தலை கேட்கும் சாமி.


பாரத் மாதா கீ ஜே என்று முழங்காதவர்களின் தலையை துண்டிப்பேன் என்று கடந்த 2016-ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பாபா ராம்தேவுக்கு எதிராக பிணையில் வெளி வரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கத்தை இந்தியர்கள் அனைவரும் முழங்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தினர். 
அதே கருத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பும் வலியுறுத்தியது.


இந்நிலையில் பாரத தாயை வணங்குவோம் என்ற அர்த்தம் கொண்ட பாரத் மாதா கீ ஜேவை முழங்குவதற்கு முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதாவது கடவுளை தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய பாபா ராம்தேவ், பாரத் மாதா கீ ஜே என்ற கோஷத்தை முழங்காதவர்களின் தலையை துண்டிப்பேன் என்று கருத்து தெரிவித்திருந்தார். 

இது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து முன்னாள் உள்துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சுபாஷ் பத்ரா ஹரியாணா மாநிலம் ரோத்தக் நீதிமன்றத்தில் பாபா ராம்தேவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கானது இன்று கூடுதல் குற்றவியல் தலைமை நீதிபதி ஹரீஷ் கோயல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் ஆஜராகுமாறு பாபா ராம்தேவுக்கு உத்தரவிட்டும் ஆஜராகவில்லை. 

எனவே அவருக்கு பிணையில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இவர் என்ன சாமியாரா, தாதாவா?

இவர் முகத்தைப்பார்த்தாலே ஆன்மிகம் சார்ந்தவர்களுக்கான சாந்தமான குணம் தெரியவில்லையே?
தாடி,முடியை நீக்கினால்  புழலில் தங்கியிருக்கும் எங்களூர் ரவுடி போலவே இருப்பாரா என்றே தெரிகிறது.
இன்றைய உலகில் தனது மனைவி,குழந்தைகளிடம் கூட ஒருவர் தனது கொள்கைகளை,கருத்துக்களை திணித்து அவற்றை கடை பிடிக்க சொல்லும் நிலை இல்லை.அது சென்ற தலை முறையுடன் முடிந்து போனது.
ஆனால் இந்த வியாபார காந்த சாமி சொல்வதை சொல்லாவிட்டால் தலை எடுக்கும் அளவுக்கு அதிகாரம் எப்படி வந்தது?

அதை மேடையிலேயே பகிரங்கமாக சொல்லும் அளவு தைரியம் அதுவும் ஒரு மதம் சார்ந்த துறவி என்று சொல்லிக்கொண்டு பல்லாயிரம் கோடிகளை சட்டவிரோதமாக சம்பாதித்த இந்த மனிதனுக்கு எப்படி வந்தது.



இந்தியா என்ன இவன் அப்பன் வீட்டு சொத்தா?
 வெறும் யோகா சொல்லிக்கொடுத்தே பல்லாயிரம் கோடிகளை இந்த சாமி சம்பாத்தித்தது எப்படி.?மோடியின் வருமானவரித்துறை நோண்டுமா?
கோடிகளில் வியாபாரம் செய்ய ஆரம்பித்துள்ள இந்த சாமிக்கு சொந்தமான பதஞ்சலி  நிறுவனத்துக்கு எதற்காக பல கோடி  பெறுமான அரசு நிலங்கள் கைமாற்றப்பட்டன.?
மோடி சொல்வாரா?

விவசாயிகளை சந்திக்கவே நேரமில்லாமல் துன்பப்படும் பிரதமர் மோடி தரமற்ற மருந்து பொருட்களை தயாரிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட ,அரசு புறம்போக்கில் கட்டப்பட்ட பதஞ்சலி தொழிற்சாலையை திறந்துவைக்க தனி விமானத்தில் வந்தார் .அதற்கு நேரம் கிடைத்தது எப்படி?

அதற்கு தமிழக விவசாயிகள் ஆர்.எஸ்.எஸில் சேர்ந்தால் பிரதமர் மோடிக்கு  போதுமா?
என்னவோ இந்த வழக்கில் சாமியார் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.இவன் சாமியார் என்றோ,பிரதமர் மோடிக்கு சகா என்றோ நீதிபதி விதிவிலக்கு தரக்கூடாது.

அப்படி கொடுத்தால் இந்த சாமியார் நாளை உண்மையிலேயே யார் தலையையாவது வெட்டி விடுவான்.


================================================================================
தமிமுன் அன்சாரி விவகாரம் 

ரம்ஜான் நோன்பு இருக்கும் தூய மனதோடு கூறுகிறேன்,நான் கூவத்தூர் முகாமுக்கு போகவில்லை என்பது நாடறிந்த செய்தியாகும். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் செங்கோட்டையன் எங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது நாகரிகமான முறையில் ஆட்சிக்கான ஆதரவை மட்டும் கேட்டார்.



உங்களின் தொகுதி மற்றும் சமுதாய கோரிக்கைகளையும் தாருங்கள் என்றார் நாங்களும் கொடுத்தோம். 
உங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு நன்றியாக எதிர்காலத்தில் எங்கள் கட்சிக்கு வாரியப் பதவிகளை தாருங்கள் என்று சொல்லி அனுப்பினோம். 
அப்போது மஜக தலைவர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.

சரவணன் எம்எல்ஏவின் குற்றச்சாட்டை 100 சதவீதம் மறுக்கிறோம். நிராகரிக்கிறோம். 

பண பேரத்தில் நாங்கள் ஈடுபடவில்லை அரசியலில் நேர்மையை கடைபிடிக்கிறோம். இறைவன் மீது ஆணையிட்டு கூறுகிறேன் நாங்கள் நேர்மையானவர்கள். வாளை எடுத்து எங்கள் இதயத்தை பிளந்து காட்ட முடியாது.

அரசியலில் நேர்மையை கடைபிடித்த காமராஜர், கக்கன் வழியை பின்பற்றியே எங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கடந்த 2 தினங்களாகவே பணம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. 

என் மீதான இந்த அபாண்ட குற்றச்சாட்டு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன் அரசியலுக்கு வந்தோம், நமக்கு இதுவெல்லாம் தேவையா என்பது போன்ற மனநிலை உருவாகியிருக்கிறது. எங்கள் கட்சிக்கு வாரியத் தலைவர் பதவி கேட்டது மட்டும்தான் உண்மை என்றும் தமிமுன் அன்சாரி உருகியுள்ளார்.

ரமலான் நோன்பு இருந்தால் மட்டும் ஒருவர் உத்தம புத்திரனாகி விட  முடியுமா,குற்றமே செய்யா மனித்தப் புனிதராகி விடலாமா .
அல்கொய்தா ,ஐ.எஸ்.தீவிரவாதிகள் கூட ஐந்து வேளைதொழுகிறார்கள்.நோன்புகள் இருக்கிறார்கள்.

ஆனால்  தங்கள் தீவிரவாத தாக்குதலில் மனித உயிர்களை போக்கடிக்காமல் இருக்கிறார்களா?கக்கன்,காமராஜர் பெயரை எல்லாம் சொல்லி அவர்களை தரம் தாழ்த்தவேண்டாம். யாருக்கு ஆதரவு என்று மக்களிடம் கருத்து கேட்ட விதமே பெரும் நாடகம்.



நீங்கள் தொலைபேசி வந்தவுடன் பெட்டியை கடாசி விட்டு  தலை மறைவாகி விட்டு சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தவர் நீங்கள்.தேர்தல் நேரம் உங்களுக்கு கிடைத்த வேட்பாளர் மற்றும் இன்ன பிற பலன்களுக்காக மனித நேய மக்கள் கட்சியையே உடைத்து வெளிவந்து ஜெயலலிதா ஆசியுடன் வென்ற மக்கள் தொண்டன் நீங்கள்.

ஊழல் உறுதியாகி உள்ளே சென்ற ஜெயலலிதா குமாரசாமி கணக்கினால் வெளியே வந்த வுடன் சுத்த தங்கமாக புனிதவாதியாக வருவதாக ஜெயலலிதாவுக்கு வாழ்த்து பா பாடிய உங்களுக்கு ஊழல் என்றால் என்ன என்று தெரியாமல் இருக்கலாம்.

"நான் பணத்துக்காக அரசியல் செய்யவில்லை என்ற நீங்கள்தான் வாரியத்தலைவர் பதவியை கேட்டேன்" என்று வாக்கு மூலம்  தந்துள்ளீர்கள்.பணமாக வேண்டாம் தங்கமாக தாருங்கள் என்பதற்கும் இதற்கும் எத்தனை வித்தியாசங்கள் உள்ளது ?

வாரியத்தலைவர் பதவி எதற்கு மக்களுக்கு உதவிகளை வாரி  வழங்கவா?
நாங்கள் நம்பி விட்டோம்.

ஆனால் அமைசசர் பதவியை கொடுக்க முடியாதவர்களை சமாதானம் செய்யவே இங்கு வாரியத்தலைவர் பதவிகள் கொடுக்கப்படுகின்றன.அது எதற்காக என்று தெரியாத சின்னப்பிள்ளைகள் அல்ல தமிழ் நாட்டு மக்கள்.

நேர்மையை அரசியலில் இன்றளவும் கடை பிடிக்கப்போய்தான்,உங்களைப்போல் நெளிவு சுழிவு தெரியாததால்தான்  ஜவகருல்லா ச.ம.உ. ஆக முடியாமல்  அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.
செய்வதெல்லாம் செய்து விட்டு மதத்தின் பின்னால் ஒழிந்து கொண்டு பாதுகாப்பு தேடுவது தவறான து.
இதையேதான் மத வெறியை தூண்டி இந்தியாவை திண்டாடும் இந்துத்துவா பாஜகவும் செய்கிறது,
========================================================================================
ன்று,
ஜூன்-15.


  • உலக  காற்று தினம்

  • திராவிட எழுத்துலக சிற்பி சின்ன குத்தூசி  பிறந்த நாள் ( 1934)

  • ரப்பர் பதப்படும் முறை, சார்லஸ் குடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது(1844)
=========================================================================================


  • உலக  காற்று தினம்
காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.இது ஆண்டுதோறும் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. அதிலும் இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது.

நம் முன்னோர்கள் இயற்கையையே தெய்வமாக எண்ணி வணங்கினர். பஞ்ச பூதங்களான காற்று, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு இவற்றின் தொகுப்புதான் உலகமாகும். மனித நாகரீகம் வளர வளர இயற்கையும் சீர்கேடு அடைய ஆரம்பித்துள்ளது.இயற்கையை சீரழித்தது, உயிரினங்களில் மனிதன் மட்டும்தான். மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அழித்தான்.மரங்களை வெட்டி காடுகளை அழித்து மனைநிலங்களாக மாற்றினான். நிலத்தைத் தோண்டி நிலக்கரி பெட்ரோல் எடுத்து இயற்கையை நாசப்படுத்தினான். நிலத்தடி நீரை உறிஞ்சி நீர் இல்லாமல் வறண்ட பிரதேசமாக மாற்றினான்.
மனிதன் ஐம்பூதங்களையும் பாழாக்கியதன் விளைவுதான் பூமி வெப்பம், பூகம்பம், சுனாமி, வறட்சி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள். இந்த பஞ்ச பூதங்களின் பாதிப்பு தான் மனிதனை பல நோய்களுக்கு ஆளாக்கியுள்ளது. இயற்கையை நாம் எந்தளவுக்கு மாசு படுத்தியுள்ளோம் என்பதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் கொஞ்சமாவது அறிந்து கொள்வோமா?

உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்றுதான். காற்று எங்கும் நிறைந்த பொருள். இதனை கண்ணினால் பார்க்க முடியாவிடினும், இதன் செயலால் இதனை உணர்ந்து கொள்கிறோம். ஆறு அறிவுடைய மனிதன் முதல் ஓரறிவுடைய தாவரம் வரை உள்ள ஒவ்வோர் உயிருக்கும் காற்று இன்றியமையாததாகும். இக்காற்று இல்லையென்றால் எந்த உயிரும் வாழ முடியாது.
காற்றோட்டமில்லாத இடத்திலும், மக்கள் நிறைந்த இடத்திலும் நச்சுக்காற்றுமிகுந்திருக்கும் ஆதலால் அங்கு அதிக நேரம் தங்குவதற்கு சிரமமாக இருக்கும்.ஒருவேளை தங்க நேரிட்டால் தூய காற்றை சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறும் -
உயிர்கள் வாழ்வதற்கு உணவு, நீர், காற்று ஆகிய மூன்றும் அவசியம்வேண்டியவைதான். ஆனாலும் உணவின்றி சில நாட்களும், நீரின்றி சிலமணிநேரங்களும் உயிர்வாழ நம்மால் முடியும். ஆனால் தூய காற்று இல்லையென்றால் சில வினாடிகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது. எனவே உயிர் வாழ்க்கைக்கு தூய காற்று இன்றியமையாதது
உயிரினங்கள் தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடுமிகவும் முக்கியமாகும். தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன்-டை-ஆக்ஸைடு என்றகரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது.உயிரினங்கள் பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன
பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற் சாலையாக இருந்த காடுகளை அழித்ததன்விளைவுதான் காற்றில் கரியமில வாயுவின் ஆதிக்கம் அதிகரித்தது. மேலும் எண்ணற்ற தொழிற் சாலைகளின் புகை, வாகன புகை என பல வகைகளில் காற்றுமாசடைந்து வருவதால் இயற்கை சீர்கெட்டு, மனித இனமும் ஆரோக்கியமின்றி அலைந்து கொண்டிருக்கிறது -
நெருங்கிய வீடுகள், பிளாஸ்டிக் குப்பைகளை எரித்தல், செங்கல் சூளைகள்,சுண்ணாம்புக் காளவாய்கள், இரசாயன தொழிற்சாலைகள், புகையை ஏற்படுத்தும் காட்டுத்தீ போன்றவற்றால் வரும் புகையால் காற்று மண்டலம் மாசடைந்துள்ளது.இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?