இடுகைகள்

செப்டம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒதுக்கீடுகள் பற்றி...

படம்
ஆண் ,பெண் இட ஒதுக்கீடு .பொது,தனி இட ஒதுக்கீடு இரண்டையும் தேர்தல் ஆணையம் கடை பிடிப்பது பிற்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கும். அதுமட்டுமில்லாமல் ஆட்சி நிர்வாகத்தில் முறைகேடுகளையும் அதிகரிக்கும்.நிர்வாகத்திறமையின்றி லஞ்சம்,ஊழல் அதிகார  வகுக்கும். சாதியாலும்,மதத்தாலும் அடிக்கடி மோதல்கள் ஏற்படும் ஒரு நாட்டில் எதற்காக சாதிவாரி ஒதுக்கீடு? எல்லா இனத்தவரும் பரவலாக ஒற்றுமையாக இருக்கும் தொகுதிகளில் தனி,பொது என்று இனவேறுபாடு மேலும் பிளவைதான் உண்டாக்குகிறது. இதை தனது மக்களுக்கு ஒரு அரசே செய்வது வெட்கக்கேடானது.அரசியல்வாதிகளின் குறுகிய வாக்கு சேர்க்கும் குள்ளநரித்தனத்துக்கு அரசும்,தேர்தல் ஆணையமும் துணை போவது மிக தூரம்.  ஓட்டப்பிடாரம் காலம்,காலமாய் தனித்தொகுதி. ஓட்டப்பிடாரம் வட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அத்தொகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகம்தான்.அதை தனித்தொகுதியாக அறிவித்தில் பிரசினை இல்லை.அப்படி அறிவிக்கப்படா விட்டாலும் நாம கடசிகள் அங்கு தாழ்த்தப்பட்டவரைத்தான் தேர்தலில் நிறுத்தும்.காரணம் அவர்களின் வாக்குகள் எண்ணிக்கை. ஆனால் தொகுதி சீர் திருத்தம் செய்கிறேன் என்று அருகில

பூச்சி கடி... ஒவ்வாமை

படம்
எறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம்  கடிபட்டவர்களுக்கு  ஒவ்வாமை  உண்டாக்க வாய்ப்புகள் உள்ளன. , ஆரம்ப நிலையில் கடிபட்ட இடத்தில் தோல் அரிக்கும்.  மற்ற இடங்களுக்கு விஷத்தன்மை பரவும்போது தோல் சிவக்கும், தடிக்கும், லேசாக வலிக்கும். காய்ச்சல் வரும்.  இரண்டாம் நிலையில் அரிப்பும் வீக்கமும் இருக்கும்.  கடிபட்ட இடம் மட்டுமல்லாமல் கண் இமைகள், காது மடல்கள், உதடு போன்ற இடங்களில் நீர் கோர்த்து வீக்கங்கள் ஏற்படும். பொதுவாக இது போன்ற விஷ கொடுக்குள்ள பூச்சி கடித்தவுடன் மற்ற இடங்களுக்கு விஷத்தன்மை பரவாமல் தடுப்பதற்காக உடலிலுள்ள ரத்தக்குழாய்கள் சுருங்குகின்றன.  இதனால் இதயம், மற்றும் மூளை போன்ற உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடுகிறது.  இதனால் சிலருக்கு மயக்கம் வரலாம் . கடுமையான தலைவலி, வாந்தி, தொண்டை வறண்டு அடைக்கும், பூச்சியின் விஷத்தன்மை கடுமையாக இருந்தால் மூச்சு விடுவது சிரமமாக இருக்கும்.  மயக்கம் ஏற்படும்.  இந்நிலையில் சிலரின்  உயிருக்கே ஆபத்து நேரிடலாம்.  இது போன்ற பாதிப்பு தெரிய ஆரம்பித்த ஆரம்ப நிலையில்

ஆண்னென்ன? பெண்னென்ன??

படம்
ஆண் ,பெண் இட ஒதுக்கீடு .பொது,தனி இட ஒதுக்கீடு இரண்டையும் தேர்தல் ஆணையம் கடை பிடிப்பது பிற்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கும். அதுமட்டுமில்லாமல் ஆட்சி நிர்வாகத்தில் முறைகேடுகளையும் அதிகரிக்கும்.நிர்வாகத்திறமையின்றி லஞ்சம்,ஊழல் அதிகார  வகுக்கும். சாதியாலும்,மதத்தாலும் அடிக்கடி மோதல்கள் ஏற்படும் ஒரு நாட்டில் எதற்காக சாதிவாரி ஒதுக்கீடு? எல்லா இனத்தவரும் பரவலாக ஒற்றுமையாக இருக்கும் தொகுதிகளில் தனி,பொது என்று இனவேறுபாடு மேலும் பிளவைதான் உண்டாக்குகிறது. இதை தனது மக்களுக்கு ஒரு அரசே செய்வது வெட்கக்கேடானது.அரசியல்வாதிகளின் குறுகிய வாக்கு சேர்க்கும் குள்ளநரித்தனத்துக்கு அரசும்,தேர்தல் ஆணையமும் துணை போவது மிக தூரம்.  ஓட்டப்பிடாரம் காலம்,காலமாய் தனித்தொகுதி. ஓட்டப்பிடாரம் வட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அத்தொகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகம்தான்.அதை தனித்தொகுதியாக அறிவித்தில் பிரசினை இல்லை.அப்படி அறிவிக்கப்படா விட்டாலும் நாம கடசிகள் அங்கு தாழ்த்தப்பட்டவரைத்தான் தேர்தலில் நிறுத்தும்.காரணம் அவர்களின் வாக்குகள் எண்ணிக்கை. ஆனால் தொகுதி சீர் திருத்தம் செய்கிறேன் என்

அம்மாவின் ஆணைக்கிணங்க....

படம்
"அம்மாவின் ஆணைக்கிணங்க "என்ற வார்த்தை மட்டுமின்றி உள்ளாடசி தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இப்போதைக்கு தேர்தல் நடப்பது போல் தெரியவில்லை என்று ஒரு மாயை உருவாக்கி தமிழகம் முழுக்க நடக்க விட்டு விட்டு அதிமுக மட்டும் வட்டம்,ஊராட்சி,ஒன்றியம் என்று அனைத்து உள்ளாட்சி இடங்களுக்கும் ஆட்களை தேர்வு செய்து முடித்தவுடன் அதுவரை காத்திருந்த மாநில தேர்தல் ஆணையம் "நாளைமுதல் வேட்பு மனுத்தாக்கல் இப்போது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமுல்" என்கிறது. நாம் நம்பித்தான் ஆகவேண்டும் தேர்தல் ஆணையம் சுயாட்சி அமைப்பு என்று. ஆனால் மாநில தேர்தல் ஆணையம் முன்பிருந்தே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருந்தாலும் அது இல்லை மறைவு காய் தான். ஆனால் இரட்டை இலை வந்த பின்னர் அந்த இலை மறைவில்தான் ஆணையமே.அக் காயின் மேல் இருப்பதே இரட்டை இலைதான். ஒரு முதல்வர் உடல்நல சிகிசைக்காக மருத்துவமனையில் இருக்கையில் இப்படி அவசர தேர்தல் அறிவிப்பு இதுவரை எங்காவது வெளியாகி  இருக்கலாம். ஆனால் ஜெயலலிதா ஆடசியில் ..? ஒரு கழிப்பறை திறப்பு முதல் செம்பரம்பாக்கம் ஏரி திறப்புவரை அவர் நல்ல உடல் நிலையில் ஓய்வில் இருந்தாலும்

அம்மாவின் ஆணைக்கிணங்க உள்ளாட்சித் தேர்தல்

படம்
இந்த தேர்தலில் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களில் ஆண்கள் 2 கோடியே 88 லட்சம் பேர். பெண் கள் 2 கோடியே 92 லட்சம் பேர்.  இதர வாக்காளர்கள் 4,584 பேர். உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 91,098 வாக்குச் சாவடிகளில் நடைபெறவுள்ளது. இதில் 62,337 வாக்குச்சாவடிகள் ஊரகப்பகுதியிலும், 28,761 வாக்குச் சாவடிகள் நகர்ப்புறங்களிலும் அமைக்கப்படும். சென்னை மாநக ராட்சியில் மட்டும் 5,531 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.  கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.  கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வெள்ளை நிறத்திலும், ஊராட்சித் தலைவருக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்

தமிழகத்திற்கான காவிரி நீரை பெற.....

படம்
கடந்த பதினைந்து நாட்களாக கர்நாடகாவில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இவ்வளவு நடந்த பிறகும் பிரதமரோ, இந்தியாவின் உட்சப்பட்ச அதிகார அமைப்பான உச்சநீதி மன்றமோ இப்பிரச்சினையில் தலையிடவில்லை.  கர்நாடக முதல்வர் எட்டு முறை கடிதம் எழுதியும் மோடியிடமிருந்து பதில் இல்லை.  நேரில் சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. வன்முறைக்கு யார் காரணம்? காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு தான் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் துவங்கின. தமிழர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் என்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன.  இந்த வன்முறை தொழில்முறை கிரிமினல்களுக்கே உரிய முறையில் தெளிவாக திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. கன்னட இனவெறியின் பெயரால் இதை பின் நின்று தூண்டிவிட்டு இயக்கியது பா.ஜ.கவும் அதன் குரங்குப்படைகளான ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறி கும்பலும் தான். வரவிருக்கின்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்துவதற்காக காவிரி பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு கன்னட இனவெறியை தூண்டிவிட்