படங்களில் மட்டுமே புன்னகைப்பார்

பொய்யாக கண்ணீர் கதை சொல்ல மனதுவரவில்லை.
காரணம் மனசாட்சி.
காலமானவர்களின் நல்லவற்றை மட்டுமே சொல்ல வேண்டும் என்பதும்,
சொல்வதும் காலகாலமாக வந்த ,வரும் பொய்மையான மரபு.
சக மனித மரணம் தரும் வருத்தம் மட்டுமே.
ஆகா.ஓகோ என்று கூற .ஒன்றும் இல்லை.
அப்படி புகழும் அளவுக்கு நான் பிரமுகனும் அல்ல.
2000க்கு  வங்கி முன் காத்திருப்பவர்களில் ஒருவன்.
சாதா தமிழக குடிமகன்.
முதல்வராக இருக்கையில் போட்ட கையெழுத்தினால்
 பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோரில் நானும் ஒரு துளி.
அவரால் வாழ்க்கையே ஆனது கேள்விக்குறி.
இருந்து போன எதிர்காலத்தை சகிக்கமுடியாமல்,
எதிர் கொள்ள பயந்து என் சகாக்கள் வாழ்க்கையை
செயற்கையாக முடித்துக்கொண்டதில் சிந்திய கண்ணீர்
கோபம்,இயலாமையால்  எரிந்து சாம்பலாய் போன
மனதில் இருந்து  வர மறுக்கிறது.
உணர்ந்து போட்ட கையெழுத்துக்களில்
 பலர் வேலையை,வாழ்க்கையை பறித்த
கை உணரவே இல்லாமல் பிறர் மூலம்
கைநாட்டிட்டது காலத்தின் கட்டாயமா?

இவைகளே மனதில் இருந்து வரும்
 இரங்கல் அறிக்கையாக இருக்கிறது.
பொய்மை சொல்ல நினைத்தும்
இயலாமை  மட்டுமே வருகிறது.
நம்முடன் வாழ்ந்து,நம்மை ஆண்ட வர்களின்
 மரணமும் இயற்கையே.
இதில் அழுது என்ன பயன்.
அவரால் கோடிகளில் திளைக்கும் கூட்டமே
கண்ணீரின்றி பதவிகளில் அமர்ந்து கொண்டது.
அவர்கள் கண்ணீர் விடுவதை பார்க்க
தலையில்லை என்றவுடன்.
அவர் உயிரற்ற உடலை ஒரு பக்கம் வைத்துக்கொண்டே
ஆளும் உரிமைகோரி நாற்காலிகளில் இடம் பிடிக்கிறது.
அவர் வாகன சக்கரங்களை கும்பிட்ட கூட்டம்
அவரையே புதைக்க இடம் ஆய்வு செய்கிறது.
புதைக்கப்படுவது அவர் உடல் மட்டுமல்ல ,,,?
இனி அவர் படங்களில் மட்டுமே புன்னகைப்பார்.
அரசு கூட்டங்களில் அவர் படம் முன் வைப்பதும்
கலவாதியாகிவிடும்.
வாழ்க்கை உண்மையை உணர்த்தும் கூட்டமே இதுதானே.


=====================================================================================
ன்று,
டிசம்பர்-06.
  • அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது(1865)
  • உலகில் முதல் முறையாக லண்டனில் வாடகை வாகன சேவை துவங்கியது(1897)
  • பின்லாந்து விடுதலை தினம்(1917)
  • இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான  பி.ஆர்.அம்பேத்கார் இறந்த தினம்(1956)

=====================================================================================

ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிதாக பதவியேற்ற தமிழக அமைச்சரவை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மோடி அரசிடம் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்வதெல்லாம்....









பன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?