இடுகைகள்

ஜூலை, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

லஞ்சம் தமிழகத்தில் மஞ்சம் !

படம்
தமிழ் நாட்டின் நிலை இப்போது மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. எல்லாத்துறைகளிலும் முறைகேடுகள்,ஊழல் உச்சத்தில் உள்ளது. நிர்வாகமோ முற்றிலும் முடக்கம்.அமைச்சர்களுக்கும்,முதல்வருக்கும் துண்டான  கட்சி இணைவதை விட இதுவரை தங்கள் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பதிலும்,தன்மைகள் மீதான குற்றசாட்டுகளில் இருந்து தப்புவதிலும்தான் முழுக்கவனம். ஆட்சியாவது,மக்களாவது என்ற எண்ணம்தான். ஊழல் குற்றசாட்டுகளால் கோட்டையே மறைந்து விட்டது. ஊழல் புகாரில் முன்னாள் முதல்வர் சிறை சென்று மறைந்தார்.அதற்கு பின்னால் வந்த முதல்வர்,இந்நாள் முதல்வர்,90% அமைச்சர்கள் என ஊழல் குற்றசாட்டு  இல்லாதவர்கள் இல்லா நிலை. அமைச்சர்கள் மட்டுமல்ல அதிகாரிகளும்தான்.முன்னாள் தலைமைக் செயலாளர் அரை,கோட்டை வரை ஊழல் ஆய்வு நடந்து இடை பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நாள் காவல்துறை அதிகாரி குட்கா ஊழலில்(நாட்குறிப்பில்) பெயர் பெற்றவர்.  இப்படி பட்ட மாநிலத்தில் ஊழலுக்கு ஆதாரம் கேட்கும் வேடிக்கைகளும் நடக்கிறது. காரணம் இங்குள்ள ஊழல் ஒழிப்புத்துறையின் சிறப்பான செயல்பாடுகள்தான்.  தமிழகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடுகள் முற்றிலும்  முடங்க

ஒற்றை தலைவலி

படம்
ஒற்றை தலைவலி என்பது தலையின் ஒரு பக்கமாக ஏற்படும். தலையின் ஒரு பகுதி மட்டுமே கிட்டத்தட்ட 3 நாட்கள் தொடர்ந்து வலிக்கும் போது அது ஒற்றை தலைவலியாக உணர படுகிறது. இதன் முக்கியமான அறிகுறிகள்: ஒருபக்க தலைவலியுடன் வாந்தி குமட்டல் ஒளி மற்றும் ஒலி போன்றவற்றை உணர்வதில் சகிப்பு தன்மை குறைதல். ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கு 15 நிமிடத்திலிருந்து 1 மணி நேரத்திற்கு முன்னர் பின்வரும் அறிகுறிகள் ஏற்படலாம். பார்வை திறனில் சில மாற்றங்கள் ஏற்படலாம். கருப்பு புள்ளிகள் அல்லது “Z” வடிவங்கள் கண் முன் தோன்றலாம். கழுத்து, தோள் ஆகிய இடங்களில் ஊசியால் குத்துவது போன்று இருக்கலாம். நுகர்தல் உணர்வு இல்லாமல் இருக்கலாம். உடல் சமநிலையில் இல்லாமலும், பேச்சில் தடுமாற்றமும் இருக்கலாம். ஒற்றை தலைவலி இரண்டு வகைப்படும். 1.மரபார்ந்த ஒற்றை தலை வலி 2.பொதுவான ஒற்றை தலை வலி மேலே குறிப்பிட்ட அறிகுறிகளுடன் ஏற்படும் தலைவலி மரபார்ந்த ஒற்றைத்தலைவலி எனவும். அப்படியான அறிகுறிகள் ஏதும் இல்லாமல் வருவது பொதுவான ஒற்றை தலைவலி எனவும் கூறப்படுகிறது. பொதுவாக இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஒளி மற்றும் ஒலி உணர்வது பிடிப்பதில்லை ஆ

நாங்களும் கூட இலுமினாட்டி?

படம்
சமூக வலைத்தளங்களில் மேயும் போது அடிக்கடி இலுமினாட்டிகள் என்ற வார்த்தையாடலை சந்தித்துள்ளேன்.உங்களில் பலரும் என்னைப்போல் இதை கடந்து சென்றிருக்கலாம். கமல்ஹாசன் ஒரு இலுமினாட்டி  என்று ஒரு கட்டுரையும்,காணொலியையும் கண்ட பொது ஆர்வத்துடன் படித்தேன் . அதில் இலுமினாட்டிகள் 18 பேர்கள்தான் இந்த உலகையே ஆட்டிப்படைக்கிறார்கள் என்று கூறி அவர்கள் பெயரையும் கொடுத்திருந்தார்கள். அவ்வளவும் மிகப்பிரபலமான அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள்,சாதனையாளர்கள் பெயர்கள். இதை சொல்ல இலுமினாட்டி என்ற பிரயோகம் எதற்கு.உண்மைதானே.அவர்கள் சாதனையாளர்களாக இருப்பதினால்தானே உலகில் முக்கிய இடங்களை பெறறார்கள்.இதில் இலுமினாட்டி எதற்கு? இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வகையறாக்களால் இந்த இலுமினாட்டி இன்றைய மக்கள் மீது திணிக்கப்படுகிறது. இதில் சைமனின் நாம் தமிழர் கட்சியினர்  மிக முனைப்புடன் செயல்படுகின்றனர்.இந்த இலுமினாட்டி பட்டியலில் வருபவர்கள் 90% யூதர்கள் ,இடது சாரிகள்,பகுத்தறிவாளர்கள் இறை மறுப்பாளர்களாக  இருப்பதுதான் இலுமினாட்டி பற்றிய சந்தேகங்களை நமக்கு கிளப்புகிறது. இந்த இலுமினாட்டியே வலது சாரிகள் தங்கள் எதிரிகளை களையெடுக்க அல்ல

மோடியின் "புதிய இந்தியா" பா.ஜ.க சாதனை மலர்

படம்
.. பிஜேபி & மோடி செய்தசாதனைகள் ! தமிழக அளவில் செய்த சாதனைகள்:- 1. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது! 2. காவிரி நீரை தமிழகத்திற்கு கிடைக்க விடாமல் செய்தது! 3. தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாமல் அவர்களை நிர்வாணமாக போரட வைத்துது! 4. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்ப்பையும் மீறி அனுமதியளித்தது! 5. ஜல்லிகட்டு போராட்ட மாணவர்களை தேசவிரோதிகளாக சித்தரித்து தடியடி நடத்த வைத்தது! 6. மீத்தேன் திட்டத்தை அமல்படுத்த நான்கு டெல்டா மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கியது! 7. காவிரி போராட்டதின் போது கர்நாடகாவில் தமிழர்களை தாக்கியது! 8. கீழாடி அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் நாகரிகம் தெரியாமல் இருக்க கீழடி பணிகளை முடக்கி மண் அள்ளி மூடியது! 9. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கோவையில் கலவரத்தை ஏற்படுத்தியது! 10. தமிழக மீனவர் படுகொலையை நியாயபடுத்தியது! 11. தொடர்ந்து தமிழக நலனிற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றுவது! 12. நீயுட்ரினோ ஆய்வு மையம் மற்றும் கெயில் குழாய் பதிப்பது! 13. எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு நிராகரித்தது! 14. மாநில ஆட்சியில் தலையிட்டு ஆட்சியில

ஆட்சியை கைப்பற்றும் ரகசியம்.

படம்
பலர் நிதிஷ் குமாரை அரசியலில் நாணயமானவர் என்றே இதுவரை நினைத்து வந்திருக்கலாம்  . ஆனால் தானும் இந்த சாக்கடையில் ஊறிய அரசியல் மட்டைதான் என்று காட்டி விட்டார்.     "ஊழல் செய்தவர்களுடன் இணைந்து ஆட்சி செய்ய என்னால் முடியாது "என்று நிதிஷ் கூறுவது சசிகலா கட்சிக்காக தியாகங்கள் செய்தவர் என்ற நகைச்சுவை துணுக்கை விட நகைச்சுவை மிக்கது. லாலு மீது சிபிஐ வழக்கு போட்டது ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்குக்கு முன்பே ,அதன் பின் லாலு மத்திய ரெயில்வே அமைச்சராக எல்லாம் இருந்திருந்திருக்கிறார்.  அதெல்லாம் போகட்டும்.இப்போது லாலு,காங்கிரசுடன் கூட்டணி வைத்து பாஜக கூட்டணியை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் போது இதெல்லாம் நிதிஷுக்கு தெரியாதா?அல்லது திடீர் மறதி வியாதியால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாரா? திடீர் ஊழல் எதிர்ப்பு மாவீரன் ஒப்பனை நிதிஷ் குமாருக்கு பொருந்தவில்லை. அவர் மீதான நம்பிக்கையை மக்கள் மனதில் சிதைத்துத்தான் விட்டது.  பாஜக என்ன ஊழலுக்கு எதிரான கண்ணகி பரம்பரையா? பங்காரு லட்சுமணன் காலத்தில் இருந்தே பாஜக மீது ஊழல் கறை உள்ளது. இன்று அகில இந்திய அளவில் ஊழல்வாதிகள் கலங்கரை விளக