இடுகைகள்

நவம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அன்று நடந்தது என்ன? என்ன?

படம்
 கலைஞர் விளக்க கடிதம் . திமுக தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளூக்கு எழுதியுள்ள கடிதம் : முதலமைச்சர் பதவியிலே இருப்பதற்கு ஒரு கண்ணியம் வேண்டும். அது எந்தக் கடையிலே விற்கும் என்று கேட்பவர்களை அங்கே உட்கார வைத்தால், அவர்கள் தங்கள் குணத்தைக் காட்டத் தான் செய்வார்கள். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூவாக வாய்த்திருக்கும் பன்னீர்செல்வம், சட்டசபையில் தி.மு.க.வினர் அராஜகம் செய்ததாக நேற்றைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.  1957ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகச் சட்டப்பேரவையில் இடம் பெற்றிருக்கிறது.  15 பேராக நுழைந்து, 50 பேராக உயர்ந்து, 1967இல் பெரும்பான்மையைப் பெற்றுப் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் தி.மு.கழகம் ஆட்சி அமைத்தது.  அப்போது இந்தியாவையே ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தது.  ஆனால் ”அ.தி.மு.க. என்ற ஒரு அமைப்பு பேரவையில் நுழைந்த பிறகு தான், அதுவும் குறிப்பாக அருமை நண்பர் எம்.ஜி.ஆர். மறைந்த பிறகுதான் , சட்ட சபையில் அராஜகம் - அநாகரீகம் என்பவை நுழைந்தன” என்பதைத் தமிழ்நாட்டு மக்களும், பத்திரிகையாளர்களும் நிச்சயம் மறந்திருக்க மாட்

சீமான்:ஒரு ஈழப்பார்வை.

படம்
 ” ஈழத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும்  ஜெயலலிதாவின் சொம்பு தமிழன் சீமான் பற்றி ஈழ மக்கள் கருத்து என்னவாக இருக்கும். சீமான் தாந்தான்  மாவீரன் பிரபாகரனின் தமிழக பதிப்பு என்று ஈழத்தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தினாலும் இங்குள்ள மக்கள் ஏமாந்தாலும் சீமானின் பருப்பு இலங்கைத்தமிழர்களிடம் வேகவில்லை. அங்குள்ளவர்களின் கருத்தை-ஈழ இணையத்தள கட்டுரை ஒன்றை பார்ப்போம்:” சீமானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்க முடியும் !! Category: விஜயகுமாரன் Created : 19 November 2014 Hits:  283 இலங்கைத் தமிழர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்காமல் சீமான் போன்ற இனவெறியர்கள் ஓயப்போவதில்லை.  இலங்கைத் தமிழர்களிற்காக குரல் கொடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு இலங்கையின் யதார்த்தம், புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் உள்ள உலக அரசியல் நிலைமைகள் என்பவற்றை பற்றிய எந்தவிதமான அறிவுமின்றி இவர்கள் ஊளையிடுகிறார்கள்.  இந்தியாவில் ஒரு பலவீனமான மத்திய அரசு அமையும் போது சரியாக அதே நேரம் தமிழ்நாட்டில் ஈழ மக்களிற்காக குரல் கொடுக்கும் இலட்சிய வெறி கொண்ட ஒருவனின் கீழ் முப்பத்தொன்பது பார

செவ்வணக்கம் மாவீரனுக்கு.

படம்
விதைகள் அனைத்தும் மரமாவதில்லை. மனிதர்கள் அனைவரும் மாமனிதர்கள் ஆவதில்லை. கொள்கைவாதிகள் அனைவரும் வீரர்கள் ஆனதில்லை. வீரர்கள் எல்லோரும் மாவீரர்களாவதில்லை. மாவீரர்கள் எல்லோரும் பிரபாகரன் ஆக கருக்கொள்வதில்லை. செவ்வணக்கம் மாவீரன் பிரபாகரனுக்கு. "கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை"                                           --       விக்கிலீக்ஸ். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள். அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர்.  அதன் காரணமாகவே போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறித்து அரசாங்கமோ பாதுகாப்புப் படைகள

மக்கள் கோவணத்தை உருவி...

படம்
அதானிக்கு பரிவட்டம்..?  ======================= ”இந்திய ஸ்டேட் வங்கி உள்பட பொதுத்துறை வங்கிகளில் இதுவரை ரூ.72 ஆயிரம்கோடி அளவிற்கு கடன் பெற்று பல்லாண்டுகாலமாக திருப்பிச் செலுத்தாமல் ஏப்பம்விட்டுள்ள தனியார் பெரும் கார்ப்பரேட் நிறுவனமான அதானி குழுமத்திற்கு இன்னுமொரு ரூ.6,200 கோடி பணத்தை கடனாக வாரி வழங்க பாரத ஸ்டேட் வங்கி ஒப்புக் கொண்டிருக்கிறது. ” இதை நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். நாட்டு மக்களின் சேமிப்புப் பணத்தை பெருமுதலாளிகளின் நலன்களுக்காக இப்படி சூறையாடுகிற மத்திய பாஜக அரசின் கொள்கையை எதிர்த்தும், வங்கித்துறை உள்பட ஒட்டுமொத்த நிதித்துறையையும் சீர்குலைவு பாதையில் தள்ளிவிட முயற்சி மேற்கொண்டுள்ள மோடி அரசைகண்டித்தும் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் டிசம்பர் 2ம்தேதிமுதல் 5ந்தேதி வரை நாடு தழுவிய தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. இதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் டிசம்பர் 2ந்தேதி வங்கி ஊழியர் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. முன்னதாக டிசம்பர் 1ந

ஊழலின் வேர்கள் எதுவரை?

படம்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தமு.பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்த போது எருக்கன்சேரி என்ற இடத்தில் நில ஆர்ஜிதம் செய்ததில் ஊழல் நடந்தது என்று சட்டமன்றத்தில் கருணாநிதி பேசினார்.  அது குறித்துவிசாரிக்க குழு அமைக்கப்பட்டது. அக்குழுநில ஆர்ஜிதம் செய்ததில், ஊழல் நடைபெற்றுள் ளது என்று கண்டறிந்தது. இதற்குள் 1967ல், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சியில் அமர்ந்தது.  எருக்கன்சேரி ஊழல் குறித்து மேல் நடவடிக்கை தேவையில்லை என்று திமுக முடிவு செய்தது.  திமுக ஆட்சியின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவர் மீது அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகள் எழுந்தன. மஸ்டர் ரோல் ஊழல், கோதுமைபேர ஊழல், வீராணம் குழாய் ஊழல், பூச்சிமருந்து ஊழல் என பட்டியல் நீண்டது.  1972ல் திமுகவிலிருந்து பிரிந்துவந்த எம்.ஜி.ஆர்., குடியரசுத் தலைவரிடம், கருணாநிதியின் ஊழல்களை பட்டியலிட்டுக் கொடுத் தார். அன்றைய மத்திய அரசு அவற்றை வாங்கிவைத்துக்கொண்டு, நான்கு வருடம் கழித்து, 1976-ல் திமுக ஆட்சியை கலைப்பதற்காக அந்த ஊழல்பட்டியலை பயன்படுத்திக் கொண்டது.  கருணாநிதியின் ஊழல்கள் குறித்து விச