இடுகைகள்

நவம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முதல்வரின் கூடுதல் பொறுப்பு ஆளுநர்.

படம்
தமிழ் நாட்டில் முதல்வராக உட்கார்ந்திருக்கும்  எடப்பாடி பழனிசாமிக்கு இணையான இன்னோர் அரசாங்கத்தை ராஜ்பவன் மோடியின் ஆசியுடன் வெளிப்படையாகவே  நடத்தத் துணிந்து விட்டது தெளிவாகிறது. இது எந்த காலத்திலும் காலூன்றி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியா பாஜகவின் கொல்லைப்புற ஆட்சியாகவே அமையும். கோவையில் தமிழக ஆளுநர் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தினார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பினாலும் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது.  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் (நடுவில்).   ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில்  நிதின் கட்கரி உடன் . அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக ஆளுநர் மாளிகையில் கூடுதல் தலைமைச் செயலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டிருக்கிறது.  தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவிக்கு இணையான, புதிய கூடுதல் தலைமைச் செயலாளர் என்ற அறிவிப்பின் மூலம் மத்திய அரசு தமிழகத்தில் ஆளுநர் மாளிகை மூலம் இணை அரசு நடத்தி வருவது வெளிப்படையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) இரவு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறார். “தமிழ்நாடு ஆளுநருக்கு

இந்த கொடுமைக்கு முடிவெப்போ ??

படம்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்கிற பெயரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சர்களும் ஊர் ஊராக சுற்றி வருகின்றனர்.  முழுக்க முழுக்க மக்களின் வரிப்பணத்தில் தங்களது கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது போல அரசு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.  ஒரு மாவட்டத்துக்கு 3கோடிகள் எனக்கணக்கிடப்பட்டு வருவாய்த்துறை மூலம் இந்த நூற்றாண்டு விழாக்கள் மக்கள் வரிப்பணத்தில் நடக்கின்றன. ஏன் இதை நடத்த அதிமுகவிடமும்,அமைச்சர்களிடம் பணம் இல்லையா? வருமானவரி ஆய்வில் பிடிபடும் கணக்கைப் பார்த்தால் எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல அவர் அம்மா சத்ய பாமா ,சந்தியா,ஜெயலலிதா ஆகியோருக்கும் கோடிகளைக்கொட்டி விழா கொண்டாடலாம். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மட்டுமல்ல,சம்பளமும் கொடுக்க முடியாமல் போக்குவரத்துக்கு கழக பணிமனைகள் ,கட்டிடங்களை தனியாரிடம் அடகுவைத்து நிர்வகிக்கும் கையாலாகாத அரசுதான் மக்கள் பணத்தை இறைத்து விளம்பரம் தேடுகிறது.கொடுமை. முதல்வரும், துணை முதல்வரும் தங்களதுஆட்சியை யாரும் அசைக்க முடியாது என்று சவால் விடுவதற்கே இந்த மேடைகளை பயன்படுத்துகின்றனர். உண்ம

கொலையாளிகள் ?

படம்
அதிமுக வினரின் அலங்கார மோகம் பேனர், பிரமாண்ட வளைவுகள் வைக்கும் வியாதிக்கு இதுவரை பலர் பலியாகியிருந்தாலும் அவர்கள் திருந்துவதாகவே தெரிய வில்லை. ஜெயலலிதாவிடம் பெயர் எடுக்க அதன் மூலம் பதவியை கைப்பற்றி பணம் சம்பாதிக்க ஆரம்பித்த இந்த கடஅவுட் கலாசாரம்  ஜெயலலிதா போய் சேர்ந்த பின்னரும் எந்த குறைவுமின்றி தொடர்வது கவலையை தருகிறது. டிராபிக் ராமசாமி என்னதான் போராடினாலும்,நீதிமன்றம் கண்டித்தாலும் அதிமுகவினர் அதை ஒரு பொருட்டாகவே எடுக்காமல் தங்கள் பேனர்,வளைவு,கட் அவுட் பணியை தொடர்ந்து மக்களுக்கும்,போக்குவரத்துக்கும் இடைஞ்சல் செய்வதை தொடரவே செய்கின்றனர்.   ரகு கொலைக்கான அதிமுகவினரின்வளைவு  மக்கள் வெறுக்கும் ஒரு செயலை செய்வதில் அதிமுகவினரை அடித்துக்கொள்ள ஆட்களே இல்லை. இவர்களின் வீணாய்ப்போன இந்த விளம்பர மோகத்தில் பல உயிர்கள் காணாமல் போய்வுள்ளது மிகுந்த வேதனை. இதனால் பல விபத்துகள் உண்டாகியுள்ளதும்,சிலர் உயிரிழந்துள்ளது தெரிந்தும் இந்த விளம்பர மோக  பிசாசு இன்றும் அதிமுகவினரை பிடித்து ஆட்டுகிறது.அதற்கு மாவட்ட ஆட்சியரில் ,இருந்து நெடுஞ்சாலை அதிகரைகள்,மாநகராட்சி அதிகாரிகள் வரை நடவடிக்கை

அரசமைப்புச் சட்ட விரோதச் செயல்பாடு!

படம்
கேரள உயர் நீதிமன்றத்தின் வைரவிழாக் கொண்டாட்டங்களைத் தொடக்கிவைத்துப் பேசுகையில், “உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டும்; தீர்ப்புகளின் நகல்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.  “பல்வேறு மொழிகளைக் கொண்டது நம் நாடு. தீர்ப்பின் முக்கியமான, நுட்பமான விவரங்கள் ஆங்கிலத்தில் இருந்தால் மனுதாரருக்குப் புரியாமல் போய்விடும் வாய்ப்புள்ளது” என்றும் சுட்டிக்காட்டினார்.  இந்திய மக்களில் பெரும்பான்மையினரது கருத்தின் வெளிப்பாடாக நாம் இதைக் கருதலாம். ஆனால், அப்படிப்பட்ட நடைமுறைக்கு உண்டான திறவுகோல் அவர் கையிலேயே இருக்கிறது! ராஜஸ்தான், உத்தர பிரதேசம் இந்த இரு மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் அந்தந்த மாநில மொழிகளில் வாதாடுவதற்குத் தடையில்லை. மேலும், அவர்களது மாநில மொழிகளிலேயே வழக்கு மனுக்களைத் தாக்கல் செய்யவும், சாட்சிகளை விசாரிக்கவும் வசதி உண்டு. ஒருவேளை, உயர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பை ஆங்கிலத்தில் பகர நேர்ந்தால், அதனுடைய மொழிபெயர்ப்பை அந்தந்த மாநில மொழியில் மொழிபெயர்த்து நகல் வழங்க