பழைய சோறு தேடி நிதம் தின்று






நமது உணவு முறைகள் இப்போது மாறி விட்டன. 
நமது முன்னோர் சாப்பிட்ட பழைய சோறு, வெங்காயம் இணை  இன்றளவும் அவர்களை திடகாத்திரமாக வைத்திருக்கிறது.

 துரித உணவு சாப்பிட்டு வரும் இன்றைய இளையமுறையினர், 30 வயதிலேயே சர்க்கரை, இதய நோய்களால் பாதிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. ஆகவே, பழைய சோறு சாப்பிடுவதை இனி வழக்கமாக்கிக் கொண்டால் ஆரோக்கியம் நம்மை தேடி வரும். 

பழைய சோறு என்றால் கேவலமாக நினைக்கும் நாம், அதிலுள்ள நன்மைகள் குறித்து அறிந்து கொண்டால் இனி பழைய சோறை மிக பெருமையாக காண்பீர்கள்..
பழைய சோற்றில் தான், வைட்டமின் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிர, சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கின்றன. இது நமது உணவுப்பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். 

இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால், அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. சிறிய வெங்காயம் உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான் கொழுப்பைக் குறைத்து கட்டுடலுடன் வைத்திருக்கும்.
அதை விட மாரடைப்பை தடுக்கும் சக்தி அதற்கு உள்ளது.

காலை உணவாக பழைய சாதத்தை உண்டால், உடல் லேசாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். 

சோற்றில் இரவிலே தண்ணீர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால், உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவை குணமாகும். அதுவுமில்லாமல் இதில் இருக்கும், நார்ச்சத்து மலச்சிக்கல் இல்லாமல் காலையில் ப்ரீயாக போகலாம். 
சில மாரடைப்பை சந்தித்தவர்களுக்கு கொழுப்பை கரைக்க பழைய சோறு,சின்ன வெங்காயம் சாப்பிடச்சொல்லும் ஆங்கில மருத்துவர்களும் இருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து சாப்பிட்டால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து, உடல் எடையும் குறைந்து விடுவதாக, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 
நம் முன்னோர்கள் உட்கொண்ட உணவின் நன்மையை கூட அடுத்த நாட்டுக்காரர்கள் நமக்கு சுட்டிக்காட்ட வேண்டியதிருக்கிறது.

 பழையதில் உள்ள முக்கியமான விஷயம் என்னவென்றால், உடலுக்கு அதிகமான சக்தியை தந்து, உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. 

அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகி விடுகிறது. 
அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குணமாகிவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக, நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால், எந்த நோயும் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.
 அதனால்தான் நம் முன்னோர் கள், ஒரு சட்டியில்  பழைய சாதம் வெங்காயம் துணையுடன் சாப்பிட்டு விட்டு மாலை வரை வயலில் வேலை செய்ய  உடலில் தெம்பு இருந்தி ருக்கிறது . 
இதற்கு கைகுத்தல் அரிசி மிக சிறந்தது. 
ஆனால் இப்போது கைக்குத்தல் அரிசிக்கு எங்கே போவது.கிராமங்களிலேயே கிடைப்பதில்லை.எல்லாம் எந்திரமயம். சாதாரண அரிசியே அந்த அளவு சக்தி தர  போதுமானது.
பழையது தயாரிக்க சூடான சமைத்த சாதத்தில் உடனே  தண்ணீர் ஊற்றக் கூடாது. 
மதியம் நாம் சாப்பிட்டப் பின்னர் ஆறிய சாதத்தில்  தண்ணீர் ஊற்றி, [மண் சட்டி என்றால் இன்னமும் நலம்]மறுநாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்று இருக்கும். மதியம் வரை பசிக்காது.
நீங்களும் நாள் முழுக்க சுறு,சுறுப்புடன் இயங்கலாம்.சர்க்கரை வியாதி,மாரடைப்பு ஏற்படும் பயங்களையும் ஓரங்கட்டலாம்.
========================================================================
இன்று ,
ஜூலை-03.

  • மியான்மர் பெண்கள் தினம்
  • பெலரஸ் விடுதலை தினம்(1944)
  • க்யூபெக் நகரம் உருவாக்கப்பட்டது(1608)
  • அமெரிக்காவின் முதல் சேமிப்பு வங்கி நியூயார்க்கில் திறக்கப்பட்டது(1819)

'பாப நாசம் " இன்று வெளியீடு.
========================================================================
"பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊதியத்தை இரு மடங்காக்க கோரிக்கையாம்.இதனை மட்டும் ஒரு மித்த குரலில் கட்சி வேறுபாடின்றி ஆதரிப்பார்கள்.குரல் எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கலாம்."
இப்போது மக்களவை உறுப்பினர்கள் வாங்கும்,பெரும்,அனுபவிக்கும் சலுகைகள் பற்றி:-
மக்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியின் மையப் பகுதியில் ஒரு வீடு உள்பட மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை பல்வேறு வகையான சலுகைகள் வழங்கப்படுகிறது.
மாதாந்திரச் சம்பளமாக ரூ.16,000, மாதந்தோறும் தொகுதிப்படியாக ரூ.20,000,  அலுவலகப்படியாக ரூ.4,000, தபால் செலவினங்களுக்கு என ரூ.2,000, உதவியாளருக்கு ஊதியமாக ரூ.14,000-மும் வழங்கப்படுகிறது. 

பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும்போது, அவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான தினப்படியாக ரூ.1,000 வழங்கப்படுகிறது.

மேலும், டெல்லியில் உள்ள வீட்டுக்கு ஆண்டொன்றுக்கு இலவசமாக 50,000 யூனிட் மின்சாரமும், 4,000 லிட்டர் தண்ணீரும் வழங்கப்படுகிறது. இரண்டு தொலைபேசி இணைப்புகள் இலவசம். அவை இரண்டிலும் ஆண்டொன்றுக்கு இலவசமாக ஒரு லட்சம் இலவச அழைப்புகள் மற்றும்  இண்டர்நெட்டுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி மூலமாக 50,000 இலவச அழைப்புகள், மொபைல் இன்டர்நெட்டில் இந்தியா முழுவதும் இலவச ரோமிங் ஆகியவையும் அளிக்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் ரெயிலில் செல்ல பயணச் சீட்டுகள், இந்தியாவுக்குள் 34 முறை மனைவி அல்லது உதவியாளருடன் இலவச விமானப் பயணம் செய்யவும் அனுமதிக்கப்படுகிறது. முதல் வகுப்பு ஏ.சி. ரயிலில் தனது குடும்பத்தினருடன் செல்ல இலவச அனுமதியும், மக்களவை கூட்டம் நடைபெறும் வேளையில் தங்கள் தொகுதியில் இருந்து 8 பேரை அழைத்து வந்து விவாதங்களைப் பார்வையிட வைக்க ரெயில் பயணச் சீட்டுகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. சோஃபா, மேஜை போன்றவை வாங்க ஆண்டொன்றுக்கு ரூ.75,000 வழங்கப்படுகிறது.
பதவியில் இருக்கும் போதும், ஓய்வு பெற்ற பின்னரும் 500 ரூபாயை மாதாந்திர சந்தாவாக செலுத்தி, மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கக் கூடிய தரமான இலவச மருத்துவ சிகிச்சைகளை பெறலாம்.

ஏதேனும் ஒரு அவையில் எம்.பி.யாக பதவி வகித்தவருக்கு, அடிப்படை ஓய்வூதியமாக மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு மேல் கூடுதலாக பதவியில் இருந்த ஒவ்வொரு ஆண்டுக்கும் மேலும் ஆயிரத்து 500 ரூபாய் என்ற கணக்கீட்டின்படி அதிகபட்சமான தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

இவ்வகையில், 5 ஆண்டுகளுக்கு மேல் கூடுதலாக 9 மாதங்கள் பதவி வகித்திருந்தால் கூட, அது ஓராண்டாகவே கணக்கிடப்படும். இரண்டு முறை எம்.பி.யாக (தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு) பதவி வகித்திருந்தால் மாதந்தோறும் 40 ஆயிரம் ரூபாயை ஓய்வூதியமாக பெற முடியும்.

இரு அவைகளிலும் எம்.பி.யாக பதவி வகித்தவர்கள் மரணம் அடைந்த பின்னரும், அவரது கணவர் அல்லது மனைவிக்கு இறந்தவர்
 பெற்று வந்த ஓய்வூதியத்தில் சரிபாதி வழங்கப்படும்.அம்பானி,அதானி,டாடா போன்ற கொழுத்த முதலாளிகளுக்கு அந்நிய நாடுகளுக்கு ஆதரவாக கேள்விகளை எழப்ப தரப்படும் ஊதியங்கள் &சலுகைகள் இன்னும் பிற இதில் சேர்க்கப்படவில்லை.
மக்களுக்காக கேள்விகள் கேட்டு  உழைத்து தீந்து போன இந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு கண்டிப்பாக ஊதிய உயர்வு தேவை.
1915 இல் நடந்த போரில் இரு குண்டுகள் ஒன்றை ஒன்று துளைத்து நிற்கும் காட்சி.
இப்போது மியூசியத்தில் .
========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?