வக்காளர் பட்டியல்?





தலைப்பில் எழுத்துப்பிழை இல்லை.
நம் தமிழகத்தேர்தல் ஆணையம் தயாரித்த வாக்காளர் பட்டியலில்தான் ஒட்டு மொத்த பிழைகளும்.
நம் தமிழ் நாடு 
தேர்தல் ஆணையம் 
2016 சட்டப்பேரவை 
தேர்தல் நடத்திய 
முறையும் ஆளுங்கட்சிஅதிமுக  மற்றும் அதிமுக அதிகாரிகள்-காவல்துறையினர்  முறைகேடுகளை ஊக்குவித்து தேர்தலை நடத்தி  ஜெயலலிதாவை முதல்வராக்கியதில் ஆணையம் எடுத்துக்கொண்ட ஊக்கத்தையும் எத்தனை முறை பாராட்டினாலும் மாளாது அதன் சேவை.
என்ன 2011 அதிமுக வெற்றிக்கு பாடுபட்ட  தமிழக தேர்தல் ஆணையர் பிரவின் குமார் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் முன்வரிசையில் வெற்றிச் சிரிப்புடன் அமர்ந்து புகைப்படங்களுக்கு அசைவு கொடுத்தது போல் ராஜேஷ் லக்கானி செய்யவில்லையே தவிர லக்கானி சேவை பிரவீன் குமார் பணிக்கு சற்றும் குறைந்தது அல்ல.
2016 சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடக்கும் மூன்று நாட்களுக்கு முன் வரை வரைவு வாக்களர் பட்டியல் தயாரிக்கப் பட்டது .பேர் சேர்க்கவும்,நீக்கமும் செய்யப்பட்டது.
திமுக தரப்பிலும் ,மற்ற எதிர்க்கட்சிகள் தரப்பிலும் 10 லட்சத்துக்கு அதிகமாக போலி வாக்களர்கள் சேர்க்கப்பட்டதாக மனுக்கள் கொடுக்கப்பட்டது.
ஆனால் அவை  கண்டு கொள்ளப்படவில்லை ராஜேஷ் லக்கனியால்.
பின்னர் திமுக தரப்பில் இந்திய தேர்தல் ஆணையம்,டெல்லியில் மனு போலி வாக்காளர் சேர்ப்பு ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்டதால் வேறு  வழியின்றி 1.5 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டு பிடிக்கப் பட்டு நீக்கப்பட்டதாகவும் அறிவிப்பு வெளியானது.
அந்த நீக்கத்தில் பல திமுகவினர் பெயர்கள்தான் இருந்ததாகவும் கூட செய்திகள் வந்தன.இந்த நீக்கல் செயல் கூட தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் அவசரமாக செய்யப்பட்டன.அப்படி என்றால் குளறுபடிக்கு குறைவு இல்லாமல் இருக்குமா?
அப்படியிருந்தாலும் கூட மீதி லட்சக்கணக்கான போலி வாக்களர்களுடனே 2016 தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தி முடித்து ஜெயாலலிதாவுக்கு தங்கள் எண்ணப்படியே பட்டமும் சூட்டி விட்டது.
லட்சக்கணக்கான போலி வாக்களர்களுடன் நடத்தப்பட்ட இத்தேர்தல் சட்டப்படி செல்லுபடியாகுமா?
இடி அமீனும்,முசோலினியும் தேர்தல்களை சந்திக்கையில் வாக்காளர் பட்டியல்கள் அவருக்கு வாக்களிப்பவர்கள் பெயர்களை மட்டும்தான் தாங்கியிருக்குமாம்.
அந்த வகையில் பார்த்தால் நம் வாக்களர் பட்டியல் சற்று மக்களாட்சி தன்மையுடன்தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பெருமைபட்டுக்கொள்ளலாம். 
இத்துடன் தேர்தல் ஆணையம் வழமைப்படி சும்மாயிருந்தால் கூட பரவாயில்லாமல் இருந்திருக்கும்.தற்போது வாக்காளர்ப்பட்டியலை சரி செய்து வைக்க ஏற்பாடுகள் செய்வதாக அறிக்கை வந்துள்ளது.
அதற்கு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பதில் தெரிவித்த அறிக்கை இனி.:

 "தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் ஒரு உத்தரவு அனுப்பியிருக்கிறது. 
அந்த உத்தரவில், “தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியலைச் செம்மைப் படுத்த வேண்டும். அதன்படி, கடந்த ஐந்து வருடங்களில் இறந்தவர்கள் பட்டியலை எடுத்து, வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்படி இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படா விட்டால், அவர்களது பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும். 
அதே போன்று ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒரே வாக்காளர் பெயர் இருப்பதையும் கண்டறிய வேண்டும். ஒரே பெயரில் உள்ள வாக்காளர் பெயர், தந்தை பெயர், வயது, முகவரி ஆகிய ஆவணங்களை வைத்து சரி பார்க்க வேண்டும். 
இப்படி ஒரே பெயரில் அனைத்து தகவல்களும் ஒரே மாதிரி இருந்தால், அந்த நபர் எந்த முகவரியில் தன்னுடைய பெயர் இருக்க வேண்டுமென்று விரும்புகிறாரோ, அந்த விலாசத்தில் மட்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இது போன்ற எ, எஸ், டி (ஆப்சென்ட், ஷிப்ட், டெட்) லிஸ்ட் எடுத்து வீடு வீடாக வாக்குச்சாவடி அலுவலர்கள் சென்று விசாரிக்க வேண்டும். அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, அந்த விலாசத்தில் யாரும் இல்லாமல் இருப்பவர்கள், வீடு மாறிச் சென்றவர்கள், இறந்தவர்கள் என்ற அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும்” என்றெல்லாம் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தொடருகிறது.

இந்த உத்தரவைப் படிக்கும்போது, “குதிரை களவு போனபின் லாயத்தை இழுத்துப் பூட்டுகின்ற செயல்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. 
தமிழகத்தில் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்த பின், தற்போது தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்த உத்தரவு பிறப்பித்து என்ன பயன்?

வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகள் பற்றியும், முறைகேடுகள் பற்றியும் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் எத்தனை மனுக்கள் தரப் பட்டன? 
தமிழக வாக்காளர் பட்டியலில் மிகப் பெரிய மோசடி இருக்கிறது என்றும், இந்தியத் தேர்தல் ஆணையம் தவறுகளைக் களையவேண்டும் என்றும் 23-1-2016 நானே நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டேன்.

வாக்காளர் பட்டியல் பற்றி, “டைம்ஸ் ஆப் இந்தியா” (21-1-2016) - “2016இல் தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிக வாக்காளர்கள்” என்ற தலைப்பிலேயே ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. 
அதில் நான்காண்டுகளில் அதாவது 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு, தற்போது 2016 ஜனவரியில் 22 சதவிகித வாக்காளர்கள் அதிகமாகியிருப்பதாகக் கூறப் பட்டிருந்தது. 

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையான 7.77 கோடியில் 20-1-2016 அன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர்களின் எண்ணிக்கை 5.79 கோடி, அதாவது 75.56 சதவிகிதம் பேர். 
இந்தப் புள்ளி விவரம் யாரும் நம்பக் கூடியதாக இல்லை.

2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14 வயதுக்கு உட்பட்டவர்கள் 23.4 சதவிகிதம் பேர். 
15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் 6 சதவிகிதம் பேர். 
எனவே, 18 வயதுக்கு உட்பட்டவர்கள், அதாவது வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட முடியாதவர்கள் 23.4 + 6 = 29.4 சதவிகிதம் பேர். 
மக்கள் தொகையில், மீதம் உள்ள 70.40 சதவிகிதத்தினரே, வாக்காளர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள வாக்காளர் பட்டியலில் 75.56 சதவிகிதம் பேர் வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டிருப்பது ஆச்சரியமாகவும், பெருத்த மோசடியாகவும் உள்ளது. இதிலிருந்து 5.16 சதவிகிதம் பேர், 
வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படக் கூடாதவர்கள் அதாவது போலி வாக்காளர்கள், வாக்காளர்களாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 
இந்தக் கணக்கின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையான 7.77 கோடியில், சுமார் 40 இலட்சம் பேர் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 
இது “டைம்ஸ் ஆப் இந்தியா”  வெளியிட்டிருந்த ஆதார பூர்வமான செய்தி.

“இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழ் தந்துள்ள விவரப்படி - தேர்தல் ஆணையம் மொத்த மக்கள் தொகையில், 18 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 71.16 சதவிகிதமாக இருக்கும் என்று கணக்கிட்டிருந்தது. 
அந்தக் கணக்கை எடுத்துக் கொண்டால் கூட, தேர்தல் ஆணையம் அனுமானித்ததை விட 4 சதவிகிதம் அளவுக்கு வாக்காளர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்தக் கணக்கின்படி பார்த்தால், போலி வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 31 இலட்சமாகும் என்று எழுதியிருந்தது. 

வாக்காளர் பட்டியல்படி பொதுவாக ஒரு தேர்தலுக்கும் அடுத்து வரும் தேர்தலுக்கும் இடையே 10 முதல் 12 சதவிகிதம் அளவுக்கு வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 
ஆனால் இப்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, கடந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலை விட இப்போது 22 சதவிகிதம் அளவுக்கும் கூடுதலாக வாக்காளர்களின் எண்ணிக்கை பெருகி உள்ளது. இந்த அளவுக்கு வாக்காளர்களின் எண்ணிக்கை கூடுதலாகி இருப்பதற்கு என்ன காரணம் கூறப்படுகிறதென்றால், வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குக் கூடுதலான பேர் கட்டடத் தொழில் செய்து வாழ்வாதாரம் ஈட்டுவதற்காக, வருகை புரிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. 
ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் கட்டிடத் தொழில் முன் எப்போதையும் விட வளர்ந்து விட்டதாகவோ, வெளி மாநிலங்களிலிருந்து கட்டிடத் தொழில் செய்து பிழைப்பதற்காக அதிகம் பேர் இங்கே வந்து விட்டதாகவோ செய்தி எதுவும் இல்லை, மாநிலத்தில் தொழிற் சாலைகளும் அதிகமாக உருவாகி, புதிய வேலை வாய்ப்புகள் பெருகிடவில்லை என்பது தான் உண்மை. இதிலிருந்து வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திலே அதிகம் பேர் குடியேறி விட்டார்கள் என்பதால் வாக்காளர் எண்ணிக்கையும் அபரிமிதமாக உயர்ந்து விட்டது என்ற தகவலும் உண்மைக்குப் பெரிதும் மாறானது.

இந்த விவரங்களை யெல்லாம் எனது அறிக்கையில் குறிப்பிட்டு, ஆளும் அதிமுக வினரின் தலையீட்டில் ஏராளமாகப் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்று தி.மு. கழகத்தின் சார்பில் தெரிவித்திருந்தேன். 

கழகத்தின் சார்பில் முறைப்படி தேர்தல் ஆணையத்திற்கும் மிகப் பெரிய எண்ணிக்கையிலான போலி வாக்காளர் பற்றிய இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. நானே இதுகுறித்து உறுதியான புள்ளி விவரங்களுடன் மூன்று அறிக்கைகள் வெளியிட்டிருந்தேன். 
9-2-2016 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை இறுதி செய்தல் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலர் நடத்தியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் சென்னையில் மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 169 தகுதியில்லாத வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
குறிப்பாக சென்னையில் மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரத்து 717 பேர், இறந்தவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே சேர்க்கப் பட்டுள்ளார்கள். 
நாம் தந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே சேர்க்கப்பட்டு தற்போது போலி வாக்காளர்கள் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் 1 இலட்சத்து 85 ஆயிரம் பேர் என்றால், இன்னமும் நீக்கப்படாமல் உள்ள போலி வாக்காளர்கள் எவ்வளவு பேர் என்பதைத் தீவிரமாக கண்டு பிடித்து உண்மையான ஜனநாயக அடிப்படையில் தேர்தலை நடத்த நுhறு சதவிகிதம் உறுதி செய்யப்பட வேண்டாமா? 
இதைப் போலவே மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் ஆளுங்கட்சியினரின் அத்துமீறலின் காரணமாக போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 
குறிப்பாக சென்னையிலே எடுத்துக் கொண்டால் மைலாப்பூர் தொகுதியில் மட்டும் 16,798 வாக்குகள் -
 விருகம்பாக்கத்தில் 17,831 வாக்குகள் - 
அண்ணா நகரில் 14,830 வாக்குகள் - 
தியாகராயநகரில் 13,823 வாக்குகள் - 
பெரம்பூரில் 13,323 வாக்குகள் 
என்ற அளவுக்கு போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் காணத் திகைப்பாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்தாலேயே நாம் தந்த புகார்களின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது தகுதியில்லாத அந்த வாக்காளர்களை நீக்குவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். 
இதே போல தமிழகத்திலே உள்ள மற்ற தொகுதிகளிலும் உள்ள போலி வாக்காளர்களும் முழுமையான சரி பார்த்தலின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த வாக்காளர்களை நேர்மையான தேர்தல் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் உடனடியாக களையப்பட வேண்டும். தேர்தல் வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம் இந்தப் பிரச்சினையிலே முறையாக உரிய கவனம் செலுத்தி, போலி வாக்காளர்கள் நீக்கப்பட அனைத்து முயற்சிகளிலும் முனைப்புடன் ஈடுபட வேண்டும் என்றும்; ஆங்காங்கே கழகத் தோழர்கள், தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை நல்கிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன்.

வாக்காளர் பட்டியலில் இலட்சக்கணக்கான போலி வாக்காளர்கள் உள்ளிட்ட ஏராளமான தவறுகள் இருக்கின்றன என்று எத்தனை முறை புகார் மனுக்கள் தரப்பட்டன? 
கடைசியாக தேர்தலுக்கு முன்பு தரப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையமே சோதித்துப் பார்த்துக் கொள்ளட்டும். என்னுடைய திருவாரூர் தொகுதியில் மட்டும் 11,036 போலி வாக்காளர்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு, தேர்தல் ஆணையரிடமே அதன் நகல்கள் தரப்பட்டன. 
மற்ற தொகுதிகளை எடுத்துக் கொண்டால், ஆவடியில் 19,723 -
 கொளத்துhரில் 5,588 - 
திருப்போரூரில் 13,404 -
 பாலக்கோட்டில் 20,199 -
 வானுhரில் 10,768 - 
விக்ரவாண்டியில் 11,592 - 
கள்ளக் குறிச்சியில் 21,247 - 
அவினாசியில் 23,270 - 
திருப்பூர் (வடக்கு) - 24,286 - 
திருப்பூர் தெற்கு 12,024 - 
பல்லடத்தில் 28,805 - 
உடுமலைப்பேட்டையில் 14,243 - 
குன்னம் 21,231 - 
சோளிங்கர் 22,227 - 
பெரம்பலுhர் 25,105 - 
காங்கேயம் 23,956 - 
கலசப்பாக்கம் 20,098 
என்று ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் பட்டியல்களில் போலி வாக்காளர்களின் பெயர்கள் இருப்பதைப் பார்த்துக் கொள்ளலாம். 
இவ்வளவு போலி வாக்காளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் இருந்தார்கள். இந்தப் பட்டியலின் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் கடந்த மாதத்தில் தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தி, வாக்கு எண்ணிக்கையையும் அவசர அவசரமாக நடத்தி முடிவுகளை வெகுவேகமாக அறிவித்துள்ளது. 
மேலும் போலி வாக்காளர்கள் மிகுதியாக இடம் பெற்றுள்ள இந்த வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலே தான், 2014 நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தி 37 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றதாக முடிவுகளை அறிவித்தார்கள்.

அவ்வாறு அறிவித்து விட்டு, தற்போது திடீரென்று விழித்துக் கொண்டு, வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்த தலைமைத் தேர்தல் ஆணையம், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கிறது என்றால், ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டப் பேரவைத் தேர்தலிலும் நடந்து முடிந்த இமாலயத் தவறுக்கு யார் பொறுப்பு? 
எத்தனை முறை கழகத்தின் சார்பில் புகார் மனுக்கள் தரப்பட்டன? 
அதன் கதி என்ன? 
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையமே, தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையம் சரியாக இந்தப் பணியைச் செய்யவில்லை என்பதை இப்போது காலம் கடந்தாவது ஒப்புக் கொள்கிறதா? 
சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு, சரியான துhய்மையான வாக்காளர் பட்டியல் தானே அடிப்படை! 
முறையான வலிமையான அஸ்திவாரம் இல்லை என்றால், அதன் மீது எழுப்பப்படும் கட்டிடம், மவுலிவாக்கம் அடுக்கு மாடிக் கட்டிடம் போல சரிந்து சாய்ந்து மண்ணுக்குள் தானே புதைந்து விடும்! 
பல இலட்சம் போலி வாக்காளர்கள் நிறைந்த வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் தேர்தல்கள் ஜனநாயகச் செயல் முறைகளையே கேலிக் கூத்தாக்கி விடாதா? 
=====================================================================================
இன்று,
ஜூன்-13.


  • சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது(1955)

  • இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் லெபனானை விட்டு விலகினர்(1978)

  • பயனியர் 10, சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் ஆனது(1983)

======================================================================================





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?