என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு...???

வைகோ என்னாச்சி வைகோ...??
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு
அனைத்து கட்சி கூட்டம் பார்த்து அலறுறீங்க
அடி வயிற்றில் கை வைத்து பதறுறீங்க
விவசாயிக்காக கூட்டம் கூட்டுவது தப்பா வைகோ
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு......???

பச்சை தலைப்பாகையும் கருப்பு தூண்டுமாய் அலைந்தீர்கள்
பருப்பு வேகாமல் பாதியிலேயே கழட்டினீர்கள்
வல்வெட்டித்துரைப்பற்றி பேசினீர்கள் அங்கே
வாழாவெட்டியாய் பலரை ஆக்கினீர்கள்
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு.....??
பிரபாகரனை பற்றி பேசினீர்கள்
பரிதாபமாக அவரை மாற்றினீர்கள்
கூடங்குளம் பற்றி கொந்தளித்தீர்கள்
கூட நிற்காமலேயே வந்துவிட்டீர்கள்
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு....??
மோடி கூட நின்னு ஜோரா முழங்கினீர்கள்
மோசம் போயி விட்டதாக புலம்புனீர்கள்
மோஷன் போன சிறுவனைப்போல கதறுறீங்க
வேஷம் போட்ட கோமாளியாய் பதறுறீங்க
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு....??
விஜயகாந்தை முதலமைச்சரான அறிவிச்சீங்க
இருக்கும்வரை ஜெயாதான் முதல்வர் என்று கூவுறீங்க
எதிர்க்கட்சி தலைவரா இருந்தவரை
எதிர்காலம் இல்லாமல் ஆக்கிடீங்க
பிரேமலதா பின்னாலே நின்று நீங்க
பிணம்தின்னி கழுகாக மாறுனீங்க
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு....??
வாசனையும் கூட்டிவந்து சுத்துனீங்க
வாசமில்லா மலராக ஆக்கினீங்க
மோசம் போன வாசனுமே வந்துட்டாரு
வேஷம் போட்ட நீங்க மட்டும் நிக்கிறீங்க
கோசம் போட ஆளில்லாம சொக்குறீங்க
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு......??
சேர்ந்தவங்க அனைவரையும் முடிச்சிடீங்க
செல்லாக்காசா நீங்க இப்ப ஆயிடீங்க
காலம் போன காலத்துல வேஷம் வேண்டாம்
கலைஞரின் கரத்தை நீங்க உதர வேண்டாம்
மன நல கூட்டணியும் தேறாது
மன உளைச்சல் எந்நாளும் ஆகாது
என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு...???
                                                                                                             

நன்றி
: கவிஞர் .ராஜாத்தி சல்மா.......


மூலநோய்க்குத் தடை

நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் 'மூலநோய்' (Piles) முக்கியமானது. 
இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்கத் தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், ஆசனவாயில் வலி, ரத்தப்போக்கு, ரத்தசோகை எனப் பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்.


மூலநோய் உள்ளவர்கள் மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மலம் கழிப்பதைத் தள்ளிப்போடக் கூடாது. மலம் கழிப்பதற்கு முக்கவும் அவசரப்படவும் கூடாது.
அடிக்கடி அசைவ உணவு வகைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 
காரம் அதிகமான உணவு ஆகாது. மசாலா நிறைந்த, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும்.

பச்சைக் காய்கறிகள், பயறு வகைகள், பொட்டுக்கடலை, அவரைக்காய், கொத்தவரங்க்காய், கீரைகள், முழு தானியங்கள், வாழைத்தண்டு போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம். 
தினமும் இரண்டு பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். காபி. தேநீர் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு, பழச்சாறுகளை அருந்த வேண்டும். தினமும் போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதையும், நிற்பதையும் தவிர்க்க வேண்டும். உடற்பருமன் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 
ஏற்கெனவே, உடல் பருமனாக உள்ளவர்கள், உடல் எடையைக் குறைக்க வேண்டும். வயிற்றில் தோன்றும் கட்டிகள், புற்றுநோய் போன்றவற்றுக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுவிட வேண்டும்.

புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடாது. 
இடுப்புக்குழித் தசைகளுக்குப் பயிற்சி தரலாம். இயலாதவர்கள் இதற்கென்றே உள்ள யோகாசனங்களைச் செய்யலாம். 
இவை எல்லாமே மூலநோய்க்குத் தடை போடும்.
=======================================================================================
ன்று,
அக்டோபர்-27. 



  • பென்சல்வேனியாவின் ஃபிலடல்ஃபியா நகரம் அமைக்கப்பட்டது(1682)
  • காங்கோ ஜனநாயக குடியரசு, சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1971)
  • நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது(1961)
ரொம்ப காலமா தனி கொடி தனி ராஜாங்க என்று ஆடசி  செய்து கொண்டிருந்த பகுதிதான் .ஜம்மு காஷ்மீர்..அதுனாலே இந்தியா விடுதலை அடைந்த பிறகு இந்தியா கூடவும் சேர மாட்டேன் பாகிஸ்தான் சேராமல்
தனி நாடாக செயல்படுவோம் என ஜம்மு காஷ்மீர் பகுதியை ஆண்டுவந்த ராஜ்புட் ராஜா ஹரிசிங் கூறினார்....
அப்போது அக்டோபர் 2 ஆம் நாள் இந்தியாவோடு இணையவேண்டுமென ஷேக் அப்துல்லா குரலெழுப்பினார்...தனித் திருந்தால் ரஷ்ய..சீன நாடுகளுக்கு அடிமைப்பட நேரிடுமென சந்த் மகாஜன் ராஜாவை எச்சரிச்சார்...அப்போது கபாய்லி மலைவாழ் பகுதியினரின் போரெடுப்பு துவங்கியது...
காஷ்மீரை காக்க ராஜா ஹரிசிங் ஜவஹர்லால் நேருவை வேண்டிக்கொண்டார்...
அப்போது இந்திய படை காஷ்மீர் செல்லும்போது உருவான ஒப்பந்தப்படி ஜம்மு காஷ்மீர் இந்தியாவோடு ஒரு பகுதியாக இணைந்தது... 1947-ம் ஆண்டு இதே நாள் அமர் மாளிகையில், அன்றைய ஆளுனர் மவுன்ட்பேட்டன், ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள, மகாராஜா ஹரி சிங் காலத்தில் எழுத்துப் பூர்வமாக இருவரும் ஒரு மனதாக ஒப்புக்கொண்டனர். அப்போது நேரு பிரதமராக இருந்தார்.
இந்த இணக்கத்திற்கான தினத்தினை (accession day) ஜம்மு காஷ்மீர் மக்கள் கோலாகலமாக கொண்டாடுவார் களாம். இதில் இருந்தே அவர்கள் இந்தியாவுடன் இணைந்திருப்பதை எவ்வளவு விரும்புகின்றனர் என்று தெரிகின்றது.தலைமைச் செயலகத்தில் மட்டுமின்றி, ஒவ்வொரு வீட்டிலும், கடைகளிலும் இந்தியக் கொடியை ஏற்றி மகிழ்வர். வருடம் தவறாமல் இந்த தினத்தை கொண்டாடுவதால் இந்தியாவுடன் பிரிக்கமுடியாத உறவை வளர்த்து வருகின்றது ஜம்மு காஷ்மீர்.
ஆந்தை ரிப்போர்ட்டர் இன் படம்.=======================================================================================






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?