சோதனையிடாமல் எப்படி

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்கள், ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உட்பட 187 இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் பேருக்கு செயல்படும், செயல்படாத போலி நிறுவனங்களை ஏராளமாக சசிகலா குடும்பத்தினர் நடத்தி வருவதும், அவற்றின் பெயரில் ஏராளமான ரொக்கம், சொத்துக்கள் இருப்பதும் சோதனையில் தெரியவந்துள்ளது. அந்த சொத்துப்பட்டியலை பார்த்தால் ஜெயலலிதா, சசிகலா அவரது குடும்பத்தினர் தவிர மற்றவர்கள் சொத்துக்களும் மலைக்க வைக்கும் வகையில் உள்ளன. அவற்றில் சில நிறுவனங்கள், சொத்துக்களின் விவரம்....
*  ஜெயலலிதாவின் உதவியாளர்  எஸ்.எஸ்.பூங்குன்றன் இந்த நிறுவனத்தின் இயக்குநர்.  அபோஜி  டெவலப்பர்ஸ் என்று தொடங்கப்பட்ட இந்த நிறுவனம்  பின்னர்  ஃபேன்சி ஸ்டீல்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 
*  ஜெயலலிதா ஆட்சியில் இல்லாத  போது 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த  நிறுவனம்,  ஜெயலலிதா மீண்டும் 2011ல் ஆட்சிக்கு வரும் வரை தூங்கிக் கொண்டுதான் இருந்தது. அதன் பிறகு நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டு கோடிகளில் நிதியை கையாள தொடங்கியது.
*  ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து இரும்பு கழிவுகளை வாங்கி விற்றதில் ஒரே முறை 80.9 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி அசத்தியுள்ளது இந்த நிறுவனம். ஆனாலும் அந்த ஆண்டு நஷ்ட கணக்கை காட்டியுள்ளது.
*  இந்த நிறுவனம் எந்த பிணைச் சொத்தும் இல்லாமல் பல கோடி ரூபாய், அதுவும் வட்டி இல்லாத கடன்களை பெற்றுள்ளது.  பங்குகள் மூலம் 50 கோடி ரூபாய் இந்த நிறுவனம் திரட்டியதும் குறிப்பிடத்தக்கது.
*  சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் மேற்கொண்ட சோதனையில் அவர்கள் பல்வேறு நிறுவனங்களை நடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.  ஆனால் அந்த நிறுவனங்கள் செயல்படும் இடங்களை கண்டுபிடிக்கதான் முடியவில்லை. காரணம் அவை போலி நிறுவனங்களாகவும், போலி முகவரிகளுமாகத்தான்  இருக்கிறதாம்.
*  ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர்  பி.சி.போத்ரா.   இவர் வசித்ததாக கொடுக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தணிகாசலம் சாலை என்ற முகவரி போலியானது. தணிகாசலம் சாலை தி.நகரில்தான் இருக்கிறது. அங்கு போத்ரா என்பவர் தனது குடியிருப்பை விற்று விட்டு எங்கேயோ சென்று விட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி போலி நிறுவனங்களின் இயக்குநர்களாக இருந்த வி.ஆர்.குலோத்துங்கன், பி.ஆர்.சண்முகம்,  இளவரசி மருமகன்கள் கே.எஸ்.சிவகுமார்,  கார்த்திகேயன் கலியபெருமாள் என பலரும் பதிவு செய்துள்ள முகவரிகள் போலியானவை என்று சோதனையில் தெரியவந்துள்ளது. 

மேலும் இந்த நிறுவனங்களில் வேலை செய்ததாக சொல்லப்படும் போத்ரா உட்பட பலர் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரங்களை வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.  இப்படி வருமான வரித்துறையினர் தற்போது கண்டுபிடித்துள்ளது ஒரு பகுதி மட்டுமே. இன்னும் தோண்ட தோண்ட பூதம் கிளம்புவதுபோல பல அதிர்ச்சி தகவல்கள் வரும் என்று வருமான வரித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சசிகலா உறவினர்கள் வாங்கிக் குவித்த சொத்துகள் தொடர்பான பல ஆவணங்கள், நான்கு மரப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு, பிரபல தனியார் கூரியர் நிறுவனம் வாயிலாக, சிங்கப்பூர் மற்றும் துபாய்க்கு கடத்தப்பட்ட விபரம் தெரிய வந்துள்ளது. வருமான வரித் துறையினர் நடத்திய, 'ரெய்டின்' போது, இது தொடர்பான ரசீது சிக்கியதால், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதனால், மத்திய அரசிடம் முறையான அனுமதி பெற்று, சிங்கப்பூர் மற்றும் துபாயில் உள்ள, மன்னார்குடி உறவுகளின் வீடுகளில், வருமான வரித்துறையினர், விரைவில் சோதனை நடத்தலாம் என, கூறப்படுகிறது.
சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்கள், கடந்த பல ஆண்டுகளாக, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்கிக் குவித்தது, வருமான வரித்துறையினருக்கு தெரிய வந்தது.
இது தொடர்பாக, சில மாதங்களாக ரகசிய கண்காணிப்பு மற்றும் ஆய்வை வருமான வரி அதிகாரிகள் நடத்தினர்.

பின், நவ., 9ல், தினகரன், திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா உட்பட, சசிகலா குடும்பத் தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் 'பினாமி'களின் வீடுகள், அலுவலகங்கள் என, 215 இடங்களில், அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை ஐந்து நாட்களாக நீடித்தது.
இதில், 1,430 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டறியப்பட்டது.

ஏராளமான தங்க, வைர நகைகளும், சொத்து ஆவணங்களும் சிக்கின. இதில், தொடர்புடைய பலரிடமும், வரித்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதா வாழ்ந்த, போயஸ் கார்டன் இல்லத்தில், நவ., ௧௭ம் தேதி இரவு, வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.


ஜெ., உதவியாளர் பூங்குன்றன் மற்றும் சசிகலா அறைகளில் நடந்த சோதனையில், கம்ப்யூட்டர் கள், லேப் -டாப், பென் டிரைவ் மற்றும் ஏராள மான ஆவணங்கள் சிக்கின. போயஸ் கார்ட னில் பதுக்கி வைத்திருந்த ஆவணங்களை, ரகசியமாக இடம் மாற்றம் செய்ய, சசிகலா கும்பல் திட்டமிட்டிருப்பதாக, வருமான வரித் துறைக்கு, 'ஸ்லீப்பர் செல்'களாக செயல்படும், சசிகலாவின் உறவினர்கள் சிலர் கொடுத்த தகவலை அடுத்து, இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது
இந்நிலையில், வருமான வரித்துறையிடம் சிக்கியது தவிர, சசிகலாவின் உறவுகள் வாங்கிக் குவித்த சொத்துகள் தொடர்பான, ஏராளமான முக்கிய ஆவணங்கள், வெளி நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ள தகவலும் தெரிய வந்து உள்ளது.

வருமான வரித்துறையினர் கடந்த சில நாட்களாக நடத்திய சோதனையின் போது, இது தொடர்பான ரசீது கிடைத்துள்ளதால், திருப்பம் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக, 'ஸ்லீப்பர் செல்' வட்டாரங்கள் கூறியதாவது:நாட்டிலேயே, மிகப்பெரிய அளவிலான வருமான வரி சோதனை, சசிகலா குடும்பத்தில் தான் நடந்து உள்ளது. ஆனால், 'சோதனை தோல்வியில் முடிந்து உள்ளது' என, திவாகரன், ஜம்பமாக கூறியுள்ளார். 
இன்று அவர், திருச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு செல்லஉள்ளார்.இதுவரை, சசிகலாகுடும்பத்தினரின், 84 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுஉள்ளன. அத்துடன், பல வங்கிகளில், அவர்களின் பெயரில் உள்ள, லாக்கர்களும், 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. அவற்றை விரைவில் திறந்து ஆய்வு செய்ய வும் வரித்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.
ஆனால், சசிகலா உறவினர்கள் வாங்கிக் குவித்த சொத்துகள் தொடர்பான பல அசல் ஆவணங்கள், சிங்கப்பூர் மற்றும் துபாயில் உள்ள சிலருக்கு, நான்கு மரப்பெட்டிகளில், தனியார் கூரியர் நிறுவனம் வாயிலாக, விமானத்தில் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தினகரனும், திவாகரனும் தான், இந்த வேலையை செய்தனர். சிங்கப்பூரில் தினகரனுக்கு நெருக்கமான பலரின் வீடுகள் உள்ளன. அது போல, துபாயில், சசி அண்ணன் மனைவி இளவரசிக்கு வேண்டியவர்களின் வீடுகள் உள்ளன. 
அங்கு தான், இந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான, கூரியர் நிறுவன ரசீதுகள், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கி உள்ளன. அதனால், மத்திய அரசு மற்றும் வெளியுறவுத் துறையின் அனுமதி பெற்று, துபாய் மற்றும் சிங்கப்பூர் சென்று, ஆவணங்கள் அனுப்பப்பட்ட முகவரி யில் உள்ளவர்களிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.அத்துடன், போயஸ் கார்டனில் உள்ள, ஜெ., அறைகளிலும், சோதனை நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

இருப்பினும், கூரியர் ரசீது கிடைத்தது மற்றும் வெளிநாடுகளுக்கு ஆவணங்கள் கடத்தப்பட்ட தகவலை, வரித்துறையினர் ரகசியமாக வைத்துள்ளனர்.
ஜெயலலிதாவின் வீடு கோவில் அதில் எப்படி சோதனையிடலாம் என்று சிலர் கேட்பது மிகவும் அசிங்கமான கேள்வி.
ஜெயலலிதா இருக்கும் போது ஊழல் செய்து சொத்துக்குவித்தது உண்மையென தீர்ப்பாகி இறந்ததால் சிறை தண்டனையில் இருந்து தப்பிய தியாகி.
அவர்தான் முதல் குற்றவாளி .தற்போது இரண்டாம்,மூன்றாம் குற்றவாளிகள் சிறையில் இருக்கிறார்கள்.
ஏற்கனவே  ஜெயலலிதா வீடு சோதனையிடப்பட்ட இடம்தான்.
அவரின் போயஸ் வீட்டில் தங்கிதானே சசிகலா மாபியா கும்பல் அவரின் ஆசியுடன் ,பாங்குடன்,துணையுடன் தமிழகத்தையே வேட்டையாடியது.?
பின் அங்கு சோதனையிடாமல் எப்படி சோதனை முற்றுப்பெறும்.?
=====================================================================================

ன்று,
நவம்பர்-20.
  • யுனிசெஃப் குழந்தைகள் தினம்
  • வியட்நாம் ஆசிரியர் தினம்
  • உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது(1917)
  • ஜெர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க், ரெண்டென்மார்க் ஆல் மாற்றப்பட்டது(1923)
  • மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது(1985)
=====================================================================================
புரட்சித்தலைவர்

தனியார் பள்ளி,கல்லுாரிகள்,தனியார் மருத்துவமனைகளே  இல்லாத நாடு, கியூபா. 
கியூபாவில் மக்கள் அனைவருக்கும் எவ்வளவு பெரிய நோயானாலும் இலவச மருத்துவம்தான். ஆறு முதல், 15 வயது வரை உள்ளவர்களுக்கு  கட்டாய இலவச கல்வி வழங்கப்படுகிறது. 
நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை. 
12 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் உள்ளார். இது, வல்லரசு நாடுகளில் கூட பார்க்க முடியாதது.

கடந்த, 2010ல் யுனெஸ்கோ ஆய்வின்படி, கியூபாவில் படிப்பறிவு, 99.8 சதவீதம். தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோரில், 70 சதவீதம் பேர் பெண்கள். 

இவர்களுக்கு, ஆண்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படுகிறது.
கடந்த, 2006ல், உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடாக, கியூபாவை அறிவித்தது, பி.பி.சி., பிரசவத்தின் போது, தாய்மார்களின் இறப்பு விகிதம் மற்றும் எச்.ஐ.வி., பாதித்த நோயாளிகள் உலகிலே மிகக் குறைவாக இருப்பதும் இங்கு தான். 

2015ல், 95 சதவீத கியூபா மக்களுக்கு, சொந்த வீடுகள் இருந்தன. இன்று, சொந்த வீட்டில்லாதவர்கள் யாருமே இல்லை.
யாருக்கும் சொத்து வரி கிடையாது; வீட்டுக் கடனுக்கு வட்டியும் கிடையாது.


இவ்வளவு சாதனைகளுக்கும் காரணம், கியூபாவின் அதிபராக இருந்த, மறைந்த புரட்சித்தலைவர்  பிடல் காஸ்ட்ரோ தான்.


ஒரே ஒரு நல்லவர் ஆட்சித் தலைவரானால், சாதனைகள் நிறைய இருக்கும் என்பதை நிரூபித்துள்ளது,கியூபா.

எப்படி ஆள்வோர் இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் தமிழ் நாடு.
பெயரில் மட்டும் புரட்சித்தலைவர்,புரட்சித்தலைவி இருந்தால் நாடு விளங்கிடாது .
========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?