"கபாலீ"ஸ்வரன்க்கு வரி விலக்கு?

இந்த  கேளிக்கை வரி விலக்கு  கொடுக்கும்  குழு உறுப்பினர்கள் மீது சந்தேகம் வருகிறது.
1.அவர்களுக்கு உண்மையிலேயே தமிழ் தெரியுமா?
குறைந்த பட்சம் தமிழ் பேசும் வீட்டில் பிறந்தவர்களா?
2.அவர்களது மன நிலை சமநிலையில் உள்ளதா?
என்பதுதான்.

முதலில் கேளிக்கை வரி விலக்கே  அதிகமாக ஆங்கிலத்தில் தலைப்பை படங்களுக்கு வைப்பதை தடுக்க ,கையை பிடிக்க படம் எடுத்து துன்பப்படுபவர்கள் கொஞ்சமாவது மீள உண்டாக்கப்பட்டதுதான் என்று இதுவரை எண்ணிக்கொண்டிருந்தது தவறு என்பதை அவர்கள் நிரூபித்துள்ளார்.

கேளிக்கை வரை விலக்குக்கு  முதல் தகுதி அது உதயநிதிஸ்டாலின் எடுக்கும்,எடுத்தப்படமாக இருக்கக்கூடாது.

திமுகவினர் படத்தயாரிப்பிலோ ,வெளியீட்டிலோ எங்கும் சம்பந்தப்பட்டிருக்கக் கூடாது.
அவ்வளவுதான் கேளிக்கை வரை விலக்கு பெற தகுதியை அப்படம் பெற்றிடும்.

படத்தின் பெயர் "ஏக் துஜே கேலியே "என்று இருந்தால்  கூட அது தமிழ்தான்.ஜாஸ் எடுத்திருந்தால் கண்டிப்பாக கேளிக்கை வரி விலக்கு உண்டுதான்.

அதிலும்  அப்படத்துக்கு 10000 என்று கூட டிக்கட் விலை வைக்கலாம்.

ரசிகர்களே தங்கள் வீட்டை அடமானம் வைத்து மனமுவந்து கொடுப்பதால் அக்கட்டணம் தவறில்லை என்று நீதிமன்றமே தீர்ப்பை சொல்லி விட்டது.

இது வருமானத்துக்கு 10% அதிகமா சொத்து சேர்த்தால் தவறில்லை  என்று கணக்கின் மூலம்  87% க்கு விலக்கு கொடுப்பது,வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்தால் அது தவறா என்று கேள்வி எழுப்புவது போல் இந்திய அரசியல் சட்டத்துக்குட்பட்டதே.

'கபாலீஸ்வரன் என்ற சம்ஸ்கிருத சாமி பெயரின் சுருக்கமே கபாலி.

அது சமஸ் பெயர் என்று நான் இதுவரை நம்பிக்கொண்டிருந்தது எவ்வளவு பெரிய தவறு .

அது தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தில்தொல்காப்பியர் ஆசிரமம் அல்லது இல்லம் பக்கம்  'கப்பாலீடா"என்று  சட்டையை கிழித்துக்கொண்டு (அக்காலத்தில் சட்டை உண்டா என்றெல்லாம் கேட்கக் கூடாது.)அல்லது அங்கவஸ்திரத்தை (இதுவும் தமிழ்ப்பெயர்தான்)அழித்துக்கொண்டு திரிந்த ஞானி ஒருவரின் பெயர் என்பது இப்போதுதான் எரிந்து போன ஓலைசுசுவடி மூலம் குழு உறுப்பினர்கள் கண்டறிந்தார்களாம்.

மேலும் 100 கோடிகளுக்கு மேல் கொட்டி எடுத்த படம் ,250 கோடிகளுக்கு மேல் விற்றப்படம்,450 கோடிகளுக்குமேல் மக்கள் சட்டைப்பையில் இருந்து வசூல் செய்த படம் அரசுக்கு ஒரு பைசா கூட வரியாக செலுத்தவில்லை .பலகோடி வருமானம் அத்தனையும் தனியார்ப்பையில் என்பது எவ்வளவு வெட்கக்கேடானது.

அதுவும் 1000 ரூபாய் திரையரங்கு கட்டணம் என்றால் ஒரு டிக்கெட்டுக்கு 300 ரூபாய் என்று அரசுக்கு வரி செலுத்தியிருக்க வேண்டுமே.

முதல் நாள் வசூல் 100 கோடி என்று தம்பட்டம் அடிக்கும் தாணு மூலம் அன்று அரசுக்கு வந்திருக்க வேண்டிய 30 கோடிகள் இந்த வரி விலக்கு மூலம் அரசுக்கு நட்டம்.
அந்தப்பணம் மக்களின் பணம்.

ஒரு ரூபாய் தீப்பெட்டிக்கே 15 பைசா வரி வாங்கி பிழைக்கும்  அரசு ,மதுபானங்களை விற்று தாய்மார்களின் தாலியறுத்து பணம் சம்பாதிக்கும் ஜெயலலிதா அரசு இப்படித்தெரிந்தே கோடிகளை இழந்திருக்கிறதே.

ஜெயலலிதா &சசிகலாவின் ஜாஸ் சினிமா இப்படத்தைவாங்கியதால் மட்டுமே வரி விலக்கு .

எவ்வளவு அசிங்கமான ,கேவலமான பிழைப்பு இந்த அதிமுக அரசுக்கு .

அதை விடக்  கேவலமானவர்கள் தமிழ்ப்படதலைப்புக்கு  கேளிக்கை வரி விலக்கு தரும் குழு வினர்.
மனிதன்,கெத்து ஆகியவை தமிழ்ப்பெயர்கள்தான் என்று தமிழறிஞர்களும் ,தமிழகராதியைக் காட்டி நீதிபதி வரி விலக்கு கொடுக்கக்  கூறிய பின்னரும் கேளிக்கை வரி விலக்கை தராத இவர்கள் உலகறிந்த சமஸ்கிருதப்பெயரான கபாலி{ஸ்வரன்}க்கு அதுவும் பலநூறு கோடிகளை கொட்டிய படத்திற்கு  வரி விலக்கு கொடுத்திருப்பது என்பது மிகக் கீழ்த்தரமான செயல்.

 வைகோவிடம் மட்டும் இதைக் கேட்டிருந்தால் "இவர்கள் உலகின் மிகப் பழையத் தொழில் செய்யப்போகலாமே "என்றிருப்பார்.

பிறகு அதற்கு மன்னிப்பும் கேட்டிருப்பார்.அதற்குள் நாம் போக வேண்டாம்.

நல்ல வேளை  அவரிடம் நாம் கருத்து கேட்க வில்லை.
=========================================================================================
இன்று,
ஆகஸ்டு-03.
  • வெனிசுலா கொடி நாள்
  • காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1976)
  • அமெரிக்காவின் முதல் கப்பலான லெ கிரிஃபோன், ராபர்ட் லசால் என்பவரால் அமைக்கப்பட்டது(1678)

=========================================================================================







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?