வஹாபியிஸம்+இந்துத்துவம்=என்ன வேற்றுமை?



திருச்சியில் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’  நடந்திருக்கிறது. 
மாநாடு போய் வந்த நண்பரிடம் கேட்டேன், 
“ஷிர்க் என்றால் என்ன?” 
“மூடநம்பிக்கை தோழர்.” 
“எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல் கிறீர்கள்?” 
“இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்தி ரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “
ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ் வளவுதானே?” “
இல்லை தோழர். ஒரே இறை வன், ஒரே வழிபாட்டுமுறை என்றால், மற்றவைஎல்லாமே ஷிர்க்தானே!” 
“சரி, இன்றைக்கு உங் கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங் குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். 
நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கைவைப்பீர்கள் இல்லையா? 
உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமா ளையும் சுடலைமாடனையும் முனியாண்டியை யும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?”
 அவர்என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.

” இந்திய மதச் சார்பின்மைக்கான இலக்கணம் இதுவென்றால், இந்துத்துவம், இஸ்லாமியத்துவம், கிறிஸ்துவத் துவம், யூதத்துவம் என எந்த வடிவில் வந்தா லும் மத அடிப்படைவாதம் எதிர்க்கப்பட வேண் டும். 
அதுதான் மத அடிப்படைவாத எதிர்ப்புக் கான இலக்கணம், இல்லையா?
சென்னை வெள்ள நாட்களில் ‘தி இந்து’ வில் வெளியான ஒரு படம் சமூக வலைதளங் களில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டது. 
நண்பரும் பத்திரிகையாளருமான முஹம் மது அமீன், “காஷ்மீர் வரை இந்தப் படம்போயிருக்கிறது. எல்லோரும் ஆச்சரியப் படுகிறார்கள்!” என்று கூறினார்.
வெள்ளத்தில் மூழ்கி சேறும் சகதியும் அப்பிக்கிடந்த ஒரு கோயிலை முஸ்லிம் இளைஞர்கள் சுத்தப்படுத் திய படம்தான் காஷ்மீரிலும் தில்லியிலும் அப்படி ஆச்சரியத்தோடு பார்க்கப்பட்ட படம்.அவரிடம் சொன்னேன். 
“உண்மையில், தேசியஅளவில் ஏனைய முஸ்லிம் சமூகங்களுக்குத் தமிழக முஸ்லிம்கள்தான் மத நல்லிணக்கத்தில் முன்னுதாரணங்களாக இருக்க முடியும். ஏன், சர்வதேச அளவில்கூட வழிகாட்ட முடியும்.அதற்கான கலாச்சாரப் பலம் தமிழக முஸ்லிம் களுக்கு இருக்கிறது!”
வஹாபிஸ அச்சுறுத்தல்
சர்வதேச அளவில் சமகால முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் மிகப் பெரும் அச்சு றுத்தல் வஹாபியிஸம்.1703-ல் பிறந்த முஹம்மது இபின் அப்த் அல் வஹாபியிடமிருந்து உருவானது. அதீதக் கட்டுப்பாடுகளுக்குப் பேர் போன வஹாபி, ஏக இறை தத்துவத்தின் பெயரில் ஒற்றைக் கலாச் சாரத்தை உருவாக்கியவர். 
அதே காலகட்டத் தைச் சேர்ந்தவரான முஹம்மது இபின் சவ்து நாடு பிடிக்கும் வேட்கையில் இருந்த போர் வீரர். இவர்கள் இருவரும் சேர்ந்த பின்னர், வஹாபி யிஸம் வேகமாகப் பரப்பப்பட்டது. 
அரசுக்கு மதம் அரணாகவும் மதத்துக்கு அரசு அரணா கவும் நின்றது.மிகை ஒழுக்கத்துடன் வளர்த்தெடுக்கப் பட்ட வஹாபியிஸம், தன்னுடைய வரலாறு நெடுகிலும் ரத்தக் குளியல் நடத்தியது. முஸ்லிம் அல்லாத ஏனைய சமூகங்களை மட்டும்அல்ல;
முஸ்லிம் சமூகத்திலேயே பன்மைத்து வக் கலாச்சாரம் கொண்ட சமூகங்களையும் அது அழித்தொழித்தது. கூடவே, அவர் களுடைய வழிபாட்டுத்தலங்கள், தொன்மை யான கலைப்படைப்புகள், தொல்லியல் சின்னங்கள் யாவும் உருவ வழிபாட்டு எதிர்ப் பின் பெயரால் அழிக்கப்பட்டன. ஏகத்துவம், ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றெல்லாம் விவரித்தாலும் அடிப்படையில் இன்றைய சவூதி கலாச்சாரத்தையே ‘தவ்`ஹீது’ முன்னிறுத்துகிறது.
சவூதி அரேபிய அரச வம்சத்தை 1932-ல்நிறுவியவரான அப்துல் அஜீஸ் இபின் சவுத், வஹாபியிஸத்தை வரித்துக்கொண்டவர். உலகம் முழுக்க இன்றைக்கு வஹாபி யிஸத்தைப் பரப்பியதில் அவர் வழிவந்தவர் களால் ஆளப்படும் சவூதி அரசுக்கும் பெட் ரோலிய வளம் தந்த பணத்துக்கும் முக்கியப்பங்கு உண்டு. சுதந்திரப் பேச்சு, எழுத்துக்கு எதிராக சவூதி அரசு ஏன் கடும் கட்டுப்பாடுகளை யும் தணிக்கைகளையும் தண்டனைகளையும் விதிக்கிறது? 
அரசை சின்ன அளவில் விமர் சித்துவிட்டால்கூட, கற்காலக் கசையடித் தண் டனையையும் கல்லடித் தண்டனையையும் ஏன் அளிக்கிறது?
சவூதியில், இதுவரை கிட்டத்தட்ட 40,000 பேர் மரண தண்டனைக்கு உள்ளாக் கப்பட்டிருக்கிறார்கள்; 3.5 லட்சம் பேர் உடல் உறுப்புகள் வெட்டி வீசப்பட்டிருக்கிறார்கள்;
 ஒரு மாதத்துக்கு முன்புகூட ஒரே நாளில்47 பேர் பொதுவெளியில் தலை வெட்டப் பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கின்றன மனித உரிமை அமைப்புகள். ஒரு அரச நிர்வா கம் நடத்தும் சவூதி அரசின் தண்டனைகளும் பயங்கரவாத அமைப்புகளான அல்-கொய்தா,தலிபான், ஐஎஸ் ஆகியவற்றின் தண்ட னைகளும் எப்படி ஒரே பாணியில் இருக்கின் றன? 
இதற்குப் பின்னணியில் வஹாபியிஸம் உண்டு!

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துடன் ஒப் பிடும்போது, கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கூட வஹாபியிஸம் பெரிய செல்வாக்கு இல்லாமலேயே இருந்தது. ஆனால், ஈராக், ஆப்கன் போர்களைத் தொடர்ந்து, முஸ்லிம் நாடுகள் மீது தொடரும் ஏகாதிபத்திய நாடு களின் தொடர் தாக்குதல் வஹாபியிஸத்துக்குப் புது கவனத்தைக் கொடுக்க ஆரம்பித்தது. 
சர்வ தேச அளவில், பொதுச்சமூகத்தின் புறக்கணிப் பையும் பாகுபாட்டையும் எதிர்கொள்ளும் முஸ் லிம் இளைய தலைமுறையினர், அரசியல் வெற்றிடத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் எல்லாம் வஹாபியிஸம் முன்னிறுத்தும் ஒற் றைக் கலாச்சாரத்தை நோக்கி நகர்கின்றனர்.
வஹாபியிஸம் எந்த நாட்டில் நுழைந்தாலும் அது பொதுவெளியில் முன்வைக்கும் இரு முழக்கங்கள் - ஒரே கடவுள், ஒரே கலாச்சாரம். 
மூன்றாவது முழக்கம் அந்தரங்கமானது - ஒரே அரசு!இஸ்லாத்தின் அடிப்படையில் மதம் என்பது கடவுளுக்கும் மனிதனுக்கும் இடை யிலான ஒப்பந்தம். அது ஆன்மீக மயமானது. அதில் கட்டாயத்துக்கோ பலப் பிரயோகத் துக்கோ இடமே இல்லை. ஏனைய சமூகங்களுட னான உறவையும் சகிப்புத்தன்மையையும் தன்வாழ்நாள் நெடுகிலும் போதித்திருக்கிறார் முஹம்மது நபி. 
வஹாபியிஸமோ, எது ஒன் றையும் குறுகிய மதக் கண்ணோட்டத்தில்பார்ப்பதையும் இப்பார்வையைப் பரப்புவதை யுமே அடிப்படையாகக்கொண்டிருக்கிறது என்கிறது வரலாறு.
இஸ்லாம் வெவ்வேறு நாடுகளில் அந்தந்த மண்ணின் இயல்புக்கு ஏற்ப வளர்ந்ததுபோல, இங்கே இந்தியாவுக்கே உரிய பன்மைத்துவக் கூறுகளோடு வளர்ந்தது. இந்தப் பன்மைத்துவக் கலாச்சாரத்தில் தமிழக முஸ்லிம்கள் கூடுதல் செழுமையானவர்கள். 
இந்தியாவில் இஸ் லாமின் தோற்றமும் வளர்ச்சியும் தென் முனைக் கடலோரத்திலிருந்தே தொடங்கியது என்பதோடு, ஏனைய பகுதிகளைப் போல படையெடுப்புகள் மூலமாக அல்லாமல், வா ணிப - மண உறவு வாயிலாகவும் சூஃபி ஞானி கள் மூலமாகவும் இங்கு இஸ்லாம் பரவியது என் பதும் இதற்கான முக்கியமான காரணங்களில் அடிப்படையானது. 
இன்றைக்கும் தென் மாவட் டங்களில் சியான், அப்பு, சாச்சா-சாச்சி,மாமா-மச்சான் என்றெல்லாம் பரஸ்பரம் இந்துக் களும் முஸ்லிம்களும் அழைத்துக்கொள்ளும் உறவுகள் தமிழகத்தின் சமூக நல்லிணக்க மர பின் நீண்ட வேர்களை நமக்கு உணர்த்துபவை.
காவிரிப் படுகையில் பெரும்பாலான இந்துக்கள் வீடுகளில் பூஜையறையில் மூன்றுபடங்களைப் பார்க்க முடியும். 
தஞ்சாவூர் மாரி யம்மன் கோயில் படம், வேளாங்கண்ணி மாதாதேவாலயப் படம், நாகூர் தர்கா படம். சமீபத்தில் உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஒரு நாளில், நாடக ஆசிரியர் பென்னேஸ்வரன் விசாரித் தார். “வைத்தியம் ஒருபக்கம் நடக்கட்டும். மூணு இடம் சொல்றேன். அவசியம் போய்ட்டு வாங்க.திருவொற்றியூர் பட்டினத்தார் சமாதி, திருவான் மியூர் பாம்பன் சுவாமிகள் சமாதி, அண்ணா சாலை ஹஸ்ரத் சையத் மூசா ஷா தர்கா.
” பென் னேஸ்வரன் ஒரு பிராமணர். தில்லியில் வசிப்ப வர். இந்திய மக்களிடம் கருத்தாக்கம் வழியாக அல்ல; வாழ்வியலின் ஒரு பகுதியாக ஊடுருவி யிருக்கிறது மதச்சார்பின்மை.தமிழகத்தில் பல கோயில்கள் - மசூதி களில் இந்துக்கள் முஸ்லிம்களுக்குத் திருநாட் களில் முதல் மரியாதை முறை உண்டு. 
பெரும் பாலான தர்காக்களில் சந்தனக்கூடு திருவீதி யுலா நிகழ்வில் இந்துக்களும் பங்குதாரர்கள். தர்காக்கள் வழிபாட்டுக்குரிய இடங்களோ, இல்லையோ; வெவ்வேறு சமூகங்களை இயல் பாக ஒன்று சேர்க்கும் இடங்கள். அந்த வகை யில், தர்காக்கள் மீதான தாக்குதல் மதச்சார் பின்மை மீதான தாக்குதல்;
சகிப்புத்தன்மை மீதான தாக்குதல்.இந்துத்துவ அமைப்புகள் பல நீண்ட கால மாக இந்துக்கள் மத்தியில் தர்கா வழிபாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துவந்திருக்கின்றன. இன்றைக்கு இஸ்லாமியத்துவ அமைப்புகளும் முஸ்லிம்களிடம் அதே காரியத்தில் இறங்கி யிருக்கின்றன என்றால், நமக்கு உணர்த்தப் படும் செய்தி என்ன?
அதிர்ஷ்டவசமாக இந்துத்துவத்தை எப்படி பெரும்பான்மை இந்துக்கள் ஏற்கவில் லையோ, அவ்வாறே வஹாபியிஸத்தைப் பெரும்பான்மை முஸ்லிம்கள் ஏற்கவில்லை. 
எனினும், மாறும் சூழல்கள் இன்றைக்குக் குடும் பங்களில் அப்பா-மகன் உறவைப் பிளக்கும்அளவுக்கு உருவெடுத்திருக்கிறது என்கிறார் கள். நேற்று ஒரு முஸ்லிம் பெரியவர் பேசிக் கொண்டிருந்தார். “தெருவில் பொங்கல் விழாநடத்தினார்கள். கூப்பிட்டிருந்தார்கள் என்று போனேன். 
போன இடத்தில் பொங்கல் கொடுத் துச் சாப்பிடச் சொன்னார்கள். 
மறுப்பது நம் கலாச்சாரம் அல்ல. சாப்பிட்டேன். 
வீட்டுக்கு வந்ததும், ‘காபிர்கள் படைத்த பொங்கலைச் சாப்பிட்டு வந்திருக்கிறாயே, நீயெல்லாம் ஒருஉண்மையான முஸ்லிமா?’ என்று கேட்டு ஏசு கிறான் பிள்ளை.
நான் முஸ்லிம் மட்டும்தானா, இந்தச் சமூகத்தில் வேறு எதுவுமே இல்லையா?”எனக்கு ஆதம் தீன் கட்டுரை ஒன்று ஞாபகத் துக்கு வந்தது. 
பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாள ரான இவர், தன்னுடைய இளம் வயதில் தீவிர இஸ்லாமிய அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு, பயங்கரவாதக் குழு ஒன்றுக்குள்சிக்கிக்கொண்டவர்.
 நாளடைவில் அதன் குரூரமுகத்தைப் பார்த்தவர் அதிலிருந்து வெளி யேறி, இப்போது பயங்கரவாத எதிர்ப்புச் செயல் பாடுகளில் இறங்கியிருக்கிறார். 
அந்தக் கட்டு ரையில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு கள் எப்படி இளைஞர்களை உள்ளே இழுக் கின்றன என்பதைத் தன்னுடைய அனுபவத்தி லிருந்து அவர் சொல்லியிருந்தார்.“
பல இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத ஜனநாயகத்தையும் சகல உரிமைகளையும் முஸ்லிம்களுக்கும் தந்திருந்த நாடு பிரிட் டன்.
 என்னுடைய இளம் வயதில் நான் பிரிட் டனில் எந்தக் கசப்பையும் உணர்ந்ததில்லை. 
உயர் கல்வி படிக்கச் சென்றபோது, ‘நீ ஒரு முஸ்லிம். ஆனால், ஏன் அந்த அடையாளத் தையே உணராதவனாக இருக்கிறாய்?’ என்றுகேட்க ஆரம்பித்தார்கள் சில நண்பர்கள்.
அது வரை நானோ, என் குடும்பமோ அறிந் திராத வகையில் இஸ்லாத்தை அவர்கள்புதிய கோணத்தில் எனக்கு அறிமுகப்படுத்தி னார்கள். 
கூடவே, வெவ்வேறு நாட்டு முஸ்லிம் கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை என்னு டைய பிரச்சனைகளாக மாற்றினார்கள். சீக்கி ரமே என் வாழ்க்கை முறை மாறியது.ஒரு கட்டத்தில் என்னுடைய பழைய நண்பர்கள், பெண்கள் எல்லோருடனான பழக்கத்தையும் நிறுத்திவிட்டேன். 
என் குடும்பத்தி னரே நல்ல முஸ்லிம்கள் இல்லை என்று நினைத் தேன். 
பெற்றோரையே இழிவாகப் பார்த்தேன். பன்மைக் கலாச்சாரம், நெகிழ்வுத்தன்மை எல் லாம் இழிவாகத் தெரிந்தன. சொல்லப்போ னால், என் புதிய நண்பர்கள் கொடுத்த கண் களாலேயே ஒட்டுமொத்த இந்த உலகத்தையும் பார்த்தேன்.
 தீவிர அமெரிக்க எதிர்ப்பாளன் ஆனேன். 
கடைசியில், ‘பிரிட்டிஷ் முஸ்லிம்’ என்ற நிலையிலிருந்து, ‘பிரிட்டனில் வசிக்கும் ஒரு முஸ்லிம்’ என்ற நிலைக்கு மாறினேன். 
இஸ்லாமிய உலகுக்கு நான் நெருக்கமானவன் என்று நினைத்துக்கொண்டு, பிரிட்டிஷ் கலாச் சாரம், நடைமுறைகளிலிருந்து விலகினேன். ஆனால், மதத்தைத் தீவிரமாகப் புகட்டிய வர்கள், எதிர்க் கேள்வி கேட்டால் ஆவேச மானார்கள். 
‘நீ மார்க்கத்தைவிட்டு விலகு கிறாய்’ என்றார்கள்.சுதந்திரத்தையும் ஏனைய சமூகங்களின் நம்பிக்கைகளையும் சகித்துக்கொள்ளும் இஸ் லாமே எனக்குப் பிடித்தமானது. 
எனக்கும் கடவுளுக்கும் நடுவே இவர்கள் யார் என்ற கேள்வி ஒரு நாள் எழுந்தது.
வெளியேறிவிட்டேன். 
இன் றைய இளம் முஸ்லிம்கள் பலர் மத அடிப்ப டைவாதத்தை நோக்கி நகர அவர்களுடைய பொருளாதார, சமூகப் பின்னடைவுகளே அடிப்படைக் காரணம். அவர்களுக்கு ஆதரவான குரல் ஒரு திசையில் ஒலிக்கும்போது, அதன் பின்விளைவுகள் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி யோசிக்காமலேயே அந்தத் திசையில் அவர்கள் நகருகிறார்கள். 
இந்தக் கோபப் பய ணம் கடைசியில் பயங்கரவாதத்தில் கொண்டுசேர்த்துவிடும்.”

உலகிலேயே முதல் முறையாக ஐஎஸ் அமைப்புக்கு எதிராக 1,050 இஸ்லாமிய அறி ஞர்கள் கூட்டாக ஃபத்வா பிறப்பித்து ஐநா சபை பொதுச் செயலாளருக்கு அனுப்பிய முன்னு தாரணம், இந்திய முஸ்லிம் சமூகத்திடமிருந்து வெளிப்பட்ட வரலாற்றுப் பின்புலம் உண்டு.
 வஹாபியிஸத்தின் வயது அதிகபட்சம் மூன்றுநூற்றாண்டுகள். 
இந்திய இஸ்லாம் குறைந்த பட்சம் வஹாபியிஸத்தைக் காட்டிலும் ஆயிரம்ஆண்டுகள் மூத்தது, பழமையானது. நம்மைப் பார்த்துதான் சர்வதேச முஸ்லிம் சமூகம் நெகிழ் வான பன்மைத்துவத்தைக் கற்க வேண்டும்.
இயற்கையின் அடிப்படை பன்மைத்துவம்.வரலாற்றில் மனிதத்துக்கு எதிரான மிகக் கொடிய வன்முறைகள் அனைத்தும் புனிதம் எனும் தூய்மைவாத சொல்லின் பெயராலேயே நடந்திருக்கின்றன.
இந்து மதத்தின் தூய்மைவாதப் புனிதம்தான் தம்முடைய சொந்த சகோதரர்கள் கோடிக்கணக்கானோர் மீது கொடுமையான பாகுபாட்டையும் உச்ச பட்சமாகத் தீண்டாமையையும் திணித்தது.
அன்றைக்குக் கோயில்களில் உட்கார்ந்து கொண்டு தூய்மைவாதப் புனிதத்தைப் போதித்தவர்களுக்குத் தெரியாது, 
தம் போத னைகள் எத்தனை நூற்றாண்டுகளுக்கு சகசகோதரர்களை இழிவான சேரிகளில் புறக் கணிப்பிலும் அவமானத்திலும் தள்ளி, மனி தத்தை வதைத்து நசுக்கும் என்பது. ஒற்றைக்கலாச்சார புதிய மசூதிகளில் இன்றைக்குப் தூய் மைவாதப் புனிதத்தைப் போதிப்பவர்களும் அதற்கு இணையான பெரும் தவறை இழைக் கிறார்கள். 
கோயில்களின் ‘புனித போதனை’ வரலாற்றுக் கொடுமை என்றால், ஒற்றைக் கலாச் சார புதிய மசூதிகளின் ‘புனித போதனை’ வரலாற்றுத் துரோகம். 
வெறுமை உணர்ச்சி யிலும் கொந்தளிப்புச் சூழலிலும் ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கித் தள்ளப்படும் ஒரு சமூ கம் அத்தனை சீக்கிரம் எழ முடியாத வெறுப் புப் பள்ளத்தில் தள்ளப்படும்.
பெரும்பான் மை அடிப்படைவாதம் இந்தத் தருணத்துக் காகத்தான் வெறியோடு காத்திருக்கிறது.
இந்தியாவில் சிறுபான்மை அடிப்படை வாதிகள் தங்களை அறியாமல் செய்யும் மாபெரும் பிழை பெரும்பான்மை அடிப் படை வாதிகளுக்கான நியாயத்தை உருவாக்கு வது. 
தம் சொந்த மக்களுக்கு இதைவிடவும் ஒரு கொடுமையை அவர்கள் இழைக்க வேண்டிய தில்லை. இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந் துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மீகக் கடமை! 
நன்றி: தி இந்து (பிப்ரவரி 4)
==========================================================================================================================================
இன்று,
பிப்ரவரி-05.

  • மெக்சிகோ அரசியலமைப்பு தினம்(1917)
  • ரீடர்ஸ் பைஜஸ்ட், மாத இதழின் முதலாவது இதழ் வெளியிடப்பட்டது(1922)
  • ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது(1960)
  • தென் கரோலினா, அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட முதல் மாநிலமானது(1778)


=========================================================================================
பல நாடுகளின் ரகசிய கோப்புகளை அம்பலப்படுத்திய, 'விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜுலியன் அசாஞ்ச், துாதரக சிறைவாசத்தில் இருந்து விடுதலை ஆவாரா, இல்லையா என்பது இன்று தெரிந்து விடும்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர், ஜூலியன் அசாஞ்ச்; இவர், விக்கிலீக்ஸ் என்ற பெயரில் செயல்படும், ஊடக இணையதளத்தின் நிறுவனர். 

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் லட்சக்கணக்கான ரகசிய கோப்புகளை, இந்த இணையதளத்தில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியவர்.அதற்காக, இவரை கைது செய்ய, அமெரிக்க அரசு, பல வகையில் முயன்று வருகிறது. மேலும், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சுவீடன் அரசும், இவரை, நாடு கடத்தி சிறையில் தள்ளத் துடிக்கிறது.ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வடார் துாதரகத்தில், மூன்று ஆண்டுகளாக தஞ்சமடைந்து உள்ளார். 
அவர் வெளியில் வந்தால், கையில் விலங்கு மாட்ட, போலீசார், வீதியில் தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், அசாஞ்ச், 'துாதரகத்தில் அடைந்து கிடப்பது, தனி மனித சுதந்திரத்தை பறிக்கும் செயல்' எனக்கூறி, அதற்கு காரணமான, சுவீடன், பிரிட்டன் நாடுகள் மீது, ஐ.நா.,வின், தடுப்பு காவல் விசாரணைக் குழுவிடம் புகார் செய்தார். 
இந்த புகார் மீது, இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

 : தீர்ப்பு எனக்கு எதிராக வந்தால், அதற்கு கட்டுப்பட்டு, பிரிட்டன் போலீசாரிடம் சரணடைவேன். அதேநேரத்தில், தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்தால், பிரிட்டன் போலீசார், என்னை கைது செய்யக் கூடாது. என்னுடைய பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு  அசாஞ்ச் கூறினார்.
===============================================================================================







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?