கொலையாளிகள் ?


அதிமுக வினரின் அலங்கார மோகம் பேனர், பிரமாண்ட வளைவுகள் வைக்கும் வியாதிக்கு இதுவரை பலர் பலியாகியிருந்தாலும் அவர்கள் திருந்துவதாகவே தெரிய வில்லை.
ஜெயலலிதாவிடம் பெயர் எடுக்க அதன் மூலம் பதவியை கைப்பற்றி பணம் சம்பாதிக்க ஆரம்பித்த இந்த கடஅவுட் கலாசாரம்  ஜெயலலிதா போய் சேர்ந்த பின்னரும் எந்த குறைவுமின்றி தொடர்வது கவலையை தருகிறது.
டிராபிக் ராமசாமி என்னதான் போராடினாலும்,நீதிமன்றம் கண்டித்தாலும் அதிமுகவினர் அதை ஒரு பொருட்டாகவே எடுக்காமல் தங்கள் பேனர்,வளைவு,கட் அவுட் பணியை தொடர்ந்து மக்களுக்கும்,போக்குவரத்துக்கும் இடைஞ்சல் செய்வதை தொடரவே செய்கின்றனர்.
 ரகு கொலைக்கான அதிமுகவினரின்வளைவு 

மக்கள் வெறுக்கும் ஒரு செயலை செய்வதில் அதிமுகவினரை அடித்துக்கொள்ள ஆட்களே இல்லை.
இவர்களின் வீணாய்ப்போன இந்த விளம்பர மோகத்தில் பல உயிர்கள் காணாமல் போய்வுள்ளது மிகுந்த வேதனை.
இதனால் பல விபத்துகள் உண்டாகியுள்ளதும்,சிலர் உயிரிழந்துள்ளது தெரிந்தும் இந்த விளம்பர மோக பிசாசு இன்றும் அதிமுகவினரை பிடித்து ஆட்டுகிறது.அதற்கு மாவட்ட ஆட்சியரில் ,இருந்து நெடுஞ்சாலை அதிகரைகள்,மாநகராட்சி அதிகாரிகள் வரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்களை கோபம்தான் கொள்ளவித்துள்ளது.

கோவையில் மணமுடிக்க வந்திருந்த  ரகு அதிமுகவினரின் வளைவு ,பேனர் கலாச்சாரத்துக்கு பலியாகியுள்ளதே கடைசி அதிமுகவினர் வாங்கும் பலியாக இருந்தால் நல்லதாயிருக்கும்.
அதிமுகவினர் மட்டுமே இந்த கொலைக்கு பொறுப்பல்ல.பொறுப்பற்றத்தனமாக அதிமுகவினர் வளைவுகள்,பேனர்கள்,கட் அவுட் களை நடவடிக்கை எடுத்து அகற்றாமல் பாதுகாப்பு வேறு கொடுக்கும் அதிகாரிகள்,காவல்துறையினரும் கொலையாளிகளே.
டிப்பர் லாரிதானே விபத்தை ஏற்படுத்தியது என்று கூறி யாரும் தப்பவியலாது.ராகுவை கொன்றது விளம்பர மோகிகள் அதிமுகவினர்,அதை பாதுகாக்கும் அதிகாரிகள்தான்.
இவர்களால் உண்டான போக்குவரத்து குளறுபடிகள்தான் இது போன்ற உயிர்வாங்குதலுக்கு மூலம்.

நீதிமன்றம் தானாகவே முன்வந்து அதிமுகவினர் பேனர்,வளைவுகள்,கட் அவுட்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக  வைப்பதை தருக்கும்விதம் வழக்கு பதிவு செய்து தீர்ப்பை வழங்க வேண்டும்.
ஒரு டிராபிக் ராமசாமிக்கு இருக்கும் பொறுப்பு நீதிமன்றத்துக்கு இல்லாமல் போய்விடுமா என்ன?
தேசிய நான்கு வழிச்சாலையையும் அதிமுகவினர் இப்போது கையில் எடுத்து தங்கள் கொலைகார வளைவுகளை அமைப்பதை யார் தடுக்க வேண்டும்.
மக்கள் நலனுக்காக அரசா,அதிமுக கொலைவெறி பேனர்,வளைவுக்காக மக்களா? 
========================================================================================
மழைக்கால எச்சரிக்கை.
தமிழகத்தில் மழைக்காலம் . பல பகுதிகளில் விடாமல் அதிகாலை முதல் மழை பெய்கிறது. பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 
ஏற்கனவே தமிழத்தில் டெங்கு பரவி தமிழக மக்களை பரிதவிக்க வைக்கும்  நிலையில் தற்போது மழை காரணமாக மேலும் பல நோய்கள் வர அபாயம் இருக்கிறது.

இதை மக்களுக்கு வரும் முன் காத்து நிற்க வேண்டிய அரசோ தங்கள் பதவி பித்து நோயால் பாதிக்கப்பட்டும்,நாற்காலியை,அடித்த சொத்துக்களைப் பாதுகாக்கும் முயசியில்தான் உள்ளனர்.
எனவே நமக்கு நாமேதான் தற்போது கைக்கொடுக்கும் சூரிய கதிராக உள்ளது.
மழைக்காலத்தில் வரும் பொதுவான நோய்களின் அறிகுறிகளை தெரிந்து வைத்துக் கொண்டால் முளையிலேயே அந்நோயை நாம் தடுத்து விடலாம்.அதற்காகவே இதை உங்கள் பார்வைக்கு தருகிறோம்.
 மழைக்காலத்தில் வரும் பொதுவான நோய்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் அநோய்களைப் பற்றி முன்பே தெரிந்து கொண்டால், அதிலிருந்து எளிதில் தப்பிக்கக்கூட முடியும். 
மழைக்கால  நோய்கள்
* மலேரியா
மலேரியா என்னும் நோயானது பெண் அனாஃபிலிஸ் கொசுக்களால் ஏற்படுகிறது. தண்ணீர் தேங்கிருக்கும் இடத்தில் இவ்வகை கொசுக்கள் காணப்படும். எனவே இதை தடுக்க, வீட்டின் தண்ணீர் தொட்டியை அடிக்கடி கழுவ வேண்டும். 
* டெங்கு
டெங்கு காய்ச்சல் மழைக்காலத்தில் கொசுக்களால் ஏற்படுவது. இந்த நோய் வருவதற்கான முக்கிய காரணம் டைகர் கொசுக்கள். இந்த கொசுக்கள் வராமல் தடுப்பதற்கு பூச்சி விலக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்.
* சிக்கன்குனியா

ஏய்டெஸ் அல்போபிக்டஸ் கொசுக்கள் கடிப்பதால் வருவது தான் சிக்கன்குனியா. தேங்கிய நீரில் இந்த கொசுக்கள் காணப்படும். இது பகல் நேரத்தில் தான் கடிக்கும். திடீரென வரும் காய்ச்சலோடு சேர்ந்து வரும் மூட்டு வலி தான் இதற்கான முக்கிய அறிகுறி. 
* வைரஸ் காய்ச்சல்
வைரஸ் காய்ச்சல் அனைத்து காலங்களிலும் வரும். இந்த காய்ச்சல் 3-7 நாட்கள் வரை நீடிக்கும். மேலும் இதனுடன் சளியும் இருமலும் சேர்ந்து இருக்கும்.
* காலரா
பருவக்காலத்தில் வரும் ஆபத்தான நோய் காலரா.
 இது அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை பயன்படுத்துவதால் வரும். காலரா இருந்தால் வயிற்றுப் போக்குடன் பேதி சேர்ந்து இருக்கும். 
=========================================================================================
ன்று,
நவம்பர்-28.
மரைனர் 4 


  • பனாமா, ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து கொலம்பியாவில்  இணைந்தது(1821)
  • நியூசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது (1893)
  • அல்பேனியா விடுதலை தினம்(1912)
  • செவ்வாய்க் கோளுக்கு நாசா , மரைனர் 4 விண்கலத்தை ஏவியது(1964)
==========================================================================================
பாலைவனச் சோலை,
பாலைவனத்தில் கூட பசுமையை கொண்டுவரமுடியும் என்ற அற்புதத்தை உலகிற்கு நிகழ்த்திக் காட்டிய ,காட்டிக்கொண்டிருக்கும் நாடு இஸ்ரேல்.
இஸ்ரேலில் தன் கிணறுகளில் கிடைக்கும் உவர் நீருக்கு தக்கபடி  விவசாயம் மேற்கொள்வதால், அங்கு விவசாயம் உவப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பாலைவனத்திலும் பசுமை பூத்துக்குலுங்குகிறது.

உவர்நீர் மற்றும் தரம் குறைந்த நீரிலும் விளையக்கூடிய பயிர்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆலிவ் முதல் அர்கன் வரையிலான மரங்களுக்கு இவற்றையே பயன்படுத்துகிறார்கள்.
பாலைவனப் பகுதிகளில் வளரும் பயிர்களிலும் இஸ்ரேலியர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். பாலைவனத்தில் பணத்திற்காகவும், புரேட்டின் சத்துக்காகவும் மீன்வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 
இதற்கு உவர்நீரே பிரதானம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த உவர் நீரிலும் கழிவாக கிடைக்கும் நிறையும் மறு  சுழற்சி செய்து அதையும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
தங்களுக்கு கிடைக்கக் கூடிய தண்ணீரில்  ஒரு துளியைக் கூட வீணடிக்காமல் பயன்படுத்தும் விதத்தை உலகமே  இஸ்ரேலிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும் .
கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றி மக்களுக்கு பயன்படுத்த வழங்கும் இஸ்ரேல் அதன் மூலம் கிடைக்கும்  கழிவுநீரை மறுசுழற்சி செய்து மறுபயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது.எனவே தனக்கு கிடைக்கும் மழைநீர்,உவர் நீர்,கடல் நீர் என்று எதையுமே இஸ்ரேல் விட்டுவைப்பதில்லை.ஒவ்வொரு சொட்டையும் பயன்படுத்துகிறது.நீர் மேலாண்மையை இஸ்ரேலிடமிருந்து ஒவ்வொரு நாடும் கற்றுக்கொள்ள வேண்டும்.
இஸ்ரேலில் பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் தண்ணீரில் பாதியளவு மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீர் என்பது குறிப்பிடத்தக்கது.
காற்றில் இருந்து நைட்ரஜனை உறிஞ்சும் தன்மை கொண்ட மரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவையே இஸ்ரேலில் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களின் வழியாக நைட்ரஜன் சத்து, நிலத்திற்கு இயல்பாகவே செல்கிறது. இந்த உபாயம் எந்தவித செலவும் இல்லாமல் நிலத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது. இந்த அமைப்புமுறை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து பயனளிக்கக்கூடியது.
 இஸ்ரேலின் சொட்டு நீர்ப்பாசன தொழில்நுட்பம். பயிருக்கு துளித்துளியாக தொடர்ந்து நீர் வழங்கப்பட்டால், சாகுபடி சிறப்பாக இருக்கும் என்ற யோசனையே இதன் அடிப்படை. இந்த முறையில் தண்ணீர் நேரடியாக நிலத்திற்கு செலுத்தப்படும் அல்லது பயிரின் வேருக்கு அருகில் விடப்படும்.
பயிரின் வேர்ப்பாகம் வரை தண்ணீர் செல்வதற்காக குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. 
தண்ணீரை குறைந்த அளவு பயன்படுத்தி, அதில் இருந்து அதிக பயன்களைப் பெறுவது இதன் நோக்கம். 
மணற்பாங்கான பாலைவனப் பகுதியில் நல்ல தண்ணீர் அதிகம் கிடைக்காத நிலையில், பசுமையை கொண்டு வர சொட்டு நீர்ப்பாசனத்தை இஸ்ரேல் பல்லாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தி வெற்றி கண்டுவிட்டது.
பிற நாடுகளில் ஆற்றல் பயன்பாடுகளுக்காக மரம் வெட்டப்படும் நிலையில் இஸ்ரேல் தன் நாட்டில் உள்ள மரங்களை மிகவும் பாதுகாப்பாக வளர்க்கிறது. சூரியசக்தி மூலமே  தனது ஆற்றல்,மின்  தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறது.
இஸ்ரேல் சென்று போர்த்தளவாடங்களை மட்டுமே வாங்க ஒப்பந்தம் செய்யும்  இந்தியா ,அங்குள்ள நீர் மேலாண்மை ,விவசாய முறைகளை  இங்கு கொண்டுவந்தால்தான் வருங்கால தண்ணீர் தட்டுப்பாட்டை இந்திய அரசு சமாளிக்க முடியும்.                                                                                                                 
=======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?