கட்டுப்பாடில்லாமல் வளரும்



மருந்து த் தொழில்  கொள்ளை.



இந்தியாவில் மருந்து வணிகம்அதிக லாபம் ஈட்டும் தொழி லாக மாறியுள்ளது. 
அப்படி மாறியதால் கடும் போட்டியும் நிலவுகிறது.
நம் நாட் டில் 1970 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தகாப்புரிமை சட்டத்தின் விளைவாக ஏராளமான இந்திய முதலாளிகள் மருந்துஉற்பத்தி மற்றும் வணிகத்தில் இறங்கி னர். நம் நாட்டில் மருந்துகள் வணிகப் பெயர்களில்மட்டுமே வணிகம் செய்யப்படுகின்றது.. 

இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏராளமான நிறுவனங்கள் மருந்து உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபட்டன….அதையொட்டி மருத்துவர்களும் மருந்துகளை அரசு மருத்துவ மனை அல்லாத வெளிசந்தையில் வணிகப்பெயர்களிலேயே எழுத துவங்கினர்…
இது நம் நாட்டில் தற்போது இருக்கும் நிலை.
இந்திய மருந்து சந்தை சுமார் 1 லட்சம்கோடி ரூபாய் மதிப்புள்ளது. 
இதில் சிறு, நடுத்தர பெரிய மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை பிரபலப்படுத்திட மருத்துவ பிரதிநிதிகளை நியமித்து மருத்துவர்களை சந்தித்து விற்பனையை செய்துவருகின்றனர்.. 1990களில் இந்தி யாவில் உலகமயம் வந்ததன் விளைவாக போட்டி வெவ்வேறு வடிவங்களில் மாறியது. 
உலக மயத்தின் விளைவாக அமெரிக்கா போன்ற நாடுகளில் முன்னணிமருத்துவர்களை ஒட்டு மொத்தமாக விலைக்கு வாங்குவது அதன் மூலமாகதங்கள் நிறுவனத்தின் மருந்துகளை பரிந்துரைக்க வைப்பது, அம்மருந்துகளின் பக்க விளைவுகளை மறைப்பது, ஆராய்ச்சிமுடிவுகளில் வரும் பாதகமான விவரங் களை கூட வேறு காரணங்களைச் சொல்லிசாதகமாக்கிக் கொள்வது போன்ற பல அம்சங்கள் இருக்கிறது என்பதை பல பன்னாட்டு மருத்துவ பத்திரிகைகள் அவ்வப்போது அம்பலப்படுத்தியிருக் கின்றன. 
இது ஒரு சான்று.
இந்தியாவின் முன்னணி ஆங்கில ஏடான பிரண்ட்லைன் இந்தியாவில் விற்பனையில் முன்னணியில் உள்ள சன்பார்மாநிறுவனம் மேற்கண்ட பாணியில் செய் துள்ள , செய்து வருகிற முறையற்ற வணிகஉத்திகளை ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியுள்ளது. 
இந்தியாவில் உள்ள மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதலை முற்றிலுமாக புறந்தள்ளி , நேர்மையான வழிமுறைகளை கேலிக்கூத்தாக்கி, மருந்து விற்பனை தொழிலையே கொச்சைப்படுத்தியுள்ளது. அதன் விவரங்களை ஆழ்ந்து படிக்கும் போது நம்மில் பலருக்கு ஆச்சரியமும் ,அதிர்ச்சியும் ஏற்படுத்தும். முன்னணி நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு விலையுயர்ந்த பரிசு பொருட்களை கொடுப்பது, வெளி நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வது, முக்கிய மருத்துவர்களை வைத்துகருத்தரங்கம் நடத்தி, அதன் மூலம் ஒருகருத்துருவை உருவாக்குவது, மருத்துவ மனைகளில் நீரிழிவு, ஆஸ்துமா, இருதய நோய்கள் கண்டுபிடிப்பு முகாம் எனும் பேரில் மக்களை திரட்டி, அதன் மூலம் அம்மருத்துவர்களுக்கு நோயாளிகளின் முழு விவரங்களை அளித்து, அவர் களுக்கு தங்கள் நிறுவனத்தின் மருந்து களை எழுத வைக்க நாடு முழுதும் பல வகைகளில் முறையற்ற வேலைகள் நடக் கின்றது. 
இப்படி நடக்கும் முறையற்ற விற்பனை உத்திகளின் ஒரு பகுதியான மருத்துவர்களை வெளிநாட்டுக்கு உல்லாச பயணம் அழைத்துச் செல்வதற் கான 91 மருத்துவர்களின் விமான டிக்கெட்டுகள் தங்களிடம் இருப்பதாக பிரண்ட் லைன் நாளிதழ் ஆதாரத்துடன் சொல்கிறது. இந்தியாவில் நீண்ட காலமாக பின்பற் றப்படும் ஒழுங்கு முறை நெறிகளின் அடிப்படையில் இது போன்ற அனைத்தும் ஒழுங்கீனமானது. தவறானது.
இந்தியாவின் முன்னணி நிறுவனமான சன் பார்மா மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றது. 
மிக குறுகிய காலத்தில் மருந்து வணிகத்தில் பலரை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்தது. 
எப்படி அந்நிலைக்கு வர முடிந்தது? 
பெரும்பாலும் அவர்களின் வியாபார அணுகு முறை முறையற்ற விதம் தான். மருந்து விற்பனையில் உள்ள முறையற்ற வணிகத்தை மிக நேர்த்தியாக பல ஆண்டுகளாகசெய்து வருபவர்கள் மருத்துவர்களை தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை எழுத வைக்க வெவ்வேறு விதமான திட்டங்களை கையாள்வது, அன்றாட பரிசோத னைகளில் வரும் முடிவுகளின் அடிப்படை யில் தங்கள் நிறுவன மருந்து மட்டுமே சிறந்தது எனும் சிந்தனையை உருவாக்கி, அதை மட்டும் நோயாளிகளுக்கு பரிந் துரைக்க வைப்பது, எனும் சாகசத்தை இந்நிறுவனம் செய்கிறது. 
இப்படி பரிசோதனை செய்யும் மருத்துவர்களுக்கு பெரும் தொகையை சன்மானமாக அளிப்பது, அதன் மூலம் அதிகமான விற்பனையை பெறுவது எனும் சூழ்ச்சி இதில் உள்ளது. 
சன்பார்மா நிறுவனத்துடன் இப்படிஒப்பந்தம் செய்து கொள்ளும் மருத்துவர் கள் சுமார் 25 நோயாளிகளுக்கு அந்நிறுவனத்தின் மருந்துகளை பரிசோதிப் பதற்கு 1000 ரூபாய் வீதம் கொடுப்பார் கள். அதாவது ரூபாய் 25,000. இது மறைமுகமாக மருத்துவரை கறை படிந்தவராக மாற்றுவது…….. இப்படி பல மருத்துவர் களுக்கு கொடுக்கப்பட்ட ரூ. 25,000 க்கானகாசோலைகளின் ஜெராக்ஸ் நகல்கள்தங்களிடம் இருப்பதாகவும் பிரண்ட் லைன் நாளேடு சொல்லுகிறது. 
ஆனால் இதுவரை சன்பார்மா நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இன்னும் ஓர் ஆதாரத்தையும் அந்த ஏடு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தஅந்நிறுவனத்தின் மண்டல மேலாளர் மருத்துவ பிரதிநிதிகளுக்கு ஒரு இமெயிலை அனுப்புகிறார்…
இதோ அதன் சாரம்...
 கோட்டயத்தில் நாம் செய்திருக்கும் முயற்சி நமக்கு கைமேல் பலனளிக்கும் . அந்த நகரின் முக்கியமான குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் நம் மருந்துகளை எழுதுவதற்கு நம் திட்டங்களை (காசோலை வாங்கி கொள்வது ) ஏற்றுக்கொண்டுள்ளார்.… ஆகவே, இம்மாதம் முதல் நமது நிறுவன மருந்துகளின் விற்பனை பல மடங்காக அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு மொத்த விற்பனையாளரிடம் கூடுதல் இருப்பு வைத்திட ஏற்பாடு செய்யவும்..
 இந்த இமெயில் உணர்த்துவது என்ன? 

முறை யற்ற வணிகத்தை ஊக்குவிக்கும் ஏற்பாடு…. இது பெரும் பனிப்பாறையின் நுனி மட்டுமே. அந்த மேலாளர் மேலும் எழுதுகிறார்……நாம் பணம் வாங்கும் மருத்துவர்களை கண்டறிந்து அவர்களை முறையாக “ கவனித்தால்” நமது மாதாந்திர விற்பனை இலக்கை இலகுவாக நிறைவேற்ற முடியும். . ஆகவே, முதலீடு செய்யக் கூடிய மருத்துவர்களை விசேஷமாக தொடர்ந்து பார்த்து முதலீட்டுக்கு ஏற்ற விற்பனையை அவர்களிடமிருந்து பெறுவதற்கு நீங்கள்கவனமாக இருக்க வேண்டும். 
நம் முடைய கவனம் எக்காரணம் கொண்டும் சிதறி விடக்கூடாது. மேலும் இது போன்ற “நல்ல” மருத்துவர்களை தொடர்ந்து அடையாளம் கண்டு அவர்களுக்கான சேவையை செய்வது நமது விற் பனையை அதிகப்படுத்தும். 
இப்படி பல மருத்துவர்களை விலைக்கு வாங்கியது குறித்த அனைத்து ஆதாரங்கள் இருப் பதை குறிப்பிடுகிறது பிரண்ட்லைன். மருத்துவ உலகம் எந்த அளவுக்கு ஊழல் மயமாகி உள்ளது என்பதற்கு இது ஒரு சான்று.

நம்மில் பலர் மருத்துவர்களை சந்திக்கசெல்லும் போது சில மருந்து நிறுவனம் மருத்துவமனை வளாகத்தில் பெரிய பேனர்களை கட்டி, இலவச சிறப்பு மருத்துவ முகாம், நோய் கண்டறிதல், ரத்த சோகை கண்டறிவது இலவசமாக ரத்த அழுத்தம் கண்டுபிடிப்பு போன்றமுகாம்கள் நடைபெறுவதை பார்த்திருப் போம். இதுவும் ஒரு வகையில் முறையற்ற விற்பனை முறை. 
ஏனென்றால், மருந்துவிற்பனை இரு சட்டங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இந்த இரு சட்டங்களும் மருந்து விற்பனை நேரிடையாக இருக்கவேண்டும் எனவும், மறைமுகமாகவோ, வெளிப்படைத் தன்மை இல்லாதவாறு இருக்ககூடாது எனவும் பரிந்துரைக் கின்றது. 
ஆனால் நடப்பது என்ன?பொதுவாக முகாம்கள் நடத்தப்படு வது விழிப்புணர்வை நோயாளிகளுக்கு உருவாக்கத்தான். ஆனால் இம்முகாம்களில் கலந்து கொள்ளும் நோயாளி களுக்கு தங்களுக்கு உள்ள நோயின் தாக்கம் குறித்தோ அல்லது அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றியோ விரிவான விபரம் தெரிய வாய்ப்பில்லை. இந்தநிலையை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்ள மருந்து நிறுவனங்கள் ஒரு போதும் தயங்கியதில்லை. 
முகாம்களில் கலந்து கொண்டு பரிசோதனைசெய்து கொள்ளும் பலர் அந்நிறுவனத் தின் மருந்துகளை உட்கொள்ள வேண்டி யவர்களாக மாற்றும் வேலைகளும் நடை பெறுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் எங்கு பார்த்தாலும் ஹெபடைடிஸ் பி எனும்வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்பட்டது…பள்ளிக்கூடங்களில் கூட அம்முகாம்கள் நடந்தது.
ஏன்? 
புதிதாக விற்பனைக்கு வரும் ஒருதடுப்பூசியை பிரபலமாக்க, பயன்பாட்டுக் குக் கொண்டு வர அதை இந்தியாவில் அறிமுகப்படுத்திய கம்பெனி செய்த வேலை ஒரு தேவையற்ற பயத்தை உரு வாக்கியது.அதாவது அந்த ஊசி போட்டுக் கொள்ளாவிட்டால் உயிருக்கு ஆபத்து... ஏற்படும் எனும் சூழ்ச்சி வலையில் பல ரும் சிக்கினார்கள்.
…மருந்து விற்பனை அமோகமாக நடந்தது. ஆனால் இன்று உலக சுகாதார நிறுவனம் அனைத்து குழந் தைகளுக்கும் அவசியம் போட வேண்டிய தடுப்பூசி பட்டியலில் அதை இணைத்து விட்டது…கட்டாயமாக்கி விட்டது. எவ்வளவு வியாபார சாமர்த்தியம்….தொடர் சுரண்டல்…. மருந்து கட்டாயமாக்க படுவதற்கு முன்னரே மருந்து நிறுவனங்கள் ஒரு பயத்தை போலியாக உருவாக்கி அதன் மூலம் பெரும் லாபம் ஈட்டியுள் ளது. 
சட்டங்களை தங்களுக்கு ஏற்றாற்போல் வளைக்கும் வல்லமை மருந்து நிறு வனங்களுக்கு இருக்கிறது என்பதற்கான சான்று இது.

இந்தியாவில் வணிகத்தில் ஈடுபடும் அனைத்து கம்பெனிகளும் தங்களுக்குள் விற்பனையை முறைபடுத்திக் கொள்ள ஒரு நெறி முறை அமலாக்க சட்டத்தை உருவாக்கினர். 
தங்களுக்குள் போட்டி இருந்தாலும், மருத்துவத்தின் புனிதம் காத்திட, மக்களுக்கு உண்மையான சேவை செய்திட, என பல விவரங்களை அடுக்கிக் கொண்டு போகும் அந்த பெரிய முன்வரைவு திட்டம் காகிதத்தில் தான் இருக்கிறது. நடைமுறையில் இல்லவே இல்லை.
 தாங்கள் உருவாக்கிய சட்டத்தையே அவர்கள் பின்பற்றுவதில்லை. மாறாக சட்டத்தின் குறைபாடுகளை தங்களுக்குசாதகமாக பயன்படுத்திக் கொண்டுமுறையற்ற வணிகத்தில் ஈடுபடுகின் றனர். இதில் எந்த நிறுவனமும் மற்ற நிறு வனங்களை குற்றம் சாட்டுவதில்லை. காரணம் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்….அனைத்து நிறுவனங் களும் ஏதோ ஒரு வகையில் தங்களுடைய வியாபாரத்தை அதிகமாக்க, குறுக்கு வழியினை பின்பற்றுகின்றனர். 
இந்த அசிங்கங்களை துவக்க காலத்திலிருந்தே பொது வெளியில், ஊடகங்களில் அம்பலப் படுத்தி வரும் வேலையை அகில இந்திய மருத்துவ பிரதிநிதிகள் சம்மேளனம் செய்து வருகிறது. இவர்கள் எடுக்கும் சிறு முயற்சிகள் கூட தேசிய அளவில் பெரும் அங்கீகாரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்க வேண்டிய அரசு நிர்வாகம் மருந்து துறையை பொறுத்த வரையில் ஒருஅசையாத கல்லாக மட்டுமே இருக்கிறது. 
மக்கள் எப்படி போனால் என்ன? 
கார்ப்பரேட்டுகளால் நமக்குஎன்ன லாபம், வரவு என கணக்கு பார்க்கும்மோடி அரசு எதையாவது செய்யுமா? 
கண்டிப்பாக செய்யாது.
மருந்து விற்பனை என்பது மனிதர் களின் உயிரோடு தொடர்புடையது. 
அதில் வணிக நோக்கம் மட்டும் இருக்கக் கூடாது. ஆனால் இன்று அது மட்டும்தான் மேலோங்கி இருக்கிறது…மற்றவை எதுவும் இல்லை. லாபம், லாபம், கொள்ளை லாபம்என்பது மட்டுமே குறிக்கோளாக இருப்பதால், நெறிமுறைகள் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. சமதளப்போட்டி என்று இல்லாமல், அசமத்துவ போட்டிநிலவுகிறது. இதில் யாரும் விதிவிலக் கல்ல
…. அவரவர் தகுதிக்கேற்ப முறையற்ற வணிகத்தில் ஈடுபடுகின்றனர். தங்களின்நோய் குணமாகிட மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் நோயாளிகளை லாபத்திற்காக கொள்ளையடிக்க திட்டமிடும் மருந்து நிறுவனங்களின் லாப வெறியை கட்டுப்படுத்திட வேண்டாமா? 
மருந்து துறையில் நடைபெற்று வரும் நெறி பிறழ் வணிகத்தை பல முறை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டிய பிறகும்அரசுகள் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என்பது மிகப் பெரிய கேள்வி….நிசப்தம் தான்அரசின் பதில்...

சன்பார்மா மட்டுமல்ல. ஏராளமான பன்னாட்டு நிறுவனங்களும் மருந்து வணிகத்தில் மிகப்பெரிய தவறுகளை காலம்காலமாக செய்து வருகிறது.
இதுபோன்ற முறையற்ற வணிகத்தில் ஈடுபடும்நிறுவனங்களின் பட்டியலை ஆதாரத் துடன் பல ஆண்டுகளாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் யார்மீதும் இதுநாள் வரை ஒரு தண்டனைசட்டம் பாய்ந்ததில்லை. 
எல்லாம் சுத்தமானவர்கள் என அரசே சொல்லாமல்சொல்லுகிறது. 
தனக்கு பரிந்துரைக்கப் படும் மருந்து எதற்கு, அதன் பயன் என்ன, பக்க விளைவுகள் என்ன, பின்விளைவுகள் குறித்த அனைத்து விவரங்களும் நோயாளிகளுக்கு தெரிந்திட வேண்டும். அதே போல் தனக்கு கொடுக்கப்படும் மருந்து எந்த நிறுவனத்தினுடையது, அதன் தரம் பற்றிய முழு விவரம் வேண் டும். 
இவை எல்லாவற்றையும் விட மருந்து விற்பனைக்கான கட்டுப்பாடு சிறிதளவு கூட தளர்த்தப்படாமல், நெறிமுறை களோடு விற்கப்பட வேண்டும். 
இப்படி செய்தால் மட்டுமே மருந்து விற்பனையின் கறைகள் அகற்றப்படும். இல்லையேல் இந்த களங்கம் என்றும் நீடித்து கொண்டே இருக்கும்.
கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் மருந்து துறை வணிகமயமாக மாறியுள்ள நிலையில் களங்கத்தை போக்க அரசை தலையிட வைப்பதே இன்றைய உடனடி தேவை.அப்படி செய்தால் மட்டுமே இந்த துறை பாதுகாக்கப்படும், சேவைத்துறையாக இருக்கும்.
மருந்து விற்பனை என்பது மனிதர்களின் உயிரோடு தொடர்புடையது. 
அதில் வணிக நோக்கம் மட்டும் இருக்கக் கூடாது. 
ஆனால் இன்று அது மட்டும்தான் மேலோங்கி இருக்கிறது…மற்றவை எதுவும் இல்லை. 
லாபம், லாபம், கொள்ளை லாபம் என்பது மட்டுமே குறிக்கோளாக இருப்பதால், நெறிமுறைகள் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன.
                                                                                                                                                                                             என் . சுபாஷ்
=====================================================================================
இன்று,
ஜூன் -06.
  •  தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)
  • சுவீடன் தேசிய தினம்
  • ஒய்.எம்.சி.ஏ., லண்டனில் அமைக்கப்பட்டது(1844)
  • குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு, நியூசவுத்வேல்ஸில் இருந்து பிரிக்கப்பட்டது(1859)
=====================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?