இடுகைகள்

ஏப்ரல், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வரிசை இத்துடன் முற்று பெறுமா?

படம்
கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதுார், 51, ஏப்., 23ம் தேதி அதிகாலை, இரு வாகனங்களில் வந்த மர்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். உடனிருந்த மற்றொரு காவலாளி, கிருஷ்ண பகதுாரை தாக்கி, கை, கால்களை கட்டிப் போட்டு, எஸ்டேட்டிற்குள் நுழைந்த கும்பல், மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதா பயன்படுத்தி வந்த அறைகளின் கதவுகளை உடைத்து, ஏதோ பொருட்களைக் கொள்ளை அடித்துச் சென்றது. முக்கிய ஆவணங்களை தேடியே இக்கும்பல் கொடூர கொலையை நிகழ்த்தியது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது. குற்றவாளிகள் தப்பிய வாகனங்களின் விபரங்களை, முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு  கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் திரட்டிய போலீசார், கேரள மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்த, சதீஷன், ஷிபு மற்றும் சந்தோஷ் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர். யாரும் எளிதில் புகை முடியாத மர்மக்கோட்டையான ஜெயலலிதா கோடநாடு பங்களாவில் அடிக்கொரு  கண்காணிப்பு   கேமரா பொருத்தப்பட்டு காண்காணிக்கப்பட்டு வந்தது. ஆனால் கொள்ளை சம்பவம் நடக்கும் வேளையில் எல்லா  கண்காணிப்பு   கேமராக்களும் முடங்கிப்போயிருந்தது மர்ம குடிசை மேலும் வலுவாக்கியு

நிதி ஆயோக் தேவைதானா?

படம்
இந்தியாவில் தொழிலாளர், பொதுமக்கள், விவசாயிகள், பெண்கள், அரசு ஊழியர்களுக்கு என்று பொதுமக்களுக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லாமல் பாலைவனத்தில் தங்க  மாளிகையில் இயங்கும் அமைப்பாக நிதி ஆயோக் உள்ளது. பெரும் தொழிலதிபர்கள் மட்டுமே இதன் கண்களுக்கு தென்படுவார்கள்.அவர்கள் நலனுக்கு மட்டுமே திட்டமிடும் அமைப்பாக மாறியுள்ளது. அதற்கு பிரதமர் மோடிதான் வழிகாட்டி.வேறென்ன சொல்ல? காங்கிரசு ஆட்சிக்கால திட்டம் கமிஷனுக்கு சமாதி கட்டிவிட்டு பாஜகவுக்கு லாலி பாடி உருவாக்கப்பட்ட அமைப்புதான்  நிதி ஆயோக். நாட்டின் மிகப் பெரிய மாநிலம் உத்தர பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்தது.  தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் – சமாஜ்வாதி கட்சிகளின் கூட்டணி விவசாயிகளின் அனைத்து கடன்களும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தனர். தேர்தல் களத்தில் இருக்கும் பாரதீய ஜனதாவுக்கும் விவசாயிகளின் கடன் பற்றி பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.  அதனால் நாட்டின் பிரதமரும் பாரதீய ஜனதா கட்சியின் முதன்மை பிரதிநிதியாக களத்தில் இருந்த நரேந்திர மோடி, விவசாயிகளின் கடன் பிரச்னை ப

மாட்டுக்கு சூடு!..மனுசனுக்கு ஆதார்?

படம்
2015-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் உத்திரபிரதேச மாநிலம் தாத்ரியைச் சேர்ந்த முகமது அக்லக் இந்துமதவெறி குண்டர் படையால் கொல்லப்படுகிறார். அக்லக்கின் வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் பசு மாமிசம் வைத்திருந்தார் என குற்றம் சுமத்திய இந்துத்துவ ரவுடிக் கூட்டம், அவரை வீட்டிலிருந்து இழுத்துப் போட்டு அடித்தே கொன்றது. பின்னர் நடந்த விசாரணையில் அக்லக்கின் வீட்டில் இருந்தது மாட்டுக்கறி இல்லையென்பது நிரூபிக்கப்பட்டது. அநேகமான கலவரங்களுக்கு இந்துத்துவ பரிவார அமைப்புகள் முன்னெடுத்து வரும் மாட்டு அரசியல் அல்லது இசுலாமிய வெறுப்பு அரசியலே அடிப்படைக் காரணங்கள். அதே போல 2015-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி செத்த மாடுகளை எடுத்துச் சென்ற லாரிகளை காஷ்மீர் மாநிலம் உதம்பூர் அருகே வழிமறிக்கும் பார்ப்பனிய இந்துமதவெறி கும்பல் ஒன்று, லாரி ஓட்டுநனர் ஜாகித் அகமதுவையும் அவருடன் வந்த இன்னொரு முசுலீமையும் கண்மூடித்தனமாக தாக்கியது. கொடூரமாக தாக்கப்பட்ட ஜாகித் பத்து நாட்களுக்குப் பிறகு இறந்து விடுகிறார். தாக்குதல் குறித்த தகவல் பரவியதும் ஜம்மு காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் பரவுகின்றன. உதம்பூர் தாக்குதலை அடுத்து ப

நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி.

படம்
திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி :  "இங்கு தமிழ் நாட்டில் திராவிடர் ஆட்ச்சி என்றால் திமுகவை மட்டுமே குறிக்கும் படி பேசப்படுகிறது. ஜெயலலிதா,அவரின் முன்னோடி எம்.ஜி.ஆர் ஆட்சி காலங்களை  இந்த காலக்கட்டடத்தில் சேர்க்கவில்லை. காரணம் இன்றைக்கு சில தமிழ் தேசியவாதிகள் என்று கூறி அரசியல் செய்ப்பவர்களுக்கு திமுகதான் தாக்கப்படும் குறி. எம்ஜிஆர்,மலையாளி,ஜெயலலிதா கன்னட அந்தணர் என்பதாலேயோ அல்லது அவர்கள் ஆட்சி பார்ப்பன அதிகாரிகள்,சோ,மணியன்,வெங்கடராமன் போன்ற சாணக்கியர்களளோ வழிநடத்தப்பட்டதாலோ . ஆனால் திராவிடர் இயக்க,பெரியாரின் சீர்த்திருத்த திட்டங்களை கலைஞர் முன்னெடுத்து சட்ட,திட்டங்களை உருவாக்கி ஆட்சி செய்ததால் அவரின் காலக்கட்டங்களை மட்டும்தான் திராவிடர் ஆட்சி காலம் என்று கூறவும் இயலும்." 100 ஆண்டுகள் நிறைவெய்தியுள்ள திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அடையாளம் நீதிக்கட்சி ஆகும். மாகாணங்களுக்குக் குறைந்த அதிகாரங்களே வழங்கப்பட்ட நிலையிலும் 1921இல் ஆட்சி அமைத்த நீதிக்கட்சி அனைத்துத் தரப்பினருக்கும் கல்வி வேலைவாய்ப்புகளை வழங்கும் முதல் இடஒதுக்கீடு ஆணையை 1921இல் பிறப்பித்தது. 1927முத