'ஆஸ்பிரின்' மகிமை !

'ஆஸ்பிரின்' - மாத்திரை வெறும் தலைவலிக்கான மாத்திரை என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டுள்ளோம். ஆனால், இப்போது மருத்துவ உலகில், இந்த 'ஆஸ்பிரின்' உயிர் காக்கும் - மாரடைப்பைத் தடுக்க உதவிடும் முக்கியப் பணி செய்யும் மாத்திரை என்றே அங்கீகரிக்கப்பட்டு, இதய நோய், நிபுணர்களான மருத்துவர்களால் பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது.
இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தோர் அல்லது Stent   எனப்படும் ரத்தக் குழாயில் அடைப்பை தடுக்கும் தடுப்பான் உள்ளே பொருத்தப்பட்ட பிறகும் மருத்துவர்கள் இதனை நாள்தோறும் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள் என்றே கூறுவது.

75mg அளவுள்ள மாத்திரை - அமெரிக்காவில்Bayer போன்ற மருந்து தயாரிப்பாளர்கள் 'குழந்தைகளுக்கான ஆஸ்பிரின்' 'பேபி ஆஸ்பிரின்' என்பவை 81 எம்.ஜி. அளவுக்கு தயார் செய்து, தருகின்றனர்; 75 என்பதற்குப் பதிலாக 81 எடுத்துக் கொள்ளலாம் தவறல்ல என்றே பல மருத்துவர்கள் பரிந்துரைப்பர்.

பொதுவாகவே மூச்சுத் திணறல், நெஞ்சழுத்தம், கனத்தல் இதுபோன்ற இறுக்கம் ஏற்படுகிறதோ என்று நினைக்கையில், முதல் உதவி சிகிச்சை போல உடனடியாக ஒரு  ஆஸ்பிரின் மாத்திரையை விழுங் குதல் நல்லது.

'ஆஸ்பிரின்'பற்றி அண்மையில் 'Men's Health' என்ற ஒரு ஆங்கில மாத ஏட்டில் படித்தேன்.  அதை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டால் பலருக்கும் பயன் அளிக்கும் அல்லவா!
ஆஸ்பிரினின் சக்தி அதிகம் இதன் பயன் பல வகைப்பட்டதாகும்.

ஆஸ்பிரினில் உள்ள கலவைகளில் ஒன்று முக்கியமாக 'சேலிசிலிக் ஆசிட்' (Salicylic acid) ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கும் சக்தியுள்ளது. அதன் எரிச்சலையும் (inflamation) தோல் சிகப்பாகும் (redness) தன்மையையும் குறைக்கிறது என்றார் - அமெரிக்காவைச் சார்ந்த டாக்டர் கவிதா மேரிவாலா, (அமெரிக்க தோல் சிகிச்சை நிபுணர் இவர்).

1. முகப் பரு போக்க: 


முகப்பருவினை இந்த ஆஸ்பிரின் கலவையில் உள்ள ஒரு கூறு, தடுக்கிறது. 'பிட்சா' முகம் போல உள்ளவர்களுக்கு, ஒரு ஆஸ்பிரினை மூன்று தேக்கரண்டி தண்ணீரில் கரைத்து, கலக்கி, (பாலைப் போல வெள்ளையாகும்) படுக்கப் போகும் முன் தடவிக் கொண்டு படுத்தால் முகப் பருக்கள்தானே சுருங்கும் வாய்ப்பு இதன் சக்தி மூலம் வரும்!
கொசுக்கடியால் ஏற்பட்ட முகத்தடிமன்கள், சிவப்பாகியுள்ள சீழ் கட்டிகள் போல உள்ளவைகளுக்கும்கூட இது பயன்படுத்தப்படுமாம். அரிப்பினையும் இது குறைக்க உதவும்.

2. புற்றுநோய் அபாயத்தைத் தடுக்க:

புற்று நோய் செல்கள் கெட்டியான ரத்த அணுக்களில் பரவுவதைத் தடுக்க, அதன் பசைத் தன்மையைக் குறைக்க (by making platelets less sticky) ஆஸ்பிரின் மாத்திரை ரத்தத்தின் உறையும் தன்மையைக் குறைக்கும் அல்லது தடுக்கும் சக்தியுள்ளதால் (ஆஸ்பிரினை ''Blood Thinner' என்றே கூறுவர்) புற்றுநோய் செல்கள் இதயத்தில் உள்ள ரத்தக் குழாய் மூலம் உள்ளே நுழைவதைத்  தடுக்க உதவிடும்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்த உண்மை என்ன தெரியமா?
75mg 'ஆஸ்பிரின்' மாத்திரையை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியுறும் நோயாளி தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு எடுத்துக் கொண்டால் புற்று நோய்மூலம் ஏற்படும் இறப்பு 20 விழுக்காடு குறைகிறது என்பதாகும்.

இதன் மூலம் இறப்பு வாய்ப்பு மேலும் அடுத்த 15 ஆண்டுகள் தள்ளிப் போகச் செய்யக் கூடும் என்பதும் ஆய்வின் முடிவாகும்.

3. திட்டுகளை மிருதுவாக்க:


கையிலும், கால்களிலும் உள்ள கடுமையான சில திட்டு திட்டாக உள்ள பகுதிகளையும் (patches) மிருதுவாக்கிடும் தன்மை ஆஸ்பிரினுக்கு உண்டு.
மூன்று ஆஸ்பிரின் மாத்திரைகளைப் பொடி செய்து, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 2 தேக்கரண்டி தண்ணீருடன் கலந்து குழைத்து 'அத்திட்டுக்களின்மீது தடவி வந்தால்,   அவை மிருதுவாக அப்புறப்படுத் தும் அளவுக்கு வரக் கூடும்).

4. பருக்களைப் போக்க:

ஆஸ்பிரின் மாத்திரையில் உள்ள 'சேலிசைலிக் ஆசிட்' பருக்களை போக்குவ தோடு மயிரில் உள்ள சிக்குகளையும்  (Cure Dandruff) போக்கவல்லது. தோல் காய்ந்த நிலையில் உள்ளதால் தலையின் பின்பகுதி (Scalp) ஷாம்புவுடன் இரண்டு ஆஸ்பிரின் மாத்திரையை கரைத்து முடிமேல் தடவி 30 வினாடிகள் அப்படியே விட்டு விடுங்கள்.  இப்படி வாரத்தில் மூன்று முறை தடவிக் குளியுங்கள், முடிச் சிக்குகள் தானே போகும் என்கிறார் டாக்டர் கவிதா மேரி வாலா என்ற அமெரிக்க தோல் சிகிச்சை டாக்டர்.
5. மன இறுக்கத்தை சோர்வைப் போக்க:

தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆஸ்பிரினை எடுத்துக் கொள்ளும் பழக்கமுடையவர்களை மனச் சோர்வு (Depression) மன இறுக்கம் எளிதில் அணுகுவதில்லை என்பதும் இந்த ஆய்வின் முடிவுகளில் ஒன்றாகும்! அதன் அறிகுறிகள் எளிதில் இத்தகையவர்களைத் தாக்குவதில்லை!
சைக்கோ தெரப்பி, அன்ட் சைக்கோஸ் மாடிக்  Psychotherapy and Psychosmatics  என்ற ஆய்வு இதழில் இதை விளக்கி கட்டுரைகள் வெளி வந்துள்ளன!
'ஒரு நாள் ஒரு ஆஸ்பிரின்' என்ற தலைப்பில் டாக்டர் கெய்த் சவுட்டர் (Dr. Keith Souter) எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் உள்ளெரிச்சலுக்கும் (Inflamation) ஆஸ் பிரினின் தடுப்புப் பற்றி விரிவாக விளக்கப் பட்டுள்ளது.

டென்மார்க் நாட்டில் பெரு நிலையில் உள்ள பலரும் மனச்சோர்வினால் அவதி யுறும் நிலை சர்வ சாதாரணமாய்க் காணப் படுகிறது. இப்படி 'ஆஸ்பிரின்' அவர்கள்  சோர்வைப் போக்கி மகிழ்ச்சியை அவர்தம் முகங்களில் வரவழைக்கிறதாம்! 
                                                                                                                                   -கி.வீரமணி 
                                                                                                                                 திராவிடர் கழகம் 
                                                                                                             வாழ்வியல் கட்டுரை தொகுப்பில் இருந்து.
======================================================================================
இன்று,
ஜூலை-02.
 ரூசோ
  • தாமஸ் சேவரி, முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்(1698)
எழுத்து போராளி ரூசோ, இறந்த தினம்(1778)
  • பிரெஞ்ச் ராணுவத்தினர், பசிபிக் பெருங்கடலில் அணுஆயுத சோதனையை நிகழ்த்தினர்(1966)
  • ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது(2004)
  • =======================================================================================
14கோடி மக்களுக்கும் அதிகமாக  பேசும் மொழிமீது  பத்தாயிரம் பேர் மட்டுமே பேசும்  செத்தமொழி ஆதிக்கம் செலுத்துவதா ? 

கிமு. மூன்றாண்டாம் நூற்றாண்டில் மௌரிய நாட்டை ஆண்ட அசோக மாமன்னர் தன்னுடைய செய்திகளை ,கட்டளைகளை ஒரு வகையான பிராகிருத மொழியில்தான் கடவெட்டுகளில் எழுதியுள்ளார் .. 
அண்மையில் ஆப்கானிஸ்தானில் கண்டு பிடிக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டுகளும் ஆவணங்களும் கூட கிரேக்க மொழியிலும் அராமெய்க் மொழியிலும் தான் எழுதப்பட்டதே தவிர சமசுகிருதத்தில் இல்லை .ஏனனெனில் அது சத்து சமசுகிருதமே இல்லாத காலம் . 
அசோகர் கலிங்கத்தை வென்ற பின் கலிங்க நாட்டு கட்டளைகள் கூட சாசனங்களில் கல்வெட்டுகளில் கிரேக்க மொழியிலிந்தன . இதிலிருந்து தெரிவது சமசுகிருத மொழி அப்போது உருவாக்கப்படவே இல்லை .என்பதே பிராகிருத மொழிதான் அசோகரின் கல்வெட்டுகளில் இடம்பிடித்திருந்தது . 
சம்ஸ்கிருதம் என்றாலே திருத்தப்பட்ட , புதிதுப்பிக்கப்பட்ட என்ற பொருள் படுகிறது (E.B.22 langs p.616).
அதன் தோற்றம் குறித்து ஏகப்பட்ட உண்மையற்ற செய்தி கள் உலா வந்தன. 
உலகில் சம் சமசுகிருத மொழியை அறிமுகப்படுத்தியவர் "மாக்ஸ்முல்லர் என்ற செர்மானியர் ஆவார் . 
ஆரியர் என்ற வார்த்தையை ஆங்கில உலகத்தில் அறிமுகாயப்படுத்தவரும் இவரே .(maxmuller , Biograpies of words and the Home of the Aryans-1888 - p.120 ) 

உலக மொழிகளின் முதல் மொழியாக சொல்லப்பட்ட சமசுகிருத மொழி பேசியவர்களின் எண்ணிக்கை எத்தனை பேர்கள் தெரியுமா ? 

1921ஆம் ஆண்டு இந்தியக் மக்கள் தொகை க்கணக்கெடுப்பின்படி இந்திய துணைக்கண்டத்திலேயே மொத்தம் 356 பேர்கள் தான். 

1951ல் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 362மில்லியன் இந்தியர்களில் வெறும் 555 பேர்கள் மட்டுமே சமசுகிருதம் பேசுபவர்கள். 

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 14000 பேர்களாம் அதுவும் ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டுமே . 
                                                  முனைவர் கவிஞர் இ .முத்தெழிலன் எம்.ஏ..,பி..எச்டி.,எப்.ஜி.சி .ஏ..,டி.லிட் .(யு.எஸ்.ஏ.) 
                                                                              (சேதுசமுத்திரத் திட்டத்தில் வெல்லட்டும் விஞ்ஞானம் ஆசிரியர்)
==========================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?