ஹீமோகுளோபின் அதிகரிக்க...,,

உடலில் அதிகமான அசதி, எந்த செயலை செய்ய வேண்டுமானலும், பிறகு செய்து கொள்ளலாம் அப்பறம் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணம் தோன்றுவது, எதிலும் நாட்டமின்மை சாப்பிடவும் பிடிக்கலை என்று தள்ளப்போவது எல்லாமே இரத்தச் சோகை என்று அழைக்கப்படும்.
இவ்வளவு சத்துக்கள் எந்தெந்த சத்துக்கள் தேவையோ அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிலிருந்து வெளியேற்றி விடுகின்றது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை சத்துக்களையும் உடல் ஏற்றுக் கொள்வதில்லை.
மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது. ஆண்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின், 14-18 கிராம் அளவிலும், பெண்களுக்கு, 12-16 கிராம் அளவிலும் இருக்க வேண்டும்.
8 கிராமுக்கு கீழே குறையும்போது, ரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு, சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.
ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவுக்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது, ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது, நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்சிஜனை, ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது.
பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை, கார்பன்டை ஆக்ஸைடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி, உடலுக்கு சக்தியூட்டுகிறது.
நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை, ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவற்றை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
ஹீமோகுளோபின் அதிகரிக்க மருத்துவம்…
ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு, எளிய வழி இருக்கிறது.
நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி, ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை, 6:00 மணிக்கு போட்டு, இரவு முழுவதும் ஊற விட வேண்டும்.
காலையில், 6:00 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
மதியம், 12:00 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.
மாலை, 6:00 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்று விட்டு, மீதியுள்ள நீரை குடியுங்கள்.
இதே மாதிரி, தினசரி ஒரு திராட்சை வீதம், ஒரு வேளைக்கு அதிகப்படுத்தி, ஒன்பது நாட்கள் வரை சாப்பிட வேண்டும்.
பின், ரத்தத்தை பரிசோதித்தால் மாற்றம் இருப்பதை நீங்களே அறிவீர்கள்.
======================================================================================
ன்று,
டிசம்பர்-27.
  • வடகொரியா அரசியலமைப்பு தினம்
  • பேர்சியா, ஈரான் என்ற பெயரை பெற்றது(1934)
  • உலக வங்கி உருவாக்கப்பட்டது(1945)
  • தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது(1956)
  • ஸ்பெயின் ஜனநாயக நாடானது(1978)

=======================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?