இடுகைகள்

ஜனவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதய நோயை கட்டுபடுத்த....,

படம்
 உயிர்க்கொல்லியாக இருக்கும் இதய நோய் பற்றிய போதிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை. ஆண்டுதோறும் 1.73 கோடி பேர், உலகம் முழுவதும் இதய நோயால் உயிர் இழக்கின்றனர். 2030ம் ஆண்டில் இது 2.3 கோடியாக உயரும் . இதய நோய் உயிர் இழப்புகளைத் தவிர்க்க முடியும்.  இதயத்தில் ஏற்படும் பிரச்னைகள், காரணங்கள் அவற்றைத் தவிர்க்கும் வழிகள் பற்றி இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் தரும் இந்த இதய வழிகாட்டி நம் உயிர் காக்கும் தோழன்! இதயம் மனிதனின் நெஞ்சுக்கூட்டில் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் உறுப்பு, இதயம். இதை வலது மற்றும் இடது புறம் என இரண்டாகப் பிரிக்கலாம். இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. நம் உடல் இயக்கத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தும் ஆக்சிஜனும் ரத்தம் மூலமாக நமக்குக் கிடைக்கின்றன.  இதயம் ஒரு பம்ப் போன்றது. தசையால் ஆன பம்ப் என்றும் சொல்லாம். கார்பன்டைஆக்ஸைடு நீக்கப்பட்டு, ஆக்சிஜன் நிரப்பப்பட்ட ரத்தம், நுரையீரலில் இருந்து இதயத்துக்கு வருகிறது. இதயம் துடிப்பதன் மூலம், நல்ல ரத்தம் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் செல்லும் இந்த ஆக்சிஜன் நிரம்பிய ரத

'தூங்கி' வழி யுங்கள்.

படம்
"நமக்கு நாமே புத்துணர்வு ஏற்படுத்திக் கொள்வதற்குத் தூக்கம் மிகமிக அவசியம் .' நாட்டில் 93 சதவீதம் பேர் 8 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகிறார்கள்.  அதில் 58 சதவீதம் பேர், சரியான தூக்கம் இல்லாததால் தங்களுடைய வேலைகள் பாதிக்கப்படுகின்றன என்பதை ஒப்புக்கொள்கின்றனர்.  நாட்டில் சுமார் 5 லட்சம் மக்கள்தொகை கொண்ட 25 நகரங்களில் 35 முதல் 65 வயது வரையுள்ள 5,600 பேரைத் தேர்வு செய்து, அவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.  இந்த ஆய்வைப் பிலிப்ஸ் இந்தியா ஹோம் கேர் நிறுவனம் ‘பிலிப்ஸ் ஸ்லீப் சர்வே' என்ற தலைப்பில் மேற்கொண்டது.  இதில் சுமார் 11 சதவீதம் பேர் தூங்குவதற்காக அலுவலகங்களில் இருந்து விடுமுறை எடுத்துக்கொள்வதாகவும், அதே அளவுகொண்டோர் அலுவலகங்களில் பணியாற்றும்போது தூங்கிவிடுவதாகவும் கூறியிருக்கிறார்கள்.  மேலும், 72 சதவீதம் பேர் தங்களுடைய இரவுத் தூக்கத்தின்போது ஒன்றிலிருந்து மூன்று முறையாவது விழித்துக்கொள்வதாகவும், சரியான தூக்கம் இல்லாதது தங்களுடைய ஆரோக்கியத்தைப் பாதித்திருக்கிறது என்று 87 சதவீதம் பேர் கூறியிருப்பதாகவும் தெரிவ

"அ[ம்மா] ணி வகுப்பு"?

படம்
குடியரசு தின விழாவில் மக்கள் பார்த்து மகிழ்வது அலங்கார ஊர்திகளின் அணி வகுப்புதான். ஆனால் அது இந்த ஆண்டு "அம்மா அணிவகுப்பு" ஊர்வலமாக மாறிப்போனது"   குடியரசு தின விழாவை முன்னிட்டு, அரசின் சாதனைகளை விளக்கும் வாகனங்கள் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த அரசுத் துறை வாகனங்கள் அனைத்திலும், ஜெயலலிதா படங்களே இடம் பெற்றிருந்தன. ஜெயலலிதா படங்கள் இடம் பெற்றிருந்தது மாத்திரமல்ல; ஒரு வாகனத்தில் கூட தற்போதைய முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் படம் இடம் பெறவில்லை.  அரசுத் துறை அதிகாரிகள் யாரும், அவரை முதல் அமைச்சராகக் கருதி ஏற்றுக்கொள்ளவில்லை.  அந்த அளவுக்குத் தான் தமிழக அ.தி.மு.க. அரசு தள்ளாடிக் கொண்டிருக்கிறது. கடந்த 25-11-2014 அன்று தமிழக நாளேடுகளில் ஒரு செய்தி வந்தது. அதாவது அரசு அலுவலகங்கள், கட்டடங்கள், திட்டங்கள், பாடப் புத்தகங்கள், இணைய தளங்கள் என அனைத்திலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் படங்கள் வேண்டுமா என்ற கேள்வியுடன் கழகச் சட்டப்பேரவை உறுப்பினர் தம்பி டி.ஆர்.பி. ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல்,

ஆண்டன் செகாவ் .

படம்
சிறுகதை என்றால் நீங்கள் செகாவை கண்டிப்பாக வாசிக்க வேண்டும் ;32 மொழிகளில் அவரின் சிறுகதைகள் வாசிக்கபட்டவண்ணம் உள்ளன . ஆண்டன் செகாவ் எனும் மாபெரும் இலக்கிய மேதை பிறந்த தினம் இன்று [29-01-2015]உலகின் சிறுகதை சக்கரவர்த்தி என்று பெயர் எடுத்தவர்.செகாவ். மாஸ்கோ அருகில் உள்ள டாக்கின் ராக் என்ற கடற்கரை நகர்தான் செகாவ் பிறந்த ஊர். .எளிமையான குடும்பம். அப்பா பலசரக்கு கடை வைத்திருந்தார் ; இவரை அடித்து துவைத்துக்கொண்டே இருப்பார்; கண்ணீர் விடுவார் இவர் .  சர்ச்சுகளில் போய் பாடல் பாடுங்கள் என்று காலையில் மூன்று மணிக்கு எழுப்பி பயிற்சி தருவார் தந்தை. அடியும்,அழுத்தி திணிக்கப்பட்ட சங்கீதமும் செகாவ் மற்றும் அவரின் சகோதரர்களை திசைமாற்றிப்போட்டது.  அண்ணன்கள் குடிகாரர்களாக, பெண் பித்தர்களாக போனார்கள். செகாவுக்கு வேறொரு வாழ்க்கை காத்திருந்தது. கூடுதலாக வகுப்பில் ஆசிரியர்கள் தொல்லை வேறு .  ஆசிரியர்களை வருங்காலத்தில் கண்டால் வெறுப்போடு முகத்தை திருப்பிக்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார் அவர். ஆனால்,செகாவ் உலகை நேசித்தார் ; அவரை ஊர்முழுக்க வாங்கியிருந்த கடனுக்காக கடன்காரர்களிடம் அ

கெட்ட [இறைச்சி ] வியாபாரிகள்

படம்
சென்னையில் உள்ள ஓட்டல்கள்,துரித உணவு கடைகளில் சென்னை மாநகர மக்களுக்கு உணவாகின்றன.  சென்னையில் அடிக்கடி ரெயில் நிலையத்தில் தன் கணக்கில் கெட்டுப்போன மாட்டு இறைச்சிகள் கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. மற்ற நாள்களில் இந்த இறைச்சிகள் என்னவாகின்றன? இவை தற்போது சென்னையின் புற நகர்களுக்கும் உணவாக செல்கின்றன. சென்னையில் இவை கண்டு பிடிக்கப் பட்டது தெரிந்தாலும் தமிழக மற்ற நகரங்களிலும் கெட்டுப்போன இறைச்சி விற்பனை பரவி வருகிறது.அதாவது இந்த கெட்ட [இறைச்சி]வியாபாரிகள் தங்கள் தொழிலை பரவலாக்கி வருகிறார்கள். இதை தடுக்க வேண்டிய தமிழக சுகாதார துறையினரோ கெட்ட இறைச்சி தொழிலதிபர்கள் தரும் பணத்தில் நல்ல இறைச்சி வாங்கி தின்று கொழுத்துக்கொண்டிருக்கின்றனர். எங்கிருந்து இந்த கெட்ட இறைச்சி வருகிறது? ஆந்திர மாநிலம் நெல்லூர், விஜயவாடா ஆகிய பகுதிகளில் இருந்துதான் தமிழகத்துக்கு டன் கணக்கில் மாட்டு இறைச்சி சப்ளை செய்யப்படுகிறது. இதற்கென ஆந்திராவில் சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் மிகப்பெரிய கும்பல் உள்ளது.  நோய்வாய்ப்பட்டு இறந்த மாடுகள், விபத்தில் அடிபட்ட மாடு களை இந்த கும்ப

கருப்பா,,,,,,? வெள்ளையா,,,?

படம்
நீங்கள் குண்டாக இருக்கிறீர்களா? ஒல்லியாக மாற்ற முடியும். நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்களா? குண்டாக மாற்ற முடியும். நீங்கள் கருப்பாக இருக்கிறீர்களா? வெள்ளையாக மாற்ற முடியாது. இதை முதலில்பெண்கள்  புரிந்து கொள்ளணும்.  இது தான் நம் நிறம். இதை எப்படி அழகாக, ஆரோக்கியமாக தக்க வைத்துக் கொள்வது என்பதில் மட்டுமே, நம் கவனம் இருக்கணும். மற்றவர்கள், நம் நிறத்தைப் பற்றி, குறையாகப் பேசுவதற்கு இடம் தரக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் என்பது இயற்கை. அதை, அப்படியே ஏற்பது தான் நியாயம். அதை விட்டு விட்டு கருப்பு நிறமாக இருந்தால் தவறு, அசிங்கம், அவலட்சணம் என்று பேசுவது, நடத்துவது முட்டாள்தனம். கருப்பு என்பது, ஒரு நிறமே. அதை வெளுப்பாக்குகிறேன் பேர்வழி என்று கூறிக் கொண்டு, இயல்பாக இருக்கும் இயற்கை அழகைக் கெடுக்கும் விதத்தில் தங்கள் தோற்றத்திற்கும், உருவத்திற்கும் பொருந்தாத விதத்தில், கருப்பான பெண்கள் ஒப்பனை செய்து கொள்வதும் சரியில்லை. விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள் அழகின் நிறம் சிவப்பு தான் என்று, எந்த விஞ்ஞானமும் சொன்னதில்லை. ஆனால், ஆரோக்கியமான நிறம் கருப்பு என்று, பல விஞ்ஞான ஆய்வுகள் த

ஜெயா வழக்கு .!சில உச்ச [நீதிமன்ற]சந்தேகங்கள்.!

படம்
ஜெ யலலிதா-சசிகலா கும்பலுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் போக்கும் முடிவும் எத்தகையதாக இருக்கும் என்பதை, அக்கும்பலின் பிணை கோரும் மனுவைப்  பல சட்ட விதிகளுக்கும் மரபுகளுக்கும் இயற்கை நீதிக்கும் எதிராக, மாறாகக் கையாண்டு, உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் ஆணைகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.  சொத்துக் குவிப்புக்காக ஜெயலலிதா- சசிகலா கும்பல் புரிந்துள்ள  குற்றங்களுக்கு இணையான  அதிகார முறைகேடு குற்றங்களை உச்ச நீதிமன்றம் புரிந்துள்ளது.  இந்தக் குற்றங்களே தனியே விசாரித்துத் தண்டிக்கத்தக்கன. இயற்கை நீதிக்கு முரணாக ஜெயா-சசி கும்பலுக்குப் பிணை வழங்கியிருப்பதோடு அவ்வழக்கை விரைந்து முடிப்பதற்குமான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து ஆனால், உச்ச நீதி, உயர் நீதி மன்ற நீதிபதிகள் அவ்வாறான  தான்தோன்றித்தனமான தீர்ப்புகள் வழங்குவதைத் தடுப்பதற்கோ, வளையும் செங்கோலை நேராக்குவதற்கோ நீதியான வழி – நேரான வழியேதும் கிடையாது. மீண்டும்  அவர்களிடமே மறு சீராய்வு மனுப்போட்டு ஒருமுறை மன்றாடலாம்! மற்றபடி, அவ்வாறான தவறு செய்யும் “நீதியரசர்களை”க் கேள

ஆர்.கே.லஷ்மண்

படம்
ஆர்.கே.லஷ்மண் 24 அக்டோபர், 1921 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தார். இவரின் சகோதரர் பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயண். 'டைம்ஸ் ஆப் இந்தியா'வில் அறுபதாண்டு காலமாக 'யூ செட் இட்' (You Said it ) என்கிற தலைப்பில் பொதுஜனம்  (Common Man) என்கிற கதாபாத்திரத்தின் மூலம் இவர் வரைந்த அரசியல் கருத்துப் படங்கள் சிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்து வாசகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. . 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் ஒன்றரை நூற்றாண்டு முடிவடைந்த விழாவில் ஓர் அஞ்சல் தலையே அந்த 'காமன்மேன்' நினைவாக வெளியிடப்பட்டது. ஆர்.கே. நாராயனின் 'மால்குடி நாட்கள்' தொலைக்காட்சி தொடருக்கு இவரே ஓவியம் வரைந்தார்.  எளிய ஆனால் ஆழ்ந்த சமூகப் பார்வைக்கு நல்ல எடுத்துகாட்டு இவரின் கார்ட்டூன்கள். ஆசியன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் முத்திரையும் இவர் வரைந்ததே.  இவரை ஒட்டி ஒரு நகைச்சுவை தொடரே இந்தியில் வந்தது. இவரின் கார்ட்டூன்கள் நூல்களாக வந்து நல்ல விற்பனை ஆகின. லஷ்மணின் தூரிகை தெளித்த வெளிச்சத்தில் எத்தனையோ பேர் இப்பொழுது மின்னுகிறார்கள். இப்பொழுதும் அவர் உருவாக்கிய 'பொதுமனிதன்&

"பாராக்" ஒபாமா பராக்!, பராக் ,!

படம்
அமெரிக்க அதிபர் ஒபாமா நம் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளவருவதை மோடி மத்திய அரசு இந்தியாவுக்கு ஏதோ விடிவு காலம் வருவது போலவும் ,அதை ஒபாமா தூதனாக கொன்றாவது போலவும் இந்தியா முழுக்க அதிரடி விளம்பரம்,அட்டகாச வரவேற்பு என தூள்பரத்தியுள்ளது. அதன் கைத்தடி ஊடகங்களும் அளவுக்கு அதிகமாக பரபரப்பாக செய்திகளை வெளியிட்டு மக்களை திக்குமுக்காட வைத்துள்ளன. தினமலர் நாளிதழோ ஒபாமா வாழ்த்து மடல் எழுதுபவர்களில் அதிக சிங்கி ஒலி எழுப்புவோர்க்கு அலைபேசிகளை பரிசாக அள்ளி வழங்கு கிறது.  அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, 2015 குடியரசு தின அணிவகுப்பிற்கு, தலைமை விருந்தினராக வருவதை யொட்டி, ஏராளமான விஷயங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுக் கொண்டிருக் கின்றன.  நாடு சுதந்திரம் அடைந்தபின், இந்தியக் குடியரசுத் தலைவர், `முப் படைகளின் தலைவர்’ என்ற முறையில்  ஆயுதப்படையினரின் “அணிவகுப்பு மரியாதை’’யை ஏற்றுக்கொள்ளக்கூடிய சமயத்தில்,  அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் தலைமை விருந்தினராகப் பங்கேற்பது இதுவே முதல்முறை.  முப்படைகளின் தலைவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்பது என்பது, ராணுவத்தினரின் பேச்சுவழக்கில் சொல்வதெனில், “யுத்த பாணி’’யாகும்.