நம்பிக்கைக்கு அப்பால் ...?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல்ஆணையத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு வெளிப்படைத் தன்மையோடு, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்துக்கட்சிகளுக்கும் நம்பகத்தன்மையோடு  இருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இல்லை என்றுதான் எல்லாத்தரப்பில் இருந்தும் பதில் வருகிறது.

இது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைப்பதாகவே இருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர்தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12 அன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

ஆனால் அங்குநடைபெற்ற பணவிநியோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்துசெய்தது. 

அதற்கு முக்கிய காரணமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில்வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்களையே தேர்தல் ஆணையம் மேற்கோள் காட்டியது. 

அந்த ஆவணங்களில் முதல்வர் துவங்கி முக்கிய அமைச்சர்கள் பண விநியோக பணியில்ஈடுபட்டதற்கான குறிப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

ஆனால் அந்த வழக்குஎன்ன ஆனது என்று இதுவரைதெரியவில்லை.இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.தேர்தல் ஆணையமும் கண்டு கொள்ளவில்லை.அதோடு இடைத்தேர்தலை அறிவித்தும் விட்டது.

முன்பு தேர்தலை ஆணையம் நிறுத்தியதற்கான காரணம் அப்படியே உள்ளது.அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றுமே இல்லை.

இதுபோன்ற இந்திய தேர்தல் ஆணைய செயல்பாடுகள் வாக்குக்கு பணம் கொடுப்பதை எந்தவகையில் நிறுத்தும்?

பணம் கொடுப்பவர்களை ஒன்றுமே நடவடிக்கை எடுக்காமல் ,அடுத்த தேர்தலிலும் நிற்க அனுமதிப்பது எந்த வகை சட்ட நியாயம்.

கேட்டால் தேர்தல் அலுவலரை யாரும் கேள்வி கேட்ட கூடாது,அவர் சொன்னதே வேதவாக்கு என்கிறது தேர்தல் ஆணையம்.

அதன் பின்னர் இரட்டை இலை விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் முன்னுக்குப் பின் முரணான நிலைபாட்டையே எடுத்தது. 

குறிப்பாகமோடி அரசின் அரசியல் ஆதரவு நிலைபாட்டோடு தேர்தல் ஆணையத்தின் நிலையும் ஒத்திசைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தேர்தல் ஆணையத்தின் மீது அவ்வப்போது சில சர்ச்சைகள் வந்தாலும், இதுவரை தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக, சுயேச்சையாக இயங்கும் அமைப்பாகத்தான் பார்க்கப்பட்டு வந்தது. 

ஆனால் தலைமை தேர்தல் ஆணையராக, குஜராத்தில் மோடி ஆட்சியின் கீழ் தலைமை செயலாளராக பணியாற்றிய அச்சல் குமார் ஜோதி நியமிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையம் அதன் நடுநிலையில் இருந்து விலகிபாஜக சார்பு நிலை எடுத்து வருகிறது என்ற விமர்சனம் கடுமையாக எழுந்து வருகிறது. 

அதை உண்மையாக்கும் வகையில் மோடி குஜராத்துக்கு சலுகைகள் அறிவித்தப்பின்னர் குஜராத் சட்டமன்றதேர்தல் தேதி அறிவிப்பும் அமைந்தது. 

உபியில் எந்த சின்னத்துக்கு வாக்களித்தால் தாமரைக்கு விழுகிற எந்திரக்கோளாறு.
எந்திரக்கோளாறு என்றால் குறிப்பாக தாமரைக்கு மட்டும்தான் பதிவாகுமா என்ன?

மத்தியில் மோடி பிரதமரான பின்னர் மத்தியஅரசின் முக்கிய  துறைகளில் ஆர்எஸ்எஸ்ஆதரவாளர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். 

அவர்களின் மூலம் அந்த துறைகள் பொதுத்தன்மையில் இருந்து விலக்கி, ஒருசார்புத் தன்மையை நோக்கி நகர்த்தப்பட்டு வருகிறது. 
அந்த வரிசையில் தற்போது தேர்தல் ஆணையமும் இணைந்திருக்கிறது.
தோசைசுட்டு வாக்கு சேகரித்த பா.ஜ.க வேட்பாளர்


தற்போது ஆர்.கே.நகரில் நடிகர் விஷாலின் வேட்பு மனு விஷயத்திலும் நிராகரிப்பு, ஏற்பு,மீண்டும் நிராகரிப்பு என தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை முன்னுக்குப் பின் முரணாக இருந்து வருகிறது. 

விஷாலின் வேட்புமனுவில் முன்மொழிந்திருந்த இருவர் அது தங்கள் கையொப்பம் இல்லையென கூறியதால் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. 

கையொப்பம் போலி என்றால் அதனை அதிகாரி சட்டரீதியாக உறுதிப்படுத்த வேண்டும். 

நிராகரித்த முடிவை வேட்பாளரிடம் தெரிவித்து, அதனை அவர் ஏற்க மறுக்கும் பட்சத்தில், அதனை சரி என்று நிரூபிக்க ஒரு நாள் அவகாசம் தர வேண்டும் என தேர்தல் விதிமுறைகள் தெரிவிக்கின்றன. 

மேலும் வேட்பாளர் இல்லாத வேளைகளில் மட்டுமே தேர்தல் அதிகாரி தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

ஆனால் இதில் எந்த விதிமுறையையும் அதிகாரிகள் பின்பற்றியதாகத் தெரியவில்லை. 
அதிகாரிகளை பின்னணியில் இருந்து இயக்குபவர்கள் யார்? 

இது போன்ற அதிகாரிகளை வைத்து அரசு பணத்தை,மக்கள் வரிப்பணத்தை கோடிகளில் செலவிட்டு ஆளுங்கட்சிதான் வென்றது என்று அறிவிக்க தன்னாட்சி அதிகாரங்கள் பெற்ற இந்திய தேர்தல் ஆணையம் எதற்கு ?

ஏலமுறையில் தொகுதிகளை விட்டு விட கிரிக்கட் வாரியம் போன்று ஒரு அமைப்பு இருந்தால் அரசுக்கு வருமானமாவது கிடைக்கும்.
=========================================================================================

ன்று,
டிசம்பர்-08.




  • இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது1864)


  • ருமேனியா அரசியலமைப்பு தினம்


  • பனாமா அன்னையர் தினம்

==========================================================================================


bakkiyam-ramasamy-2x
‘ஹாஸ்ய’ எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்

எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி வியாழக்கிழமை இரவு தனது 87வது வயதில் காலமானார்.

ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் (ஜ.ரா.சுந்தரேசன்) என்ற இயற்பெயர் கொண்ட பாக்கியம் ராமசாமி தன் பெற்றோரின் பெயர்களை சேர்த்து தன் புனைப்பெயரை உருவாக்கிக்கொண்டவர். நகைச்சுவை ததும்பும் எழுத்துக்கு பெயர் பெற்று விளங்கிய இவர், குமுதல் வார இதழில் 37 ஆண்டுகள் பணியாற்றினார்.

அப்புசாமி - சீதாபாட்டி ஆகியோர் இவரது கதைகளில் அடிக்கடி வரும் பிரபலமான பாத்திரங்கள். அப்புசாமியும் அற்புத விளக்கும், அப்புசாமியும் 1001 இரவுகளும், அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் உள்ளிட்ட நாவல்களை தனது தனி முத்திரையான ஹாஸ்ய சுவையுடன் எழுதி எழுத்துலகில் தடம் பதித்தார்.



வால்ட் டிஷ்னி தயாரித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற கார்டூன் படத்துக்கு












வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.

.

அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை என்ற பெயரில் அவர் நடத்திய அமைப்பு அவரது பாத்திரங்களுக்கு வாசகர்கள் அளித்த மதிப்புக்கு அடையாளமாகத் திகழ்கிறது. தவிர, அக்கறை என்ற மற்றொரு அமைப்பையும் பாக்கியம் ராமசாமி நடத்தினார்.சிறிது காலம் மலையாள மங்களம் வார இதழ் தமிழில் வந்த போது ஆசிரியராக பொறுப்பேற்றிருந்தார்.

இடைவிடாது தொடர்ந்து எழுதிவந்த பாக்கியம் ராமசாமி, சென்னை சேத்துபட்டில் வசித்து வந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் ஜெகன், குமார், யோகேஷ் ஆகிய மகன்களும் உள்ளனர். சிறுநீரக கோளாறுக்காக சிகிச்சை பெற்ற அவர் நேற்று நள்ளிரவில் காலமானார். 
தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள்,
அதிக சிரமம் மற்றும் செலவு
creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும்,அப்படி இந்த level உள் இல்லை என்றால்
கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,
பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும்இதை சரி செய்ய எளிய வழி உண்டு.
நாட்டு மருந்து கடைக்கு சென்று இந்து உப்பு என்று கேளுங்கள் கிடைக்கும்,
ஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே அல்லது 80 ருபாய்இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள் ,
15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில்உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் ,
அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனைசெய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்.
இந்த உப்பை கொண்டு சமைத்த உணவைநோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா?

யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்,ஒரு வயது குழந்தை முதல் முதியவர்வரை சாப்பிடலாம்
.இமாலய மழை பகுதியில் பாறைகளை வெட்டிஎடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள் , கிள் சென்று ஆங்கிலத்தில் himaalayan rock salt என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும்.
உ டலுக்கு தேவையான 80 வகையான தாதுக்கள்  இந்த உப்பில் உள்ளது.
இந்துப்பு குணமாக்கும் வேறு கோளாறுகள்.?
Thyroid பிரச்சனைக்கு கேட்கும்,வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனைவாய் புண் ஆகியவை கேட்கும்
அல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து வர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை
தவிர்த்து இந்து உப்பு சேருங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும்.
ஆங்கில மருத்துவர் கொடுக்கும் வீரியமிக்க மருந்துக்களை  கேள்வி கேட்காமகண்ணை மூடி கொண்டு சாப்பிடுகிற நாம் ,நம் பாரம்பரிய மருந்துக்களை ஒதுக்குவது தவறு.
முற்கால மனிதர்கள்  பயன்படுத்ததக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.
1. இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.
2 ஆண்மையை வளர்ப்பது.
3 . மனதிற்கு நல்லது..
4.வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.இலேசானது.
5.சிறிதளவு உஷ்ணமுள்ளது.
6.கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். 
அது விரைவில் சீரணமாகாது.
ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. 
கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்.
எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் சேர்த்து பயன்படுத்துங்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?