இடுகைகள்

ஜனவரி, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உருளைச் சாறு

படம்
உருளைக் கிழங்கை பெரும்பாலோனோர் வறுத்தும், அவித்தும் சாப்பிடுவதை விரும்புவார்கள். அதனை பச்சையாக சாறு எடுத்து குடித்தால் பல நன்மைகள் ஏற்படுகின்றன என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்??? பலவித நோய்கள் குணமாகின்றன. வராமலும் தடுக்கப்படுகின்றன. ஒரு நடுத்தர உருளைக் கிழங்கை எடுத்து நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கப் நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.  பின் இதனை வடிகட்டி பருகவும். உங்களுக்கு உடலில் போட்டாசியம் அதிக அளவு அல்லது குறைவான அளவு இருந்தால் மருத்துவரை கலந்தாலோசித்து எடுத்துக் கொள்ளுங்கள். ஆர்த்ரைடிஸ்  ஆர்த்ரைடிஸான்ல் உண்டாகும் மூட்டு இணைப்புகளில் வலி மற்றும் கழுத்து, தோள்பட்டைகளில் உண்டாகும் வலிகளை குறைக்கும். குறிப்பாக குளிர்காலத்தில் தான் மூட்டு மற்றும் எலும்பு வலிகளால் பாதிக்கப்படுவார்கள். அந்த சமயங்களில் மிகவும் நல்லது. அமில  சம நிலை உடலில் அதிக அமிலத்தன்மை இருந்தால் நுண் கிருமிகள் விரைவில் உருவாகும்.அதற்கேற்ப சூழ் நிலை இருப்பதால் பல மடங்கு பரவி நோய்களை உண்டாக்கும். உருளைக் கிழங்கு சாறு குடிப்பதால் அமிலத்தன்மை

இவர்களின் நோக்கம்

படம்
சொன்னாலும் சொல்லாவிட்டாலும்,நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லையென்றாலும் உண்மை இதுதான். இறைநாதனுகளுக்கு முன்னரே தளபதி ஸ்டாலின்" நமக்கு நாமே 'என்று தமிழகம் முழுக்க வளம் வந்து மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்த பொது மதுரை பகுதி மக்களால் வைக்கப்பட்ட கோரிக்கை "ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும். திமுக ஆடசியில் நடந்து வந்த ஜல்லிக்கட்டு ஜெயலலிதா ஆட்சியில் 2014 இல் இருந்து நடைபெறவில்லை. அப்போது ஸ்டாலின் ஜல்லிக்கட்டு நடக்க திமுக முயற்சி எடுக்கும்.அதற்காகப் போராடும் என்று வாக்களித்தார். நமக்கு நாமே முடிந்த பின்னர் அலங்காநல்லூர் சென்று மாபெரும் உண்ணாவிரதம்,ஆர்ப்பாட்டம் என்று நட்ச்த்தி மத்திய ,மாநில அரசுகள் பார்வையை அதன் பக்கம் திருப்பினார். திமுக முன்னெடுக்கிறது என்றாலே அதற்கு எதிராக மட்டுமே செயல் படும் ஜெயலலிதா இதை ஜல்லிக்கட்டை கண்டு கொள்ளவே இல்லை.அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அப்போதே நடவடிக்கை எடுத்தல் ஜல்லிக்கட்டு நடந்திருக்கும். இப்போது கூட ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசுதான் அவசர சட்டம் பிறப்பித்து குடியரசுத்தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றுள்ளது.  இதை வானளாவ அதிகாரம் வைத்திருந்த ஜெ

வீரம் மட்டுமல்ல விவேகமும் முக்கியம்

படம்
இதுவரை இல்லாத அளவு இந்தியாவில் சமூக வலைத்தளங்களின் பாதிப்பினால்  தமிழ் நாட்டில் ஒரு மாபெரும் போராட்டம் நடந்துள்ளது.அது மத்திய அரசு வரை அசைத்துப்பார்த்துள்ளது. இப்போராட்டத்துக்கு எல்லா தரப்பு மக்களும் அதாவது இதுவரை அரசியல்,ஆடசி அத்துமீறல்களுக்கு எதிராக வாயைத்திறக்காமல் உள்ளக்குள்ளே புழுங்கிக்கொண்டிருந்த நடுத்தர மக்கள் அனைவரும் ஒன்று திரண்டதுதான் இந்த ஜல்லிக்கட்டு அமைதி போராட்டத்தின் வெற்றி. இப்போராட்டத்தை வெறும் ஜல்லிக்கட்டு தடை நீக்க மட்டுமான போராட்டமாக மட்டும் கருதினால் அது தவறு. இதுவரை மத்திய மோடி அரசு தமிழ் நாட்டுக்கு எதிராக செய்துவந்த நடவடிக்கைகள்,காவிரி பிரச்னை,நீட் தேர்வு,பணம் மதிப்பிழக்களில் ஏற்பட்ட கசப்புகள்,வாரா ,வரம் பெட்ரோல் விலை உயர்வு,முதலாளிகளுக்கு ஆதரவான அரசு நடவடிக்கைகள்  போன்றவைகளும்  ,தமிழ்நாட்டில் நடக்கும்  அசிங்கமான அதிகாரப்போட்டி,அமைசர்கள் தங்கள் பணிகளை செய்யாமல்,மக்கள் நலனுக்கும்,விவசாயிகள் நலனுக்கும்,குடிநீர் வசதிக்கும் ஒன்றும் செய்யாமல் ஜெயலலிதா கல்லறை ஈரம் காயும் முன்னரே " சின்னம்மா"காலில் விழுவதையே முழுநேரப்பணியாக செய்து கொண்டிருப்பதை பார்த்து

நான் பொறுக்கிதான்

படம்
" நான் தமிழ் பொறுக்கிதான்.ஆனால் டெல்லியில் பொறுக்க மாட்டேன் ."                                                                                                   - கமல்ஹாசன் .

அரசியல் விலங்குகள்.?

படம்
இன்று இந்தியாவில் நாம் வாங்கும் பால் அனைத்தும் ஜெர்சி, எப்.எஸ்((F.S) மற்றும் ஹெச்.எப்(H.F) வகை மாடுகள் மூலம் பெறப்படுவதே.  இவற்றை பசுக்கள் என்று கூட சொல்லமுடியாது இவை ஐரோப்பாவில் இருந்த ஆரோக்(AUROCH)​ என்ற உடல் வலிமைகொண்ட வனவிலங்கிடம் இருந்து ‘க்ராஸ் ப்ரீட்’ (கலப்பினம்) செய்யப்பட்டவை. ஆரோக்கள்அவைகளின் இறைச்சிக்காக அதிகம் வேட்டையாடப்பட்டன. ஆனால் அது கடினமான வேலையாக இருந்ததினால் நாட்டு மாடுகளுடன் கலவி செய்யவிட்டு உருவாக்கப்பட்டது தான் இந்த கலப்பின மாடுகள். (இன்று பன்றியின் மரபணு வரை சேர்க்கப்படுகிறது அதிக பால் கிடைக்கவேண்டும் என்று! அது தனிக்கதை). இன்றும் ஐரோப்பியர்கள் பலர் அதன் பாலை தவிர்க்கிறார்கள். அதில் உள்ள கேசொமார்பின்க்கு பயந்து.(கோசொமார்பின் என்பது, நரம்பு மண்டலத்தைப் பாதித்து, மூளையைத் தாக்கக் கூடிய பொருள் ஆகும்).இந்திய நாட்டில் விவசாயத்திற்கும், மருத்துவத்திற்கும் நாட்டு மாடுகள் தான் முதுகெலும்பு. அதன் மூலம் இந்திய மக்களின் ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் அடித்தளமாக இருந்தது நம் மரபு பசுவினங்கள்.  நாட்டு மாடுகள் இல்லையேல் ‘இயற்கை வேளாண்மை, ஜீரோ பட்ஜெட் பார

{பீட்டா} காலிகளை குதறிய காளைகள்

படம்
தமிழகத்தின் தெ ருக்கு,தெரு ,மோடி அரசும்,சசிகலா  அரசும்(?)   ஜல்லிக்கட்டுபோராட்டங்களில்  திட்டு வாங்கிய பின்னர்தான் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம் தமிழக அரசிடமே உள்ளது என்று பன்னிர்செல்வம்   உணர்ந்தார். அந்த அதிகாரம் மூலமாகத்தான் திமுக அரசு தமிழ் நாட்டில் 2011 வரை ஜல்லிக்கட்டை நடத்தி வந்தது என்ற உண்மை அதிமுக அரசுக்கு தெரிந்திருந்தாலும் ,கலைஞரின் வழியில் நடப்பதா என்ற தயக்கமும்,தனது புதிய முதலாளி பாஜக மோடியின் கண்ணசைவிற்கு காத்திருந்தும்தான் தமிழகத்தை போராட்டக் காலமாக்கி விட்டது. தற்போது நிலை தலைக்கு மேல். இருந்தாலும் டெல்லி சென்று புதிய முதலாளி மோடியின் அனுமதியை பெற்று ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் உண்டாக்கி அனுப்பி வைத்தது. ஜல்லிக்கட்டு  அவசர சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.  தமிழகத்தில் காலூன்ற செய்த முயற்சிகள் அனைத்தும் இருக்கும்  பாஜகவுக்கும் பாலூற்றும் நிகழ்வுகளாகவே மாறிவிடுவதால் அதிர்ந்திருந்த பாஜக மோடி அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அடக்கி வாசிக்கவே முயல்கிறது. தமிழக போன்.ராகி,தமிழிசை ஏற்கனவே ஜல் லிக்கட்டை அனுமதிக்க

காவல்துறை உங்கள் நண்பன்!

படம்

தி.மு.க. ஆட்சியில் ஜல்லிக்கட்டு நடந்தது எப்படி?

படம்
தமிழகத்தில் ஒரு நகரம், ஒரு கிராமம்விடாமல் எங்கும் ஜல்லிக்கட்டு மீட்புப்போராட்டங்கள் தன்னெழுச்சியாக வெடித்துள்ள பின்னணியில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  அவசரச்சட்டம் கொண்டுவரக் கோரும் மனுவோடு தில்லி சென்றார்.  பிரதமர்நரேந்திர மோடியைச் சந்தித்தார். முதலமைச்சர்தன்னைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக்கொடுத்தார் என்பதன்றி, தமிழகத்தின் கோரிக்கைக்கு பிரதமர் வேறு மரியாதை அளித்ததாகத் தெரியவில்லை. ‘ஜல்லிக்கட்டு தமிழகத்தில் பண்பாட்டுமுக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஏற்றுக்கொண்ட பிரதமர், பிரச்சனை இப்போது நீதிமன்றவிசாரணையில் இருக்கிறது என்று நழுவி விட்டார்’ என்று செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்பார்ப்புடன் தன்னைச் சந்தித்த தமிழகமுதலமைச்சருக்கல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கே துரோகமிழைத்திருக்கிறார் மோடி.  பன்னிர் செல்வம் அதிகாரம் தன்  கையில் இருக்கையில் இதற்கு முன்னர் தடை இருந்த போதும் பிரசனையே இல்லாமல் வெளியுலகம் தெரியாமல் தனது அதிகாரம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணையை ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் ஒப்புதலுடன் வெளியிட்டு நடத்திய திமுக தலைவர் கலைஞர் போன்று ஏன் நடத்தவில்லை?எதற்காக தமிழ் நா