கள் அனைத்தும் வெளிநாடுகளில் வணிகம் செய்பவர்கள் பெயர்கள்தான். நமக்கு என்னவோ மோடி இந்த கருப்பை கண்டு பிடித்து  தலா 19லட்சம் தருவார் என்ற நம்பிக்கை இல்லை. கருப்பு பணம் என்றால்....? வருவாயில் இருந்து அரசுக்குக் கணக்குக் காட்டாமல் மறைக்கப்படும் பணம் எல்லாமே கருப்பு பணம்தான். பொதுவாக வரி கட்டுவதைத் தவிர்க்கவே, வருவாய் மறைக்கப்படுகிறது. சில வேளைகளில் குற்ற வழிகளில் வந்த பணத்தையும் கணக்குக் காட்ட முடியாமல் போவதால் அதுவும் கருப்பு பணமாகி விடுகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு, பணப் பரிவர்த்தனை மூலமே நடைபெறுகிறது. ஆண்டுக்கு சுமார் 62 லட்சம் கே

25 இல் ”வாலி”[ப]க் கவிஞர்/

படம்
திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறை, வாலியின் சொந்த ஊர். ஸ்ரீரங்கத்துக்கு வந்து குடியேறிய ஸ்ரீனிவாச அய்யங்கார் - பொன்னம்மாளின் மகன் வாலி. படித்தது எஸ்.எஸ்.எல்.சி. பிறகு, சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பு! வாலி எப்பவும் உடுத்துவது நூலாடையாக இருந்தால் வெள்ளை. சில்க்காக இருந்தால் சந்தன நிறம். இவை தவிர வேறு விருப்பம் இல்லை! 'பொய்க்கால் குதிரை', 'சத்யா', 'பார்த்தாலே பரவசம்', 'ஹே ராம்' என நான்கு படங்களில் நடித்து இருக்கிறார் வாலி! 'எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப்போட்டுவிட்டான்' - கண்ணதாசன் இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது! அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜகோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், அவதார புருஷன் என 15 புத்தகங்கள் எழுதிஇருக்கிறார். சிறுகதை, கவிதை, உரைநடை என எல்லா வகையும் இதில் அடக்கம்! எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்த வெளிநாட்டுக்கும் சென்றதில்லை கவிஞர் வாலி. பாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரர்! வாலியின் காதல் மனைவி ரமணத்திலகம். இந