இவர்களின் நோக்கம்

சொன்னாலும் சொல்லாவிட்டாலும்,நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லையென்றாலும் உண்மை இதுதான்.
இறைநாதனுகளுக்கு முன்னரே தளபதி ஸ்டாலின்" நமக்கு நாமே 'என்று தமிழகம் முழுக்க வளம் வந்து மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்த பொது மதுரை பகுதி மக்களால் வைக்கப்பட்ட கோரிக்கை "ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும்.
திமுக ஆடசியில் நடந்து வந்த ஜல்லிக்கட்டு ஜெயலலிதா ஆட்சியில் 2014 இல் இருந்து நடைபெறவில்லை.
அப்போது ஸ்டாலின் ஜல்லிக்கட்டு நடக்க திமுக முயற்சி எடுக்கும்.அதற்காகப் போராடும் என்று வாக்களித்தார்.
நமக்கு நாமே முடிந்த பின்னர் அலங்காநல்லூர் சென்று மாபெரும் உண்ணாவிரதம்,ஆர்ப்பாட்டம் என்று நட்ச்த்தி மத்திய ,மாநில அரசுகள் பார்வையை அதன் பக்கம் திருப்பினார்.
திமுக முன்னெடுக்கிறது என்றாலே அதற்கு எதிராக மட்டுமே செயல் படும் ஜெயலலிதா இதை ஜல்லிக்கட்டை கண்டு கொள்ளவே இல்லை.அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அப்போதே நடவடிக்கை எடுத்தல் ஜல்லிக்கட்டு நடந்திருக்கும்.
இப்போது கூட ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசுதான் அவசர சட்டம் பிறப்பித்து குடியரசுத்தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றுள்ளது. 
இதை வானளாவ அதிகாரம் வைத்திருந்த ஜெயலலிதா,இன்று ஜல்லிக்கட்டு நடக்க வைத்ததற்காக மக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டிருக்கும் சசிகலா உடன் பிறவா சகோதரிகள் அப்போது ஏன் செய்யவில்லை.
மாணவர்கள் போராட்டம் ஆரம்பிக்கும் முன்னரே 3ம் தேதியே அலங்கா நல்லூரில்  ஜல்லிக்கட்டு நடத்த ஸ்டாலின் மக்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
மற்ற போராட்டங்கள் எல்லாம் அதன் பின்னர்தான்.
ஆக  இன்று ஜல்லிக்கட்டு நடத்த்த ஆணையை பெற மூலக்காரணம் திமுக,ஸ்டாலின் தான் .
ஆனால் சில குழப்பவாதிகள் இதிலும் திமுகவின் பங்கை திட்டமிட்டு மறைக்கிறார்கள்.திடீரென போராளிகளாக குதித்து இவர்கள் அரசியல் கடசிகள் யாரும் குறிப்பாக திமுகவினர் பங்கு பேராக் கூடாது என்று கூறியவர்கள்.
அரசு  ஜல்லிக்கட்டு நடத்த்த அனுமதித்தப்பின்னரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவராமல் என்ன காரணத்துக்காக காவல் துறையுடன் மோதினர்.அப்படி மோதி அதை தீவைப்பு,பெட்ரோல் குண்டு வீச்சு என்று போராட்டக்களத்தை கலவரமாக்கி அதுவரை ஆதரவு தந்த பொதுமக்களை கூட போராட்டக்காரர்களை விமர்சிக்கும் அளவு கொண்டு போனது ஏன் ?
தங்களால்தான் ஜல்லிக்கட்டு  வந்தது என்று பெயரை தட்டிக்கொண்டு போவதற்கும்,இப்பெரிய அமைதி போராட்டத்தை தாங்கள்தான் நடத்தியதற்காக மக்களிடம் பெயர் பெறவும்தான்.
இந்த போராட்டக்களத்தில் இணைந்தவர்கள் அனைவரும் நோக்கத்தால் கூடியவர்கள்தானே ஒழிய தங்களுக்கென்று அரசியல் ,மாறுபட்ட கொள்கை இல்லாதவர்கள் அல்ல.எல்லாக்கடசியினரும் கலந்து கொண்டனர்.எல்லா மதத்தினரும் கலந்து கொண்டனர்.எல்லா சாதியினரும்தான் கலந்து கொண்டார்கள்.
இப்போது சிலர் இதோ இவர் திமுக,அவர் திமுக என்று புகைப்படத்த்தை காட்டி கூறுகின்றனர்.திமுகவினர் கலந்து கொண்டதில் என்ன தவறுயிருக்கிறது.?அவர்கள் தமிழர்கள்தான்.
ன்று போராட்டக்காரர்கள் மண்டையை பிளக்கும் காவல் துறையை சேர்ந்த நண்பர்களே அன்று மேடையில் ஆதரவளித்து பேசினார்களே அது தவறா ?
உணர்வு இவர்களுக்கு மட்டுமே ஒட்டு மொத்த குத்தகையா ?
திமுகவினர் உடன்பட மக்கள் அனைவரும் கூடியதால்தான் ஜல்லிக்கட்டு  போராட்டம் லட்சக்கணக்கில் மக்களை கொண்ட சுனாமியாக மத்திய,மாநில அரசுகளைத்தாக்கியது.
எப்போதும் தமிழர் நலனுக்கு உழைப்பதும்,நலிந்தோருக்கு சமூகநீதி கிடைக்கசெய்வதும் திமுகதான்.
ஆனால் அதிகமாக விமர்சிக்கப்படுவதும் அதே திமுகதான்.இது ஒன்றும் புதியதல்ல.
கலைஞரில் ஆரம்பித்து தற்போது ஸ்டாலினுக்கும் தொடர்கிறது.அதற்காக தனது செயல்பாடுகளை திமுக முடக்கிக்கொண்டு கொடநாட்டில் ஓய்வெடுக்கப்போனதில்லை .
திமுக உள்ளே வரக்கூடாது என்று கூறிய அதே குழப்பவாதிகள்.இந்த வான் முறை காலத்துக்கு ஸ்டாலின் ஏன் வரவில்லை.போராடவில்லை என்கிறார்கள்.
மற்ற நகரங்களில் காவல்துறை வேண்டுகோள் விடுத்தவுடன்,அவசர ஆணை பிறப்பிக்கப்பட்டவுடன் கபோராட்டக்காரர்கள் சிறு சலசலப்புடன் களைந்து சென்று விட மெரினாவில் ,கோவையிலும் மட்டும் கலவரம் காவல்துறைக்கு எதிராக வெடிக்க காரணம்?
கோவை காவல்துறை ஆணையர் திரு. அமல் ராஜ் சன் நியூஸ் நேரலை நேர்முக பேட்டியில்..
,"பொதுமக்கள்,மாணவர்கள் கலந்து சென்றபின்னர் இருந்து கலவரத்தை தூண்டியதாகபிடிபட்டவர்கள்  நாம் தமிழர், மே 17, மற்றும் நக்சல் பாரி இயக்கங்களின் ஜனநாயக போர்வை குழுக்கள் ஆகியவையை சேர்ந்தவர்கள்தான்.இவர்கள்தான் திட்டமிட்டு  போராட்டத்தில் வன்முறையை தூண்டி உசுப்பி விட்டது".
 என்று பகிரங்கமாக ஆதாரத்துடன் கூறியுள்ளார்.

இந்த வார்த்தைகளே போதும் இவர்களின் நோக்கம் என்னவென்று தெரிய.

அவசர சட்டம் இயற்றியதுமே முடிந்து போன போராட்டத்தை, தனிதமிழ்நாடு கிடைக்கும் வரை போராடுவோம் ஒரவுகளே என உசுப்பி விட்டு அப்பாவி மாணவர்களை அடிவாங்க வைத்து ஜல்லிக்கட்டுக்கான தமிழர் உணர்வுமிக்க போராட்டத்தை கேவலமாக முடிக்க காரணம் நாம் தமிழர், மே 17ஆகியவையை சேர்ந்தவர்கள்தான்"





=======================================================================================
ன்று,
ஜனவரி-24.
 ஹோமி பாபா

  • தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகமான கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது(1857)
  • பேடன் பவல், சாரணியர் இயக்கத்தை ஆரம்பித்தார்(1908)
  • ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம், லெனின் கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது(1924)
  • முதலாவது ஆப்பிள் மார்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984)
  • இந்திய அணு ஆராய்ச்சி நிபுணர் ஹோமி பாபா இறந்த தினம்(1966)
=======================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?