மாடு ஆய்வு குழு. !

😨மாட்டின் பயன்கள் பற்றி  ஆய்வு செய்ய ஆய்வு செய்ய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
19 பேர்களை உறுப்பினர்களாகக் கொண்டது இக்குழு. 

 இந்தக்குழுவில் ஆர்.எஸ்.எஸ். , வி.எச்.பி அமைப்பைச் சேர்ந்த மூவர் இடம்பெற்றுள்ளனர். 

‘நேசனல் ஸ்டீரிங் கமிட்டி’ எனப் பெயரிடப் பட்டிருக்கும் இந்தக்குழுவில் டெல்லி ஐஐடியைச் சேர்ந்த ராம்கோபல் ராவ், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் மன்ஷேல்கர், நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தர் விஜய் பட்கர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்தக்குழுவிற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமை தாங்குவார்.
மாட்டு குழு.
ஆய்வு துவக்கப்பட்ட போது  

மாட்டின் கோமியம்,பஞ்ச கவ்யம் பற்றி ஆய்வு செய்வதுதான் குழுவின் முக்கிய நோக்கம்.

அடுத்த மாதம் இந்தக்குழுவிற்கான முதல் கூட்டம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக்குழுவின் ஆயுட்காலம் மூன்று ஆண்டுகள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.🤔

🤥"பாஜக அரசின் இந்த குழுவை பாரட்டி வரவேற்கிறோம்."
என முதல்வர்கள் நிதிஷ் குமார்,எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் முதலாவது ஆட்களாகக் வரவேற்றனர்.

"இந்த ஆய்வின் மூலம் ஜிஎஸ்டி வரி பாதிப்பினால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு மிகவும் குறையும்.இந்தியா பொருளாதர வல்லரசாக உருவெடுக்கும்" என நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

😗"விவசாயிகள்  பஞ்ச கவ்யத்தை வயல் வெளிகளில் தெளிப்பதின் எல்லா வயல்களிலும் பாஸ்மதி அரிசி விளைந்து அவர்களின் பிரச்னை எல்லாம் தீரும்" என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  கூடுவாஞ்சேரி விமான நிலையைத்தில் பேட்டியளித்தார்.
(அவரின் துறை அவருக்கே தெரியாததால் குறிப்பிட முடியவில்லை.)

😆"கோமியத்தை இந்த ஆய்வின் மூலம் அதிக அளவு உறபத்தி செய்து காவிரி பிரச்னையை தீர்க்கலாம்.கர்னாடகாவிடம் இனி தண்ணீர் கேட்டு கெஞ்ச வேண்டாம்.இதை எதிர்க்கும் ஸ்டாலினும்,கமல்ஹாசனும் இன்னும் அரசியலில் பக்குவ‌மடையவில்லை "என தமிழிசை கருத்து தெரிவித்தார்.

😎"மாட்டின் கோமியம்,பஞ்சகவ்யம் பற்றி ஆய்வு செய்ய குழு அமைத்ததன் மூலம் இன்னுமொரு "புதிய இந்தியா'  பிறந்துள்ளது.வாழ்த்துகள்"என்று இன்ப சுற்றுலா சென்றுள்ள பிரதமர் மோடி  அன்டார்டிகாவில் இருந்து டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.


மக்கள் அல்லாடும் பிரசனைகளுக்கு இந்தியாவில் வறுமையா என்ன?

வேலைவாய்ப்பு,குடிநீர்,விவசாயம்,நீட்,ஜி.எஸ்.டி  என்று எத்தனையோ  வருகிறது. 
எதற்காவது இந்த பாஜக அரசு முதலாவது குழு அமைத்து ஆய்வு செய்து முடிவெடுத்ததா?
பாஜக அரசே திட்டமிட்டு மக்கள் மீது திணித்த பண மதிப்பிழப்பு,நீட்,மாட்டிறைச்சி என்று எதிலாவது மக்கள் கேட்க ஓர் ஓரமாக  மனதிலாவது நினைத்ததா?

ஏன் .மாட்டின் மீது மட்டும் இந்த பாசம்,பரிவு,
இதில் நூற்றில் ஒரு பங்காவது தனக்கு வாக்களித்து நாடு,நாடாக சுற்றுலா போக வைத்திருக்கும் மக்கள் மீது மோடி காட்டுகிறாரா?

தன்னை சந்திக்க வரும் நடிகைகளுக்கு ஒதுக்கும் நேரத்தை அவரால் விவசாயிகள்,மக்கள் பிரச்னைக்காக வருபவர்களை சந்திக்க ஒதுக்க முடிகிறதா?

இதில் வேறு உலகிலேயே தன்னை ஆள்வோர் மீது நம்பிக்கை வைத்துள்ள நாடுகளில் இந்தியாதான் (74%)முதலிடமாம்.

நாட்டை ஒரு வழி செய்வதில் மோடிக்கு இருக்கும் ஆர்வத்தை விட இந்திய மக்களுக்குத்தான் அதிக ஆர்வம் இருப்பது போல் தெரிகிறது.

மாற்றி யோசித்தால் எப்படியோ இந்த வாழ்வில் இருந்து அப்படியாவது தப்பிக்கலாமா என்ற எண்ணமாக கூட இருக்கலாம்.
========================================================================================
ன்று,
ஜூலை-18.


  • உருகுவே அர சு அமைப்பு தினம்(1830)
  • தென்னாப்பிரிக்க கறுப்பின தலைவர் நெல்சன் மண்டேலா பிறந்த தினம்(1918)
  • நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது(1966)
  • வியட்நாம் ஐ.நா.,வில் இணைந்தது(1977)
  • கவிஞர் வாலி இறந்த தினம்(1993)

=========================================================================================


சிறைக்குள் சசிகலா தர்பார் நடத்தியதை டிஐஜி ரூபா முழுமையாக படம் பிடித்திருக்கிறார். 


அப்படி படம் பிடித்தபோது நைட்டி உடையில் இருந்த சசிகலா டிஐஜி ரூபாவை தடுத்து நிறுத்த முயற்சித்திருக்கிறார். 


அத்துடன் ரூபாவுடன் வாய்ச்சண்டையும் போட்டிருக்கிறார் சசிகலா.



தைரியம் இருந்தால் கமல் அரசியலுக்கு வரட்டும்: அமைச்சர் ஜெயக்குமார் சவால்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?