கூடுதல் விலை மின்சாரம்

மாநில மின் விநியோக நிறுவனங்கள் காற்றாலை மின்சாரத்தை வாங்குவதற்கான புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமலிருப்பதால், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களிலிருந்து பெறப்படும் மின்சாரம் இரண்டாண்டுகளாக அடைந்த வளர்ச்சி தடைப்பட்டிருப்பதாக, மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள குறிப்பில் குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய சூரிய சக்திக் கழகம் நடத்திய ஏலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3.46 என்ற விலையில் தர நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன. 

அதனால், ஒரு யூனிட் ரூ.4.60 என்ற பழைய விலையில் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களைச் செய்ய மாநில மின் விநியோக நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. 

இதனால், தனியார் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதால், கூடுதல் விலைக்கு வாங்க மாநில மின் விநியோக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நெருக்குதல் கொடுக்கிறது.

சூரியசக்தி அல்லாத புதுப்பிக்கத்தக்க சக்திகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களை உற்பத்தியாளர்கள் நிறுத்திவிடுவார்கள்என்றும், இதனால் இந்த மின் உற்பத்தியின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் பானு பிரதாப் யாதவ் கூறியுள்ளார்.

(கூடுதல் விலைக்கு) மின்சாரம் கொள்முதல் செய்யும் ஒப்பந்தங்களைத் தடுக்கக்கூடாது என்று மாநில மின் ஒழுங்குமுறை ஆணையங்களை எச்சரிக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தனியார் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலஅரசுகளுக்கு மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக இந்த நெருக்குதலை மத்திய அரசு கொடுத்துள்ளது.

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் வைப்பதற்கு, மாநிலஅரசுகள் விற்பனை வரி, மதிப்புக் கூட்டும்வரி ஆகியவற்றைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஒரே வரி என்ற முழக்கத்துடன் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டாலும், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு ஆகியவை ஜிஎஸ்டி வரம்புக்குள் வராது என்று மத்திய அரசுஅறிவித்திருந்தது. 

அதனால், இவற்றுக்கு பழைய அனைத்து வரிகளும் வசூலிக்கப்படுகின்றன. 
மின்சாரம், உரங்கள், பிற பெட்ரோலிய வேதிப் பொருட்கள் தயாரிப்பில் இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படுகிறது.
பெட்ரோல்முதல், நாஃப்தா வரை கச்சா எண்ணெய்யிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மூலப்பொருட்களுக்கு செலுத்தப்படும் ஜிஎஸ்டி அல்லாத வரிகளை, உற்பத்திப்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து கழித்துக் கொள்ள முடியாது. 
அதனால், இவை தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவை அதிகரிப்பதால், மாநிலஅரசுகள் வரிகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி நிதியமைச்சர்அருண் ஜெட்லி மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இரட்டைப் பாலியல் வன்குற்ற வழக்கின் கிரிமினல் குற்றவாளியான குர்மீத் சிங்கிற்கு ஆதரவாக ஒட்டு மொத்த பாஜக கும்பலும் களத்தில் இறங்கியுள்ளது.

இதில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் பாஜக தலைவர் அமித்ஷா.சாமியார் மீது குற்றம் இல்லை; அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்றம் மீதுதான் குற்றம் என்று கூறியிருக்கிறார்.தீர்ப்பு நாளன்று கலவரம் வெடிக்கும் என்று தெரிந்தே மெளனமாக இருந்தார் ஹாரியானா மாநில பாஜக முதலமைச்சர் கட்டார். அதேசமயம் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ், குற்றவாளி சாமியாருக்கு ஆதரவாக குரல் எழுப்பினார். சிபிஐ நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தார். 

பாஜகவின் முதலமைச்சர் சாமியாரின் ஆதரவாளர்கள் கூடுவதையும். அவர்கள் கலவரத்தில் ஈடுபடுவதையும் தடுப்பதற்கான வேலைகளில் இறங்கவில்லை. 
மாநில அரசு இயந்திரத்தையும் முடக்கிவிட்டு மௌனமாக இருந்துவிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியோ தனது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் வேதனையடைந்தேன் என்று மட்டும் குறிப்பிடுகிறார். தேசத்தின் தலைநகரை அடுத்து உள்ள ஹரியானாவை கட்டுக்குள் கொண்டு வர பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ உடனடியாக தலையிடவில்லை.கள்ளச் சாமியாரான குர்மீத்சிங்கிற்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இவ்வளவு தைரியம் எப்படி வந்தது? 
பாஜகவின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை. 

இந்த பின்புலத்தைத் தான் நாம் அறிய வேண்டியுள்ளது.
ஹரியானா மாநில பாஜக, தேரா சச்சா சவுதா அமைப்புடன் மிக நெருக்கமான உறவு வைத்து வருகிறது. ஹரியானா மாநில கல்வியமைச்சர் ராம் பிலாஸ் சர்மா இன்னும் மேலே போய், 144 தடை உத்தரவு சாமியாரின் ஆதரவாளர்களுக்கு பொருந்தாது என்று பகிரங்கமாக சொல்கிறார்.
குர்மீத்துடனான மேற்படி கல்வி அமைச்சரின் தொடர்பு மிகவும் வெளிப்படையானது. சமீபத்தில் சாமியாருக்கு 51 லட்சம் ரூபாயை அரசு சார்பில் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கல்வியமைச்சரை அடுத்து சாமியாருக்கு மிக நெருக்கமாக இருப்பவர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ். இவர் மாநில அரசின் நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ரூபாயை தேரா நிர்வாகத்தின் விளையாட்டு திட்டத்திற்காக நன்கொடையாக வழங்கியுள்ளார்.ஹரியானா மாநில அச்சுமற்றும் ஸ்டேசனரி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் மனிஸ் குரோவர்,தேரா மடத்திற்கு 11 லட்சம் ரூபாயை தனது அமைச்சக நிதியிலிருந்து நன்கொடையாக வழங்கினார்.

அரசாங்க நிதியினை தனிப்பட்ட சாமியாருக்கு தங்களுடைய அரசியல் தேவைக்காக பாஜக வாரி வழங்கியுள்ளது.
இவர்கள் இந்த நன்கொடைகளை வழங்கும் போது சாமியார் மீது பாலியல் வழக்கு நடைபெற்று வருவதை அறிந்தவர்களே.பாஜகவின் மத்திய தலைமையும் மேற்படி கள்ளச்சாமியாருடன் நெருக்கமான தொடர்புகளை வைத்துள்ளது. 

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், தேரா நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்துள்ளார். 

2014இல் நடைபெற்ற ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலின் போது சிர்சா பகுதியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற மோடி, பாலியல் வழக்கில் சிக்கியிருந்த சாமியாரை மிக வெளிப்படையாகவே புகழ்ந்து பேசியுள்ளார்.

 இதற்கு முன்பு காங்கிரஸ் மற்றும் அகாலிதள கட்சி தலைவர்கள் மறைமுகமாக சாமியாரை சந்தித்து வந்தனர், பேசியும் உள்ளனர். ஆனால் பாஜகவும், மோடியின் ஆட்களும் நேரடியாகவே அவருடன் கைகோர்த்துக் கொண்டனர்.
கள்ளச்சாமியாரும் முதல் முறையாக ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிக்குமாறு தனது ஆதரவாளர்களை நேரடியாக கேட்டுக்கொண்டதும் நடைபெற்றது. 

இதற்கு முன்பு இவ்வாறு அரசியல் கட்சிகளுக்கு அவர் வாக்கு கேட்டதில்லை.கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் தில்லியில் அமித் ஷா - ராம் ரஹிம் சந்திப்பு நடந்துள்ளது. இந்தசந்திப்பின்போது 2019இல் நடைபெறவுள்ள ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்களில் சாமியாரின் ஆதரவு தேவை என்று கோரியுள்ளார்.

அமித்ஷாவை சந்தித்து வந்த சில நாட்களிலேயே பாஜகவின் பொதுசெயலாளர் கைலாஷ்விஜய்வர்கியா 44 பாஜக வேட்பாளர்களுடன் சாமியாரை சந்தித்துள்ளார். சாமியாரும் வேட்பாளர்களை நேரடியாக சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.மோடிஅரசு சாமியாரை தனது தூய்மை பாரத இயக்கத்திற்கு பயன்படுத்தி வருகிறது.

இதுபற்றி மோடி தனது டுவிட்டர் பதிவில், பாபா ராம் ரஹிம்ஜி யும் அவரது ஆதரவாளர்களும் வெகு சிறப்பானமுயற்சிகளை மேற்கொள்கிறார்கள். 

அவர்கள் இந்தியா முழுவதும் உள்ள அவர்களது ஆதரவாளர்களை தூய்மை பாரத திட்டத்திற்கு இணைக்கிறார்கள். ( 28.10.2014) எனப் பதிவு செய்துள்ளார்.பாஜகவை பொறுத்தளவில்,குர்மீத் ராம் ரஹீம் சிங், அக்கட்சிக்கு ஒரு மதிப்புமிக்க கூட்டாளி. ஒரு கோடிப் பேரைக் கொண்ட தேரா அமைப்பில் பெரும்பாலானோர் ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களே. 

அவர்களின் வறுமையையும், அறியாமையையும் பயன்படுத்தி, தன்னைச்சுற்றி ஒரு ஒளிவட்டத்தை ஏற்படுத்திக் கொண்டகுர்மீத் சிங், தன்னைப் போற்றும் மக்கள் கூட்டத்தை, பாஜகவுடன் பேரம் பேசி, வாக்கு வங்கியாக மாற்றிவிட்டார்.

2019இல் நடைபெறயிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஹரியானா மற்றும்பஞ்சாப் மாநிலங்களில் சாமியாரின் ஆதரவாளர்களை பாஜகவின் வாக்கு வங்கியாக மாற்றிட தொடர்ந்து அவருடன் நெருக்கமான தொடர்புகளை பாஜக தலைவர்கள் வைத்து வருகின்றனர். 

தேரா அமைப்புடன் பாஜக தேர்தல் ஆதாயத்திற்காக தொடர்புகளை கொண்டுள்ள நிலையில், ஆர்எஸ்எஸ், தேரா அமைப்பை பயன்படுத்தி சமூக ரீதியாக அவர்களின் ஆதரவாளர்களை திரட்ட திட்டமிட்டுள்ளது. 

தேரா அமைப்புடன் இணைந்து பல ஆண்டுகளாக ராதா சோவமி சத்சங் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தி வருகிறது.தேரா அமைப்பானது சீக்கிய தலித் மக்களுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்துள்ளது. இவர்கள் சாதி ஆதிக்க சீக்கியர்களால் மோசமாக நடத்தப்படுகிறார்கள்.

இதைப்பயன்படுத்தி தலித் சீக்கியர்களை இந்து மதத்திற்கு மாற்றும் வேலையினை தேரா மூலமாக ஆர்எஸ்எஸ் மேற்கொண்டு வருகிறது.சீக்கிய மதத்திற்குள் நிலவும் சாதிய முரண்பாட்டை ஆர்எஸ்எஸ் தனது மதவாத அரசியலுக்காக பயன்படுத்தவே விரும்புகிறது. 

ஆர்எஸ்எஸ்சின் இந்த திட்டத்தை முன்னெடுத்துச்செல்வதற்கான முறையில் அதன் தலைவர் மோகன் பகவத் தெற்கு பஞ்சாப்பில் உள்ள மான்சாவிற்கு 2014ஆம் ஆண்டில் பல முறை வருகைதந்து நேரம் செலவழித்துள்ளார்.

பஞ்சாப் - ஹரியானா சமூக அரசியல் தளத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் தேரா அமைப்புக்கள் ஒரே வழியில் கரம் கோர்த்துள்ளன.கலவரம் நடந்தாலும் ஹரியானா முதல்வர் கட்டார் வேடிக்கை பார்த்ததன் பின்னணி இதுதான்!

=====================================================================================

ன்று,
ஆகஸ்ட்-31.
  • மலேசிய விடுதலை தினம்(1957)
  • கிர்கிஸ்தான் விடுதலை தினம்(1991)
  • வடகொரியா தனது முதலாவது செயற்கைகோளை ஏவியது(1998)
=====================================================================================

தற்போது வருகின்ற  கோபமூட்டும் செய்திகளாக படித்து இருக்கும் தங்கள் மண் இளைப்பாறலுக்கு.கீழே சுழலும் கரு வளையத்தை ஒரு 30 நொடிகள் பார்த்து விட்டு அதன்பின் அதன் கீழ்   உள்ள படத்தையோ ,ஆந்தை படத்தையோ ,அல்லது உங்கள் உள்ளங்கையையோ  பாருங்கள்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?