ஊழல்னா என்னங்க?

ஊழல் பாஜக ஊழல் மோடி

“நான் ஊழல் செய்யமாட்டேன்; எவரையும் ஊழல் செய்யவும் விட மாட்டேன்!” -இது 2014 தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடிமுழங்கியது! 

ஊழல்களில் மூழ்கியிருந்த காங்கிரஸ் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியின் பின்னணியில் மோடியின்கூற்று மக்களிடம் சாதகமான தாக்கத்தை உருவாக்கியது. 

மோடி முதல்வராக இருந்த குஜராத்திலேயே பல ஊழல்கள்நடைபெற்றன எனும் உண்மை மக்களிடம் சென்றடையவில்லை. குஜராத் ஊழல்கள் பற்றிய பிரச்சாரமும் பலவீனமாக இருந்தது.

தற்போது, பா.ஜ.க.வின் 40 மாத ஆட்சியில் வேலையின்மை, விவசாயிகளுக்கு வருமானம், கறுப்புப் பணம் ஆகிய பிரச்சனைகள் எப்படி மோடியின் வாய்பந்தலாக மாறியதோ அதே போல ஊழலுக்கு எதிரான போரும் வெற்றுப் பேச்சாகவே அமைந்தது என்பதை மக்கள் உணர தலைப்பட்டுள்ளனர்.

ஊழலை ஒழிக்க “லோக்பால்” எனும் அமைப்பு உருவாக்க வேண்டும் என்பது ஊழல் எதிர்ப்பாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை. அனைத்து மட்டங்களில் உள்ளஅரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊழல்குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக லோக்பால் இருக்க வேண்டும் என்பதே கோரிக்கையின் அடிநாதம் ஆகும்.

2013ஆம் ஆண்டு அன்னா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியக் கோரிக்கை இதுதான்! அப்பொழுது அன்னா ஹசாரேவை ஆர்.எஸ்.எஸ். உட்பட மோடியும் பாஜகவும்ஆதரித்தனர். 

லோக்பால் சட்டம் 2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. 
லோக்பால் அமைப்பில் ஒரு தலைவரும், 8 உறுப்பினர்களும் இடம்பெற வேண்டும். 
பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதி,ஒரு சிறந்த நீதித்துறை நிபுணர் ஆகியோர் அடங்கிய குழுலோக்பால் தலைவரை தீர்மானிக்க வேண்டும். 

ஆனால் ஆட்சியில் அமர்ந்து 40 மாதங்கள் கடந்த பின்னரும் லோக்பால் அமைக்கப்படவில்லை.
லோக்பால் எனும் சொல்லையே மோடி மறந்துவிட்டார் போலும்!லோக்பால் எனும் கோட்பாடிற்கு சாவு மணி அடிப்பதுபோல ராஜஸ்தான் மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசாங்கம் ஒரு அவசரச் சட்டத்தை அறிவித்துள்ளது. 

இந்தசட்டத்தின்படி எந்த ஒரு அரசு அலுவலர் அல்லது அரசியல்வாதி மீதும் மாநில அரசாங்க அனுமதி இல்லாமல் எவரும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தக் கூடாது. அது மட்டுமல்ல; பத்திரிகைகள் இது பற்றி எழுதவும் கூடாது. நீதி மன்றங்களும் வழக்கை விசாரிக்கக் கூடாது; 
ஊழலுக்குஎதிரான நடவடிக்கைக் கோரி எவரும் இயக்கம் எதையும் நடத்தக் கூடாது. 

அவ்வாறு பத்திரிகையோ அல்லதுசமூக அரசியல் இயக்கங்களோ மீறி ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தால் இரண்டு ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும். இத்தகைய ஊழலுக்கு ஆதரவான சட்டம் எந்த மாநிலத்திலும் இல்லை. 
இந்த சட்டம் சரியானதுதான் என மத்திய அமைச்சர் ஒருவர் ஆதரித்துள்ளார் என்பதுமேலும் கொடுமை!

ஊழலுக்கு எதிரான மோடியின் குரல் எத்தகைய வெத்து வேட்டு என்பதை லோக்பால் அமைப்பதில் காட்டும் உதாசீனமும் ராஜஸ்தான் பா.ஜ.க. மாநில அரசாங்கத்தின் சட்டமும் தெளிவுபடுத்துகின்றன. இதில்ஆச்சரியம் அடையவோ அல்லது அதிர்ச்சி பெறவோ ஒன்றும் இல்லை. காங்கிரசைப் போலவே பா.ஜ.க.வும் ஊழலில் ஊறிய கட்சிதான்! 

மோடியின் ஆட்சி அல்லது பா.ஜ.க. மாநில அரசாங்கங்களின் ஆட்சியில் நடந்துள்ள சில ஊழல்கள் இதனை தெளிவுபடுத்துகின்றன. 

இவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

இவை மட்டுமல்லாது மத்தியப் பிரதேசத்தில் நடந்த வியாபம் போன்ற ஊழல்களும் உள்ளன.


மோடியின் ஆட்சியில் அதானி மட்டும் பெற்ற சலுகைகள் ஏராளம். அவற்றில் சில:
ஆண்டு 2005. முந்த்ரா துறைமுகம் மற்றும் சிறப்புபொருளாதார மண்டலத்திற்கு 16,000 ஏக்கர் நிலம் ஒரு சதுர அடி வெறும் 12 பைசாவுக்கு தரப்பட்டது. 
சந்தை விலை சதுர அடிக்கு ரூ.102. அதானிக்கு ஆதாயம் ரூ.6546கோடி.

2006-09ஆம் ஆண்டுகளில் குஜராத் பெட்ரோலிய நிறுவனம் இயற்கை வாயுவை அதிக விலைக்கு வாங்கி அதானிக்கு குறைவாக விற்றது. அதானி பெற்ற ஆதாயம் ரூ. 70.5 கோடி.
2015ஆம் ஆண்டு இறக்குமதி வரி மற்றும் எக்ஸைஸ் வரி தள்ளுபடி ரூ.1000 கோடி.ட ஆண்டு 2016 நிலக்கரி ஊழல் மூலம் ஆதாயம் ரூ.50,000 கோடி. 
அமலாக்கத் துறை விதித்த அபராதம் ரூ.5,000 கோடி.

2016 வர்த்தக அமைச்சகம் சிறப்பு பொருளாதார மண்டலம் தொடர்பான விதிகளை திருத்தியதன் மூலம் அதானிக்கு லாபம் ரூ.500 கோடி.
இதனை வெளியிட்ட எகனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி ஆசிரியர் பதவி விலக நேர்ந்தது.
2002ஆம் ஆண்டு ரூ.3000 கோடியாக இருந்த அதானியின் வருமானம் 2015ஆம் ஆண்டு ரூ.75,659 கோடியாக உயர்ந்ததில் என்ன ஆச்சர்யம் உள்ளது? 

2014ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பயன்படுத்திய விமானம் அதானிக்கு சொந்தமானது . அத்தேர்தலில்  அதானி செய்த செலவு ரூ.10,000 கோடி எனவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.

இந்த ஊழல்களின் வரிசையில் தற்பொழுது அமித்ஷாவின் மகனின் ஊழலும் சேர்ந்துள்ளது. 
இந்த ஊழல்களை வெளியிடும் பத்திரிகைகள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் பா.ஜ.க. தாக்குதல் நடத்துகிறது. 

அதானியின் ஊழலை வெளியிட்ட எகனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி ஆசிரியர் பதவி விலக நிர்ப்பந்திக்பப்பட்டார்.
பா.ஜ.க.வை விமர்சித்த இந்துஸ்தான் டைம்ஸ்ஆசிரியர் பதவி விலக வேண்டி வந்தது. 
அதே போல பா.ஜ.க.வை விமர்சித்த என்.டி.டி.வி. மீது வழக்குகள் போடப்பட்டன. 
ஜெய் ஷாவின் ஊழலை வெளிப்படுத்திய தி வயர் இதழை முடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
பா.ஜ.க. எவ்விதத்திலும் ஊழலை ஒழிக்க முடியாது என்பதை மக்கள் வேகமாக உணர ஆரம்பித்துள்ளனர். 
நகமும் சதையும் போல நவீன தாராளமயமும் ஊழலும் பிரிக்க முடியாதவை. 
ஊழல் பல ஆண்டுகளாகவே இருந்தாலும் நவீன தாராளமயக் கொள்கைகள் ஊழலின் இமாலய வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன. 
ஊழல் ஒழிப்பு குறித்த மோடியின் பொய்கள் பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய அரசியல் தோல்வியை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
                                                                                                                                         அ.அன்வர் உசேன்  
                                                                                                                           
 ஆ தாரங்கள்:
 1)cpim.org
2) இந்துஸ்தான் டைம்ஸ்/23.10.2017/
3) தி வயர்/25.09.2017
==================================================================================================================================
ன்று,
அக்டொபர் -27.


  • பென்சல்வேனியாவின் ஃபிலடல்ஃபியா நகரம் அமைக்கப்பட்டது(1682)
  • முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் பிறந்ததினம் (1920)
  • நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது(1961)
  • காங்கோ ஜனநாயக குடியரசு, சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1971)

கேரளாவில்  கோட்டயம் மாவட்டம், உழவூர் கிராமத்தில் 1920 அக்டோபர் 27ல்கே.ஆர்.நாராயணன்  பிறந்தார். 
கோட்டயத்தில் கல்லுாரி கல்வியையும், கேரள பல்கலையில், முதுநிலை பட்டப் படிப்பையும் முடித்தார். இதழியல் படிப்பை முடித்த அவர், ஆங்கில நாளிதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றினார். 
லண்டன் பொருளாதார கல்விக் கழகத்தில், அரசியல் அறிவியலில் மேல்படிப்பை முடித்தார். 
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் துணைவேந்தராக பணியாற்றியவர்.
இந்திரா வேண்டுகோளை ஏற்று, 1984ல் அரசியலுக்குள் வந்தார். 
கேரள மாநிலம், ஒட்டப்பாலம் லோக்சபா தொகுதியில், தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றார். 
ராஜிவ் அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராக பொறுப்பு வகித்தார். 
1992ல் நாட்டின் ஒன்பதாவது துணை குடியரசுத்தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். 
1997ல் இந்தியாவின் குடியரசுத்தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். 
2005 நவ., 9ல் காலமானார். 
   கமல்ஹாசன் அறிக்கை.

சேகர் ரெட்டிக்கு ரிசர்வ் வங்கியே உடந்தையா?

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுபவர் தொழிலதிபர் சேகர் ரெட்டி.
அவரது வீட்டிலும் அவரது கூட்டாளிகளிடமிருந்தும் வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ரூ.33 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம்ரூபாய் நோட்டுகள் அவர்களுக்குக் எப்படிகிடைத்தது என்பதை நிரூபிக்க முடியவில்லை என்று சிபிஐ கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பணமதிப்பு இழப்பு செய்யப்பட்ட பின்னர் நாடுமுழுவதும் பொதுமக்கள் ஒன்றிரண்டு தாள்களைமாற்றிக்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வளவு பெரியதொகையை அவர்கள் மட்டும் எப்படி மாற்றினார்கள் ? 
வங்கி அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் ஆசியில்லாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

வங்கிகளுக்கு விநியோகிக்கப்படும் ரூபாய்நோட்டுகளின் வரிசை எண்கள் கொண்ட பதிவேடுகளைப் பராமரிக்க வில்லை என்று நாட்டின் ரிசர்வ் வங்கி கூறுவது ஏற்கக்கூடியதாக இல்லை. வேண்டுமென்றே அந்த ஆவணங்கள் பராமரிக்கப்படவில்லையா? 
அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா ? 
புதிய ரூபாய் நோட்டுகள் அரசுப் பணக் கிடங்குகள் வரை சென்று சேர்ந்தது குறித்த தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகம் பற்றி பணக் கிடங்குகளுக்கு அப்பால் எவ்வித தகவல்களும் சேகரிக்க முடியவில்லை’ என்றும் சிபிஐ போன்ற மிகப்பெரிய விசாரணை அமைப்பு கூறுவது வேடிக்கையாக உள்ளது. 

மகாராஷ்டிரா மற்றும்மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனங்கள் மத்திய அரசின்கட்டுப்பாட்டில் உள்ளன. அதேபோல, கர்நாடகத்திலும், மேற்குவங்கத்திலும் உள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனங்கள் இந்தியரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. 

எனவே ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட புதிய ரூபாய் நோட்டுக்கள் எந்த வங்கியிலிருந்து வாங்கப்பட்டன என்பதை மத்திய அரசு தான் விளக்கவேண்டும்.

இந்த வழக்கில் 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ரெட்டியும் அவரது கூட்டாளிகளும் ஏற்கெனவே ஜாமீனில்வந்துவிட்டனர். ஆதாரம் இல்லை என்றவுடன், ‘தன் மீதுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று ரெட்டி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்.

ஏற்கெனவே, கண்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் திருப்பூரில் பிடிபட்ட வழக்கும், கரூர் அன்புநாதன், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் மீதெல்லாம் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை தொடர்பான விசாரணை என்ன ஆனது என்றே தெரியவில்லை.

எனவே அதோடு சேர்ந்து ரெட்டி மீதான இந்தவழக்கையும் நீர்த்துப்போகச் செய்ய மத்தியஅரசில் அதிகாரமிக்கவர்களின் துணையோடு சதி நடப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

எனவே ஆட்சியாளர்களின் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகாமல் ரிசர்வ் வங்கி, தன்னிடமுள்ள ஆதாரங்களை முறையாக சிபிஐ வசம் ஒப்படைத்து குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கச் செய்ய முன்வரவேண்டும்.
==========================================================================================
                                       எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.எம்ஜிஆர் எங்கே?
                                                 எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.மக்கள் எங்கே?



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?