கனியிருக்க காயை பறிப்பது ஏன்?



மோடியின் கறுப்புப் பணத்துக்கு எதிரான அதிரடி நடவடிக்கைக்கு எதிராக அல்ல ,நடைமுறைப் படுத்தலுக்கும் ,அதனால் மக்கள் அன்றாடம் சந்திக்கும் அவலங்களுக்கு எதிராகவும்,மோடியின் செயல் கறுப்புப் பணத்தை ஒழிப்பதுக்கு பதிலாக கறுப்புப் பண ஆர்வலர்களுக்கு ஆதரவாக மட்டுமே உள்ளதை சுட்டிக்காட்டியும் எழுதி,எழுதி கைகள்தான் வலிக்கிறது.ஆட்ச்சியாளர்கள்,மோடி அறிவில் உரைத்ததாக தெரியவில்லை.
அதற்கு காரணம் அவர்களின் உள்  நோக்கமே  பணமுதலைகளுக்கு ஆதரவான செயல்பாடுகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதாக இருக்கலாம்.
இல்லாவிட்டால் 500,1000 தடை செய்து விட்டு பாத்துக்க இலகுவாக 2000தாள்களை மட்டும் அச்சடிப்பார்களா?
கனியிருக்க காயை பறிப்பது ஏன்?
இப்போது மோடிக்கு ஆதரவாக சில அறிவு முதிர்ந்த பொருளாதார நிபுணர்கள்,சமூக ஆர்வலர்கள் சிலர் காலத்தில் குதித்து வரிசைகட்டி களமாடுகிறார்கள்.
ஆனால் அவர்கள் எழுப்பும் கேள்விகள் அவர்கள் வீட்டு குழந்தைகளே பதில் சொல்லி கிண்டலடிக்கும் அளவில் சொத்தையாகவே எழுகிறது.
ஜெயமோகன்,மாலன் இன்னும் பிறர்.இவர்களை இணைப்பது இந்துத்துவா,மற்றும் சின்ன  நூலிழை மட்டுமே.
மோடியின் இந்த திடீர்  சரிவர திட்டமிடல் இல்லா அதிரடி நடவடிக்கையால் 12 (இப்போது 47)பேர்கள் உயிரிழப்பு என்றால் சர்வகடசி சென்ற பிரமுகரும்,நகைசுவையாளருமான பொருளாதார மேதை எஸ்.வி.சேகர் "நாட்டுக்காக இதை குட செய்யக் கூடாதா .120 கோடி மக்களில் 12 பேர்கள் மட்டும் உயிரிழந்தது பெரிய விஷயமா?"
என்கிறார்.
ஆனால் மோடியின் இந்த கருப்புப்பண ஒழிப்பில் இதுவரை ஒரு பணக்காரன் இறந்திருக்கிறானா, என்றால் இல்லையே.
மோடியின் நடவடிக்கையில் சின்ன ஐயங்கள் :
500,1000 பணம் செல்லாது என்றால் அதை ஒழித்து விட்டு புதிய 500,1000 தாள்கள் தானே அச்சிட்டு புழக்கத்துக்கு அனுப்ப வேண்டும்?
எதற்காக சம்பந்தமே இல்லாத இதுவரை புழக்கத்தில் இல்லா 2000 தாள்களை அச்சிட்டு அனுப்ப வேண்டும். சமஸ்கிருதத் திணிப்பு வேறு.

ஆறு மாத திட்டமிடல் என்றால் புதிய பணத்தாள்கள் அச்சிட்டு தயாராக இருந்திருக்க  வேண்டாமா?
ஒரு நடவடிக்கையும் இல்லாமல் திடீரென தொலைக்காட்சியில் தோன்றி தெலுங்கு அரசியல் பட பாணியில் ஒரு பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர்  சொல்லுவது சரியான முறையா?

500,1000 ஒழித்தால் கறுப்புப்பணம் ஒழிந்து விடுமா?
அப்படியென்றால் 1949,1954 களில் பெரிய அளவு பணத்தாட்கள் ஒழிப்பு நடந்ததே அதன் பின் எப்படி கறுப்புப்பணம் வந்தது?
நாட்டில் உள்ளவர்கள் எல்லாம் அஞ்சுக்கும்,பத்துக்கும் பணத்தை மாற்ற முடியாமல் அல்லாடுகையில் விஜய் மல்லையா சொத்துக்களை வங்கிகள் கைப்பற்றாமல் விஜய் மல்லையா கடன்களையே தள்ளுபடி அளவில் வராக்கடன் என்று அறிவிப்பது ஏன்?

பாஜக கடசியினர் சிலரே இதை பகிரங்கமாக எதிர்த்திருக்கிறார்கள்.எந்த கேள்வி என்றாலும் பதிலளிக்கிறேன் என்ற பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் ஒடி ஒளிர்வது ஏன்?
இந்த கேள்விகளுக்கு மட்டும் மோடி ஆதரவுப்படையினர் மோடியிடம் பதிலை வாங்கித்தரட்டும்.

கறுப்புப்பணம் ஒழிப்பை முதலில் தனது நண்பர்கள் வட்டத்தில் இருந்து துவக்கட்டும்.அவரை சுற்றி இருப்பவர்கள் பகாசுர தொழிலதிபர்கள் அம்பானி,அதானி,லலித் மோடி,விஜய் மல்லையா தானே.
அவர்கள் வீடுகளில் வருமானவரி சோதனையை நடத்துங்கள்.
கள்ளப்பணம் பாகிஸ்தானில் இருந்து அச்சிட்டு வருகிறது என்றால் எல்லையோர படையினர் கண்காணிப்பில் ஓட்டை என்றுதானே அர்த்தம்.
ரா,சிபிஐ, என்று உள்ள உளவுப்படை சரிவர இயங்கவில்லை என்றுதானே அர்த்தம்.அந்த ஓட்டைகளை சரி செய்தாலே நிலைமை சரியாகி விடும்.
மோடி எதற்கும் தலையாட்டி ஆதரிக்கும் அமெரிக்காவில் இந்த கள்ளநோட்டு கட்டுப்பாட்டில் இருக்கிறதே அது மோடிக்கு தெரியா?அமெரிக்க வழி நடக்கும் மோடி இதை பின்பற்றலாமே.
அதற்கு இந்த இந்துத்வா அறிவு மிக்கவர்கள் படை ஆலோசனைகள் சொல்லலாமே?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Don Ashok
முகநூலில்
காலையில் அருமையான காணொளி ஒன்றை பார்த்தேன். மோடி காரில் இருந்து இறங்கி வருகிறார். அவருக்கு இடது பக்கம் காமிராக்கள் இருக்கின்றன. அமைச்சர்களும், மற்றவர்களும் மோடிக்கு பூங்கொத்து கொடுக்கிறார்கள். அதை மோடிக்கு இடதுபக்கமாக நின்றபடியே மோடியின் பாதுகாவலர் வாங்கி வைக்கிறார். மோடி திடீரெனத் திரும்பி அந்த பாதுகாவலரை பார்த்து திட்டுகிறார். காமிராவை மறைக்காதே என கத்துகிறார். அந்த பாதுகாவலர் பதறி அடித்து நான்கடி தள்ளி நிற்கிறார்.
பாதுகாவலர்கள் பெயர்கள் வரலாற்றில் பதியப்படுவதில்லை. ஆனால் பிரதமர்களும், ஜனாதிபதிகளும் சுடப்படும் போதெல்லாம் குண்டுகளை மார்பில் வாங்கிக் கொள்கின்றவர்கள் அவர்கள். வெடிகுண்டு வெடித்தால் கருகிச் சாகின்றவர்கள். In the line of fireயில் வேலை பார்க்கின்றவர்கள். பிரதமரை நோக்கி வரும் துப்பாக்கி குண்டுகள் தங்களை துளைத்தாலும் பரவாயில்லை பிரதமர் மீது படக்கூடாது என்ற பொறுப்புணர்ச்சியில் பிரதமரைச் சுற்றி நெருக்கமாக நின்றே எப்போதும் கூட்டிப்போவார்கள். அப்படியான ஒரு பாதுகாவலரை போயும் போயும் காமிராவை மறைத்ததற்காக மோடி திட்டுகிறார். இந்த உலகம் எத்தனையோ சர்வாதிகாரிகளைக் கண்டிருக்கிறது. மோசமான தலைவர்களைக் கண்டிருக்கிறது. ஆனால் இவ்வளவு மோசமான ஒரு ஃபாசிச, தன்முனைப்பான, நார்சிச, சாடிசத் தலைவரை கண்டிருக்குமா என்றால் கண்டிப்பாக இல்லை.
ஆனால் பாதுகாவலரை திட்டும்போது, "நம்மை யார் கொல்லப் போகிறார்கள்!!" என மோடி நினைத்திருக்கலாம். அதுவும் உண்மைதான். ஏதாவது பெரிய புரட்சி செய்தாலோ, அல்லது பெரிய ஆளையோ, இயக்கத்தையோ எதிர்த்து ஏதாவது செய்தாலோதானே கொல்லப்படும் சாத்தியம் உண்டு. மோடி கை வைப்பதெல்லாம் சாமானிய மக்களின் தலையில் தானே!!
ஆனால் நினைவில் கொள்ளுங்கள் மோடி. தெய்வம் மட்டுமல்ல. மக்களின் சாபமும் நின்றுதான் கொல்லும். இந்த பாதுகாவலரின் சாபம் உட்பட!!
====================================================================================
ன்று,
நவம்பர்-20.
  • யுனிசெஃப் குழந்தைகள் தினம்
  • வியட்நாம் ஆசிரியர் தினம்
  • உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது(1917)
  • ஜெர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க் பெயர்  மாற்றப்பட்டது(1923)
  • மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது(1985)
====================================================================================

1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.
3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.
4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.
5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.
6. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.
7. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
8. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.
9. அடைக்க அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.
10. இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.
11. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.
12. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.
13. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.
14. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.
15. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.
16. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.
17. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.
18. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.
19. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.
20. ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.
21. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.
22. மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.
23. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.
24. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.
25. தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.
26. மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.
27. பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.
28. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.
29. நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.
30. குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.
31. நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
32. தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.
33. எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
34. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.
35. அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.
36. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
37. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.
38. வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.
39. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
40. அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.
41. இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.
42. பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி - தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக🖥 ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
43. மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
44. எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.
45. ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.
46. பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.
47. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
48. காய்கறிகள்🖥 எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.
49. மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.
50. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?