சோறு சாப்பிடுவது எப்படி?



சரி விகித உணவு என்றால் என்ன?

 எந்த விழுக்காட்டில் எந்த உணவை எப்படி உண்பது?
என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

சர்க்கரை சத்து:
மாவு சத்து என்றும், சர்க்கரை சத்து என்றும் அழைக்கப்படும்.
இந்த உணவே நமது பெரும்பான்மையான உணவு என்று கூறலாம். உடலுக்கு தேவையான அதிவிரைவான சக்தியை இந்த சர்க்கரை சத்து தருகிறது. அதனால் தான் இந்த உணவை நாம் தேடி எடுத்துக்கொள்கிறோம்.
இந்த சக்தி இனிப்பில் இருந்து மட்டுமல்லாமல் தானியங்கள், கிழங்கு வகைகள் போன்றவற்றில் இருந்தும் பெறப்படுகிறது. இந்த உணவுகள் இரைப்பையில் சென்ற உடன் நொதிக்கப்பட்டும், உடைக்கப்பட்டும் குளுக்கோசாகமாற்றப்பட்டு மனிதன் என்ற இயந்திரம் சிறப்பாக இயங்க எரியூட்ட படுகிறது.
இந்த குளுக்கோஸ் உயிர் அணுக்களில் விரைந்து புகுந்து சக்தியாக மாறி மனிதனை இயக்குகிறது. இதனால் தான் உடலுக்கு (நோயிலிருக்கும்போது) விரைந்து சக்தி தர குளுக்கோசு தரப்படுகிறது. ஒரு கிராம் சர்க்கரை சக்தியில் இருந்து நான்கு கலோரி வெப்பம் கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர்.
ஒரு கிராம் தண்ணீரை ஒரு டிகிரி செல்சியசு அளவு சூடு படுத்த தேவைப்படும் வெப்பமே ஒரு கலோரி எனப்படும். சர்க்கரையை விட வெல்லமே சிறந்த உணவாகும்.

கொழுப்பு சத்து:

நிலைத்திணை (தாவர), மாமிச, எண்ணைகள் ஆகியவற்றில் இருந்து நமக்கு கிடைக்கிறது. கொழுப்பு சத்துக்களில் கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய மூன்றும் மற்றும் பாசுபரஸ், கந்தகம், நைட்ரஜன் போன்ற வையும் உள்ளது. உணவு முறைகளில் நாம், கொழுப்பு வகை உணவையே அதிகளவில் உட்கொள்கிறோம்.
ஒரு கிராம் கொழுப்பில் இருந்து ஒன்பது கலோரி சக்தி கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர்.
 உடலுக்கு சக்தி வெளியில் இருந்து கிடைக்காத போது சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் கொழுப்பில் இருந்து எடுத்து கொள்ளபடுகிறது.
மாமிசம், தேங்காய், எள், நிலக்கடலை, பனை, சூரியகாந்தி, கடுகு, சோயா, ஆமணக்கு, வெண்ணை, நெய், அரிசிதவிடு ஆகியவை கொழுப்பு சிறந்த உணவுகளாகும்
புரத சத்து :

சர்க்கரையும், கொழுப் பும் சக்தியை தருகிறது. அனால் புரதம் தான் உடலின் வளர்ச்சிக்கும், உடலின் வளர்ச்சி நிலைக்கவும் தேவைப்படுகிறது.
பின்தங்கிய இடங்களில் இந்த புரத பற்றாக்குறை நோய் பெரிதாக காணப்படுகிறது.
இந்த புரத பற்றாக்குறை காரணமாகவே அதிகளவில் நோய்கள் ஏற்படுகிறது. நம்முடைய உடல் கோடிகணக்கான உயிர் அணுக்களினால் ஆனது.
இந்த உயிர் அணுக்களின் அமைப்பில் முக்கியமானதாக இந்த புரத சத்து தான். ஒரு கிராம் புரத்தத்தில் நான்கு கலோரி வெப்பசக்தி கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர். அரிசி மற்றும் பருப்பு வகைகளில் உள்ள புரதத்தில் லைசின், மித்தியோனின் குறைந்தே இருந்தே உள்ளது.
 இந்த இரு வகைகள் சேர்த்து உண்ணுவதால் சக்தி ஈடு செய்யபடுகிறது.
தாவர உணவு உண்ணுபவர்கள் பலவித தானிய வகைகள், பழ வகைகள், கீரைகள், பால் போன்றவை சாப்பிடுவதால் அவற்றில் இருந்து தரமான புரதம் கிடைக்கிறது. மொச்சை, குதிரை மசால், பாசிபயறு, வேர்கடலை, பருத்தி சோளம் ஆகியவற்றில் அதிகளவில் புரத சத்து உள்ளது.

நார் சத்து:

இந்த நார் சத்தை பொறுத்த வரை உடலுக்கு எந்த சக்தியையும் கொடுப்பதில்லை என்றாலும் நாம் அதை அதிகளவில் உண்ணுகிறோம்.
மாவு சத்து ஒட்டும் தன்மை கொண்டதால், மலம் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.
 இதனால் நார் சத்து உணவுகளை சாப்பிட்டதால், அதிகளவில் கொழுப்பை வெளியேற்றும் என்பதால் நார் சத்து தேவைப்படுகிது.
எனவே நார் சத்து நிறைந்த உணவு எடுக்க வேண்டியதும் மிகவும் அவசியம்.

உயிர் சத்து:

உடலின் சீரான வளர், சிதை மாற்றத்திற்கு உயிர் சத்து துணை செய்கிறது. இது நம் உணவில் சேர்க்கவேண்டிய வேதிபொருலாகும்.
 இந்த பொருட்கள் உணவில் குறைந்தால் எந்த பொருள் பற்றாக்குறை உண்டாகிறதோ, அதற்கு ஏற்ற உணவு பற்றாக்குறை நோய் உண்டாகிறது. வைட்டமின் பி 1 தான் உயிர் சத்தின் குறியீட்டதாக உள்ளது.
இது கைகுத்தல் அரிசி, மாமிசம் போன்றவற்றில் அதிகளவில் உள்ளது.

இலவசங்கள் 

==========================================================================
 எப்போதும் உடல்  சூடாயிருக்கிறதா?

உடலின் வெப்பநிலை ஆரோக்கியமான ஒருவருக்கு 37 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். இந்த வெப்பநிலை ஒவ்வொருவருக்கும் சிறிது மாறுபடும். அதனால்தான் சிலரது உடல் கொஞ்சம் குளுமையாக இருப்பது போலவும் சிலரது உடல் அதிக வெப்பத்துடன் இருப்பது போலவும் தோன்றுகிறது. மருத்துவ ரீதியாக இதுபோல ஒருவரது உடல் வெப்பநிலை சிறிது அதிகமாக இருப்பதாலோ, குறைவாக இருப்பதாலோ எந்த பிரச்னையும் இல்லை (காய்ச்சலின் போது உடலின் வெப்பம் உயர்வது வேறு பிரச்னை).


ஒருவேளை, தன்னுடைய உடல் அதிக வெப்பத்தோடு இருப்பதாக ஒருவர் உணர்ந்தால் பொதுமருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். தைராய்டு குறைபாடு உள்ளவர்களுக்கு உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், நாளமில்லாச் சுரப்பிகள் மருத்துவரிடம் தைராய்டு பரிசோதனையை செய்துகொண்டு, சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளலாம். உடற்சூட்டைக் குறைக்கும் தர்பூசணி, மாதுளை, எலுமிச்சைப்பழம், இளநீர் போன்றவற்றை அவ்வப்போது சேர்த்துக் கொள்வதும் பலன் தரும்!’’
==========================================================================
 சோறு சாப்பிடுவது எப்படி?

நிலத்திலே மனிதர்களால் விளைவிக்கின்ற நன்செய், புன்செய் பயிர்களின் நன்மைகளை எளிதில் சொல்லிவிட முடியாது. இதில் அரிசியானது  சுவையும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகவும் விளங்கி வருகிறது. இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டு வகையும் மக்கள்  பயன்படுத்தி வருகின்றனர்.
 இந்தியா, பர்மா, சீனா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படும் அரிசி உலகில் மூன்றில் இரண்டு பங்கு  மக்கள் உண்ணும் உணவாகவும் விளங்கிவருகிறது.
ஆனால் இன்று நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு  சாப்பிடாதீர்கள் என்பதுதான்.

பிறந்தது முதல் அரிசி உணவு சாப்பிட்டு பழகியவர்கள் இதைக்கேட்டதும் வாடி வதங்கி, தங்களுக்கு பெரும் நோய் ஏற்பட்டுவிட்டது என்பதுபோல்  முடங்கி விடுகிறார்கள். உண்மையில் மற்ற தானியங்களைப்போலவே அரிசியும் பல்வேறு நன்மைகளை தந்து நம்மை காத்து வருகிறது.
உண்மையில் அரிசியை பட்டை தீட்டியும், குக்கரில் வைத்து சாப்பிடுவதால்தான் நமக்கு நோய் உண்டாகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை.
 உடலை வளர்த்தால்தான் உயிரை வளர்க்கமுடியும் என்பதில் தெளிவாக இருந்தார்கள் நமது முன்னோர்கள்.
 எனவே உடலுக்கு எது தேவையோ அதை  மட்டுமே உண்டு நலமாக வாழ்ந்தார்கள். இதில் தமிழர்களின் முக்கிய உணவான சோறு சமைப்பது என்பதே தனிக்கலையாக விளங்கியது எனலாம்.
இதில் தமிழர்கள் தனித்தன்மை பெற்று விளங்கினார்கள்.


சோறு வடிப்பது என்பது பழைய அரிசியைத் தவிடு, நொய் நீக்கி நன்றாக தீட்டி, முழு அரிசியாய் ஆய்ந்து எடுத்து இளவெந்நீரால் கழுவி சற்று ஆற  விட்டுவைத்து கொள்ள வேண்டும்.
 அரிசிக்கு மூன்றுபங்கு நீர்விட்டு அடுப்பிலேற்றி அது நுரைவிட்டு கொதிக்கும் பொழுது அரிசியை அதில் போட்டு  முக்காற்பங்கு வெந்தவுடன், கரண்டியால் துழாவி வடித்து கொள்ள வேண்டும். கஞ்சி வடிந்தவுடன், அந்த அடுப்பு தணலில் சோற்று பானையை  வைத்து விட வேண்டும்.
அதன் பிறகு நீர் முற்றிலும் வற்றி பக்குவமாய் இருக்கும் சமயத்தில் எடுத்து கொள்வதே சோறு. இந்த சோறே உணவுக்கு  ஏற்றது. வாதம் பித்தம் கபம் ஆகிய முக்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஏற்றது.
 பத்தியத்திற்கும் உகந்தது.
ஒவ்வொரு அரிசிக்கும்  ஒவ்வொரு பண்பு உள்ளது என்பதையும் சொல்லிவைத்தார்கள்.

முழு அரிசிசோற்றை மிதமான சூட்டுடன் சாப்பிட்டால் முப்பிணிகளையும் நீக்கி உடலுக்கு வன்மை தந்து நலத்துடன் வாழவைக்கும்.
நன்றாக  சமையாத சோற்றை உண்பதால் மலம் கட்டும். மறுநாளும் செரிக்காமல் இருக்கும். இதனால் உடலில் இதன் சத்துக்கள் ஊறாது.
 குழைந்த சோற்றை  உண்டால் இருமல், மந்தம், பீளை, மேகம் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும். மிகுந்த சூட்டுடன் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டால் ரத்தம் சூடாகும்,  நீர்வேட்கை அதிகரிக்கும், பெருத்த வயிறு ஏற்படும்.
 எனவே முழு அரிசிசோற்றை மிதசூட்டில் சாப்பிடுவதே நன்மை தரும்.

இதில் கார் அரிசியை கொண்டு வடிக்கப்படும் சோறு உடலில் உள்ள சிறு நஞ்சுகளை நீக்கி புண்களை ஆற்றும்.
 ஈர்க்கச்சம்பா அரிசிசோறு கடவுளுக்கு  படைக்கும் உணவிற்கு பயன்படுத்தப்படும் அரிசியாகும்.
 இது பார்த்தவுடன் விருப்பத்தையும் நாவிற்கு சுவையை தரும். புழுகுசம்பா அரிசி சற்று  அளவில் நீண்டு இருந்தாலும் இந்த அரிசியை சமைத்து உண்பதால் உடலில் வனப்பு ஏற்படும். நல்ல பசி எடுக்கும்.
 தீராத தாகம் நீங்கும்.

கோரைச்சம்பா அரிசியை உண்பதால் வெப்பத்தால் ஏற்படும் வெறி, பெண்களுக்கான வெள்ளைபடுதல், உடலில் உண்டாகும் நமைச்சல் நீங்கி, உடல்  குளிர்ச்சி உண்டாகும். குறுஞ்சம்பா அரிசிசோறு ஆண்மையை பெருக்கி உடலில் குத்துகின்ற வலியை போக்கும்.
ஆனால் உடல் சூட்டை உண்டாக்கும்.
மிளகுசம்பா அரிசிசோறு பல நன்மைகளை வாரி வழங்கக் கூடியது.
 பசியை உண்டாக்கும்.
பெருவளி என்கின்ற கடுமையான வாத நோய்களை நீக்கும்.
சீரகச்சம்பா அரிசி சோற்றை மன்னர்களும், செல்வந்தர்களும் மட்டுமே உண்ணும் பழக்கம் நமது நாட்டில் இருந்து வந்தது.

இனிப்பு சுவையுள்ள இதை உண்பதால் உடலில் ஏற்படும் அனைத்து வளி நோய்களையும் நீக்கும். சாப்பிட்டு முடிப்பதற்குள்ளாக செரித்து மீண்டும்  பசியை ஏற்படுத்தும் அளவிற்கு எளிமையானது.
 கல்லுடைச்சம்பா என்ற அரிசி சோறு அதிகமான ஆற்றலை தரக்கூடியது. மிகுந்த பலசாலியை கூட  எதிர்க்கும் உடல் திறனையும் மனத்தெம்பும் ஏற்படுத்தும். நல்லசுவை கொண்ட இதை உண்டுவந்தால் பேசும் திறன் அதிகரிக்கும். குன்றிமணிச்சம்பா  சோறு உண்டுவந்தால் உடல் வலித்து ஆண்மை உண்டாகும். வளி நோய்கள் அனைத்தும் போகும்.

அழகும் சுவையும் நிரம்பிய அன்னமழகி என்ற அரிசியை சமைத்து உண்பதால் உடல் வெப்பமாறுபாட்டால் ஏற்படும் சுரங்களை நீக்கி உடலுக்கு நன்மை  தரும். மோர்ச்சோறு உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு இவைகளை போக்கும்.
 இரவில் நீரூற்றிய  சோற்றை பழையது என்பார்கள். விடியற்காலையில் சோற்றில் உள்ள நீரோடு பழையதை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். உடலில் ஒளி  உண்டாகும். வெறிநோய் முற்றிலும் நீங்கும். நன்றாக பசியெடுக்கும்.

பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்கும்.
இரவில் நன்றாக தூக்கம் வரும்.
மிகுதியாக  உண்டுவிட்டால், அப்பொழுதே உறக்கம் கண்களை தழுவும். பொதுவாக எந்த உணவாக இருந்தாலும் அளவாக தேவைக்கு ஏற்ப சாப்பிடுவதால்  கெடுதல் என்பதே உண்டாகாது.
 அதுவும் உணவே மருந்து. மருந்தே உணவு என்று வாழ்க்கை முறையை வகுத்து கொண்டு வாழும் தமிழர்களின்  உணவே, இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களால், பெரிதும் விரும்பும் உணவாகவும் மாறி வருகிறது. எனவே அரிசிசோறு உண்டு நலமுடன்  வாழ்வோம்.

பித்தத்தை போக்கும் கஞ்சி


சோறு கொதிக்கும் போது இருக்கும் நீரை கொதிநீர் என்பார்கள். வீட்டில் சமையல் செய்யும் பெண்கள், பசியுடன் இருக்கும் சிறுவர்களுக்கு இதை குடிக்க  கொடுப்பார்கள். தாங்களும் குடிப்பார்கள்.
இதுவும் மருத்துவ குணம் கொண்டதுதான். கொதிநீரை குடிப்பதால் நீர்சுருக்கு என்னும் சிறுநீர்நோய் போகும்.
சோறு வடித்தவுடன் கிடைக்கும் கஞ்சியை சூட்டுடன் தண்ணீர் கலந்து உப்பிட்டு குடிப்பதால் உடல் பருக்கும். உடலில் ஒளி உண்டாகும். உடலில்  உண்டாகும் பித்தம், வெப்பம் நீங்கும்.
 சோறு வடித்த கஞ்சியை எந்த வகையில் குடித்தாலும் சிறு மந்தத்தை உண்டாக்கும் என்றாலும், விழிகளுக்கு  குளிர்ச்சியும் கொடுக்கும்.
உடல் சூட்டால் தோன்றிய பல்வேறு நோய்களை குணமாக்கும்  .
==========================================================================
நன்றி:தினகரன் ..
==========================================================================
 10/மார்ச் 
  • ஐவரி கோஸ்ட், பிரெஞ்ச் குடியேற்ற நாடானது(1893)
  •  
  • அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டார்(1876)
  •  
  •  
  • பிரிட்டனில் முதலாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது(1801)
  •  
  • யுரெனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்(1977)
  • =====================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?