இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பதில் சொல்லுங்கள் மோடி

படம்
500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்க செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் பெரும் சுபிட்சம் ஏற்பட்டுவிட்டதாக பிரதமர் நரேந்திரமோடி வெள்ளியன்று நாட்டு மக்கள் முன்பு நாடகமாடினார்.  ஆனால்  இந்த பண மதிப்பிழப்பினால் மக்கள் அடைந்த துன்பங்கள்,இறப்புகளுக்கு ,குளறுபடிகளை பதில் கேட்டு எழுப்பப்பட்ட  எந்தவொரு கேள்விக்கும் - சந்தேகத்திற்கும் பதிலளிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் மற்றும் ஏழை, எளிய மக்களின் மனக்குமுறலுக்கும் அவர் விடை சொல்லவில்லை. மக்களின் துயரம் குறித்து 16 கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் சொல்ல தயாரா என பிரதமர் நரேந்திரமோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்விக்கணைகள் தொடுத்திருந்தது. அந்த கேள்விகளுக்கு பிரதமர் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் , கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்ட அறிக்கை வருமாறு:பணம் மதிப்பு நீக்கம் தொடர்பான பிரச்சனையில் டிசம்பர் 30க்குப் பிறகு புதிய பல்வேறு அறிவிப்புகளை வெளியிடப் போவதாக பிரதமர் அறிவித்திருந்தார்.  ஆனால் வெளியே,பாஜக கட்சி கூட்டங்களில் வாய் கிழிய பேசும் மோடி பிரதமர் என்ற

மோடியைத் தோற்கடிக்க 10 அடிகள் தான்...

படம்
ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்குப் பின், நவம்பர் 13, 2016 அன்று கோவாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். நான் செய்தது தவறு என்றால், என்னை உயிருடன் கொளுத்துங்கள்” என்று கண்ணீர் மல்கக் கூறினார். இதோ, 50 நாட்கள் கடந்துவிட்டது. வங்கிகளில் கூட்டம் குறைந்தபாடில்லை; முக்கால்வாசி ATM-கள் மூடிக் கிடக்கின்றன; செலவுக்குக் காசில்லாமல் மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளுடன் சில்லறைக்கு அலைகிறார்கள்; பொதுத்துறை வங்கிக் கணக்குகளில் பணம் இருந்தும், எடுக்க முடியவில்லை; போதிய பணம் இருக்கிறது என்று ரிசர்வ் வங்கி அறிவிக்கிறது, ஆனால் வங்கிகளுக்குப் போதிய அளவு விநியோகிக்கப்படவில்லை; புழக்கத்திற்குப் பணம் இல்லாமல் மக்கள் வங்கி, வங்கியாக அலையும்போது, கோடி, கோடியாக கருப்புப் பணம் அதுவும் புதிய 2000 நோட்டில் பிடிபடுகிறது. “நிலைமை சீராக குறைந்தது 4 மாதங்களாவது ஆகும்” என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகிறார். மோடியின் திட்டம் படுதோல்வி அடைந்தது கண்முன்னே எல்லோருக்கும் தெரிகிறது. சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் மோடிக்கு பெட்ரோல் அனுப்பத் தயார் எ

இது ‘மூக்கைப் பிடிக்கும்’ பிரச்னைதான்.

படம்
ஆனாலும், எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான பிரச்னை. சமீபகாலமாக பல திரைப்படங்களில் ‘வாயு விடுவதை’ காமெடி காட்சியாக்கி சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். உண்மையில் ‘வாயு பிரிதல்’ என்பது சிரிக்கக் கூடிய பிரச்னையா?  இல்லை, சிலருக்கு இது சீரியஸான பிரச்னை!சென்ற தலைமுறை வரை டாக்டரிடம் வந்து மருந்து கேட்காத அளவுக்கு சாதாரணமாக  இருந்த ‘வாயு’ பிரச்னை,  ‘நாகரிக உணவுப் பழக்கம்’ என்ற பெயரில் துரித உணவுகளையும் பாக்கெட் உணவுகளையும் சாப்பிட ஆரம்பித்ததால், பலரையும் வருத்தி எடுக்கும் பிரச்னையாக வளர்ந்துவிட்டது. உலகில் ‘வாயு’ விடாத மனிதர் இல்லை. நம்மை அறியாமல் கண்ணை இமைப்பது போல், இந்த  ‘வாயு விடுதலும்’ இயல்பாக நிகழ்கிற உடலியல் விஷயமே!  சுருக்கமாகச் சொன்னால், குடலில் உணவு செரிமானம் ஆகிறபோது விளையும் ஒரு கழிவுப் பொருள்தான் ‘வாயு’. சின்ன வித்தியாசம்... மற்ற கழிவுகளை அடக்கிக் கொள்ளலாம். இதை அடக்க முடியாது.‘வாயு’ பற்றி நமக்கு இருக்கும் புரிதல் ரொம்பவும் குறைச்சல்.  தவறான நம்பிக்கைகள்தான் அதிகம்.  அதனால்தான் முதுகுவலி, முழங்கால் வலி, இடுப்புவலி எனப் பல்வேறு வலிகளுக்கும் வாயுதான் காரணம் என்று

ஹீமோகுளோபின் அதிகரிக்க...,,

படம்
உடலில் அதிகமான அசதி, எந்த செயலை செய்ய வேண்டுமானலும், பிறகு செய்து கொள்ளலாம் அப்பறம் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணம் தோன்றுவது, எதிலும் நாட்டமின்மை சாப்பிடவும் பிடிக்கலை என்று தள்ளப்போவது எல்லாமே இரத்தச் சோகை என்று அழைக்கப்படும். இவ்வளவு சத்துக்கள் எந்தெந்த சத்துக்கள் தேவையோ அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிலிருந்து வெளியேற்றி விடுகின்றது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை சத்துக்களையும் உடல் ஏற்றுக் கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது. ஆண்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின், 14-18 கிராம் அளவிலும், பெண்களுக்கு, 12-16 கிராம் அளவிலும் இருக்க வேண்டும். 8 கிராமுக்கு கீழே குறையும்போது, ரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு, சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவுக்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது, ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது, நுரையீரலுக்குச் சென்று நாம

இதயம் காக்க.......,!

படம்
பட்டாம்பூச்சி படபடப்பதற்கும் கடல் கொந்தளிப்பதற்கும் தொடர்பு உண்டு என்ற கேயாஸ் தியரி கேள்விப்பட்டிருப்போம்.  அதேபோன்றதுதான் நம் உடலின் உள்ளுறுப்புகள் செயல்பாடும்.  கல்லீரல், கணையம், இதயம் என்று ஒவ்வொன்றும் வெவ்வேறு உறுப்புகளாக நாம் உணர்ந்தாலும் ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை.  இதனால்தான், ஏதேனும் ஓர் உறுப்பில் உண்டாகும் பாதிப்பு சம்மந்தமே இல்லாமல் மற்றொன்றையும் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.  இந்த உண்மையை அமெரிக்காவைச் சேர்ந்த துலானே(Tulane) பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் சமீபத்திய ஆய்வின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளனர்.  பித்தப்பை கற்களுக்கும் இதயத்துக்கும் என்ன தொடர்பு என்று துலானே மாணவர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். இந்த ஆய்வில் 8 லட்சத்து 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள்.  இதய நோய் கொண்ட 51 ஆயிரம் பேரை பரிசோதனை செய்தபோது அவர்களில் 23 சதவிகிதம் பேருக்குப் பித்தப்பையில் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் பித்தப்பை கற்கள் கொண்டவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இந்த ஆய்வு பற்றியும் இதயம் காக

இந்தியா வந்த ஏசு

படம்
ஏசுகிறிஸ்து   இந்தியா வந்தார் என்று 200 ஆண்டுகளாகப் பல வெளி நாட்டினரும், நம் நாட்டினரும் புத்தகங்கள் எழுதிவிட்டனர். சில நாட்களுக்கு முன் ஆங்கிலத்தில் ஜீசஸ் மிஸ்டரி என்று இன்னொரு கட்டுரையும்  அதன் வந்தது. சுருக்கம் இதோ:- ஏசுவின் இளமைக் காலம் பற்றி பைபிள் மவுனம் சாதிக்கிறது. மார்க், மாத்யூ, லூக், ஜான் ஆகிய நால்வர் எழுதிய புதிய ஏற்பாடு  நூல்களில் ஏசு 12 வயதில் சென்றார்- முப்பது வயதில் திரும்பிவந்தார் என்று மொட்டையாக எழுதி முடித்துவிட்டனர். இது பற்றி கிறிஸ்தவர்களே அவர்களுக்குள் தடை எழுப்பி விடை கண்ட பகுதிகளை கிறிஸ்தப் பிரசார நூல்களில் கண்டு கொள்க. ஒரு மனிதனின் இளமைக் காலம் அதிபயங்கர சக்தியுடன் எதையாவது புதுமையைப் படைக்கத் துடிக்கும் காலம். அந்த சக்தியை சரியான வழியில் திருப்பி விடாவிட்டால் அவர்களுடைய வாழ்நாள், வீழ் நாளாகவும் வீண் நாளாகவும் போகும். இதற்காக இந்துக்கள் ஒரு அற்புதமான வழியைக் கண்டு பிடித்தனர். வீட்டில் இருந்தால்தானே “அப்பா, அம்மா சொல்வதெல்லாம் தவறு, உலகம் தெரியாமல் உளறுகிறார்கள்” என்று எண்ணத் தோன்றுகிறது. வாத்தியார் வீட்டுக்கே போய் அவருக்கு உணவு படைத்து, துணி த