தாக்குதல் திராவிடம்.

தென் இந்தியாவில் காலூன்ற 'ஆபரேசன் திராவிடா' என்கிற மறைமுக திட்டத்தில் தேசிய கட்சி ஒன்று இறங்கியுள்ளதாக தெலுங்கு திரைப்பட நடிகர் சிவாஜி விஜயவாடாவில்  பேட்டியளித்துள்ளார். இதற்காக ரூ.4,800 கோடி செலவு செய்யவும் பாஜக  முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு  நடிகர் சிவாஜி
ஆனால் அதை அவர் மறைமுகமாக ஒரு தேசியக் கட்சி என்று சொன்னாலும் ,தென்னிந்தியாவில் காலூன்ற முயலும் கட்சி என்று குறிப்பிட்டு சொல்வதாலும் அக்கட்சி பாஜகதான் என்று தெரிகிறது.

 ஒரு தேசிய கட்சி, வரும் 2019-ல் நடைபெற உள்ள மக்களவை மற்றும் சில மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில், தென்னிந்தியாவில் காலூன்ற பல சதிகளைச் செய்ய ‘ஆபரேஷன் திராவிடம்’ என பெயர் சூட்டியுள்ளது. தமிழகம், கேரளாவுக்கு ‘ஆபரேஷன் ராவணா’, ஆந்திரா, தெலங்கானாவுக்கு ‘ஆபரேஷன் கருடா’ கர்நாடகத்துக்கு ‘ஆபரேஷன் குமார்’ என அந்த தேசிய கட்சி பெயர் சூட்டி உள்ளது.

ஆந்திராவை பொறுத்தவரை ஆபரேசன் கருடா மூலம் ஆட்சியில் இருக்கும் கட்சி, எதிர்கட்சி ஆகியவற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்துவது, புதிய கட்சி ஒன்றை ஏற்படுத்த செய்து அந்த கட்சி தலைவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி குளறுபடிகளை பயன்படுத்தி ஆட்சிக்கு வருவது தான் தேசிய கட்சியின் பிரதான திட்டம் என தெரிவித்தார். 

அதன்படி அந்த தலைவருக்கு ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிப்பது,முக்கிய தலைவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் தாக்குதல் நடத்தி மாநிலத்தில் அமைதியை சீர் குலைப்பது, இணங்க மறுக்கும் முக்கிய தலைவர்கள் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளை தூசி தட்டுவது, அவர்களது வியாபார நிறுவனங்களை குறிவைத்து நடவடிக்கை எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட அந்த கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும்  ஆந்திராவில் உள்ள சிலருக்கு அக்கட்சியின் மறைமுக திட்டம் தெரியவில்லை. தென் இந்தியாவில் ஆபரேசன் திராவிடா திட்டத்தை அதிகார பதவியில் இருக்கும் முக்கிய நபர் ஒருவர் மூலம் அந்த தேசிய கட்சி முன்னெடுத்து செல்வதாகவும் அதற்காக அவருக்கு பதவி காலம் நீட்டிப்பு போன்ற சலுகைகள் கிடைக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். அந்த தேசிய கட்சியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை அதனை மக்களின் சிந்தனைக்கு விட்டுவிடுவதாக தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவில் காலூன்ற முயலும் கட்சி என்று குறிப்பிட்டு சொல்வதாலும் அக்கட்சி பாஜகதான் என்று தெரிகிறது.
அதற்குள் தமிழ்நாட்டில் பாஜகவின் இந்த தாக்குதல்  தொடர்ப்புள்ளவர்கள் என தினகரன்,பன்னிரு செல்வம்,ரஜினிகாந்த்,விஷால் ஆகியோர் பெயர்கள் அலசப்படுகிறது.
======================================================================================
ன்று,
மார்ச்-24.
  • உலக  காசநோய் தினம்
  • கிரீஸ் குடியரசானது (1923)
  • தமிழ் திரைப்பட  பிரபல பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் பிறந்த தினம்(1923)
  • கர்நாடக இசைப்பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் இறந்த தினம்(1988)
=======================================================================================
முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி சாதனைகள்.

1. அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது, இந்தியாவில் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வந்த 3 பொதுத்துறை அரசு நிறுவனங்களை இழுத்து மூடிவிட்டு, அந்த தடுப்பூசி மருந்துகளை தயாரிக்க அன்புமணிக்கும், அவரது மைத்துனர் விஷ்ணுபிரசாத்துக்கும் நெருங்கிய நண்பராக இருக்கும் சுந்தரபரிபூரணம் என்பவரின் கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனத்துக்கு அந்த ஆர்டர்கள் அவசர அவசரமாக தரப்பட்டதாக புகார். 

2. மருந்து கொள்முதலில், தனது நண்பரின் நிறுவனத்துக்கு சாதகமான அன்புமணி சாதகமாக நடந்ததாக மகாராஷ்டிராவில் புகார்... 

3. உத்திரபிரதேசம் ரோகில்காண்டில் தனியார் மருத்துவ கல்லூரிக்கு, முறைகேடாக அனுமதி அளித்த வழக்கில் ஊழல் - அன்புமணி மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு, நீதிமன்ற விசாரணையில் உள்ளது... ஜாமீனில் உள்ளார் அன்புமணி. 

4. மத்தியபிரதேசம் இந்தூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு முறைகேடாக அனுமதி அளித்த வழக்கில் ஊழல் - அன்புமணி மீது CBI ஊழல் வழக்கு பதிவு, நீதிமன்ற விசாரணையில் உள்ளது.. இந்த வழக்கிலும் ஜாமீனில் உள்ளார் அன்புமணி.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?