இலவச வை பை தரும் ஆபத்து!

மத்திய அரசு முதல்,மாநில அரசுகள் வரை தற்போது மக்களுக்கு இலவசமாக வை பை கொடுப்பதாகவும்,அதை மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் தருவதாகவு சொல்லுகின்றன.

சில ரெயில் நிலையங்களில் வை பை இணைப்பை கொடுக்கவும் செய்துள்ளனர்.

 தொழில், வர்த்­தக நிறு­வ­னங்­க­ளின் முக்­கிய பொறுப்­பு­க­ளில் இருப்­ப­வர்­கள் அடிக்­கடி வெளி­யூர் பிர­யா­ணம் மேற்­கொள்­கின்­ற­னர். இன்­றைய நிலை­யில் அலு­வல் தொடர்­பான எல்லா விஷ­யங்­க­ளுமே கம்ப்­யூட்­டர், இன்­டர்­நெட் உத­வி­யு­ட­னேயே நடக்­கின்­றன. 

இத்­த­கைய சூழ்­நி­லை­யில் முக்­கிய பொறுப்­பு­க­ளில் இருப்­ப­வர்­கள், அலு­வ­ல­கம், வீடு தவிர மற்ற பொது இடங்­க­ளில் இன்­டர்­நெட் இணைப்­புக்கு வைபை  தொடர்பை பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். 

விமான நிலை­யம், தங்­கும் ஹோட்­டல்­கள், ஓய்வு எடுக்­கும் இடங்­கள் போன்ற இடங்­க­ளில் வைபை  இணைப்பு வழி­யாக இன்­டர்­நெட்டை பயன்­ப­டுத்தி அலு­வல்­களை நடத்­து­கின்­ற­னர். 

முக்­கிய தக­வல்­களை மற்ற இடங்­க­ளுக்கு பரி­மா­றிக் கொள்­கின்­ற­னர்.
 பணத்­தை­யும் அனுப்­பு­கின்­ற­னர். 

இவ்­வாறு பொது இடங்­க­ளில் உள்ள வை பை க்­களை பயன்­ப­டுத்­தும் மூத்த நிர்­வா­கி­கள், அவர்­கள் நிறு­வ­னங்­கள் சார்ந்த முக்­கிய தக­வல்­க­ளை­யும், தனிப்­பட்ட, குடும்ப விஷ­யங்­க­ளை­யும், இணை­ய­வெளி திரு­டர்­க­ளி­டம் பறி­கொ­டுக்­கின்­ற­னர் என்று காஸ்­பர்ஸ்கை நிறு­வ­னம் எச்­ச­ரித்­துள்­ளது. 

ரஷி­யா­வைச் சேர்ந்த காஸ்­பர்ஸ்கை நிறு­வ­னம் கம்ப்­யூட்­டர் தொடர்­பான ஆன்டி வைரஸ் சாப்ட்­வேர், இதர பாது­காப்பு சாப்ட்­வேரை வடி­வ­மைத்து விற்­பனை செய்து வரு­கி­றது. 
சர்­வ­தேச அள­வில் இது போன்ற பாது­காப்பு சாப்ட்­வேர்­களை வடி­வ­மைத்து விற்­பனை செய்­யும் நிறு­வ­னங்­க­ளில் முன்­ன­ணி­யில் உள்ள நிறு­வ­னம் காஸ்­பர்ஸ்கை. 
சமீ­பத்­தில் காஸ்­பர்ஸ்கை நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்­கை­யில், வர்த்­த­கம் தொடர்­பாக அடிக்­கடி பிர­யா­ணம் மேற்­கொள்­ப­வர்­கள், குறிப்­பாக மூத்த நிர்­வா­கி­கள், பொது இடங்­க­ளில் உள்ள வைபை  இணைப்­பு­களை பயன்­ப­டுத்­து­வ­தால், அலு­வல் தொடர்­பான பல முக்­கி­ய­மான, ரக­சிய தக­வல்­க­ளை­யும், அவர்­க­ளின் சொந்த தக­வல்­க­ளை­யும் சைபர் கிரி­மி­னல்­க­ளி­டம் பறி­கொ­டுக்­கின்­ற­னர் என்று கூறி­யுள்­ளது.

இவ்­வாறு ஐந்­தில் ஒரு­வர் இந்த சைபர் கிரி­மி­னல்­கள் வலை­யில் சிக்­கு­கின்­ற­னர். 
இவர்­க­ளில் 31 சத­வி­கி­தத்­தி­னர் மூத்த நிர்­வா­கி­கள். “சைபர் குற்­ற­வா­ளி­கள் பொது இடங்­க­ளில் உள்ள வைபை யை பயன்­ப­டுத்­துவோர்க­ளுக்­கும், அந்த இணைப்­புக்­கும் இடை­யில் நுழைந்து, நீங்­கள் அனுப்­பும் தக­வல்­களை இடை­ம­றித்து கைப்­பற்­று­கின்­ற­னர். 

இது போல் பொது இடங்­க­ளில் உள்ள வைபை யை பயன்­ப­டுத்­தி­ய­தால், இழப்­பிற்கு உள்­ளா­னது பற்றி அடிக்­கடி தக­வல்­கள் வெளி­யா­கின்­றன.

இந்த சைபர் கிரி­மி­னல்­கள் அடிக்­கடி பொது இடங்­க­ளில் உள்ள வைபை  இணைப்பை, அவர்­கள் கைப்­பற்றி திற­மையை வெளிப்­ப­டுத்­து­கின்­ற­னர். 

இன்­டர்­நெட் இணைப்பு, இணை­ய­த­ளங்­களை பயன்­ப­டுத்­தும் போது கடைப்­பி­டிக்க வேண்­டிய பாது­காப்பு அம்­சங்­களை சரி­யாக கடை­பி­டிக்­கா­த­வர்­களே, இந்த சைபர் குற்­ற­வா­ளி­க­ளின் வலை­யில் இல­கு­வாக சிக்­கு­கின்­ற­னர்.  இந்த பொது இடங்­க­ளில் இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டும் வைபை  இணைப்­புக்­கள், தக­வல்­களை என்­கி­ரிப்ட் செய்­வ­தில்லை. 

அதா­வது இந்த தக­வல்­களை மாற்று வடி­வில் மாற்­று­வ­தில்லை. 

இத­னா­லேயே இந்த வைபை  இணைப்பு பெறு­வ­தற்கு பாஸ்­வேர்ட் தேவைப்­ப­டு­வ­தில்லை. 

இதையே வாய்ப்­பாக பயன்­ப­டுத்­திக் கொள்­ளும் சைபர் குற்­ற­வா­ளி­கள், இந்த  இணைப்பு மூல­மாக அனுப்­பப்­ப­டும் கிரெ­டிட் கார்ட், டெபிட் கார்ட், இமெ­யில் போன்ற தக­வல்­களை கைப்­பற்றி, தவ­றாக பயன்­ப­டுத்­திக் கொள்­ளும் வாய்ப்பு உள்­ளது. 

 பொது இடங்­க­ளில் உள்ள வைபை  பயன்­ப­டுத்­தும் போது பாது­காப்­பாக எஸ்­எஸ்­எல் எனப்­ப­டும் செக்­யூர் சாக்­கெட் லேயர் என்­கி­ரிப்ட் [SSL (Secure Socket Layer) encrypted websites] இணை­ய­த­ளங்­களை பயன்­ப­டுத்­து­வது நல்­லது. 

இதை பயன்­ப­டுத்­தும் போது, சைபர் குற்­ற­வா­ளி­கள் உங்­கள் இணைப்­பில் இடை மறித்து தக­வல்­களை திரு­டி­னா­லும், உங்­கள் தக­வல்­கள் என்­கி­ரிப்ட் செய்­யப்­பட்­டுள்­ள­தால், அவர்­க­ளால் இவற்றை தவ­றான வழி­யில் பயன்­ப­டுத்த இய­லாது. 

ஏனெ­னில் சைபர் குற்­ற­வா­ளி­கள் என்­கி­ரிப்ட் செய்­யப்­பட்ட தக­வல்­களை, டிகி­ரிப்­சன் செய்ய விரும்­பு­வ­தில்லை. 

 இதற்கு நீண்­ட­கால அவ­கா­சம் தேவைப்­ப­டும். 

எனவே லேப்­டாப், டேபி­ளேட், ஸ்மார்ட் போன் ஆகி­ய­வை­களை பொது இடங்­க­ளில் உள்ள வைபை  பயன்­ப­டுத்­தும் முன், மேற்­கண்ட பாது­காப்பு அம்­சங்­களை கடைப்­பி­டிப்­பது நல்லது மட்டுமல்ல உங்கள் பணம்,மற்றும் ரகசிய தகவல்களுக்கும் பாதுகாப்பானது.
=====================================================================================
இன்று,
ஜூலை-23.
மச்சு பிச்சு
  • பெருவில்  மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை  ஹிராம் பிங்கம் கண்டுபிடித்தார்(1911)
  • பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு பாரீசில் அமைக்கப்பட்டது(1924)
  • சோவியத் யூனியனில் உலகின் முதலாவது குழந்தைகளுக்கான ரயில்வே திறக்கப்பட்டது(1935)
  • இந்திய அரசு தனது புதிய பொருளாதார கொள்கையை அறிவித்தது(1991)
=====================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?