'மக்கள் தளபதி"க்கு

தளபதி ஸ்டாலின்



வாழ்த்துகள்.!

கலைஞரின் குடும்பத்தில் இருந்ததால் தளபதி ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்தது.

 அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு 1967-1968 இடைப்பட்ட ஆண்டுகளில் பள்ளி மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தினார் .

 அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி இவ்வமைப்பின் மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தனர். 

ஆனாலும் அவரின் அரசியல் ஈடுபாடு அவ்வளவாக இல்லையென்றாலும் 1975ம் ஆண்டு இந்திராகாந்தி அரசால் மிசா காலகட்டத்தில் தளபதி திரு ஸ்டாலின் அவர்களை கைது செய்து சித்தரவதை செய்து வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுத்து வரப்பட்டார். 

அன்று அவர் வாங்கிய அத்தனை அடிகளும் சித்தரவதைகளையும் அவர் மீதானா மக்களின் பார்வை திரும்பியது. 

இதன் தொடர்சியாக அவர் முழுநேர அரசியல்வாதியாக வலம் வந்தவர் 1980 இல் மதுரையிலே உள்ள ஜான்சிராணி பூங்காவிலே அமைப்பு ரீதியாக திமுக இளைஞர் அணி தொடங்கபட்டு தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புகுழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியை நிறுவி அதன் மூலம் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது.

இன்று வரை கழகத்தின் முதுகெழும்பாய் வைத்திருக்கிறார். தளபதி பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

திமுக இளைஞரணி தலைமையகத்திற்காக அன்பகத்தை (முன்னாள் திமுக தலைமையகம்- தற்பொழுதுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு முன்) பெறுவதற்காக திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு 11 லட்ச ரூபாய் நிதி திரட்டி தன் தலைமைப்பன்பை நிருபித்தார்.

ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை.மாநகராட்சி உறுப்பினர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.

ஆனால் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேயராக இருந்து பல மேம்பாலங்களையும் பல அரசாங்க பள்ளிகளின் நிலைகளை உயர்த்தியவர்.

.இரண்டுமுறை மேயராக இருந்து ஒரு முறை உள்ளாட்சித்துறை அமைச்சாஅமைச்சராகவும் , துனை முதல்வராகவும் இருந்து சென்னையில் பாதள சாக்கடை திட்டத்தை நிறுவி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக பல உதவிகள் செய்து சமத்துவபுரங்களை திறந்துவைத்தார்.

ஸ்டாலின்  ஒரே நாளில் கட்சியின் மிக பெரிய அந்தஸ்த்துக்கு வந்தவரல்ல..
சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் என்று உயர்ந்தவர்.

அவருக்கான மதிப்பு கட்சிக்குள்ளும், அதை தாண்டி பொதுமக்களிடமும் மிக பெரிய அளவில் இருப்பதை பார்க்க முடியும்.

அரசியலில் நேர் எதிர்மறை கருத்துகொண்ட துக்ளக் சோ ராமசாமி கூட ":திரு ஸ்டாலின் அவர்களை ஒரு வாரிசு அரசியல்வாதியாக பார்க்க முடியாது..
அவரின் உழைப்பு அளவிடமுடியாதது" என்றுகூறியிருக்கிறார்.

மக்களை பாதித்த சுனாமிக்கு நிவாரண நிதியை தன்னை  எதிரியாக வெறுக்கும் ஜெயாவிடமே அவர தமிழக முதல்வர் என்ற காரணத்தால் நேரில் கொடுத்து தன் மதிப்பை மக்களிடம்  மேலும் உயர்த்தியவர்.

சில நாட்களுக்கு முன் பேராசிரியரின் முன்னிலையில் கலைஞர் அவர்களே தலைவர் பதவிக்கு போட்டி என்று வந்தால் "ஸ்டாலின் அவர்களை முன்னிருத்துவேன்" என்று சொன்னது அவர் அவரின் மகன் என்பதால் அல்ல.
.அது அவரின் உழைப்பிற்க்கு கிடைத்த வார்த்தை.

"கிராமப்புற மாணவர்கள், கிராமப்புற பெண்களின் வளர்ச்சி, நகர்பகுதி ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சி, கிராமத் தில் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் சீரிய திட்டங்களைத் தீட்டுவது எனது கனவு" என்று கூறும் 'மக்கள் தளபதி"க்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.!

[மக்கள் முதல்வர் இருக்கையில் மக்கள் தளபதி இருக்கக் கூடாதா என்ன?]

===========================================================================

லெனின் ,ஸ்டாலினை பாராட்டுகிறார். 

அரசியல் களத்தில் கடுமையான சவாலை சந்தித்துக் கொண்டிருக்கும் தி.மு.கவுக்கு இன்றைய ஒரே நம்பிக்கை கழகத் தளபதி மு.க.ஸ்டாலின் மட்டுமே.

 கலைஞரின் பிள்ளை என்றபோதும் தான் கலைஞரல்ல என்பது அவருக்குத் தெரியும். அதற்கேற்றபடி தன் அரசியல் பயணத்தை மேற்கொண்டு, தொடர்ந்த உழைக்கிறார். ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு..’ என்று உழைப்பின் அடையாளமான கலைஞரிடமிருந்தே நற்சான்றிதழ் பெறுகிறார்.
தமிழகம் முழுவதும் திரும்பத் திரும்பச் சுற்றி வந்து மக்களையும் கட்சிக்காரர்களையும் சந்தித்தபடியே இருக்கிறார் கழகத்தின் தளபதி.

 ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வெற்றியை ‘வாங்கியவர்கள்’ நன்றி சொல்வதா வேண்டாமா என நாள்-நட்சத்திரம் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், தோல்வியடைந்தாலும் கம்பீரமான வாக்குகளுடன் கழகத்தை நிமிர்த்திய மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டார்.

எந்த நிலையிலும் மக்களை சந்திப்பதற்கு அவர் தயங்குவதே இல்லை.

2013ஆம் ஆண்டு அவரை சந்தித்துப் பேசும் வாய்ப்பு அமைந்தபோது, “மக்களோடு நாம் எப்போதும் இருக்கணும்.

 அதனால்தான் கட்சிக்காரங்களுக்கு ஏதாவது வேலை கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்” என்றார் கழகத்தளபதி மு.க.ஸ்டாலின்.

 நான் அவரிடம், “நீங்க உழைக்கிற மாதிரி கட்சிக்காரங்க எல்லோரும் உழைச்சா நிச்சயம் வெற்றிதாங்கண்ணே” என்றேன்.
புன்னகைத்தார்.

அந்தத் தருணத்தில் எடுக்கப்பட்ட படம்தான் இது.

மேயர்-உள்ளாட்சித்துறை அமைச்சர்- துணை முதல்வர் எனத் தனக்கு கிடைத்த பொறுப்புகளில் தன் உழைப்பையும் நிர்வாகத்திறனையும் நிரூபித்தவர் மு.க.ஸ்டாலின்.

அரசியல் கசப்புகளுக்கு அப்பாற்பட்டு, மாற்றுக்கட்சித் தலைவர்களை சந்திக்கத் தயங்காதவர். இன்றைய தமிழக அரசியலில் மிகவும் அவசியப்படுகிற இந்தப் பண்பு அவரிடம் இருப்பது ஆரோக்கியமானது.
ரத்ததானத்தை ஆதரிக்கிறார்.

தன் உடலையும் தன் மனைவியின் உடலையும் தானம் செய்து அதன் மூலமாக உடல்தானம் பற்றிய விழிப்புணர்வைக் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படுத்துகிறார்.

மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், இளம்சாதனையாளர்கள் ஆகியோருக்கு உதவி செய்து ஊக்கவிக்கிறார். அதிகாரிகள் ஒத்துழைக்கிறார்களோ இல்லையோ தனது தொகுதி மக்களுக்கானப் பிரச்சினைகளைக் கேட்டறிந்து முடிந்தளவு தீர்த்து வைக்கிறார்.

தன்னுடைய பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடவேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு, அந்தத் தொகையை பெண் குழந்தைகளின் கல்விக்குச் செலவிடச் சொல்கிறார்.

தொண்டு நிறுவனங்களைப் போன்ற செயல்பாடுகள் இவை என்றாலும் இன்றைய நிலையில் மக்களிடம் நம்பிக்கையையும் செல்வாக்கையும் பெறுவதற்கு இத்தகைய செயல்பாடுகள் தேவையாக இருக்கின்றன. இதனை அவரது வழிநடப்பவர்கள் சரியாக செயல்படுத்தினாலே கழகம் பழைய வலிமையை மீண்டும் பெறும்.

கழகத் தளபதி மு.க.ஸ்டாலினுக்கு எந்தப் பதவியும் அத்தனை எளிதாகக் கிடைத்துவிடவில்லை. அதுவும் கலைஞருடன் ஒப்பிடுகையில், கலைஞர் தன் இளம்வயதிலேயே பெற்ற பெரும்பதவிகள், மு.க.ஸ்டாலினுக்கு தாமதமாகத்தான் கிடைத்தன.


சில இடங்களை இன்றுவரை அவரால் எட்ட முடியவில்லை.

ஆனால், கலைஞருக்கு முதுமையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிச் சூழல்கள் கழகத் தளபதி மு.க.ஸ்டாலினை இப்போதே சூழத் தொடங்குகின்றன.

அதில் கவனம் செலுத்திக் களைவதுடன், கட்சியில் வளரும் குழு மனப்பான்மைக்கு அவர் இடம் கொடுக்கவே கூடாது என்பது தொண்டர்களின் பெருவிருப்பமாக உள்ளது.

மிசா சிறையையும் சித்திரவதைகளையும் எதிர்கொண்டது, கழகம் தொடர்ச்சியாக எதிர்க்கட்சியாக இருந்தபோது இளைஞரணியை உருவாக்கி புதுரத்தம் பாய்ச்சியது, கட்சி பிளவுபட்டபோது இளைஞரணியால் அதைத் தாங்கிப்பிடித்தது, தேர்தல் களப் பணிகளைத் தோளில் சுமந்தது என அவரது பொதுவாழ்வுப் பயணம் தொடர்கிறது.

எனினும், தனது தேர்தல் வியூகத்தால் கழகத்திற்குப் பெரும்வெற்றியை இன்னும் அவரால் பெற்றுத் தர முடியவில்லை.

அந்த வெற்றியை அடுத்த களத்தில் பெறவேண்டிய சுமை மிகுந்த பொறுப்பு கழகத் தளபதியான அவரையே சார்ந்துள்ளது.

எளிய மக்களுக்கான அரசியல் இயக்கமாகத் தோற்றுவிக்கப்பட்டதுதான் தி.மு.கழகம். அது மக்களுடனான தொடர்பில் எப்போதும் இருக்கவேண்டும் என்கிற மு.க.ஸ்டாலினின் எண்ணம் நிறைவேறினால் ஆடம்பரம்-ஊழல்-உட்கட்சிப்பூசல் இவற்றிற்கெல்லாம் இடமிருக்காது.

 தி.மு.கவுக்கு இன்று தேவைப்படுவதும்- நாளைய வெற்றிக்கு அவசியமான அடித்தளமும் அத்தகைய சூழல்தான்.


அதனைக் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உருவாக்கிக் கொடுத்தால் கழகத்தளபதிக்கு அதைவிட சிறந்த பிறந்தநாள் பரிசு வேறெதுவும் இருக்கமுடியாது.


கலைஞரைப் போல கழகத் தளபதி நெடுங்காலம் வாழட்டும்.

. ஆளட்டும்.

                                                                                                                       -கோவி.லெனின்.

 




 










==========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?