தனியாரிடம் தள்ளிவிடப்படும் ரெயில்வே.



எதிர்பார்த்தது போலவே பிபேக் தேப்ராய் கமிட்டி இந்திய ரயில்வேயை பல பிரிவுகளாக பிரித்து தனியார்மயப்படுத்த வேண்டும் என பரிந்துரைத்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
 இதனை தனியார்மயம் என அழைப்பதற்கு பதிலாக “அரசின் பிடியிலிருந்து விடுதலைமயம்”என நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. 
இந்த அறிக் கையை விமர்சிப்பவர்களை தேவையில்லாமல் கிலியை ஏற்படுத்தும் இடதுசாரிகள் எனவும் காலாவாதியான நேரு காலத்திய சோசலிச கருத்துகளை உடையவர்கள் எனவும் பா.ஜ.க. அரசாங்கமும் அதன் கார்ப்பரேட் துதிபாடிகளும் விமர்சிக்கக்கூடும். 
உண்மையில் அறிக்கையை உருவாக்கியவர்களுக்கும் அதன்ஆதரவாளர்களுக்குமே இந்த விமர்சனம் பொருந்தும்.
ஏனெனில் இந்த அறிக்கைமுன்வைக்கின்ற தீர்வுகளும் அதற்கான காரணிகளும் நவீன தாராளமய சூத்திரங்களுக்கு முற்றிலும் இசைந்தவையாக உள்ளன. 
ரயில்வேயின் குறைகள் அனைத்திற்கும் காரணம் அது அரசுத்துறையாக இருப்பதுதான் எனவும்இக்குறைகளுக்கு சர்வரோக நிவாரணி தனியார்மயம்தான் எனவும் அறிக்கை கூறுகிறது.பிரிட்டன் ரயில்வேயை தனியார்மயப்படுத் தியதால் ஏற்பட்ட படுபாதகமான விளைவுகளை யும் அல்லது ஐரோப்பாவில் ரயில்வேயை அரசுத்துறையே இயக்குவதின் வளமான அனுபவத்தையும் இக்கமிட்டி உதாசீனப்படுத்தியுள்ளது.
அனைத்துப் பணிகளும் தனியாருக்கு!
ரயில்வேயை பல பிரிவுகளாக உடைத்து பிரிக்க வேண்டும் என இந்த அறிக்கை கோருகிறது. 
இருப்புப் பாதைகளை அமைப்பது, அவற்றை பராமரிப்பது, இருப்புப் பாதை தளவாடங்களை உற்பத்தி செய்வது, ரயில் வண்டிகளை இயக்குவது என பல பிரிவுகளாக பிரித்துஅவற்றை தனியாருக்கு தரவேண்டும் என தேப்ராய் கமிட்டி வலியுறுத்துகிறது. 
இதற்காக அடுத்தஐந்தாண்டுகளில் பல களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கமிட்டி கூறுகிறது.
முதலில் ரயில்வேயின் கணக்குகளை பராமரிப்பதில் வணிகமுறை அடிப்படையிலான நடைமுறை கொண்டு வரவேண்டும் என தேப்ராய் கமிட்டி ஆழமாக குறிப்பிடுகிறது. 
ரயில்வேயின் ஒவ்வொரு பணியும் ஒவ்வொரு வழித்தடமும் அதில் ஈடுபடுத்தும் சமூக முதலீடும்லாபம் தரக்கூடியதுதானா என்பதை வெளிப்படுத்துவதுதான் இதன் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது. சமூகப்பணிகளுக்காக ஆகும் செலவை ரயில்வே ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக மத்திய அரசாங்கம் பட்ஜெட் மூலம் மானியமாக தந்துவிட வேண்டும். இரண்டாவதாக ஒரு “சுயேச்சையான” கட்டுப்பாட்டுக் குழு உருவாக்கப் படும். கட்டணத்தை நிர்ணயிப்பது, தனியாரி டையே நியாயமான போட்டியை உருவாக்கு வது, ரயில்வேயின் பல்வேறு வசதிகளை பயன்படுத்திட தனியாருக்கு கட்டணத்தை தீர்மானிப்பது ஆகிய பணிகளை இந்த குழுதான் நடைமுறைப்படுத்தும்.
அதே சமயத்தில் ரயில்வே பாதுகாப்பு, ஊழியர்களுக்கான வீட்டு வசதி, கல்வி மற்றும் மருத்துவ வசதி ஆகியவை அவுட்சோர்சிங் என்ற அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.
 ஊழியர்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ வசதியை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு அதற்கான மானியத்தை அரசு தருவது தேவை எனவும்இக்கமிட்டி முன்வைக்கிறது. 
இவையெல்லாம் நவீன தாராளமயக் கொள்கைகளை அப்படியேபின்பற்றுவது என்பதாகும். அடிப்படை வசதிகளை உருவாக்கிட செலவு அரசாங்கத்திற்கு; அதில் அதீத லாபம் தனியாருக்கு எனும் அணுகுமுறை இதில் உள்ளது.
மின்துறை தனியார்மயம் கூறும் பாடம் என்ன?
எழுத்தில் எப்படி எழுதிவைத்தாலும் நடைமுறையில் இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்திய அனுபவம் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. மின்விநியோகம் தனியார் மயம் இதற்கு சிறந்த உதாரணம் ஆகும். மின்கட்டணத்தை நிர்ணயிக்கும் கட்டுப்பாட்டுக் குழுவும் சுயேச்சையானதுதான் என்று கூறப்பட்டது. ஆனால் நடைமுறையில் அது எவருக்கு சேவகம் செய்கிறது? மின்விநியோகம் செய்யும் தனியாருக்கு ஆதரவாகவே அது செயல்படுகிறது.
அதுதான் இக்குழுவுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டளை ஆகும். தாங்கள் அடிப்படை வசதிகளை உருவாக்கிட முதலீடு செய்திருப்பதால் அதனை ஈடுகட்ட மின் கட்டணங்களை அதிகப்படுத்த வேண்டும் என மின் துறையில் உள்ள தனியார் கோரும் பொழுதெல்லாம் அந்த முதலீடு பற்றிய எவ்வித ஆய்வும் செய்யாமல் மின்கட்டண நிர்ணயக்குழு தனியாருக்கு ஆதரவாக மின்கட்டணத்தை உயர்த்துவதையே செய்துள்ளன. தனியார் மின்விநியோக நிறுவனங்கள் எவ்வித ஆய்வுக்கும் அல்லது கேள்விகளுக்கும் கட்டுப்பாட்டுக் குழு உட்படுத்தியதே இல்லை.
 தணிக்கை ஆணையம் சுட்டிக்காட்டும் முறைகேடுகள் கூட உதாசீனப்படுத்தப்படுகின்றன. 
உபயோகிப் பாளர்களாகிய சாதாரண மக்களுக்கும் கட்டணம் பற்றி கருத்து முன்வைக்கும் உரிமை உண்டு என்பதை இக்குழு அங்கீகரிப்பது இல்லை. எனவே மக்களுக்கு குறைந்த விலையில் மின்கட்டணம் அளிக்க வேண்டும் எனில் அதன் மானியச்சுமையை மாநில அரசாங்கங்கள் மீது சுமத்தப்படுகிறது. இதுதான் சமீபத்தில் தில்லியில் நடந்தது. தனியார் ஏகபோகங்கள் அரசுஏகபோகங்களைவிட மிக மோசமாக இருக்கும்.
இந்திய ரயில்வேயிலும் இதே போன்ற நடைமுறை உருவாகாது என உத்தரவாதம் இல்லை.தனியார் ஒரு சேவையை இயக்கும் பொழுது அதற்கான செலவுகள் மிகைப்படுத்தியே காட்டப்படும்.
இது கட்டண உயர்வுக்கான தேவையை உருவாக்கும். 
சமூகத்தேவைகள் இருந்தாலும் லாபம் தராத வழித்தடங்கள் எவ்வித தாட்சண்யமும் இன்றி மூடப்படும். 
அடிப்படை வசதிகள் அனைத்தும் உருவாக்கிடும் சுமை அரசின் தலையில் விழும். தனியார்மயத்திற்குப் பிறகு மக்கள் அதீத கட்டணம் தருவதும் அரசின் செலவுகள் பன்மடங்கு உயர்வதும் நடக்கும். அதே சமயம் தனியாரின் வங்கி இருப்பு அபரிமிதமாக உயரும்.
பிரிட்டன் தனியார்மயத்தின் அனுபவம்
இது ஏதோ பைத்தியக்காரத்தனமான கற்பனை என எண்ணுவோர் பிரிட்டன் ரயில்வேதனியார்மயத்தின் அனுபவத்தை நோக்கவேண்டும். 
பிரிட்டனின் தனியார்மயத்தைதான் தேப்ராய் கமிட்டி முன்மாதிரியாக எடுத்துக்கொண்டுள்ளது.
 இதன் அனுபவம் குறித்து பல ஆய்வுகள் உள்ளன. பிரிட்டன் அரசின் ஆய்வு கூட உள்ளது.பிரிட்டனில் ரயில்வே அடிப்படை வசதிகளை உருவாக்கிட 1993ல் அமைக்கப்பட்ட ரயில் டிராக் பி.எல்.சி. எனும் சுயேச்சையான அமைப்பு 2001ல் திவாலாகியது.
ஏன்? 
ரயில்வேயில் செயல்பட்ட தனியார் அமைப்புகள் தாம் தரவேண்டிய நியாயமான கட்டணங்களை தரவில்லை.
 பிறகு நெட் ஒர்க் ரயில் எனும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. 
2002-03ல் 9,600 மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங்காக இருந்த கடன் 2012ல் 30,000 மில்லியனாக உயர்ந்தது. 
இருப்புப்பாதைகளை பராமரிக்க ஆகும் செலவைவிட இக்கடனின் வட்டி அதிகமாக உள்ளது. தனியார் வற்புறுத்தலை ஏற்றுக்கொண்டதால் இருப்புப்பாதைகளை பயன்படுத்திட ஆகும் கட்டணங்கள் தொடர்ந்து குறைக்கப்பட்டன.
எனவே அரசின் வருமானம் வீழ்ந்தது. 
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோட்பாடு அடிப்படையில் இக்கடன் முழுதும் அரசின் பட்ஜெட்டில் திணிக்கப்பட்டது. இன்று பிரிட்டன் மக்கள் தனியார்மயத்திற்கு முன்பு இருந்ததைவிட இருமடங்கு அதிக சுமையை சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.2263 ரயில் நிலையங்களும் 226 வழித்தடங்களும் லாபமில்லை எனக்கூறி மூடப்பட்டுவிட்டன. 
அரசே ரயில்வேயை நடத்தும் மற்ற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்பொழுது பிரிட்டனில் கட்டணம் 30 சதவீதம் கூடுதலாக உள்ளது. இதில் முகைநரண் என்னவெனில் பிரான்சு மற்றும் ஜெர்மனியின் அரசு நிறுவனங்கள் பிரிட்டனில் ரயில்வேயை இயக்குகின்றன. 
ஆனால் பிரிட்டன் ரயிலை பிரிட்டன் அரசாங்கம் இயக்கதயாராக இல்லை.
லாபம் ஈட்டும் ஒரே ரயில் நிறுவனம் ஈஸ்ட் கோஸ்ட் ரயில்தான்! இது அரசுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத் தக்கது. 
ஆனால் இதனையும் தனியார்மயமாக் கிட பிரிட்டன் அரசாங்கம் துடிக்கிறது. எனவேதான் பிரிட்டன் மக்களிடையே நடத்திய கருத்துக்கணிப்பில் 68 சதவீதம் பேர் ரயில்வேயை மீண்டும் அரசுத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய ரயில்வேயில் எல்லாமே சரியாகஉள்ளது என எவரும் கூற இயலாது. ஆனால்பிரிட்டன் ரயில் தனியார்மயத்தை முன்மாதிரி யாக கொண்டு பிபேக் தேப்ராய் கமிட்டி முன்வைக்கும் சிகிச்சை என்பது நோயைவிட மோசமாக உள்ளது.
ஏனைய ஐரோப்பிய நாடுகளின் அனுபவத்தையும் பிபேக் தேப்ராய் கமிட்டி ஆய்வு செய்திருக்கலாம். 
சில நாடுகளில் அரசே ரயில்வேயை இயக்குகிறது. சில நாடுகளில் மாநில குடியரசுகள் ரயில்வேயை இயக்குகின்றன. சில நாடுகளில் ரயில்வே பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 
ஆனால் அனைத்து பிரிவுகளும் அரசின் கீழ் இயக்கப்படுகின்றன. இப்படி பல நல்ல உதாரணங்கள் உள்ளன. ஆனால் தேப்ராய் கமிட்டி இவற்றைஆய்வு செய்யவில்லை. தேப்ராய் கமிட்டியின் அறிக்கையை மோடி அரசாங்கம் நிராகரிப்பதேசிறந்தது. 
ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் துதிபாடுவோரின் அழுத்தம் காரணமாக அவ்வாறு செய்யாது.
ரயில்வேயை பொது நன்மைக்கான சேவை என்பதைவிட லாபம் தரவேண்டிய பொருளாதார அமைப்பாக பார்ப்பதும் மக்களைவிட லாபம்தான் முக்கியம் எனும் கோட்பாடும் தேப்ராய் கமிட்டியின் அறிக்கையை நிராகரிக்கும் அரசியல் வல்லமையை மோடி அரசாங்கத்திற்கு தராது.

ஆதாரம் : பீப்பிள்ஸ் டெமாக்ரசி.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?