திவாலாகும் நிலை!.உண்மையா?

”சட்டமன்றத்திலும் பத்திரிகைகளிடமும் அடிக்கடி ட[ம்]மில் நாடு முதல்வர் பன்னீர் செல்வம் அவர்கள் தமிழ் நாடு திவாலாகாது,திவாலாகாது என்று அடிக்கடி சொல்லி வருகிறார்.
அவர் அப்படி அடிக்கடி கூறுவதுதான் நமக்கு அதிகமாக சந்தேகத்தை கிளப்புகிறது.உண்மையிலேயே தமிழ் நாடு திவாலாகிக் கொண்டிருக்கிறதா என்ன?”
இதோ முன்பு பல முறை முதல்வர் பொறுப்பில் இருந்த கலைஞரின் கடிதம்.:-
"திவாலாகும் நிலை ஒன்றும் இந்த அரசுக்கு ஒரு போதும் ஏற்படாது" என்று பேரவையில் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
இது உண்மையா? அப்படி யென்றால் தமிழக முதலமைச்சர், ஓ. பன்னீர்செல்வம், இந்தியப் பிரதமருக்கு கடந்த டிசம்பரில் எழுதிய கடிதத்தில், "தமிழ்நாடு ஏற்கனவே கடும்நிதி நெருக்கடி யில் சிக்கியுள்ளது;
 தமிழக அரசுக்குக் குறிப்பிட்ட வருவாய் ஆதாரங்கள் மட்டுமே உள்ளதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, கூடுதலாக எந்தவொரு நிதிச் சுமையையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்வது என்பது மிகக் கடினமானதாகும்" என்று தெரிவித்திருந்தாரே;
 அது தவறான தகவலா?
முதலமைச்சர், பன்னீர்செல்வம் அப்போது பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில், 31-12-2014 அன்று "இந்து" நாளேடு, "Tamil Nadu facing financial crunch - CM admits to Limited Sources of Revenue” என்ற தலைப்பில், “It’s Official and out in the open. The State Government’s financial health is quite bad. It was revealed in an innocuous statement by Chief Minister, O. Pannerselvam” (அதிகாரி கள் மட்டத்திலே இருந்தது அம்பலத்துக்கு வந்து விட்டது;
 மாநில அரசின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ளது.
 முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் அறிக்கையிலேயே இது கூறப்பட்டுள்ளது)
 என்று தெரிவித்ததே, அந்தச் செய்தி உண்மையா? இல்லையா?
மேலும் முதலமைச்சர் பன்னீர்செல்வம், 2011-12ஆம் ஆண்டுக் கணக்குப்படி மாநிலத்தினுடைய சொந்த வரி வருவாய், 59,517.30 கோடி ரூபாயாக இருந்தது, 2014-2015ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டின்படி 85,769.27 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
 2014-2015ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டைக் குறிப்பிட்ட முதல் அமைச்சர், 2014-2015ஆம் ஆண்டின் திட்ட மதிப்பீட்டை ஏன் கூறவில்லை?
 2014-2015ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீட்டின்படி, மாநில அரசின் சொந்த வரி வருவாயாகக் குறிப்பிட்டிருப்பது 91,835.35 கோடி ரூபாய்.
அந்தத் தொகை தான் திருத்த மதிப்பீட்டில் 85,772.71 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
இதை அப்படியே சொன்னால் சாயம் வெளுத்து விடுமென்று இதை கவனமாக மறைத்து, திருத்த மதிப்பீட்டை மட்டும் முதலமைச்சரிடம் கொடுத்துப் படிக்கச் செய்திருக்கிறார்கள்!
அது போலவே 2014-2015ஆம் ஆண்டுக்கான மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் - மாநில அரசின் சொந்த வரி வருவாய் விகிதம் 9.75 சதவிகிதம் என்பது, 2015-2016ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டின்படி மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், மாநில அரசின் சொந்த வரி வருவாய் விகிதம் 8.74 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்பது தான் உண்மை.
இந்தப் புள்ளி விவரத்தையும் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள முதல் அமைச்சர் இத்தனை நாட்களுக்குப் பிறகும் தெரிந்து கொள்ளாமலா இருப்பார்?
வருவாய் பற்றி முதலமைச்சர் கூறிய காரணத்தால் கூறுகிறேன்.
முத்திரைத் தாள் தீர்வை மற்றும் பதிவு மூலமாக 2014-2015இல் கடந்த ஆண்டு 10,470.18 கோடி ரூபாய் வருவாய் எதிர்பார்க்கப்பட்டது.
 இது திருத்த மதிப்பீட்டில் 9,330 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. அது போலவே மோட்டார் வாகன வரி வருவாய் 2014-2015ஆம் ஆண்டில் 5,147.14 கோடி ரூபாயாக இருக்குமென்று நிர்ணயித்திருந்தார்கள்.
 இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இதுவும் 4,882.53 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது
முதலமைச்சர் பன்னீர்செல்வம், பேரவையில்
நிதித்துறை அதிகாரிகள் எழுதிக் கொடுத்த நீண்ட அறிக்கையினை சாதுர்யமான பதில் என்றெண்ணி அப்படியே படித்த காரணத்தால், உருவாகியிருக்கும் குழப்பத்தைக் கலைத்து, உண்மை விவரங்களைத் தெரிவித்திட இந்த அறிக்கையினை வெளியிட வேண்டியவனானேன்.
                                                                - தி.மு.க, ” முதல்வர்”  கலைஞர் கருணாநிதி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?