கச்சா எண்ணெய்

உலக பெட்ரோலிய சந்தையில் தற்போது ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 36 அமெரிக்க டாலர்கள் அளவுக்கு விலை சரிந்துள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டுக்கு பிறகு  இப்போதுதான் 11 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த அளவுக்கு எண்ணெய் விலை குறைந்துள்ளது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்ததைவிட தற்பொதைய  விலை 20 சதவீதம் குறைவு. 2026 வரை கச்சா எண்ணை விலை 55 டாலர்கள் அளவுக்குத்தான் கூடி,குறைந்து கொண்டிருக்கும் என்பதுதான் கணிப்பு.
அப்போது எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அமைப்பான ஒபெக் நிறுவனம் உற்பத்தியை குறைப்பதற்கு எதிரான முடிவை எடுத்தனர்.
எண்ணெய் விநியோகத் தேவை குறைந்த போதிலும், உற்பத்தியை குறைக்க எண்ணை உற்பத்தியாளர்கள்  இணங்கவில்லை.
எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் இதன் மூலம் பலனடைந்துள்ளன என்றாலும், எண்ணை விற்கும் நாடுகளான நைஜீரியா, வெனிசுவேலா மற்றும் வளைகுடா நாடுகளில் இதனால் உள்நாட்டு வரவு செலவுத் திட்டத்தில் கடுமையான வெட்டுக்கள் ஏற்பட்டுள்ளன.பொருளாதார பாதிப்புகள் உண்டாகியுள்ளன.
சரவதேச அளவில் எண்ணெய் விலைகளின் வீழ்ச்சி தடுத்து நிறுத்தப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை.வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் சர்வதேச சந்தைகளை சென்றடையும் நிலையிலும், இரான் மீதான தடை நீக்கப்பட்டதை அடுத்து, பல நாடுகள் அங்கிருந்து மேலும் இறக்குமதிகளை செய்யும் என்பதால் விலை வீழ்ச்சியை தடுக்க  வாய்ப்புகள் மிகக்குறைவு.
கச்சா எண்ணை 110 டாலரில் இருந்து 36 டாலர்களுக்கு குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் ,டீசல் விலைகள் குறைக்கப்படவில்லை.110 டாலர் விலையை காரணம் காட்டி பெட்ரோல் விலையை உயர்த்திய தனியார் எண்ணை நிறுவனங்கள் விலையை அதிக அளவாக ரூ 2 மட்டுமே குறைத்துள்ளன.
எண்ணை நிறுவனங்களை பெட்ரோல் விலையை முடிவு செய்யும் அதிகாரத்தைக் கொடுத்த மத்திய அரசு விலையை மக்களுக்கு குறைக்க எண்ணை நிறுவனங்களுக்கு ஆணையிடாமல் பெட்ரோலிய பொருட்களுக்கு வரியை அதிகரித்து விலையை குறைய விடாமல் தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ்,இந்துஜா,எஸ்ஸார் அதானி போன்றோருக்கு ஆதரவாக,மக்கள் நலனுக்கு எதிராக  களம் இறங்கியதுதான் மக்களுக்கு கச்சா எண்ணை அடியளவுக்கு சென்றாலும் கிடைத்த பயன்.
============================================================================================ 
இன்று,
டிசம்பர்-23.
  • இந்திய விவசாயிகள் தினம்
  • முதல் டிரான்சிஸ்டர் பெல், வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது(1947)
  • உலகின் மிகப் பெரிய இரும்பினாலான கோபுரமான டோக்கியோ கோபுரம் திறக்கப்பட்டது(1958)
  • முதல் மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் நடத்தப்பட்டது(1954)
  • ============================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?