வரவு-கடன் அறிக்கை.



தமிழக சட்டப்பேரவையில் 2015-2016 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சரும், நிதிநிலை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கிறார். 
 
இதை தமிழ் நாட்டின் வரவு-செலவு நிதி நிலை அறிக்கை என்பதை விட  ஜெயலலிதாவின் புகழ்பாடும் அறிக்கை என்றுதான் ஏற்றுக் கொள்ள முடியும்.
 
. ‘அம்மாபுகழ் மட்டும் ’ இருந்தால் போதும்  வாக்களித்த மக்கள்  தேவையில்லை என்றுமுதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் நினைத்ததாலோ என்னவோ, இந்த நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலனுக்காக திட்டங்கள் ஒன்று கூட அறிவிக்கப்படவில்லை.
 
தமிழகத்தை கடுமையாக பாதிக்கக்கூடிய விவசாயம், தொழில் உற்பத்தி, மின்வெட்டு, வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. 
தமிழகத்தில் சுமார் 85 லட்சம் இளைஞர்கள் படித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். 
தமிழக அரசுத் துறைகளில் சுமார் 5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. 
ஆனால்  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. வழக்கம் போல் இரண்டு லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதனால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.
 புதிய மின்திட்டங்களையும் அறிவிக்காமல், அறிவிக்கப்பட்ட உடன் குடி போன்ற மின் திட்டங்களையும் செயல்படுத்தாமல் மடக்கி வைத்து விட்டு மின்வெட்டைப் போக்கப் போவதாக ‘வெறும் கையால் முழம் போடும்’ வேலையைத் தான் அரசு செய்திருக்கிறது. 
ஊழலை ஒழிப்பதற்காக லோக் அயுக்தாவை ஏற்படுத்தவும், சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், அதற்கான எந்த அறிவிப்பையும்  அரசு வெளியிடவில்லை.காரணம் தாங்கள்தான் அதில் மாட்டி கொள்வோம் என்ற பயம்.

ஒரு மாநிலம் வளர்ச்சியடைய விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகிய 3 துறைகளும் செழிக்க வேண்டியது அவசியம் ஆகும். சுகாதாரத்துறைக்கு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2 % அதாவது சுமார் ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். 
ஆனால், வெறும் ரூ.8245 கோடி (0.8%) மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
அதேபோல், பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 62,000 கோடி ஒதுக்குவதற்கு பதிலாக ரூ.20,936 கோடி (2.04%) மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. 
முதன்மைத் துறையான வேளாண்துறைக்கு ரூ.6613 கோடி (0.65%) மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. 
மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான 3 துறைகளுக்கும் மொத்தமாக ரூ.35,794 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதைவிட  70 % அதிகமாக இலவசங்கள் மற்றும் மானியங்களுக்கு ரூ. 59,185 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. 
இதிலிருந்து  தமிழக அரசு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவதை விட மக்களை பிச்சைக்காரர்கள் நிலையிலேயே வைத்திருக்கும் இலவசங்களுக்கு முக்கியத்துவம் தருகிறது.என்பதை உணரலாம்.
 தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டம் 2023&ல் அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்த ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட வேண்டும். 
திட்டம் அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை 5 விழுக்காடு அளவுக்குக் கூட நிதி ஒதுக்கப்படவில்லை. இதற்கெல்லாம் மேலாக தமிழக அரசின் நிதிநிலை மிக மோசமான நிலையில் இருப்பதை இந்த நிதிநிலை அறிக்கை  உணர்த்துகிறது. 
2014&15 ஆம் ஆண்டில் தமிழக அரசின் மொத்த வரி வருவாய் ரூ. 91,835 கோடியாக இருக்க வேண்டும்; 
ஆனால், இது 85,772 கோடியாக குறைந்து விட்டது. 
வணிக வரி வருவாய் ரூ.68,724 கோடி என்ற இலக்கை எட்ட முடியாமல் ரூ.65 ஆயிரம் கோடிக்கும் கீழ் குறைந்து விட்டது. 
முத்திரைத் தாள் வருவாய் ரூ. 10,470 கோடி என்ற இலக்கை விட குறைவாக ரூ.9,330 கோடி என்ற அளவில் தான் உள்ளது. 
மோட்டார் வாகன வரி வருவாயும் ரூ.8083 கோடி என்ற இலக்கில் பாதியாக, அதாவது ரூ.4279 கோடியாக குறைந்து விட்டது. 
அதேநேரத்தில் அரசின் செலவுகள் மட்டும் கணிக்கப் பட்டதை விட அதிகமாக ரூ. 1.37 லட்சம் கோடியாக அதிகரித்து விட்டது. 
தமிழக அரசின் நிதி நிர்வாகம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு இதைவிட வேறு சிறந்த உதாரணம் தேவை இல்லை..
  தமிழ்நாட்டில் ஜெயா ஆட்சியில் வளர்ச்சியை எட்டியுள்ள ஒரே விஷயம் மது விற்பனை மட்டும் தான். 
மற்ற அனைத்து வரிகளும் இலக்கை எட்ட முடியாத நிலையில் ஆயத்தீர்வை வருவாய் மட்டும் ரூ.6,483 கோடி என்ற   இலக்கைத் தாண்டியிருக்கிறது. 
அதுமட்டுமின்றி, மதுவிற்பனை வருவாயும் கிட்டத்தட்ட இலக்கைத் தொட்டு ரூ.26,188 கோடி என்ற அளவை எட்டியுள்ளது. 
மேலும் 2015-2016ஆம் ஆண்டில் ரூ.29,627 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்திருப்பது தான் ஜெயா  அரசின் பொற்கால சாதனை.ஆனால் அது தமிழக குடும்பங்களுக்கு வேதனையைத்தான் தரும்.இன்று தமிழ் நாட்டின் பண சுழற்சி டாஸ்மாக்கில் மட்டும்தான் என்றாகி விட்டது.

2015-2016 ஆம் ஆண்டில் தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ. 28,578 கோடியாக இருக்கும் என்று ஆள்வோர் கூறி வ ந்த நிலையில், அது ரூ.31,829 கோடியாக அதிகரித்திருக்கிறது. 
இதை சமாளிக்க ஜெயா அரசு மேலும் ரூ.30,446 கோடி கடன் வாங்க அரசு முடிவு செய்திருப்பதால் நடப்பாண்டின் இறுதியில் தமிழக அரசின் நேரடி கடன் சுமை ரூ.2,11,483 கோடியாகவும், மொத்த கடன் சுமை ரூ.4,12,500 கோடியாகவும் இருக்கும்.
 இது ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்ததை விட ரூ.5,000 கோடி அதிகம் ஆகும். 
அரசின் நேரடிக் கடனுக்கான வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ரூ.17,856 கோடியை தமிழக அரசு செலுத்த விருக்கிறது. 
தமிழக அரசு வாங்கிக் குவிக்கும் கடன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் ரூ.57,053 கடன் சுமத்தப்பட்டுள்ளது.
 ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அக்குடும்பத்தின் கடன் சுமை ரூ. ரூ.2.85 லட்சமாக இருக்கும். 500 ரூபாய் வாக்களிக்க வாங்கி  வாக்களித்த மக்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்த கைம்மாறு மாநிலத்தையும், மக்களையும் மீளமுடியாத கடன் வெள்ளத்தில் மூழ்கடித்தது தான்.

மக்களுக்காக சில சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்பதற்காக கொசுவலை, எல்.இ.டி பல்பு உள்ளிட்ட சில பொருட்களுக்கு வரிச்சலுகைகளை அறிவித்திருக்கிறார்.
இது மொத்த பட்ஜெட் மதிப்பில் 0.40 விழுக்காட்டிற்கும் குறைவாகும். 
மொத்தத்தில் இந்த நிதி நிலை அறிக்கை வளர்ச்சிக்கு உதவாத, தொழில் வளர்ச்சியை பெருக்காத, வேலைவாய்ப்பை உருவாக்காத, பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளக்கூடிய, தமிழக மக்களை கடனாளியாக்கும் வெற்று வரவு& செலவு & அம்மா புகழ் பாடும் காகித அறிக்கைமட்டும்தான் .இன்னும் சில நாட்களில் மளிகைக் கடைகளில் பொட்டணம் மடி க்க மட்டுமே  இந்த அறிக்கையின் பக்கங்கள் பயன் படும்.
தமிழக வரவு-செலவு.ஒரு ரொம்ப சுருக்கக் கண்ணோட்டம் .
இதில் பாதி கடன் சுமை அதிக விலைக்கு வெளியே இருந்து மின்சாரம் வாங்கியது,பருப்பு ,பாமாயில் கொள் முதல் முறைகேடு,1000 கோடி சாலைப்பணிகளில் முறைகேடு போன்ற நிர்வாக சீர்கேட்டால் வந்தது.
கட்டி முடித்த தலைமைச்செயலக ஊழல்களுக்கு ரகு பதி  விசாரணை வைத்தவர்கள் மேற்கண்ட முறை கே டுகளுக்கு ஏதாவது செய்வார்களா?
==========================================================================
இன்று.
மார்ச் -26.
சிபி சிஐடி விசாரிக்கும் லட்சணம்.

வேளாண் துறையில், டிரைவர்கள் நியமன விவகாரத்தில், நெருக்கடி காரணமாக, நெல்லையைச் சேர்ந்த வேளாண் அதிகாரி, முத்துக்குமாரசாமி, ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்ட விவகாரம், தமிழகத்தில், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
 இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதிதாக நியமனம் ஆன, ஏழு டிரைவர்களிடம் பணம் பெற்ற விவகாரம்தான் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க.,வினரிடம், அரசு வேலைக்காக, இரண்டு லட்சம்; மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து ஏமார்ந்தவர்கள், மொத்தம் 32 பேர்.
வழக்கமாக, இதுபோல் வேலைவாய்ப்பிற்காக கொடுக்கப்படும் தொகை, திரும்ப கிடைப்பது அரிது.
 ஆனால், அதிகாரியின் மறைவினால், வேலை கிடைக்காதவர்களுக்கு, பணம் திருப்பி தரப்பட்டதாக கூறப்படுகிறது. சி.பி.சி.ஐ.டி., விசாரணையில், அவிழாத முடிச்சுக்களாக, சில கேள்விகள் உள்ளதாக, முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
முத்துக்குமாரசாமி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்வதற்கு முன், நெல்லை சந்திப்பில் உள்ள அ.தி.மு.க., பிரமுகரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளை, பிரமுகர் வீட்டுமுன் நிறுத்திவிட்டு, மொபைல் போனில் பேசியுள்ளார். பணப்பிரச்னையில் திட்டியதால், அருகிலிருந்த ரயில் கடவுபாதைக்கு சென்று, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் இறப்பிற்குப் பின், மோட்டார் சைக்கிளை தேடிய போலீசார், அதை, அ.தி.மு.க., பிரமுகர் வீட்டு முன் கண்டுபிடித்தனர்.

* அதை, வழக்கின் ஒரு ஆவணமாக வைத்துக்கொள்ளாமல், அதை, முத்துக்குமாரசாமி குடும்பத்திடம் ஒப்படைத்தது ஏன்?
* முத்துக்குமாரசாமியின் வீட்டுக்கு ஆள் அனுப்பி, அவர் மகன்களிடம், குடும்ப பிரச்னையில், தற்கொலை என்பது போல், கடிதம் பெறச்சொன்ன அதிகாரிகள் யார், யார்?
* இந்த அதிகாரிகள் குறித்து, என்ன விசாரணை நடத்தப்பட்டுள்ளது?

* முத்துக்குமாரசாமியிடம் பணம் கேட்டு நச்சரித்த, தகாத வார்த்தைகளால் திட்டிய அ.தி.மு.க.,வினரில், ஒருவருக்கு கூட, இதுவரை, 'நோட்டீஸ்' அனுப்பி விசாரிக்காதது ஏன்? இந்த கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில், முத்துக்குமாரசாமி வீடு வாங்கிய விஷயத்தை, வருமானவரித் துறையின், 'நோட்டீஸ்' உடன் ஒப்பிட்டு, பூதாகரமாக்குவதாக, குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். முத்துக்குமாரசாமி, பலராலும் மிரட்டப்பட்டதற்கு, ஆதாரங்கள் குவிந்து கிடக்கிறது ஆனால், வழக்கை இழுத்துமூடும் நோக்கிலும், அ.தி.மு.க.,வினரை காப்பாற்றும் நோக்கிலும், சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடப்பதாகவும், முத்துக்குமாரசாமி குடும்பத்தினர் குமுறுகின்றனர்.


இதற்கிடையில், முத்துக்குமாரசாமி இறப்பிற்குப் பின், குடியிருந்த வீட்டை, மனைவியும், மகன்களும், காலி செய்து விட்டனர். அதிகாரிகள், அதிமுக கட்சியினர் சிக்கிக்கொள்ளும் சூழல் வந்தால், தங்கள் குடும்பத்தினர்  உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று மிரட்டல்கள் வந்ததால் , வீட்டை காலி செய்து உறவினர்  வேறு வீட்டிற்கு சென்றனர்.






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?