மனித இனம் அழிவு காலம் ...!



"மனித இனம் தான்  உருவாக்கிக் கொண்ட  தொடர்ச்சியான ஆபத்துக்களால் தன் இனத்தையே அழித்துக்கொள்ளும் நிலையில் உள்ளது." என்று பேராசிரியர் ஸ்டீபன் ஹாகிங் எச்சரித்திருக்கிறார்.
அணு ஆயுதப்போர், புவி வெப்பமாதல் மற்றும் மரபணு மாற்றி அமைக்கப்பட்ட வைரஸ்கள் ஆகிய மூன்று காரணிகளை அவ்வழிவுக்குக்காரணமாக இருக்கும் . 
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் ஏற்படக்கூடிய எதிர்கால முன்னேற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் தவறாகப் போவதற்கான புதிய வழிகளை ஏற்படுத்தக்கூடும் ."
அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்டவெளியின் கருந்துளைகள் [ black holes] பற்றிய விரிவான ஆய்வுகள் குறித்து அவர் உரை நிகழ்த்தினார். அப்போது  அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
மனித இனம் எதிர்காலத்தில் வேறு உலகங்களில் சென்று குடியேற்றங்களை அமைப்பது சாத்தியமானால் மட்டுமே மனித இனம் காக்கப்படலாம்.அழிவில் இருந்து தப்பலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
அண்டவெளியின் கருந்துளைகள்
“ஒரு குறிப்பிட்ட  ஆண்டில் உலகம் ஒரு பேரழிவில் சிக்கி அழிந்துவிடும் என்பதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவானதுதான் ஆனால்  காலம் செல்லச் செல்ல, வரும் ஆண்டுகளில் தொழில்,தொழில் நுட்ப வளர்ச்சி  கூடக்கூட அதற்கான சாத்தியம் தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கும். 
அடுத்த ஆயிரம் ஆண்டுகள் அல்லது பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அப்படி மனித இன அழிவு நடப்பதற்கான வாய்ப்புகள்  உறுதியாகி விடும்.
அப்படி நடப்பதற்கு முன்னர் மனிதர்கள் அண்டவெளியின் மற்ற இடங்களுக்கு, கோள்களுக்கு அல்லது நட்சத்திரங்களுக்கு பரவி வாழப்பழகியிருக்க வேண்டும்.  
அப்படி நடந்தால் நாம் தற்போது வாழும் இந்த உலகத்துக்கு அழிவு ஏற்பட்டால் மனித இனமே அழிந்துவிடும் என்கிற நிலைமை உருவாகாது.
அதேசமயம், பூமிக்கு வெளியே அண்டவெளியில் தன்னிறைவு பெற்ற தனி உலகமாக மனிதர்கள் குடியேறி வாழ்வது என்பது குறைந்தது அடுத்த நூறு ஆண்டுகளுக்கு சாத்தியமில்லை. 
அது நம்மால் முடியும் என்று தோன்றவில்லை. எனவே அடுத்த நூறாண்டு காலகட்டத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்."
என்றும்  ஸ்டீபன் ஹாகிங் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
அறிவியல்துறையின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் ஸ்டீபன் ஹாகிங் மனிதனின் அறிவியல் துறையின் முன்னேற்றங்களே மனித இனத்துக்கான புதிய ஆபத்துக்களை உருவாக்கக்கூடும் என்று கூறுவது கவலையை உண்டாக்கியுள்ளது. ஸ்டீபன் ஹாகிங் கருத்துக்கள் சரியாகவே இருந்து வருகிறது.கடவுள் துகள்[ஹிக்ஸ்போசான் ] கண்டு பிடிப்பு கூட இவற்றின் வழிகாட்டலில் நடந்ததுதான்.
இதற்கு முன்னரும்  Artificial intelligence (AI) என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் இயந்திர அறிவு மிகப்பெரிய அளவில் முன்னேற்றமடைந்து மனித இனத்தையே எதிர்காலத்தில் அழிக்கக்கூடும் ,அதேசமயம் அதை எதிர்கொள்வதற்கான வழிகளும் கண்டுபிடிக்கப்படும்என்றும் ஹாகிங் கூறியிருந்தார்.
 அறிவியல் துறையில் நாம் முன்னேற்றங்களை நிறுத்தப் போவதில்லை. அறிவியலில் நாம் பின்னோக்கியும் செல்லப்போவதில்லை. எதிர்கால ஆபத்துக்களை இனம் கண்டு அதை கட்டுப்படுத்த வேண்டும். நான் ஒரு நம்பிக்கையாளன். நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன். நம்மால் அதை செய்ய முடியும் என்றும் நம்புகிறேன் என்றார் ஸ்டீபன் ஹாகிங்.
இளம் விஞ்ஞானிகளுக்கு என்ன ஆலோசனைகள் சொல்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, 'நாம் வாழும் பேரண்டம் பரந்துபட்டது, சிக்கலானது என்பதை உணரும் மனோநிலையை” அவர்கள் தொடர்ந்து தம்முள் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்று  தெரிவித்தார்.
"என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தை சொல்வதானால், உயிரோடு இருப்பதும் கோட்பாட்டுரீதியான இயற்பியல் துறையில் ஆய்வுகள் செய்வதும் என் வாழ்வின் உன்னதமான காலம் என்றே சொல்வேன். முன்பு யாருமே கண்டிராத ஒரு விஷயத்தை நாம் முதல்முறையாகக் கண்டுபிடிக்கும் அந்த அற்புதத் தருணத்தைப் போல வேறொரு தருணத்தை ஒப்பிட்டு சொல்லவே முடியாது. அப்படியானதொரு அற்புதத் தருணம் அது. 
அதேசமயம், எதிர்கால ஆய்வாளர்கள் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முன்னேற்றங்கள் உலகை எப்படி மாற்றியமைக்கின்றன என்பதை நன்கு உணர்ந்திருப்பது அவசியம் என்றும், பொதுமக்கள் அதை புரிந்துகொள்ள அவர்கள் உதவ வேண்டும் "என்றும்   ஸ்டீபன் ஹாகிங்    கூறியுள்ளார்.
பார்ப்போம் .இன்றைய அறிவியல் உலகில் சரியான கணிப்பாளராக உள்ள ஹாகிங்கூறியுள்ளது நடக்க 90%வாய்ப்புள்ளது.அதற்கேற்றார் போல் மனித இனம் நடந்து கொண்டால் ஒரு இன அழிவில் இருந்து மீளலாம் .இல்லையெனில் டைனோசர் கதைதான் மனித விலங்குக்கும் நடக்கும் .
உலகில் பெரும் பணக்காரர்களாக இருக்கும் 
ஒரு சதவீத மக்கள் எங்கு வாழ்கிறார்கள்?
1 அமெரிக்கா 20,680,000 [2014ஆம் ஆண்டை விட 15% அதிகம்]
2 பிரிட்டன் 3,623,000(25% அதிகம்)

3 ஜப்பான் 3,417,000(15% குறைவு)
4 பிரான்ஸ் 2,762,000(22% குறைவு)
5 ஜெர்மனி 2,281,000(17% குறைவு)
6 சீனா 1,885,000(19% அதிகம்)
7 இத்தாலி 1,714,000(25% குறைவு)
8 கனடா 1,500,000(7% குறைவு)
9 ஆஸ்திரேலியா 1,480,000(17% குறைவு)
10 சுவிட்சர்லாந்து 831,000(3% அதிகம்)
இந்தப் புள்ளி விபரங்களைப் பார்க்கும்போது சீனா, வட அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிகிறது.











இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?