உங்களின் உழைப்பு உங்களுக்குத்தராது களைப்பு!

அலுவலகம், வீடு என, பம்பரமாய் சுற்றும் மக்கள், வாரத்தின் இறுதி நாளுக்காக ஏங்குவது வழக்கம். மன நிம்மதிக்காக, எங்கேயாவது செல்லலாம் என நினைப்பதற்குள், விடுமுறை நாள் ஓடிவிடும். மன இறுக்கத்தோடு, தினசரி பொழுதை கழிப்பது பெரும் வேதனை.

இதை தவிர்க்க, சிரமமின்றி விருப்புடன் உங்கள் பணிகளை செய்ய சில குறிப்புகள்.

சத்தான உணவை சாப்பிடுங்கள்: 

சத்தான, இயற்கையான உணவு வகைகளைச் சாப்பிடும்போது, மூளை சுறுசுறுப்பாக இருக்கும். பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட, உணவுகளைச் சாப்பிடும்போது, உடல் ஒருவித மந்தநிலையை அடைகிறது. இதனால், நாம் செய்யும் செயல்களில், சோர்வடைந்து குறிப்பிட்ட நேரத்திற்குள், பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்படலாம்.

நன்றாகத் தூங்குங்கள்:

நல்ல ஆழ்ந்த தூக்கம், எல்லாருக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால், களைப்புறும் உடல் உறுப்புகள், தூக்கத்தில் மட்டுமே புத்துணர்ச்சி அடைகின்றன. தூக்கம் தடைபடும் போது, உடல் நலக்குறைவு ஏற்படும். இளைஞர்களுக்கு, ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை தூக்கம் அவசியம்.

நடங்கள்... ஓடுங்கள்! 

தினமும், அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ, மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை, ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி, விரைந்து நடக்கலாம். இது உடல் இறுக்கத்தை, பெருமளவு தளர்த்தும்; மனம் உற்சாகம் பெறும். 
ஆரம்பத்தில், அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்ல வேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்றால் பழகிவிடும். பின், 40 வயதுக்காரர் கூட, 20 வயது இளைஞனைப்போல், உற்சாகமாக வேலை செய்யலாம்.

ஓய்வெடுங்கள்: 

பணியிடையே, அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது, வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான, வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம், மேம்போக்காக இருக்கும். அதனால், மூளைக்கு சரியான அளவு ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு, ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

சிரியுங்கள்: 

மனம் விட்டு சிரியுங்கள். மனம் விட்டு என்பதற்கு, ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது, மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக, முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும்.
வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி, பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது, வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.
எப்பொதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில், ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வல்லமை கொண்டது.
கூடுமானவரை அருகில் யாரும் உங்களை விசித்திரமாக பார்க்கமலிருக்கும் வரை மனம் விட்டு சிரிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
இவற்றை தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் வேலைகளை செய்வது உங்களுக்கு விருப்பமான பொழுது போக்கு போல் மாறிடும்.!
உங்களின் உழைப்பு உங்களுக்குத்தராது களைப்பு!

=============================================================================================================
இன்று,
செப்டம்பர்-08.

  • உலக எழுத்தறிவு தினம்
  • ஆசிய தொழில்நுட்பக் கழகம் பாங்காக் நகரில் நிறுவப்பட்டது(1959)
  • நாடுகளின் கூட்டமைப்பில் ஜெர்மனி சேர்ந்தது(1926)
  • ============================================================================================================
சுண்டைக்காய் கால் பணம்.சுமை கூலி முக்காப் பணம்.
மோடி பிரதமராக பதவியேற்ற கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் பூடான், நேபாளம், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, பிஜி, இலங்கை, சீனா, ஆஸ்திரேலியா, கனடா, வங்காள தேசம், சிங்கப்பூர் உள்ளிட்ட 20 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.ஓராண்டில் ரூ.37.22 கோடி செலவிடப்பட்டுள்ளது. 
ஆஸ்திரேலியாவுக்கு சென்ற வகையில் அதிகபட்சமாக ரூ.8.91 கோடியும், ஜெர்மனி, பிஜி, சீன நாடுகளுக்கு அவர் சென்ற வகையில் செலவு முறையே ரூ.2.92 கோடி, ரூ.2.59 கோடி, ரூ.2.34 கோடி ஆகும்.
பூடானுக்கு சென்ற போதுதான் மிக குறைந்த அளவில் ரூ.41.33 லட்சம் மட்டுமே செலவாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில், பிரதமர் மோடி ஓட்டலில் தங்கி இருந்ததற்கான செலவு ரூ.5.60 கோடியாகும். அவருடன் சென்றவர்களின் கார் பயணத்துக்கு ரூ.2.40 கோடி வாடகையாக செலுத்தப்பட்டுள்ளது. 
நியூ யார்க்கில் பிரதமரின் பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த நியூயார்க் பேலஸ் ஓட்டல் வாடகை ரூ.9.16 லட்சம். பிரதமரின் ஓட்டல் அறை வாடகை ரூ.11.51 லட்சம். 
அங்கு பாதுகாப்பு படையினருக்கான கார் வாடகையாக ரூ.39 லட்சமும், தூர்தர்ஷன் குழுவினர் பிரதமரின் சுற்றுப்பயணம் குறித்து செய்தி சேகரிக்க ரூ.3 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.

சீனாவில் ஓட்டலில் தங்கி இருந்ததற்கான செலவு ரூ.1.06 கோடி, வாகனங்களுக்கான வாடகை ரூ.60.88 லட்சம், விமான செலவு ரூ.5.90 லட்சம், அதிகாரிகளுக்கான தின பயண செலவு ரூ.9.80 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 
இதேபோல், வங்காளசேத்துக்கான பயண செலவு ரூ.1.35 கோடி. 
அதில் ஓட்டலில் தங்கியதற்கான வாடகை ரூ.19.35 லட்சம். 
மொழி பெயர்ப்பாளர்களுக்கான செலவு ரூ.28.55 லட்சம், பிரதமரின் இன்டர்நெட் செலவு ரூ.13.83 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இக்கணக்கு ஜூன் 30,2015 வரைக்குமானது மட்டும்.அதன் பின் சில நாடுகள் மோடி சுற்றுப்பயணம் சென்றுள்ளார்..முதலீடுகள் குவிவதாக சொல்லுகிறார்.இதுவரை இந்தியாவில் குவிந்த அந்நிய முதலீடு எவ்வாளவு கோடி.?
=============================================================================================================
                                          விஜய் காந்த் இந்தி படிக்க விரும்புகிறார்.-சு.சாமி,





நம்ம அர்நால்டுதான்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?