காசு கேட்கும் மால்வேர் வைரஸ்





மால்வேர் புரோகிராம்கள் மூலம் கணினிகளைக் கைப்பற்றி, அவற்றை முடக்கி வைத்து, இயங்க வேண்டுமானால், குறிப்பிட்ட அளவு பணம் தர வேண்டும் என்ற அச்சுறுத்தல்களைப் பெறுவதில், ஆசியாவில் இந்தியா மூன்றாவது இடம் பெற்றுள்ளது. 
இத்தகைய மால்வேர் புரோகிராம்களை Ransomware malware programs என அழைக்கிறார்கள்.
தற்போது 'எங்கும் எதிலும் இணையம்' (Internet of Things) என்ற பழக்கம் பரவி வருவதால், இத்தகைய மால்வேர் புரோகிராம்கள் பரவுவது இன்னும் அதிகரிக்கும் என்று, வைரஸுக்கு எதிரான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும், அமெரிக்காவினைச் சேர்ந்த செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது. 
வரும் 2016 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செமாண்டெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற Ransomware threats இந்தியாவில் ஆண்டுக்கு 60,000/ என்ற எண்ணிக்கையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளது. 
அதாவது நாள் ஒன்றுக்கு, 170 மால்வேர் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த Ransomware புரோகிராம்கள் பாதித்த கணினிகள், அதன் பயனாளர்களைத் தங்கள் கணினிகளை  பயன்படுத்தாதபடி முடக்கிவிடுகின்றன. 
அல்லது மிகக் குறைவான அளவில் பயன்படுத்த அனுமதிக்கின்றன. 
பயனாளர்கள், குறிப்பிட்ட தொகையினை, இணைய வங்கிக் கணக்கில் செலுத்துமாறு அச்சுறுத்தப்படுகின்றனர். 
அப்படிச் செலுத்தினால் மட்டுமே, கணினிகளைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும்; டேட்டாக்களைப் பெற முடியும் என்று அச்சுறுத்துகின்றன. 
அது உண்மையாகவும் உள்ளது. 
இவ்வாறு கணினி  அல்லது அவற்றின் டேட்டாக்களை முடக்கி வைக்கும் இத்தகைய ransomware புரோகிராம்களை Crypto-ransomware என அழைக்கின்றனர். 
இந்தியாவில் காணப்படும் ransomware புரோகிராம்களில் 86% இந்த வகை Crypto-ransomware ஆக உள்ளன. 
அமெரிக்க நிறுவனமான செமாண்டெக் அண்மையில் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் அமைப்பான National Association of Software and Services Companies (Nasscom)த்துடன் இணைந்து, இந்தியாவில் இணையப் பாதுகாப்பிற்கான சேவைகளை வழங்கி, உலக அளவில் அதற்கான திறமைகளை இந்தியர்களிடம் வளர்க்க இயங்கி வருகிறது. 
இந்த வகையில் பயிற்சி பெற்ற இளைஞர்கள், இப்பிரிவில் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். 
ஏனென்றால், இப்போது, இணையத்தில் நாம் சந்திக்கும் ஆபத்துக்களின் வகைகள் பலவாறாய்ப் பெருகி வருகின்றன. அவை அனைத்திற்குமான முழுமையான பாதுகாப்பு புரோகிராம்களை வடிவமைப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. 
2020 ஆம் ஆண்டில், உலக அளவில் ஏற்பட இருக்கும் 30,000 கோடி டாலர் மதிப்பிலான இணைய வர்த்தகத்தில், 5 முதல் 6 சதவீத வர்த்தகத்தினை இந்தியா மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டு வருகிறது என மின்னணுவியல் துறையும், தகவல் தொழில் நுட்பத் துறையும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன. 
Internet and Mobile Association of India (IAMAI) அமைப்பு இது குறித்து கூறுகையில், வரும் 2016 ஆம் ஆண்டில், 40.2 கோடிக்கும் மேலான இணையப் பயனாளர்களுடன், இந்தியா அமெரிக்காவையும் மிஞ்சி விடும் என அறிவித்துள்ளது. 
அடுத்த ஜூன் மாதத்தில், இது 46.2 கோடியாக உயரும் எனவும் தெரிகிறது. 
இந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, செமாண்டெக் நிறுவனத்தின் அறிக்கை, இந்திய பயனாளர்களையும், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தயாரிப்பவர்களையும் எச்சரித்துள்ளதாகவே கருதப்படுகிறது. செமாண்டெக் நிறுவனம் ஆண்டு தோறும் தன் கணிப்புகளிலிருந்து, பல முடிவுகளை, உலகளாவிய அளவில் வெளியிட்டு வருகிறது. 
4.15 கோடி வைரஸ் பாதிப்புகளை ஆண்டு தோறும் இது கண்காணிக்கிறது. 
இந்த கண்காணிப்பு 157 நாடுகளில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்தியாவிற்கு இந்நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையினை சரியான முறையில் எடுத்துக் கொண்டு, நம் மென்பொருள் வல்லுநர்கள் செயல்பட்டால் நம் கணினியை காப்பாற்றலாம்..
========================================================================================
தினமும் 8லிட்டர்..

தினமும் 8லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும் .
என்று சிலர் கூறுகிறார்கள்.உண்மையிலேயே ஒருவர் அவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டுமா?அப்போதுதான் உடல் நலம் பாதுக்கக்கப்படுமா?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல... தண்ணீர்கூட நஞ்சுதான்’ 
தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது அது சிறுநீரகங்களுக்கு சுமையை அதிகரிக்கும் என்பதே காரணம். 
அதன் உண்மை தன்மை பற்றி பார்ப்போம்.  
ஒரு நாளைக்கு நமது உடலில் 15 லிட்டர் சிறுநீர் தயாராகிறது. 
ஆனால்,  ஒன்றரை லிட்டர்  சிறுநீர் மட்டுமே உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. 
அப்படியானால் எஞ்சியுள்ள அளவு வியர்வை, வாந்தி, உடல் உபாதைகளின் போது மட்டுமே வெளியேறும். நமது உடலின் தேவைக்கேற்ப அதன் பயன்பாடும் இருக்கும். 
ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. 

தாகம் ஏற்பட்டால்தான் குடிக்க வேண்டும் என்றில்லாமல், காலை, மதியம், இரவு என சமமாக பிரித்து தண்ணீர் அருந்தலாம். 
4 லிட்டர் அல்லது அதற்கு அதிகமாக தண்ணீர் குடிப்பவர்களுக்கு சிறுநீரின் வீரியமானது குறைந்துவிடும். 
நிறைய தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்களில் உள்ள மெடுல்லரி கான்சன்ட்ரேஷன் கிரேடியன்ட்’ (Medullary concentration gradient) சரியாக வேலை செய்யாது. 
தேவையான நீரை எடுத்துக் கொண்டு தேவையில்லாத நீரானது சிறுநீராக வெளியேறும். 

அதுதான் இயல்பானது. நிறைய தண்ணீர் குடித்தால் உடலில் நீர்ச்சத்துகள் தங்காமல், அதுவும் சேர்ந்து சிறுநீரில் வெளியேறி விடும். 
இது உடலுக்கு நல்லதல்ல. 
சிலருக்கு மரணம் வரை கொண்டு சென்றுவிடும் அபாயமும் இதில் இருக்கிறது. 
அதனால் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதே நல்லது. 
சிலர் தண்ணீருக்கு பதிலாக ஜூஸ்,கோககோலா ,பெப்சி போன்ற  மென்,காற்றெற்ற  பானங்கள் என குடிப்பார்கள். 
இதனால் சுண்ணாம்புச் சத்தானது கரையாமல் சிறுநீரகத்தில் சேர்ந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கிவிடும். 
தாகம் எடுத்தால் தண்ணீர்தான் குடிக்க வேண்டுமே தவிர, பிற குளிர்பானங்களை குடிக்கக் கூடாது...’’

  
 இப்போது உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைப் பார்ப்போம்.

* உடலில் தண்ணீர் குறைந்த அளவில் இருந்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். தாகம் என்பது உடலில் தண்ணீர் குறைபாட்டை வெளிப்படுத்தும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று.
* வாயானது அடிக்கடி வறட்சியடைந்தால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.
* சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வந்தால் உடலில் சரியான அளவில் தண்ணீர் உள்ளது என்று அர்த்தம். அதுவே சிறுநீரானது நல்ல அடர் நிறத்தில் கடுமையான துர்நாற்றத்துடன் வெளிவந்தால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
* அழும் போது, கண்களில் இருந்து போதிய தண்ணீர் வராவிட்டால் உடல் தண்ணீரின்றி வறட்சியுடன் உள்ளது என்றும் அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அர்த்தம்.
* உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் உடலானது நன்கு செயல்படுவதற்கு தேவையான சக்தியானது இல்லாமல் சோர்வுடன் இருக்கும். இவ்வாறு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது அதிகம் குடிக்க வேண்டும் என்று பொருள்.
* சிலருக்கு உடல் வறட்சி அதிகமாகி, தாகத்தையும் தாண்டி அதிகப்படியான பசியானது ஏற்படும். இவ்வாறு அடிக்கடி பசி உணர்வு ஏற்பட்டால் அது உணவு உண்பதற்கான அறிகுறி அல்ல.
மாறாக அது உடலில் வறட்சி உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறது. ஆகவே இந்நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.
* உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு தான் சருமம். இந்த சருமத்திற்கு அதிகப்படியான தண்ணீரானது மிகவும் அவசியம். இல்லாவிட்டால், அது சருமத்தில் வறட்சி அல்லது செதில் செதிலான சருமத்தை ஏற்படுத்தி தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று சொல்லும்.
* உடலின் வியர்வையானது தண்ணீரால் உருவானது. ஆனால் உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் வியர்வையானது வற்றிவிடும். இதனால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்படுவது தடைபட்டு சருமத்தை மட்டுமின்றி உடலையும் ஆரோக்கியமற்றதாக்கிவிடும்.
* உடலில் வறட்சி இருந்தால் தலைவலியுடன் மயக்கமும் உருவாகும். எனவே தேவையில்லாமல் இத்தகைய உணர்வுகள் ஏற்பட்டால் தண்ணீரை அதிகம் பருக ஆரம்பியுங்கள்.
* 70 சதவிகிதம் தண்ணீரால் ஆன தசைகளில் தண்ணீர் குறைவாக இருந்தால் தசைப்பிடிப்பு, தசை வலிகள் போன்றவை உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது செய்த பின்னரோ ஏற்படும்.
* இதயம் கூட தண்ணீரால் ஆனது தான். இத்தகைய இதயத்திற்கு போதிய நீரானது இரத்த ஓட்டத்தின் மூலம் கிடைக்கும்.
* ஆனால் இரத்தத்திற்கே போதிய தண்ணீரானது கிடைக்காவிட்டால், இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவும் குறைந்து அடிக்கடி படபடப்பை ஏற்படுத்திவிடும். எனவே அடிக்கடி இதய படபடப்பு ஏற்படுமாயின் உடலில் போதிய நீர் இல்லை என்று அர்த்தம்.
* உடலில் நீர் வறட்சி இருந்தால் சருமத்தின் நெகிழ்வுத் தன்மையானது குறைந்துவிடும். மேலும் இதனால் சருமம் முதுமை தோற்றத்தை அடைந்தவாறு வெளிப்படுத்தும். ஆகவே இந்த மாதிரியான நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.
* மலச்சிக்கல் ஏற்படுவதும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியே. ஏனெனில் உடலில் போதிய நீர் இல்லாவிட்டால் குடலானது செரிமானமடைந்த உணவை எளிதாக வெளியேற்ற முடியாமல் மலத்தை இறுக்கமடையச் செய்துவிடும்.
* உடலின் வெப்பநிலையானது போதிய அளவில் இல்லாமல் அதிகப்படியான வெப்பத்துடன் இருந்தால் அது உடலில் போதிய தண்ணீர் இல்லாததற்கான அறிகுறிகளில் ஒன்றாகும். ஆகவே உடலானது அதிகப்படியான வெப்பத்தில் இருந்தால் தண்ணீர் அதிகம் பருகினால் சரியாகிவிடும்.
* உடலில் நீர் வறட்சி இருந்தால் ஒற்றை தலைவலி ஏற்படும். எனவே அடிக்கடி ஒற்றை தலைவலி வந்தால் தண்ணீர் அதிகம் பருகுங்கள்.                                                                                                                             

===========================================================================================
இன்று,
டிசம்பர்-31.
  • பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவிற்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது(1599)

  • விக்டோரியாராணி, கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்(1857)
  • வெள்ளொளிர்வு விளக்கு முதல் முறையாக தாமஸ் ஆல்வா  எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது(1879)
  • மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது(1909)
============================================================================================
முகநூல் 














இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?