தேங்காயும் குதிகால் வலியும் .

தேங்காயில் பல அத்தியாவசியச் சத்துகள் அடங்கியுள்ளன.
 அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.மனிதனுக்கு அழகும், ஆரோக்கியமும் தரும் உணவு தேங்காய். 
அசைவ உணவு சாப்பிடாதவர்கள், கண்டிப்பாக தேங்காய் சாப்பிட வேண்டும். தேங்காயில் கொழுப்பு சத்து, புரதம், தாது, டன்டனிக் அமிலம், வைட்டமின் இ மற்றும் நீர்ச் சத்தும் உள்ளது. சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயைச் சாப்பிட்டு தண்ணீர் பருகினால், இறைச்சி உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும். 
அதாவது அன்றைய தினத்திற்கு உடலுக்குத் தேவையான தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும். 
அதிக அளவில் கொழுப்புச்சத்தும், புரதச்சத்தும் தேங்காயில் நிறைந்துள்ளன.

100 கிராம் தேங்காய் பருப்பு 354 கலோரிகள் ஆற்றல் வழங்கக்கூடியது. மற்ற பருப்பு, கொட்டை வகைகளைவிட அதிக அளவில் பூரிதமாகும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது. 

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் அடங்கி உள்ளது. நீரிழிவுக்கு தேங்காய் மிகவும் பயன் தரக் கூடியது.
சத்துகள் :
 புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

மருத்துவ குணங்கள்:


 தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. 
தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். 
தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. தேங்காய்ப் பால் நஞ்சு முறிவாகவும் பயன்படுத்தப்படுகிறது.
 எளிதில் ஜீரணமாகும்:குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. 
தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். 
தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

வயிற்றுப் புண்கள்: 


தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. 
இவை உடலின் வளர்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.
கொழுப்பை குறைக்கும்: உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட், லாரிக் ஆசிட் ஆகிய அமிலங்கள் தேங்காயில் போதிய அளவு உள்ளன. 
வைரஸ் மற்றும் பாக்டீரியா நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாகவும் இந்த அமிலங்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.  
 தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு பெரிதும் உதவுகிறது. 

முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. 
அதில் உள்ள வைட்டமின் இ, முதுமையைத் தடுக்கிறது. 
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது. 

குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.
ஆயுர்வேத மருத்துவத்தில், இயற்கையாக தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொண்டால் உடலை போஷிக்கும்.

 உடல் இளைப்பு, பலவீனம் போன்றவற்றுக்கும் மருந்தாகிறது. 
நிமோனியா போன்ற சுவாச மண்டல கோளாறுகளில் தேங்காய் எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது.ஆராய்ச்சிகள், தேங்காய் எண்ணெய் அதிக உடல் பருமனையும், அதிக அளவு கொலஸ்ட்ராலையும் ஏற்படுத்துவதில்லை என்று தெரிவிக்கின்றன. 
இருந்தாலும் அதிக உடல் எடை உள்ளவர்கள், அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயை அளவாக எடுத்துக்கொள்ளலாம். அளவாக உபயோகித்தால் தேங்காய் எண்ணெயின் பலன்களைப் பெறலாம்.
நன்றி:தமிழ் முரசு.
========================================================================இன்று ,

மே -18.
  • சர்வதேச அருங்காட்சியக தினம்
  • ஏசோ குடியரசு கலைக்கப்பட்டு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது(1869)
  • தொங்கோ யூ.கே.,ன் பகுதியாக்கப்பட்டது(1900)
  • இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது(1974)
=======================================================================
குதிகால் வலியா ?

பரபரப்பான இன்றைய  சூழலில் உடல் உழைப்பு இல்லாதவர்கள் எடையை கட்டுக்குள் வைத்து பேணிகாப்பது என்பது சவாலான விஷயம்தான். இருப்பினும் உயரத்திற்கு தகுந்த அளவில் எடையை பராமரிக்க வேண்டும். இவ்வாறு பராமரிப்பதன் மூலம் மூட்டுவலி மற்றும் குதிகால் வலி  ஆகியவற்றை தவிர்க்கலாம்.
உடலின் மொத்த எடையையும் தாங்குவது குதிகால் என்பதால் அதற்காக அதிக கவனம் செலுத்துவது அவசியம்.  பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால் பூட்டு, உள்ளங்கால் ஆகியவை உடலின் பாரத்தை தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகம் உள்ள  இடங்களாகும்.உள்ளங்கால் மற்றும் கணுக்கால் தசைகள் வலு விழந்தால் நடக்கவோ, நிற்கவோ முடியாது. இதையடுத்து குதிகால் மற்றும் இடுப்பு  வலி அதிகரிக்கும். 
முதலில் வலி அதிகரிக்கும்போது எலும்புகளில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதை மருத்துவரை அணுகி எக்ஸ்ரே  மூலம் கண்டறியலாம். 

காலை  முதல் இரவு வரை ஓயாமல் நடப்பவர்களுக்கும், வீட்டு வேலைகளை செய்வோருக்கும் இரவில் குதிகால் வலி ஏற்படுவது சகஜமாகிவிட்டது. இதனால கீழ் முதுகெலும்பு பகுதியில் கடுமையான வலியும், இரவில் தூக்கமில்லாமல் தவிக்க நேரிடுகிறது.
குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள்ளன. இந்த 2 எலும்புகளுக்கிடையே உள்ள சப்தேலார் என்ற இணைப்பில்ஏற்படும்பிரச்னைகளால் குதிகால் வலி ஏற்படுகிறது. பாதத்தில் பிளான்றார் பேசியா எனப்படும் மெல்லிய பகுதிதான் பாதத்தின் முன் பகுதியையும் பின் பகுதியில் உள்ள கேல்கேனியம் எலும்பையும் இணைத்து பாதத்தில் உள்ள வளைவுகளை தாங்குகிறது.
நாம் உட்கார்ந்து அல்லது படுத்திருக்கும் நிலையில் பாத வளைவுகளும், குறுகிய நிலையில் இருக்கும். 
நாம் எழுந்து நிற்கும் போது, உடல் பருமனாலோ அல்லது தவறான காலணிகளை அணிவதாலோ பாதத்தில் உள்ள வளைவுகள் இழுக்கப்படுகிறது.
இவ்வாறு இழுக்கப்படுவதால் அதனை தாங்கும் பிளான்றார் பேசியா என்ற மெல்லிய ஜவ்வு பகுதி இணைக்கப்பட்டுள்ள கேல்கேனியம் எலும்பிலிருந்து அறுக்கப்படுகிறது. இவ்வாறு அறுக்கப்பட்ட மெல்லிய ஜவ்வை இணைக்கும் நோக்கத்தில் நமது உடல் கால்சியத்தை அதன்மீது படிய செய்கிறது. 
அதிகமாக படிந்த கால்சியத்தால் அங்கு வீக்கம் ஏற்பட்டு நரம்புகள் அழுத்தப்பட்டு வலி ஏற்படுகிறது. 
இந்த பிரச்னையில் குதிகாலின் அடிபகுதியில் வலி உணரப்படுகிறது.ஆஸ்டியோ - ஆர்த்தரைடீஸ் நோயாளிகளில் 80சதவீதம் பேர்  குதிகால் வலியால் பாதிக்கப்படுகின்றனர். 
ரூமாடாய்ட் ஆர்த்த ரைடீஸ் நோயாளிகள் குறைந்த அளவில் குதிகால் வலியால் பாதிக்கப்படுகின்றனர்.
குதிகால் எலும்பு (Calcareus) பாதத்தில் உள்ள எலும்புகளில் பெரியது. நடக்கும்போது உடல் எடையை தாங்கும் வளைவான அமைப்பு (Arch), நாம் தடுமாறாமல் இருக்க உதவுகிறது. 
இதனுடன் இணைந்த நார் போன்ற பாத திசுக்கள் (Plantar fascia), தசைகள், தசை நாண்கள் எலும்புகளை இணைக்கும் நார்கள், நாம் நடக்க, உடல் எடையை தாங்க உதவுகின்றன.
குதிகால் வலி பாத திசுக்கள் (Plantar fascia) மற்றும் பாத வளைவை தாங்கும், காலின் நான்கு விரல்களை வளைந்து நிமிர செய்யும் தசையை தாக்கும். குதிகால் வலிக்கு ‘’Plantar fascitis” எனப்படும் பாத திசுக்களை தாக்கும் அழற்சிதான் காரணம்.  

சில வேளைகளில் ஸ்கையாட்டிகா போன்ற இடுப்பு பிரச்னைகளிலும் குதிகால் நரம்புகள் அழுத்தப்பட்டு குதிகால் வலி ஏற்படலாம். 
இதற்கு முதலில் இடுப்பு பிரச்னையை சரி செய்தல் அவசியம். 
குதிகால் வலி இடுப்பு பிரச்னையால் ஏற்படுகிறதா? 
அல்லது குதிகால் பிரச்னையால் ஏற்படுகிறதா என்பதை சில எளிய ஆய்வுகள் மூலம் கண்டறியலாம். 
சில நேரங்களில் ரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவு அதிகமாக இருந்தாலும் இந்த பிரச்னை வரும். யூரிக் ஆசிட் அளவை ரத்த பரிசோதனை மூலம் தெரிந்துகொள்ளலாம். உடல் எடை குதிகாலில் விழுந்து ரணமாவதை தடுக்க மைக்ரோ செல்லுலார் (MCR) ரப்பரால் தயாரிக்கபட்ட காலணிகளை அணிதல் நல்லது.

குதிக்கால் வலி காரணங்கள்

* கரடு முரடான பாதையில் நடப்பது.
* High heels எனப்படும் குதிகால் மேலே தூக்கியிருக்கும்படி செய்யப்பட்ட காலணிகள், அதிகமாக நடப்பது.
* அதிக குளிர், தண்ணீரில் நடப்பது.
* அதிக எடையை தூக்குதல்
* வாதத்தை அதிகரிக்கும் உணவுகள்.
அறிகுறிகள்
* நடக்க சிரமமாக இருக்கும். இரவில் ஏற்படும் வலி அல்லது ஓய்வில் இருக்கும்போது உண்டாகும் குதிகால் வலி.
* வலி பல நாட்கள் நீடிப்பது.
* குதிகால் கருமை அடைதல், வீக்கம்
* ஜுரம்.

உடல் பருமன் முக்கிய காரணம் 

* அதிக உடல் எடையும் நாளடைவில் குதிகால் வலி வர காரணமாகிறது. இது ஹை ஹீல்ஸ் குதிகாலின் லும்பார் முள்ளெலும்பில் அழுத்தம் ஏற்படுத்தி, கீழ் முதுகில் தீவிரமான வலியை உண்டாக்குகிறது. இதை தடுக்க உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்.
காலணிகள்
குதிகால் வலிக்கு காலணிகளின் பங்கு அதிகம் என்பதால் மென்மையான காலணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* ஹைஹீல்ஸ் செருப்பு அணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு.
*  குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது  காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ  ஏற்பட்டிருக்கலாம்.
* இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு விண்விண் எனத் தெறிக்கிற மாதிரி ‘நியுரோமா’ எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம்.
*  குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசை நேரம் அணியும்  போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன்,  முழங்கால் மூட்டு வலியும் ஏற்படும்.
சிகிச்சை  
* குப்பை மேனி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும். 

* வராதி என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும். இவை 200 மி.லி அளவில் கிடைக்கும். 3 டீஸ்பூன் மருந்துடன் 12 ஸ்பூன் கொதித்து ஆறிய தண்ணீர் மற்றும் கால் டீஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். 

காலையில் மருந்து சாப்பிட்டதும் அரைமணி நேரம் இடதுபக்கமாக சரிந்து படுத்திருக்கவும்.
 பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வாய் கழுவி, சூடாக தண்ணீரை குடிக்கவும். உடல் பருமனை குறைக்க இது நல்ல கஷாயம். 
தயிரை தவிர்த்து தெளிந்த மோர் அருந்தலாம்.

* கால் டீஸ்பூன் தேனை சிறிது தண்ணீரில் கலந்து அல்லது  
திரிபலா சூரனம் எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் 1 டீஸ்பூன் (5 கிராம்) ஆகியவற்றை 80 மி.லி தண்ணீரில் சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறியபிறகு, கால் டீஸ்பூன் தேன் கலந்து காலை, இரவு உணவிற்கு பிறகு உடனே அருந்த வேண்டும். 
அதன்பிறகு முன் குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிடலாம்.

* சோப்புக்கு பதிலாக ஏலாதி சூர்ணம் கடையில் கிடைக்கும், அதை வெந்நீருடன் குழைத்து தேய்த்துக் குளிக்க நல்ல நிறத்தைப் பெறவும், உடல் எடையை குறைக்கவும் முடியும்.

*கால் பாதங்களில் வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்துவிட்டால் குதிகால் வலியின்றிச் சுகமாக இருக்கும்.
* கால்நீட்டி கீழே உட்கார்ந்து சிறிய பந்தின் மேற்பகுதியில் கால் பாதங்களை அழுத்தி உருட்டுதல், சிறிய கோலிகளை தரையில் போட்டு அவற்றை கால் பாதங்களின் முற்பகுதி விரல் இடுக்கில் அகப்படச் செய்து எடுத்தல் போன்றவை குதிகால் செருப்பு அணிபவர்களின் கால்களுக்கு நல்ல பயிற்சியாகும்.
வெந்நீர் ஒத்தடம்
ஒரு பெரிய பாத்திரத்தில், தோலில் சூடு தாங்கும் பதத்தில் - பாதங்கள் மூழ்கும் அளவுக்கு - வெந்நீர் ஊற்றி அதில் பாதங்களை பத்து நிமிடங்கள் வரை வைத்திருங்கள். இதே போன்று காலை, மாலை இரண்டு வேளைகளும் செய்து வந்தால் குதிகால் வலி குணமாகும்.
*ஒத்தடம் கொடுப்பதற்கென்றே கடைகளில் தேன் மெழுகு கிடைக்கும். இந்த மெழுகை வாங்கி சிறிது நேரம் காய்ச்சி ஒரு துணியை அதில் நனைத்தால், மெழுகு அதில் ஒட்டிக் கொள்ளும். அதை அப்படியே எடுத்து குதிகாலில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.
கை மருந்து
 * சிற்றரத்தை, அமுக்குரா, சுக்கு ஆகியவற்றைப் பொடித்துப் பாலில் போட்டுச் சாப்பிட்டு வர வேண்டும்.
* முடக்கறுத்தான், பிரண்டைத் துவையல், முடக்கறுத்தான் ரசம் நல்லது.
* தவிடு, உப்பு ஒத்தடம் கொடுத்து வரலாம்.
*  மிதமான வெந்நீரில் உப்பு போட்டு அதில் காலை வைக்கலாம்.
* வில்வக் காயைச் சுட்டு நசுக்கி, எருக்கு இலை பழுப்பை அதன் மேல் விட்டுக் குதிகாலில் ஒத்தடம் கொடுக்கலாம்.

  • =======================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?