தேன், தேன், தேன்.



மலர்களிலிருக்கும் குளுக்கோஸை உணவாக அருந்திய பிறகு, தேனீயின் வயிற்றிலிருந்து சுரக்கும் ஒரு வித திரவமே தேன். இது அறிவியல் பூர்வ உண்மை. 
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தேனை பருகலாம். நோய் தீர்க்கும் மருந்து தான் தேன். அந்த காலங்களில் மூலிகை மருத்துவத்தில் தேனை தான் அதிகம் பயன்படுத்தியிருக்கின்றனர். 
கொடுக்கப்படும் மருந்தை உடலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதில் தேனின் பங்கு அதிகம். இதனால்தான் தோனோடு மற்ற மருந்துகளை உண்ணக்கொடுத்து வருகின்றனர். 

இயற்கையாகவே சத்தும் சுவையும் உள்ள உணவு தேன். தேனில் வைட்டமின் B2,B6 H(biotin), K மற்றும் சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், அக்ஸாலிக் அமிலம், குளுக்கோஸ், பாஸ்பரஸ், கந்தகம், இரும்புச்சத்து, உப்புச்சத்து, மக்னீசியம், கால்சியம், அயோடின், பொட்டாசியம், குளோரின் போன்ற அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. 

200கிராம் தேனில் 1 1/4 லிட்டர் பால் மற்றும் 1 1/2 கிலோ மாமிசம் ஆகியவற்றில் எத்தனை சத்துப்பொருள்கள் உள்ளனவோ அதற்கு இணையான சத்துப்பொருள் தேனில் உள்ளது. தேன் வெளிப்படையாக இனிப்புச் சுவை உடையதாயினும் உடலுக்கு அது கசப்பு சுவையைத் தருகிறது. கசப்புச்சுவை நரம்புகளுக்கு பலம் தருபவை. எனவே தேனை உண்டால் நரம்புகள் பலம் பெறுகின்றன. 

தேன் மூலம் பெரும்பாலான நோய்களை குணப்படுத்த முடியும். பித்தப்பை மற்றும் ஈரல் நோய்கள் அனைத்திற்கும் மருந்தாக உள்ளது. தினமும் வெறும் வயிற்றில் காலை அல்லது இரவு நேரத்தில் உணவு உண்ணும் முன் சுத்தமான தேனை ஒன்று முதல் 3 தேக்காரண்டி எடுத்து கொண்டு ஆறிய சுடுநீருடன் கலந்து குடித்து வந்தால் இரைப்பை அழற்சி, ஈரல், வயிற்று புண், பித்தப்பை நோய்கள் குணமாகும். எலுமிச்சை பழம் சாறுடன் தேனை கலந்து குடித்தால் குமட்டல், வாந்தி மற்றும் தலைவலி சரியாகும். 

குடல் புண்கள், காய்ச்சல், இருமல், இருதய நோய்கள் போன்றவை குணமடைகிறது. மேலும் அஜீரணம் சீதபேதி போன்ற நோய்களுக்கு இது அருமருந்தாகும். இதில் உள்ள பொட்டாஷியம் மூட்டு வலியை போக்குகிறது. 
வயதான பெரியவர்கள் அளவுடன் தேனை சாப்பிட்டு வர நீண்ட காலம் உடல்நலக் கோளாறில்லாமல் வாழ முடியும். குழந்தைகளுக்கு தேனை இரண்டு டீஸ்பூன் அளவுக்கு உணவில் கலந்து கொடுப்பதால் அவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் வயிற்று உபாதைகளை அனைத்தும் நீங்கிவிடும். 

குழந்தைகளுக்கு இரவில் படுக்கப்போகும் முன் ஒரு டீஸ்பூன் அளவு தேனைக் கொடுத்தால், அதுவே தூக்கத்தை தூண்டும் மருந்தாகவும் செயல்படுகிறது. இதனால் குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும். இருதயம், நுரையீரல் இரைப்பை ஆகிய உறுப்புகளை வலுப்படுத்தும். தோடு ரத்த நாளங்களிலும், குடலிலும் சேருகின்ற அழுக்குகளை அகற்றி கழிவுகளாக வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. 

தேனை பழச்சாறுடன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி கிடைக்கும். மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிடும் போது புது ரத்தம் உருவாகும். எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும். இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட பித்தம் தீரும். ஆரஞ்சு பழத்துடன் தேன் கலந்து சாப்பிட நல்ல தூக்கம் வரும். ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட உடல் சூடு தணியும். நெல்லிக்காயுடன் தேன் கலந்து சாப்பிட ரத்த சோகை நீங்கும். 

கண் பார்வை பிரகாசமாக தெரிய தேனுடன் வெங்காய சாரை கலந்து சாப்பிட்டு வர வேண்டும். தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும். 

இரவி்ல் தூங்கவிடாமல் தொடர்ந்து வரும் இருமலுக்கு மிளகு பொடியில் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் வெகுவாக குறைந்து நிம்மதியாக தூக்கலாம்.

சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல் தொண்டை வலி, மார்பு சளி, மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 

அரை கிராம் கருப்பு மிளகை பொடிசெய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகும். 
ஒரு தேக்கரண்டடி அளவு பூண்டு சாறுடன் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் இருவேளை சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

ஒரு டம்ளரில் மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலை பருகவும். இது ரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும். 

தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக தீக்காயத்தின் மீது சிறிது தேனைத் தடவவேண்டும். தேனுக்கு காயத்தை ஆற்றும் தன்மையும், கிருமிநாசினித் தன்மையும் உண்டு. இதன் காரணமாக தீப்புண் எளிதில் ஆறுவதோடு, தீக்காயத்தால் உண்டாகம் தழும்புகளும் வழக்கத்தை விட குறைவான அளவில் இருக்கும். 
===========================================================================================


ஸ்கிப்பிங் (Skipping) 
ஸ்கிப்பிங் பயிற்சியைத் தினமும் 10 நிமிடங்கள் செய்தால் 100 கலோரிகள் வரை எரிக்க முடியும். 

இது எட்டு நிமிடங்களில் 1 கி.மீ. தூரம் ஓடியதற்குச் சமம். 

தொடர்ந்து ஸ்கிப்பிங் செய்தால் ஒரு மணி நேரத்தில் 1300 கலோரிகள் வரை எரிக்கலாம். 

ஸ்கிப்பிங் செய்வது உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. 

இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பலம் சேர்க்கிறது. 
===========================================================================================
இன்று,
ஜனவரி-24.
  • தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகமான கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது(1857)
  • பேடன் பவல், சாரணியர் இயக்கத்தை ஆரம்பித்தார்(1908)
  • ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம், லெனின் கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது(1924)
  • முதலாவது ஆப்பிள் மார்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984)
  • இந்திய அணு ஆராய்ச்சி நிபுணர் ஹோமி பாபா இறந்த தினம்(1966)



=================================================================================================

 6 மணி தான் வேலை நேரம்!


சுவீடனில் தினசரி வேலை நேரம் படிப்படியாக 6 மணி நேரமாக குறைக்கப்பட்டு வருகிறது. உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்வதும் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுமே இதன் நோக்கம் ஆகும்.
ஏற்கெனவே நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் இந்த வேலை நேர குறைப்பை அமல்படுத்தி உள்ளதாக ‘சயன்ஸ் அலர்ட்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. சில மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்களுக்குக்கூட இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
குறுகிய நேரத்தில் கூடுதல் உற்பத்தி திறனுடன் அலுவலகப் பணியை முடித்துவிட்டு, தங்களது தனிப்பட்ட வாழ்வில் கூடுதல் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட அனுமதிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சுவீடனின் கோதன்பர்க் நகரில் உள்ள டொயோட்டா மையங்களில் 13 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வேலை நேர குறைப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த தொழிலகங்களில் ஊழியர்கள் உற்சாகமாக வேலைக்கு வருவதாகவும், உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளதாகவும், லாப விகதம் அதிகரித்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள பிலிமன்டஸ் நிறுவனம் (செல்போன் ஆப் கண்டுபிடிப்பாளர்) கடந்த ஆண்டே 6 மணி நேர வேலை திட்டத்தை அறிமுகம் செய்தது.
பிலிமன்டஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி லைனஸ் பெல்ட் கூறும்போது,
 “தினசரி 8 மணி நேரம் வேலை என்பது நாம் நினைப்பதுபோல பலன் தரத்தக்கது அல்ல. 
8 மணி நேரம் ஒரே வேலையில் கவனம் செலுத்துவது என்பது மிகப்பெரிய சவால்.
வேலை நேரத்தைக் குறைத்த பிறகு சமூக வலைதளங்களை பயன்படுத்த ஊழியர்களை அனுமதிப்பதில்லை. ஆலோசனைக் கூட்டங்களை வெகுவாக குறைந்துள்ளோம். 
அலுவலக நேரத்தில் கூடுதல் கவனத்துடன் பணியாற்ற ஊக்கம் தருகிறோம்” என்றார்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?