மோடி ஆட்சியும் ,இன்றைய ஊழலும் !

காங்கிரசு ஊழல் கட்சி என்று செல்லுமிடமெல்லாம் ஊதி வருகின்ற பிரதமர் மோடி தனது  ஆட்சியில் இப்போது வரிசை கட்டி வருகிற ஊழல் புகார்களைப்பற்றி பாராளுமன்றமானாலும் சரி,மக்கள் மன்றமானாலும் சரி வாயைத்திறப்பதே இல்லை.

எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பி பாராளுமன்றத்தை முடக்கினாலும் கல்லுளி மங்கன் என்றால் எப்படி இருப்பான் என்பதற்கு எடுத்துக்காட்டாக உட்கார்ந்திருப்பார்.
காதில் மாட்டியதில் உறுப்பினர்கள் பேச்சைக்கேட்கிறாரா?அல்லது சம்ஸ்கிருத சுலோகங்களை கேட்கிறாரா என்பதையே கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தியவின் மனசாட்சியை சொல்லுகின்ற ஊடகங்களோ தங்கள் மனசாட்சியை பாஜக தரும் விளம்பரக்காசுக்கு விற்று விட்டதால் அதைப்பற்றி கேளிவியை எழுப்புவதே இல்லை.
ஆனால் இதுவரை நடந்த ஊழல்களை எல்லாம் பல லட்சம் கோடிகளைத்தொடும் மோடி ஆட்சி கால ஊழல்கள் கிண்டலடிக்கிறது.


மேலும் இதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த ஊழல்கள்,மோசடிகள் எல்லாம் மோடி ஆட்சிக்காலத்தில் அம்பானி,அதானி போன்ற மோடியின் நண்பர்கள் வட்டாரத்திலேயே நடப்பதுதான் அதிர்சியானது.

அமித்ஷா போன்ற பாஜக தலைவர்கள்,மற்றும் அம்பானி உறவினர்கள் ,அதானி உறவு முறைகள் என்ற வட்டத்திலிலேயே பல்லாயிரம் கோடிகள் வங்கி மோசடிகள்.அனைத்தும் மக்கள் பணம்.
5000க்கு குறைவாக இருந்தால் பணத்தை தாங்களாகவே எடுத்து பாமர இந்தியனை கொல்லும் அதே வங்கிகள்தான் பல விதிமுறைகளையும் மீறி எந்த வித பிணையும் இல்லாமல் பல்லாயிரம் கோடிகளை இந்த கும்பல்களுக்கு கொடுத்து புண்ணியம் தேடிக்கொள்கின்றன.

வங்கிகள் இப்படி கோடிகளில் அள்ளிக்கொடுக்க மத்திய அரசு ஆசி இல்லாமலும் ரிசர்வ் வங்கிக்கு தெரியாமலும் நடக்க வாய்ப்பே இல்லை என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரிந்த உண்மைதான்.
வங்கிகள் லட்சக்கணக்கில் கொடுக்கும் கடன்கள் விபரமே ரிசர்வ் வங்கிக்கு அறிக்கையாக போகையில் கோடிகள் அதுவும் ஆயிரம்கோடிகள் கடன் விபரம் தெரியாமல் போகுமா?

அதை மக்கள் நம்பவும் வேண்டுமா?

இல்லை.அது எங்கள் வேலை இல்லை என்றால் ரிசர்வ் வங்கி என்று வங்கிகளை கண்காணிக்கும் அமைப்பும் அதற்கு ஆளுநர் என்று ஒருவரும் எதற்கு??

ஒருவர் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க கூடாது.5000க்கு குறைவாக இருந்தால் அபராதம் எடு,ஏழைமாணவர்களின் கல்விக்கடனை அம்பானி மூலம் வன்முறை குமப்பால் மூலம் புடுங்கு என்பதை கண்காணிப்பதுதான் ரிசர்வ் வங்கி வேலையா?

இப்போது புதிதாக வெளிவந்துள்ளது  109 கோடிகள் ஊழல்.அதுவும் மோடி அரசு எந்த விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று  பிடிவாதமாக உள்ளதோ அந்த விவசாயிகள் பெயரிலே நடந்த ஊழல்.

உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சிம்ப்ஃஹோலி சர்க்கரை ஆலைக்கு, விவசாயிகள் பெயரில் ரூ. 109 கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டிருப்பதும், அதனை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்குப் பிரித்துத் தராததுடன், குறிப்பிட்ட காலத்திற்குள்வங்கியிலும் திரும்பிச் செலுத்தாமல் மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே சிம்ப்ஃஹோலி ஆலை மீது, ரூ. 97 கோடி அளவிற்கான மோசடிப் புகார் இருந்த நிலையில், மோடி ஆட்சிக்கு வந்தபின்புதிதாக இந்த ரூ. 109 கோடி கடனை வழங்கி இருந்ததும் அம்பலத்திற்கு வந்துள்ளது. 
தில்லி வைர வியாபாரி துவாரகா தாஸ், ரூ. 389 கோடி மோசடியில் ஈடுபட்ட, ஓரியண்டல் வங்கியிலேயே இந்த மோசடியும் நடந்துள்ளது.நாட்டின் பொதுத்துறை வங்கிகளில், ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி, ‘யுனைடெட் ஸ்பிரிட்ஸ்’ சாராய ஆலை முதலாளி விஜய் மல்லையா, அதனை திருப்பிச் செலுத்தாமல்,வெளிநாட்டுக்கு தப்பினார். 

அவர் தற்போது லண்டனில் இருக்கிறார்.மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவர சிபிஐ படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் வேளையிலேயே, குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும்மற்றும் குடும்பத்துடன் சுவிட்சர்லாந்து தப்பினார்.


 நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான, பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 700 கோடியைச் சுருட்டிக் கொண்டு அவர் தப்பினார்.அடுத்த சில நாட்களிலேயே, நீரவ் மோடி வழியில் ‘ரோடோ மேக்’ பேனா கம்பெனி முதலாளி விக்ரம் கோத்தாரி, 6 வங்கிகளில் ரூ. 3 ஆயிரத்து 695 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத உண்மை வெளியானது. 

அவரும் வெளிநாடு தப்பிச் சென்றதாக முதலில் செய்தி வெளியானது. 
ஆனால், சிபிஐ-க்கு தகவல் அனுப்பி, அவராகவே கைதானார்.

இந்த பரபரப்பு ஓய்வதற்கு உள்ளேயே, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சிடம் மோசடிநடந்தது தெரிய வந்தது. நீரவ்மோடியைப் போல, மற்றொரு வைர நகை ஏற்றுமதி யாளரான- தில்லியைச் சேர்ந்த துவாரகா தாஸ் மற்றும் அவரது நண்பர்கள், ஓரியண்டல் வங்கியிடம் ரூ. 389 கோடியை திருப்பிச்செலுத்தாமல் மோசடி செய்த குற்றச்சாட்டு வெளியானது.

ஆனால், இரண்டே நாட்களில், அதே ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சில் ரூ. 110 கோடி அளவிற்கு நடந்த மற்றொரு கடன் மோசடியும் தெரியவந்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த சிம்ப்ஃஹோலி சர்க்கரை ஆலை நிறுவனத்திற்கு, விவசாயிகள் பெயரில் ரூ. 109 கோடியே 8 லட்சம் கடன் வழங்கப்பட்ட தும், அதனை சர்க்கரை ஆலை நிறுவனம் திருப்பிச் செலுத்தாததும் கண்டறியப்பட்டு உள்ளது.சிம்ப்ஃஹோலி சர்க்கரை ஆலை நிறுவனம், நேரடியாக கடன் வாங்காமல், அவ்வளவுதொகையையும் விவசாயிகள் பெயரிலேயே பெற்றுள்ளது. 
பணத்தை திருப்பி செலுத்தாதது தொடர்பாக வங்கி அதிகாரிகளும் கண்டு கொள்ளாத நிலையில், தற்போது அந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதற்கு முன்பும், கடந்த 2011-ஆம் ஆண்டு, சிம்ப்ஃஹோலி சர்க்கரை ஆலைக்கு, ரூ. 148 கோடியே 60 லட்ச ரூபாய் கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் தனிநபர் கடன் மற்றும் குழுக்கடனாக 5 ஆயிரத்து 762 பேர்களின் பெயரில் இந்தக்கடன், 2012-ஆம் ஆண்டு ஜனவரி 25 மற்றும்மார்ச் 13 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த கடனை விவசாயிகளுக்கு பிரித்து வழங்காத சிம்ப்ஃஹோலி சர்க்கரைஆலை நிர்வாகம் தனது வரவு-செலவு களுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. அத்துடன் வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்தவில்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு,ரூ. 148 கோடி கடன் தொகையில், ரூ. 97 கோடியே 85 லட்சம் அளவிற்கு சிம்ப்ஃஹோலி நிறுவனம் மோசடி செய்திருப்பதை வங்கி நிர்வாகம் கண்டறிந்தது. எனினும் ஓரியண்டல்வங்கி நிர்வாகம் கடனை வசூலிக்கத் தயாரில்லை. 


மாறாக அதனை வராக்கடன் பட்டியலில் சேர்த்துவிட்டு ஒதுங்கிக் கொண்டது.இந்நிலையில்தான், மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததற்கு பின்னர், கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி புதிதாக சுமார் ரூ. 110 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஊழலை ஒழிக்கப் போகிறோம், பணப் பரிவர்த்தனையை முறைப்படுத்தப் போகிறோம் என்றெல்லாம் கூறி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று, கடந்த நவம்பர் 9-ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். 
அதற்கு அடுத்த 3-ஆவது வாரத்தில்தான், விவசாயிகள் பெயரில் மீண்டும் ரூ. 110 கோடி சிம்ப்ஃஹோலி சர்க்கரை ஆலை நிறுவனத்துக்கு ஓரியண்டல் வங்கியால் வழங்கப்பட்டு உள்ளது. 

இந்த தொகையையும் விவசாயிகளுக்கு பிரித்துத் தராத சர்க்கரை ஆலை நிர்வாகம், தானே அமுக்கிக் கொண்டது. அத்துடன் இரண்டாவது முறை வாங்கிய கடனையும் குறிப்பிட்ட கெடுவுக்குள் ஆலை நிர்வாகம் கட்டவில்லை.

இதையடுத்தே, ஓரியண்டல் வங்கி கொடுத்த புகாரின்பேரில், தற்போது சர்க்கரை ஆலையின் இயக்குநர் குர்மித் சிங் மான், துணை நிர்வாக இயக்குநர் குர்பால் சிங், தலைமை நிர்வாக அதிகாரி ராவ், தலைமைநிதி அதிகாரி சஞ்சய் அபரியா உள்பட 13 பேர்மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
சிம்ப்ஃஹோலி ஆலையின் ரூ. 110 கோடி கடன் மோசடி பற்றி, கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதியே, வங்கி அதிகாரிகள் புகார் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. 

இருப்பினும் 3 மாதங்களுக்குப் பிறகே தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சர்க்கரை ஆலை நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் குர்பால் சிங், பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்வரான அம்ரீந்தர் சிங்கின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மல்லையாவுக்கு முன்னதாக, லலித் மோடி மற்றும் தீபக் தல்வார், சஞ்சய் பண்டாரி ஆகியோரும் பணமோசடியில் ஈடுபட்டு,வெளிநாட்டுக்கு தப்பியிருந்தனர். 

பின்னர் மல்லையா, நீரவ் மோடி, விக்ரம் கோத்தாரி, துவாரகா தாஸ் என்று மீண்டும் துவங்கிய வங்கிக் கடன் மோசடி சிம்ப்ஃஹோலி சர்க்கரைஆலை நிறுவனம் வரை வந்துள்ளது.அனைவரும் மோடியின் நட்பு வட்டாரத்தில் உள்ள கார்ப்பரேட் முதலைகள் என்பதுதான் இதன் பரம ரகசியம்.இலுமினாட்டிகள் இவர்கள்தான்.
====================================================================================
ன்று,
பிப்ரவரி-27.

  • டொமினிக்கன் குடியரசின் தேசிய தினம்
  • நியூ பிரிட்டானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1700)
  • பிரிட்டன் தொழிற்கட்சி அமைக்கப்பட்டது(1900)
  • ரேடியோ கார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்டது(1940)
  • அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது(1951)

=====================================================================================

                                                     இறைவன் இருக்கின்றானா?
                                                                                                     மனிதன் கேட்கிறான்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?