அரசு வங்கிகளை காப்பாற்றுவது எப்படி?




பாஜக  முறை. 

அண்மையில் நிதி அமைச்சர் ஜெட்லிஅறிவித்துள்ள வங்கிகளின் மூலதனத்தைக் கூட்டுவது தொடர்பானநடவடிக்கைகள் பற்றி பல குழப்பமானகருத்துக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அரசாங்கம் சொல்லாத சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்வோம்.

ஏற்கெனவே மந்த நிலையில் இறங்கியிருந்த இந்திய பொருளாதாரம், செல்லாக்காசு பிரச்சனை, விலங்கு சந்தைகளில் அரசு ஏற்படுத்திய குழப்பம், தயாரிப்பின்றியும் மாநிலங்களின் ஜனநாயக உரிமைகளை காலில் போட்டுமிதித்தும், சிறு,குறு தொழில்முனைவோரையும் வணிகர்களையும் மறைமுக வரிவலைக்குள் கொண்டுவரும் நோக்குடனும் அமல்படுத்தப்பட்டு வரும் ஜிஎஸ்டி ஆகியவற்றால், மேலும் கடுமையாக சீர்குலைந்துள்ளது.

தொடர்ந்துமத்திய அரசு இதனை மறுத்துவந்தாலும் இதன் உண்மை கருதி மறுபக்கம் பல“புதிய” தடாலடி அறிவிப்புகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இப்பொழுது வந்துள்ள அறிவிப்புகளில் பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனம் அளித்தல் தொடர்பானதை மட்டும் இப்பதிவில் சுருக்கமாக காண்போம்.
2.11 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளின்மறுமூலதனமயத்திற்கு செலவிட உள்ளதாக ஜெட்லி அறிவிப்பு கூறுகிறது. 
இதில் பட்ஜெட் மூலம் 19 ஆயிரம் கோடிகளுக்கு சற்றுக் குறைவாக மட்டுமே தரப்பட உள்ளது.
(இது ஏற்கெனவே பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட தொகையை விட மூவாயிரம் கோடி மட்டுமே அதிகம்.) வங்கிகள் பங்கு சந்தையில் பங்குகளை விற்று ஐம்பத்து எட்டாயிரம்கோடி ரூபாய் திரட்ட வேண்டும். 
இதுதனியார்மயம் தவிர வேறல்ல.

 மீதம்கணிசமான தொகையை அரசு “மறுமூலதன பாண்டு”களாக வங்கிகளுக்கு விற்று வங்கிகளின் மூலதன அளவை உயர்த்தும். 


இது வங்கிகளின்போதுமான மூலதன விகிதத்தை பாஸல் நெறிமுறைகள் – 3 என்ற பெயரில்பன்னாட்டு நிதி மூலதனம் பரிந்துரைக்கின்ற அளவிற்கு கொண்டுவரும். 

ஆனால் பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த நெறிமுறை அவசியம் அல்ல. ஏனெனில், அரசு வங்கிகள் என்பதால் மக்களின் முழுநம்பிக்கையை பெற்றுள்ள வங்கிகள் இவை.

(தனியார் வங்கிகளையே பெரும்பாலும் கொண்ட முன்னணி முதலாளித்துவ நாடான அமெரிக்கா கூடபாஸல் நெறிமுறைகள் - 3 அமலாக்கத்தை ஏற்கவில்லை.)
எனினும் இதை செய்துதான் ஆகவேண்டும் என்று கருதினாலும் பொதுத்துறை வங்கிகளுக்கு பாண்டுகள் விற்பதற்குப் பதில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு கடன் பெற்று இத்தொகையை வங்கிகளுக்கு கொடுத்திருக்க முடியும். 

இரண்டுமே பிஸ்கல் பற்றாக்குறையைக் கூட்டும் என்பதால் இதில் வேறு பிரச்சனை இல்லை.மாறாக வங்கிகளை காசு கொடுத்து பாண்டுவாங்க வைப்பது பொருத்தமானதுஅல்ல.
உண்மையான பிரச்சனை என்ன? 
வாராக்கடன் பிரச்சனை பூதாகாரமாக ஆகியுள்ளதால் வங்கிகளுக்கு சிக்கல்ஏற்பட்டுள்ளது. 

பொதுத்துறை வங்கிகளின்வராக்கடன் ஏன் அதிகரித்தது? 
இதற்கான மூலம் தாராளமயக்கொள்கைகளில் உள்ளது.

நாடு விடுதலை பெற்றவுடன் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்நோக்குடன் நீண்டகால கடன்களை குறைந்த வட்டியில் தருவதற்காக வளர்ச்சிசார் வங்கிகள்உருவாக்கப்பட்டன.
உள்ளிட்ட பல நிதி நிறுவனங்கள் மத்திய அரசாலும் இவைபோன்றவை மாநில அரசுகளாலும் அமைக்கப்பட்டன. இவை நீண்ட காலம்எடுக்கும் கட்டமைப்புத்துறை முதலீடுகளை மேற்கொள்ள குறைந்த வட்டி கடன் அளித்தன. 

இந்நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி உள்ளிட்டு சில அரசு நிறுவனங்களிடம் இருந்து குறைந்த வட்டியில் கடன் பெறவும் ஏற்பாடு இருந்தது.
ஆனால், தாராளமயக் கொள்கைகளின்படி நிதித்துறை படிப்படியாக முழுமையாக பன்னாட்டு, இந்நாட்டு ஏகபோகங்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. நரசிம்மம் கமிட்டி பரிந்துரையில் துவங்கி அடுத்தடுத்து வந்த அரசு கமிட்டிகள் ளயீநஉயைடளைநன வளர்ச்சிவங்கி செயல்பாடுகள் தேவையில்லை, 

எல்லா வங்கிகளும் எல்லாவிதமான சேவை பணிகளையும் அனைத்துவாடிக்கையாளர்களுக்கும் வணிக அடிப்படையில் அளிக்கலாம் என்ற மாற்றங்களைக் கொணர்ந்தனர். 

கடந்த பல ஆண்டுகளாக அரசுபொதுத்துறை முதலீடுகளை குறைத்துவரும் சூழலில், பெரும் தனியார் நிறுவனங்களுக்கு கட்டமைப்புத்துறை முதலீடுகளை மேற்கொள்ள பொதுத்துறை வங்கிகள் கடன் கொடுத்துள்ளன.

இவற்றில் பல இன்று வராக்கடன்களாக மாறியுள்ளன. 

மீண்டும் வளர்ச்சிசார் வங்கி நிறுவனங்கள் தேவை என்பதையும் அவை பொதுத்துறையில் இருக்க வேண்டும்என்பதையும் ஏற்க தாராளமய ஆதரவாளர்கள் தயாராக இல்லை. 

இந்த அடிப்படை விஷயங்களில் தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய அரசு தயாராக இல்லை. இப்பொழுது முன்வைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் புதிதாக உதித்தவை அல்ல, ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கும் முன்பே இந்த அரசே முன்வைத்தவை தான். 
இவை பிரச்சனைகளை தீர்க்காது.

வராக்கடனால் பாதிக்கப்பட்டிருக்கும் வங்கிகளை  இவற்றின் மூலம் உயர்வதால் வங்கிகள் மீண்டும் கடன்கொடுக்கும் வாய்ப்புகளை இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்தும் என்று சிலர் சொல்கின்றனர். 

ஆனால் இப்பொழுதும் கூட கடன் கொடுக்க கணிசமான பணம்வங்கிகளிடம் உள்ளது. 
அவை கொடுக்கத் தயாராக இல்லை என்பதுபிரச்சனையின் ஒரு அம்சம். ஆனால்கடன் வாங்க தகுதி உள்ள வாடிக்கையாளர்கள் க்யூ வரிசையில் நிற்கவில்லை என்பதும் உண்மை. 

பொருளாதார மந்தநிலை, கிராக்கியின் வீழ்ச்சி ஆகியவற்றைஎதிர்கொள்ள அரசின் தொழில் மற்றும் கட்டமைப்பு மற்றும் வேளாண்சார் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும். 

இப்பொழுது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மிகவும் பலவீனமான ஊக்குவிப்பைதான் அளிக்கும்.ஒருவகையில் நடப்பது ஒருநாடகம். 

வங்கிகளை காப்பாற்றுவதாகக் கூறி, அடிமாட்டுவிலையில் பொதுத்துறை வங்கிகளை அவர்கள் பெற்ற வங்கிக்கடனை திருப்பித்தராத திருடர்களிடமே விற்கும் வாய்ப்பே இல்லை என்று யாரும் கூறிவிட முடியாது.

ஸ்டேட் வங்கி தன்னிடம் வாங்கிய ஆயிரங்கோடிகள் கடனை திருப்பித்தராத அம்பானியின் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்திடமே ஏழை ,வேலைகிடைக்காத மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை வாங்கித்தரும் குத்தகையை 50% கழிவில் கொடுத்ததும்,அதனால் மூன்று மாணவர்கள் ரிலையன்ஸ் அடியாட்கள் மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதும் இதே பாஜக ஆட்சியின் ஆரம்பத்தில்தான் நடந்தது.அதற்கு முழு கரணம் மோடியும்,ஜெட்லீயும்தான் என்பதை  நினைவில் கொள்ளுங்கள்.
========================================================================================
ன்று,
அக்டொபர்-30.
  • உலக சிக்கன தினம்
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கம் பிறந்த தினம்(1908)
  • அணு அறிவியலார் ஹோமி பாபா பிறந்ததினம் (1909)
  • செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்த ஹென்றி டியூனாண்ட் நினைவு தினம்(1910)
  • இந்தியா ஐநாவில் இணைந்தது(1945)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் நினைவு தினம்(1963)
  • இயக்குனர் சாந்தாராம் மரணம் (1990)
"1924 அக்., 31ல், இத்தாலி, மிலன் நகரில் சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மாநாடு நடந்தது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த, வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சிக்கனத்தின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும் வண்ணம்  அக்.31ம் தேதி உலக சிக்கன தினம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது. "

=========================================================================================

 ‛‛ உயர் நீதிமன்றங்களில், தீர்ப்புகள், ஆங்கிலத்தில் தான் வழங்கப்படுகின்றன. மனுதாரர்களுக்கு, ஆங்கிலத்தில் நல்ல புலமை இருக்க வேண்டும் என, எதிர்பார்க்க முடியாது. அதனால், தீர்ப்பு வழங்கப்பட்ட பின், சில மணி நேரத்துக்குள், அதை, உள்ளூர் மொழியில், மாற்றம் செய்து தர வேண்டும்.'' -                                                                                                                -குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?