இடுகைகள்

ஜூன், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கேடில் வீழ் செல்வம் மாடு ,,,,,,

படம்
பழனியில் விவசாயி ஒருவர் தனது 3மாடுகளை பண்ணைக்கு கொண்டு செல்கையில் வந்தவழியே வந்த ஜீயர் எனப்படும் பார்ப்பன சாமியார் இந்து முன்னணி ஆட்கள் துணையுடன் அந்த லாரியை காவல் நிலையம் அழைத்து சென்று புகாரை கொடுத்துள்ளார். "தனது மாடுகளை தான் பண்ணைக்கு கொண்டு செல்ல யார் அனுமதி வேண்டும்"என்று விவசாயி கேள்வி எழுப்ப அவருக்கு துணையாக கம்யூனிஸ்ட் கடசியினர்,விவசாயிகள் பொதுமக்கள் கூட காவல் அதிகாரி மாடுகளை விடுவித்தார். ஆனால் ஜீயர் அடியாட்கள் இந்து முன்னணியினர் சாலை மறியல்,அரசுப்பேருந்து கண்ணாடியை கல் வீசி தாக்குதல்கள் நடத்த காவலர்கள் அவர்களை அடித்து கலைத்து விரட்டியுள்ளனர். கலவரத்தை உருவாக்கிய ஜீயரோ பாதுகாப்புடன் தூசி கூட படாமல் காரில் ஏறி பறந்து விட்டார். அவர் கார் மீது செருப்புகள் வீசப்பட்டது வேறு. ஆக மடாதிபதிகள் ,பார்ப்பன சாமியார்கள் மாடுகள் தொடர்பாக பிரசனைகளை கிளப்பி விட்டு தங்கள் ஒதுங்கிக்கொள்கிறார்கள்.அடிபடுவது என்னவோ சூத்திர இந்து வெறியர்கள்தான்.காரணம் பகுத்தறிவை மதத்தின் பெயரால் இழந்து விடுகிறார்கள். பசுவை கோமாதா என கும்பிடுவது பார்ப்பனர்கள் ஆனால் அதை காக்க கொலை செய்வதும்,கொலைக்கு

பினாமி ஆட்சி போதை........,

படம்
தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களான, 'மாவா', 'குட்கா' வியாபாரிகளிடம் தமிழக அமைச்சர், போலீஸ் உயரதிகாரிகள் பல கோடி ரூபாய் மாமூல் பெற்றதாக, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் தடையை மீறி, சென்னை மாதவரம் பகுதியில் 'குட்கா' தயாரிப்பு நிறுவனம் இயங்குவதாக, கடந்த 2015ல், மத்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ.,) சென்னை போலீஸ் கமிஷனருக்கு ரகசிய குறிப்பு அனுப்பியது.  இதையடுத்து அந்நிறுவன குடோனில் திடீர் சோதனை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், மூடை மூடையாக குட்கா, மாவா பொருட்களைக் கைப்பற்றி, 'சீல்' வைத்தனர். இதுதொடர்பாக கடந்த 2016, டிச.,22ல் மாநில உள்துறை செயலருக்கு ரகசிய கடிதம் எழுதிய அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், 'அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா பொருட்களை விற்கும் நபர்களுடன்  போலீஸ் அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு உள்ளது.  இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்' என கூறியிருந்தார். இக்கடிதத்தை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனருக்கு அனுப்பி வைத்தது உள்துறை அலுவலகம்.ஆனால், நடவடிக்கை மேற்கொள்ளப் படாமல் கோப்பு க

பாழான பால்!

படம்
அமைச்சரே அந்த பால்தயாரிப்புநிறுவனங்கள் நெஸ்லே,ரிலையன்ஸ் என்று அதிகாரப்பூர்வமாகக் கூறி விட்டார். ஆனால் தினமணி போன்ற அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் நெஸ்லே,ரிலையன்ஸ் என்று அவற்றின் பெயர்களை கூற என் தயங்குகிறது.பெயர்களை எழுதினால்தான் பொது மக்கள் அவற்றை வாங்கி உடல் நலம் கெடுவதை தவிர்ப்பார்கள். தினமணிக்கு காசு கொடுத்து தனது பத்திரிகையை வாங்கும் வாசகர், மக்கள் நலனை விட நெஸ்லே,ரிலையன்ஸ் தரும் விளம்பரக் காசுதான் மேல் என்பதை காட்டி விட்டதே.இதில் நேர் கொண்ட நடை,யாருக்கும் அஞ்சாத ....வாசகங்கள்  வேறு. இவைகள் தரும் செய்திகள் உண்மை என்று நம்பி வரும் வாசகர்களுக்கு இந்த ஊடகங்கள் தரும் உண்மை செய்திகளின் லட்சணம் இவைதான். பால்வளத்துறை அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி கொடுத்த பேட்டிதான் இந்த குமுறலுக்கு காரணம். ''தனியார் பால் பவுடரில், 'காஸ்டிக் சோடா' கலந்திருப்பது, பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. பாலில் கலப்படம் உள்ளதாக கூறியதால், எனக்கு மிரட்டல்கள் வருகின்றன,' ' 'நெஸ்ட்லே டுடே, ரிலையன்ஸ்' நிறுவனங்களின் பால் பவுடரில், ' காஸ்டிக் சோடா, பிளிச்சிங் பவுடர் '

தலைகீழாக மாறிய பொருளாதாரம்

படம்
நரேந்திர மோடி அரசு தலைமையிலான அரசு செயல்பாடுகளினால் இந்த மூன்றாண்டுகளில் இந்திய பொருளாதாரமே தலைகீழ். ஜிடிபி யால் வளர்ச்சி மிகக்குறைந்ததால் ஐ.நா .சபை வளர்முக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி விட்டது.இதனால் வெளிநாடுகள் முதலீடு குறையும்.வறுமை நாட்டில் யார் முதலீடு செய்வார்கள்.? எனினும், வீழ்ச்சியடைந்து வரும் ஏற்றுமதியும், அதிகரித்து வரும் இறக்குமதியுமே கடந்த மூன்றாண்டுகளாக இந்திய விவசாயத்துறை வர்த்தகத்தின் நிலைமையாக இருந்து வருகிறது. 2013-14 மற்றும் 2016-17 ஆண்டுகளுக்கிடையே, இந்தியாவின் விவசாயப் பொருட்களின் இறக்குமதி 15.5 பில்லியன் டாலர்களிலிருந்து 25.6 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ள்ளது.  எனினும், ஏற்றுமதி 43.2 பில்லியன் டாலர்களிலிருந்து 33.8 பில்லியன் டாலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயப் பொருட்கள் வர்த்தகத்தில் இறக்குமதியைவிடக் கூடுதலாக ஏற்றுமதி செய்திடும் நாடாகவே நமது இந்தியா எப்போதும் இருந்துவந்துள்ளது.  எனினும், தற்போது ஏற்பட்டுள்ள மேற்கூறப்பட்ட மாற்றத்தின் காரணமாக, இக்காலகட்டத்தில் இவ்வர்த்தகத்தின்உபரி 27.7 பில்லியன் டாலர்களிலிருந்து வெறும்8.2

விவசாயிகளுக்கு விடிவு காலம் ? ? ?

படம்
தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் காவிரி டெல்டா பகுதி, இன்று காய்ந்து கருவாடாக காட்சி அளிக்கிறது.  அங்குள்ள விவசாயிகள், வெளியடங்களுக்கு பிழைப்புக்காக செல்லும் நிலை ஏற்பட்டு விட்டது.  விவசாய சங்கத்தினரோ, சென்னைக்கும், டெல்லிக்கும் படையெடுத்துச் சென்று போராடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு விடிவு காலம் பிறக்க வில்லை. டெல்டா மாவட்டங்களில், 6- வது ஆண்டாக குறுவை சாகுபடியும் இந்த ஆண்டு நடக்க வில்லை. காரணம், மேட்டூர் அணையில் 10 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பதுதான்.  50 அடிக்கு தண்ணீர் இருந்தால் மட்டுமே, குறுவைக்கு தண்ணீர் திறக்கலாம் என்பது பொதுப்பணித்துறையின் விதியாகும்.  ஆனால், இந்த ஆண்டு இந்த மாத இறுதிக்குள், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்ட வாய்ப்பே இல்லை.  கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவ மழை பெய்ய தொடங்கி விட்டாலும், பெரிய அளவில் மழை பெய்ய வில்லை. இப்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை நீர், கர்நாடகத்திலுள்ள அணைகளுக்கு வர ஆரம்பித்துள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். இனி அந்த அணைகள் நிறைந்த பின்தான், கர்நாடக அரச