கட்டாத கட்டணம்?

தமிழகத்தில் அநியாயமாக உயர்த்தப்பட்ட பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து அனைத்துப்பகுதி மக்களும் கொந்தளித்தனர். 
குறிப்பாக இந்திய மாணவர் சங்கத்தின் அழைப்பின் பேரில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டக் களம் கண்டனர். 
இந்த உணர்வைப் புரிந்து கொண்டு உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைப்பதற்கு பதிலாக அச்சுறுத்தல் மூலம் மாணவர்கள், வாலிபர்களை மிரட்ட முயன்றது அதிமுக அரசு.போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர்கள் பலரை கைது செய்து சிறையில் அடைத்தது. 
ஆனால், அஞ்சாமல் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் போராடின. ஆனால், போக்குவரத்து அமைச்சர் உட்பட சில அமைச்சர்கள் உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என திமிர்வாதம் பேசினர். இந்த நிலையில், ஞாயிறன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் திங்களன்று தமிழகம் முழுவதும் மாபெரும் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
போராட்டப் பெருநெருப்பின் வெம்மை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைத்திருப்பது போல கண்கட்டி வித்தை காட்டுகிறது அதிமுக அரசு. 
ஒட்டகத்தின் முதுகில் பல டன் எடையை ஏற்றி விட்டு ஒரு கிலோ எடையை குறைப்பதன் மூலம் சுமையை குறைத்துவிட்டது போல ஏமாற்றுவார்கள் என்று கூறுவார்கள். மக்களையும் ஒட்டகம் என நினைத்துக் கொண்டு சித்து வேலையில் ஈடுபடுகிறது அதிமுக அரசு.
ஏற்கெனவே இருந்த கட்டணத்தை விட இரு மடங்கு உயர்த்திவிட்டு, தற்போது பைசா கணக்கில் குறைப்பதாக அறிவிக்கிறார்கள். இந்தக் கட்டணக் குறைப்பின் மூலம் அரசிற்கு ரூ. 4 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்படும் என்று கதையடிக்கிறார்கள்.
நகர மற்றும் மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.5 லிருந்து ரூ.4 ஆக குறைக்கப்படுவதாகவும் அனைத்து நிலைகளிலும் ஒரு ரூபாய் குறைக்கப்படுவ தாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவிலிருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, இரண்டு பைசா குறைக்கப்பட்டுள்ளது. 
நூறு கிலோ மீட்டர் அளவுக்கு பயணம் செய்தால், ரூ. 20 தான் குறையும். பல மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணத்தோடு ஒப்பிடும் போது இது ஒன்றுமே இல்லை.
அரசின் ஏமாற்று வித்தையை புரிந்து கொண்டதால்தான் , பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. 
இந்தப் போராட்டம் முழுமையாக வெற்றி பெறும் சூழ்நிலையை உருவாக்குவதன் மூலமே உயர்த்தப்பட்ட பல மடங்கு கட்டண உயர்வை திரும்பப் பெற வைக்க முடியும்.
திமுக ஆட்சியின் போது அதிகாரிகள் பேருந்து கட்டணத்தை உயர்த்தினால்தான் லாபத்தில் போக்குவரத்துக்  கழகங்கள் இயங்கும் என்று கூற கலைஞ்சரோ "லாபம் ஈட்ட நாம் கம்பெனி நடத்த்தவில்லை.மக்கள் நலனுக்காக அரசு தான் இயங்குகிறது"என்று பேருந்து கட்டணத்தை உயர்த்த மறுத்து விட்டார்.
கமல்ஹாசனும் பேருந்து கட்டணம் உயர்வுக்கு கழகங்கள் நட்டத்த்தில் ஓடுவதுதான் காரணம் என்கிறார்களே என்ற கேள்விக்கு "அது லாபத்தில் ஓடவேண்டும் என்று யார் சொன்னார்கள்.மக்களுக்கான அரசு செய்யும் சேவைதான் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து வசதியை செய்து தருவது.அதை இந்த ஆட்சி செய்யாதது ,அக்கட்டணத்தை உயர்த்தியது தவறு.என்று கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்காலம் முழுக்க பேருந்துக்கு கட்டணங்கள் உயர்த்தப் படவில்லை.அப்போதும் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன.
போக்குவர்த்துத் தொழிலார்களுக்கு உரிய நேரங்களில் ஊதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
22% முதல் 24%வரை மிகை ஊதியங்கள், பொங்கல்,தீபாவளி பணங்கள் வழங்கப்பட்டன.
அப்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அந்த மிகை ஊதியங்கள்,ஊதிய உயர்வுகள் போதாது என்று அறிக்கை விட்டது.சில இடங்களில் அண்ணா தொழிற்சங்கங்கள் போராடின.

ஆனால் ஜெயலலிதா ஆட்சி வந்த பின்னர் அவரின் செயல்பாடுகளைக் கண்டு போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கங்களில் சிஐடியூ,தொழிற்சங்கப் பேரவை (திமுக)ஆகியவைதான் தொழிலாளர்கள் வாக்கெடுப்பில் வென்று அங்கிகாரம் பெற்ற தொழிற்சங்கங்களாகின.
இந்த வாக்கெடுப்பை ஜெயலலிதா கொண்டுவந்ததே தனது கட்சி செல்வாக்கினால் திமுக தொழிற்சங்கத்தின் அங்கிகாரத்தை நீக்கிவிடத்தான் என்பது வேடிக்கை.
அங்கிகாரம் பெற்ற சங்கங்கங்கள்தாம் அரசுடன் பேசசு வார்த்தைகளில் கலந்து கொள்ளலாம் என்று அரசு முதலில் அறிவித்தது.
ஆனால் அதிமுக தோல்வியால் அதை அப்படியே மறக்கடித்து பேசசு வார்த்தைக்கு அண்ணா தொழிற்சங்கம் முதலான எல்லா சங்கங்களையும் இப்போது அலைக்கிறது.
ஆனால் இந்த வேலை நிறுத்தத்தில் 99% போக்குவரத்து ஊழியர்கள் கலந்து கொண்டது அண்ணா தொழிற்சங்கம் இருக்கிறதா?அதன் செல்வாக்கு அளவை அளக்கவும் முடிந்தது.
அண்ணா திமுகவினர் பலர் திமுக,கம்யூனிஸ்ட் சங்கங்களில் செயல்படுவது அதிமுக ஆட்சியின் நிர்வாகத்திறமையையும்,தொழிலாளர் -மக்கள் நலனையும் மக்கள் மத்தியில் வெளிச்ச்சம் போட்டு காட்டி விட்டது.
======================================================================================
ன்று,
ஜனவரி-29.
  •  மூன்று சக்கரம் கொண்ட காருக்கு, கார்ல் பென்ஸ் காப்புரிமை பெற்றார். (1886)
  • அமெரிக்க மத்திய உளவுத்துறை நிறுவனம்(சி.ஐ.ஜி.,) அமைக்கப்பட்டது(1946)
  • ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது(1595)
  • இந்திய சுதந்திர போராட்ட வீரர் பி.எஸ்.பி.பொன்னுசாமி இறந்த தினம்(1998)

காருக்கு காப்புரிமை . 

1886 - முதல் நடைமுறை சாத்தியமான, பெட்ரோ லில் இயங்கும் உள்ளெரி என்ஜின் கொண்டதும், முதலில் வணிகரீதியில் உற்பத்தி செய்யப்பட்டதுமான மூன்று சக்கரம் கொண்ட காருக்கு, கார்ல் பென்ஸ் காப்புரிமை பெற்றார். 

குதிரைகள் இல்லாமலேயே நீண்டதூரப் பயணங்கள் சாத்தியம் என்று நிரூபிப்பதற்காக, பென்ஸின் மனைவி பெர்த்தா பென்ஸ், இரு மகன்களுடன், 104 கி.மீ. தொலைவிலுள்ள தன் சொந்த ஊருக்கு, இந்தக் காரை ஓட்டிச் சென்று திரும்பினார். 

இந்தப் பயணம்தான் உலகின் முதல் நீண்ட தொலைவு சாலைவழிப் பயணம் என்பதால், இந்தப் பாதை, பெர்த்தா பென்ஸ் நினைவுப் பாதை என்ற பெயரில் சுற்றுலா இடமாக அறிவிக்கப்பட்டது. 

இந்தப் பயணத்தின் வெற்றிக்குப்பின், 1888இல் பென்ஸ் காரின் வணிகரீதியான உற்பத்தி தொடங்கியது.

1672இல் சீனப் பேரரசருக்காக உருவாக்கப்பட்ட ஒரு நீராவி வாகனம், மனிதர்கள் பயணிக்கும் அளவு இல்லையெனினும், அதன் சாத்தியத்தை நிரூபித்தது. தொடர்ந்து, நீராவியிலும், பின்னர் மின்சாரத்திலும் இயங்கும் வாகனங்கள் பல நாடுகளிலும் உருவாக்கப்பட்டாலும், பேருந்துகள் நீராவியில் இயங்கத் தொடங்கினாலும், சிறிய வாகனத்துக்கான தேடல் தொடர்ந்தது. 
ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலவையில் இயங்கும் உள்ளெரி என்ஜின்கள்கூட உருவாக்கப்பட்டன.

 1870இல் ஆஸ்திரியாவின் மார்க்கஸ் என்பவர் பெட்ரோலில் இயங்கும் ஓர் உள்ளெரி என்ஜினை கையால் இழுக்கும் வண்டியில் பொருத்தி வெற்றி கண்டார்.

1883இல் குறைந்த மின்னழுத்தத்தில் இயங்கும் மேக்னெட்டோவை உருவாக்கி காப்புரிமை பெற்ற இவர் 1888இல் உருவாக்கிய நான்கு சக்கரம் கொண்ட காரில் அதைப் பயன்படுத்தி தானாக ஸ்டார்ட் செய்யும் வசதி உட்பட செய்திருந்தார். 
பென்ஸின் காரைவிடப் பலவிதங்களிலும் மார்க்கசின் கார் மேம்பட்டிருந்தாலும் அதற்குக் காப்புரிமை பெறவோ, உற்பத்தி செய்யவோ அவர் முயற்சிக்கவில்லை. 

மேலும், அவர் ஒரு யூதர் என்பதால், ஹிட்லர் காலத்தில், அவரது பெயர் வரலாற்றுப் பாடங்களிலிருந்து நீக்கப்பட்டு, ஜெர்மானியரான பென்ஸ் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டது.
=======================================================================================
                                                                ஆன்மிக அரசியல் ?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?