இடுகைகள்

வேடிக்கை பார்க்கும் பணி?

படம்
  மோடி இதுவரை மதத்தை வைத்து அரசியல் செய்ததே கிடையாது - ஒன்றிய அமைச்சர் ராஜநாத் சிங் . சளி, காய்ச்சலுக்கான 67 மருந்து தரமற்றவை: மத்திய தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல். வேலையை பற்றி கவலைப்படுவதை இளைஞர்களும் பெற்றோர்களும் நிறுத்த வேண்டும்.பகவான் ஸ்ரீராமருக்கு இத்தனை ஆண்டுகள் கோயில் இல்லை. மகா புருஷ் மோடியால் அது நமக்கு கிடைத்திருக்கு. அதை நினைத்து பாருங்கள். இனி பகவான் ராமர் உங்களுக்கு வேலை கொடுப்பார்.- நடிகை கங்கனா ரணவத். புல்வாமாவில் பாதுகாப்பு படையினருக்கு ஹெலிகாப்டர் மறுத்து, அவர்களின் மனைவிகளின் தாலிகளைப் பறித்தது யார்? என நாட்டுக்கு சொல்லுங்கள்" - மோடிக்கு சமாஜ்வாதி  வேட்பாளர் டிம்பிள்  கேள்வி எதிர்க்கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்கும் பா.ஜ.க! : சூழ்ச்சியால் ஒற்றை அதிகாரத்தை நிலைநாட்டும் அவலம்! சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், மேயர் தேர்தல் என ஜனநாயகத்தை நிலைநாட்டுகிற அனைத்து முறையிலும் சர்வாதிகாரத்தை விதைக்கும் பா.ஜ.க. தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சி உலகளவில் தவிர்க்க முடியாததாய் அமைந்திருக்கிற காலத்திலும், எவ்வாறெல்லாம் ஜனநாயக மோசடி செய்யலாம் என சிந்தித்துக் கொண்டிருக்கி

கள்ளக் கூட்டணி

படம்
  நா ட்டின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா என்று சொல்லிக் கொள்ளும் தேர்தலில் இதுவரை கண்டிராத, காண சகிக்க முடியாத காட்சிகள் எல்லாம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 102 தொகுதிகளில் நடந்து முடிந்த முதல் கட்ட தேர்தலையடுத்து இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல்கட்ட தேர்தலில் தனக்கு சாதகமான சூழல் இல்லாததை உணர்ந்த ஆர். எஸ். எஸ் – பா.ஜ.க. கும்பல் தற்போது நடக்கும் பிரச்சாரத்தில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக தனது நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டுள்ளது. தெலுங்கானாவில் உள்ள கிறிஸ்தவ பள்ளியை மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் அடங்கிய காவி கும்பல் பள்ளியை அடித்து நொறுக்கி “ஜெய் ஸ்ரீ ராம்” என கோசமிட்டது; ஹைதராபாத்தில் மக்களவை பாஜக வேட்பாளர் மசூதியை நோக்கி அம்பு எய்வது போல் சைகை செய்தது என்பதெல்லாம் சில சான்றுகள் மட்டுமே. இதன் உச்சகட்டமாக நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சார பேரணியில் ஆற்றிய உரையில் தனது இஸ்லாமிய வெறுப்பை கக்கி உள்ளார். கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ராஜஸ்தான் பன்ஸ்வாரா பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்த

கடைசி ஆயுதம்!

படம்
"நாட்டுக்காக தியாகம் செய்த குடும்பத்திற்கு தான் தெரியும் தாலி எவ்வளவு முக்கியம் என்று…மனைவியை துரத்தியவருக்குதெரிய வாய்ப்பு இல்லை" -பிரியங்கா காந்தி டெல்லியில் போராட்டம் நடத்த இருந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் மீது ராணுவம் தாக்குதல்: 3 விவசாயிகள் காயம்,  விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று இடைக்கால உத்தரவு. சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. பதஞ்சலி நிறுவன பொய்விளம்பர விவகாரம் உங்க மன்னிப்பை பூதக்கண்ணாடி வைத்து தான் தேடணுமா? பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம். விதிமீறலில் அதானி குழுமம்!  வெளியான மற்றொரு உண்மை! நண்பனே எனது உயிர் நண்பனே அரசியல் தமிழ்நாடு இந்தியா முரசொலி தலையங்கம் சினிமா விளையாட்டு மு.க.ஸ்டாலின் இந்திய பொருளாதாரத்தையே விற்க வழி இருந்தால், அதுவும் இந்நேரம் அதானி வசம் சென்றிருக்கும் என்பது ஒன்றிய அரசின் நடவடிக்கைகளால் தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது. ,  மோடி ஆட்

தலைக்கேறிய பயம்!

படம்
  தகுதியற்ற வார்த்தைகளாக வருகிறது! 2024 மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி முடிந்ததையடுத்து, ஏப்ரல் 26-ஆம் தேதி நடக்கவிருக்கும் இரண்டாம்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது.  அந்தவகையில், கடந்த ஞாயிற்று கிழமையன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி அப்பட்டமாக இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை கக்கியுள்ளார். மோடி பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் (தாலி உட்பட) கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.  நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று முன்பு மன்மோகன் சிங் கூறியிருக்கிறார். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது? நாட்டில் ஊடுருவியவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும் ( இஸ்லாமியர்களை குறிப்பிடுகிறார்) மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப்

உயிரோடு இருப்பதை நிரூபிக்கணும்.

படம்
  நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாட்களில், எதிர்க்கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு பார்வையாளர் மாடத்தில்தான் அமர்வார்கள் என்றெல்லாம் சவடால் அடித்தார் பிரதமர் மோடி. ஆனால் தேர்தல் பிரச்சாரம் துவங்கியவுடன் அவரது சுருதி இறங்கத் துவங்கியது.  தமிழகம், புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலை யில் பாஜக கூட்டணி மண்ணைக் கவ்வும் என தகவல்கள் வருகின்றன.  இதனால் பதற்றமடைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் வழக்கமான வெறுப்பு அரசியலை விசிறி விடத்  துணிந்துள்ளார்.  ஒரு புறத்தில் உலக அளவில்  நாடுகளுக்கு இடையே போர்மூள இருப்பதாக வும் அப்போது இந்தியாவுக்கு வலிமையான தலைவர் தேவை என்றும் பிரதமர் கூறினார். ஆனால் இது எடுபடவில்லை.  அடுத்து தம்மை பதவியிலிருந்து அகற்ற வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் சதி செய் வதாக புலம்பத் துவங்கினார். இதுவும் எடுபடாமல் போகவே தேர்தல் பிரச்சாரக் களத்தை விஷமாக் கும் வகையில் இந்திய மக்களை மதரீதியாக மோதவிடவும்துணிந்துவிட்டார் மோடி.  இராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் செய்த அவர் “காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது தேசத்தின் செல்

வெறுப்பு பேச்சு பலன்கள்!

படம்
  “இஸ்லாமியர்களுக்கு தான் நாட்டில் முதல் உரிமை என காங்கிரஸ் முன்பு கூறியது; நாட்டில் ஊடுருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் பங்கிட்டுக் கொடுத்துவிடும்”  மோடி. உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல்.!!இந்தியா ⭕1. இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட். ⭕2. சுமார் 36,000 + பெரிய கம்பெனிகள் உள்ளது ⭕3. உலகில் முதன் முதலாக தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது. ⭕4. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே ⭕5. உலகில் உள்ள மிக பெரிய கம்பெனிகள் பலவற்றின் CEO இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் ⭕6. இந்த மாநிலம் எந்த மாநிலத்தையும் சார்ந்து இல்லை. ஆனால் இந்த தேசமே இந்த மாநிலத்தை சார்ந்து உள்ளது. ⭕7. முதல் முறையாக கடல்வழி வணிகம் துவங்கியது இந்த மாநிலம் ⭕8. இ-மெயில் கண்டுபிடித்தது இந்த மாநிலம் தான். இதனால் இந்த உலகம் விரைவாக செயல்பட காரணம் ⭕9. விவசாயம் முதல் வான்வெளி வரை பல அறிஞர்கள் தோன்றியது இந்த மாநிலத்தில் தான் ⭕10. உலக வரைபடம் வரைந்து காட்டியது இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் ⭕11. உலகில் முதல